மழைக்காலத் துன்பங்கள்
தட்டத் தட்டத் தீப்பெட்டியும்
தானா உதிர்ந்து பிய்யுது
சட்டைத் துணிகள் காயாமல்
தண்ணி தண்ணியா வடியுது
கொட்டும் பெரும்மழையால
கூரை பிஞ்சு ஒழுகுது
சட்டி பானை வைத்தாலும்
சருவம் நிரம்பி வழியுது
சொட்டு இடமும் மீதமின்றி
சேறாய் வழுக்கி விழுத்துது
குட்டி நாய்கள் ஆடுமாடு
குளிரும் கூடி அழுகுது
அட்டைப்பூச்சி மட்டைத்தேள்
அணிவகுத்து வருகுது
மட்டை ஓலை தேங்காயும்
மண்டையில விழுகுது
வெட்டி வெட்டி விட்டாலும்
வெள்ளம் வீட்டுக்க பெருகுது
விட்டு விட்டு இடுப்பு நாரி
விறைச்சுக் கால்கள் நோகுது
நட்டுவைச்ச பயிரெல்லாம்
நாசமாத் தான் புதையுது
விட்டுவிடாத இயற்கையால
வாழ்வாதாரம் சிதையுது
கஸ்ரபட்ட எங்களுக்கு
ஏன்தான் இப்படி நடக்குது
கட்டையில போகுமட்டும், இந்தக்
கட்டமாத் தானே இருக்குது !
-பிறேமா(எழில்)-
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்

- சமாதான பொறியில் சிக்கிய ஈரான்

- இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றில் ஈரான் புகார்

- ஈரான் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- பலும்மஹாராவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா







