Tag: மைத்திரி
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.Maithri flees from the royal palace
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ,அதில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரச வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச வெளியேறிய அதே நாளில் On the same day that Mahinda Rajapaksa left
மஹிந்த ராஜபக்ச வெளியேறிய அதே நாளில் மைத்திரியும் தற்போது வெளியேறி இருக்கிறார்.
புதிய நாளில் இருவரும் அரச வீடுகளை விட்டு எப்படி வெளியேற முடிந்தது என்ற விடயம் தான் இங்கு பேசு பொருள் ஆகிறது.
ஆக உள்ளக ரீதியாக கதைத்து பேசி வெளியேறி இருக்கிறார்கள் .
அரசியலெண்டு வருகின்ற பொழுது எதிரும் புதிருமாக மக்கள் மத்தியில் பேசுகிறார்கள்.
எல்லாம் மக்களை ஏமாற்றுகிற ஒரு அரசியல் சித்து நடவடிக்கையாகவும், மனித உரிமை பேரவையை திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.
ஒன்பதாவது மனித உரிமை பேரவை இடம்பெற்று வருகிறது .
இதில் அரசு மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் கொலையாளிகள் மீது அவர் நடவடிக்கை எடுப்பதாக தோற்றப்பாட்டை காட்டுவதற்கான ஒரு முன்னேற்பாடா இதனை பார்க்க முடிகிறது.
கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை
கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை
கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை , என தேர்தல் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .
இன்று உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுது ,அந்த இடங்களில் வந்து இவர்கள் வாக்குகளை அளிக்க வருபவர்களின் எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் அவர்கள் வரவில்லை.
பலத்த தோல்வியை தழுவி மக்கள் மனதில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் ,தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில் மகிந்தா குடும்பம் சிக்கி தவித்து வருகிறது.
தமிழன் அழிந்த த அதே நாளில் தமிழர்களை கொன்று குவித்த அதே மாசத்தில் இப்பொழுது வாக்களிக்க முடியாத மகா துயரில் மகாவம்சத்தின் புத்திரர்களான, இந்த மூன்று ஜனாதிபதிகளான கோட்டா மைத்திரி மகிந்தா காணப்பட்டுள்ளது துயரமான ஒன்றுதான்.
முள்ளிவாய்க்கால் மே தினத்தில் ,அந்த மக்கள் கதற கதற கொன்று ஏப்பம் இட்டு ஆடிய இந்த கொலையாளிகள் என்று ,எதுவும் முடியாத திரட்டி கொண்டிருக்கிறார்கள்.
மே மாதம் என்பது தவறக்கூடிய கண்ணீர் மாதம் என்பதையும் அந்த மக்களைக் கொன்று குவித்த கயவர்களை ,கண்ணீர் சிந்தும் நிலையாக மாறியுள்ளதையே இந்த துயர் தோய்ந்த வாழ்வை கொடுத்ததிலிருந்து அறிய முடிகிறது .
ஆகவே கர்மா என்பது இவர்களை விடாத துரத்தும் என்பதற்கும் ,இவர்களால் வெல்ல முடியாது என்பதற்கும் இந்த சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஆகவே தான் நாங்கள் சொல்கிறோம் மஹிந்தா குடும்பம் மேலும் இரண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் முத்து முழுதாக அழிந்து விடும் அபாயம் காணப்படுகிறது .
முள்ளி வாய்க்கால் மக்கள் சாபம் இவர்களை துரத்தும் என்பதாகவே பார்க்கப்படுகிறது.தேர்தலில் மூன்று ஜனாதிபதிகளும் வாக்களிக்க முடியாதது கவலைதான்.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி
நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி
நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி ,ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR)
மனுவை விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் அண்மையில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை (29) நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை ,ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) வரவழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
மைத்திரிபால (CID) யில் ஆஜரானார்
மைத்திரிபால (CID) யில் ஆஜரானார்
மைத்திரிபால (CID) யில் ஆஜரானார் ,அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று
நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வந்ததாக போலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்கே, மைத்திரிபால சிறிசேன, வந்துள்ளார் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
மைத்திரி அதிரடி யோசனை
மைத்திரி அதிரடி யோசனை
மைத்திரி அதிரடி யோசனை ,88-89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நாட்டில் பல்வேறு குற்றங்களைச் செய்த பிற கும்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனது காலத்தில் வேறு சில ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், அந்த குழுக்களின் அறிக்கைகளையும் செயல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய வங்கி நிதி மோசடி ஆணைக்குழு மற்றும் இலங்கை நிறுவனம் ஆகியவற்றை விசாரிக்கும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை செயல்படுத்துவது நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி கூறினார்,
ஆனால் இந்த ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதற்கு அப்பாற்பட்ட கடமைகள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
கணக்காளர்களுக்கு தெரியாமல் திருட முடியாது: மைத்திரி
கணக்காளர்களுக்கு தெரியாமல் திருட முடியாது: மைத்திரி
கணக்காளர்களுக்கு தெரியாமல் திருட முடியாது: மைத்திரி ,அமைச்சர்கள், செயலாளர்கள், பிரதம கணக்காளர்களுக்கு தெரியாமல் திருட முடியாது: மைத்திரி.
அமைச்சர்கள் எவ்வாறு அரசாங்க சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயலாளர்கள் மற்றும் பிரதம கணக்காளர்களுக்கு தெரியாமல் அமைச்சர்களால் திருட முடியாது என குறிப்பிட்டார்.
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் (CA Sri Lanka) 45வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், பின்னர், செயலாளர்கள் மற்றும் தலைமைக் கணக்காளர்கள்
அமைச்சரின் முன்மாதிரியைப் பின்பற்றத் தொடங்குவதாகவும், இந்த நடைமுறை கீழ்மட்டத்திற்கும் குறைகிறது என்றும் கூறினார்.
இதேவேளை, கோரப்படாத கொள்வனவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கொள்வனவு நடவடிக்கைகளும் அமைச்சின் செயலாளர்கள் ஊடாகவே
மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அரசாங்கத்தின் போது அனைத்து கொள்வனவுகளையும் மேற்பார்வையிடுவதற்காக தேசிய கொள்வனவு முகவர் நிலையம் என்ற
நிறுவனம் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டார். நாட்டிலேயே மிகவும் நம்பகமான அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் ஊழல் செய்யவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் நிறுவனத்துடன் நீக்கப்பட்டனர்.
மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்
மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்
மைத்திரி ரணில் தேர்தலில் மோதல் ,ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி, நம்ப முடியாத ஒருவரின் ஆதரவை தமக்கு வேண்டாம் என தெரிவித்ததாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
“எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது போக வழியில்லாத நிலையில் இருக்கிறார், எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, அவர் நம்பிக்கையை சிதைக்கும்போது,
, இப்போது அவர் எங்காவது குப்பைகளை நிறைய தேடுகிறார். ஆனால், ஒரு முன்னாள் ஜனாதிபதி, “இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் சென்றமைக்காக
நாங்கள் வருந்துகிறோம்” என்று பெலியத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகையில் அமைச்சர் கூறினார்.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்
மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்
மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பயணித்த விமான பயணங்கள் தொடர்பான புதிய புள்ளிவிபரம் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு முதல் 2014க்கு இடையில் ஜனாதிபதியின் சிறப்பு சலுகைகள் வான்படையின் கீழே பயன்படுத்தி 978விமான பயணங்களில் செய்துள்ளார் .
மைத்திரிபால சிறிசேனா ஐந்தாண்டு பதவிக்காலம்
அதேபோன்று மைத்திரிபால சிறிசேனா ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 முறை பயணித்துள்ளதாக தகவல் உரிமையின் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விடயத்தினை தற்பொழுது கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது .
இந்த பயணங்கள் அத்துமீறிய அல்லது அதிக அளவு விமானங்களை பயன்படுத்தி உள்ளதாக அந்த ஊடகம் குற்றம் சுமத்துகின்றது.
ஜனாதிபதி ஒருவரது சிறப்பு சலுகையில் பயன்படுத்தி தமது அரச பலன்களை தவறாக பயன்படுத்தினார்கள் என்கின்ற குற்றச்சாட்டு இதன் மூலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை பயணத்தின் பொழுதும் அந்த விமான பயண சேவைகள் அரச செலவாகவே கருதப்படுகின்றது.
அவ்வாறு இந்த விமான பயணங்களை அதிகளவாக பயன்படுத்தியதில் அரசுக்கு பாரிய இழப்பினை அவர்களை ஏற்படுத்தி உள்ளதாக ,அந்த ஊடகம் குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஒன்று வருகின்ற காலப்பகுதியில் மஹிந்த மைத்திரிய ராஜபக்சே ஆகியோர் அவர்கள் அரச வளங்களை தவறான முறையில் பயன்படுத்தி ,
அரசுக்குரிய செலவினை ஏற்படுத்தி உள்ளது மிகப்பெரும் தவறான குற்றச்செயலாக்கும் என்பதாகவே, அந்த செய்தி கோப்பில் தனது செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
பொருளாதார பின்னடைவு
ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே இலங்கை பொருளாதார பின்னடைவை சந்தித்தது இலங்கையினுடைய கஜானாவை காலி செய்து ,
இன்று இலங்கை மிகப்பெரும் பொருளாதார பின்னடைவில் காண்பதற்கு காரணமானவர்கள் இவர்களது,
வழக்கொள்ளையும் லஞ்ச ஊழல்தான் என்பது தற்பொழுது அப்பட்டமாக வெளியாகி உள்ள நிலையில், இந்த விடயங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

இதனால் பதவி துறந்தேன் மைத்திரி
இதனால் பதவி துறந்தேன் மைத்திரி
வழக்கு பாய்ந்தது இதனால் பதவி துறந்தேன் மைத்திரி இலங்கை சுதந்திர கட்சியின் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை துறந்தார் .
அந்த பதவி துறந்ததற்கான காரணத்தை அவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றார் .
கட்சியின் உயர் பதவியில் தான் அங்கம் வகித்த பொழுது தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அந்த கட்சியில் இருந்து பதவியில் இருந்தும் தான் விலகியதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலில் எவரும் போட்டியிட முடியாது
தான் பதவி விலகாவிட்டால் தேர்தலில் எவரும் போட்டியிட முடியாது எனவும் வாக்கு கேட்க முடியாது என்ற அடிப்படை சட்டை விதி இருக்கின்றது .
அதனால் தான் பதவியை துறந்ததாக அவர் இப்படி தெரிவித்தார் .
மைத்திரிபால சிறிசேனாவில் இந்த கருத்து தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது .
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து தற்பொழுது கட்சிகள் மிக தீவிரமான பரப்புரைகள் ஈடுபட்டு வருகின்றன .
முரண்பாடுகளும் தீவிரம்
அதேபோல தற்பொழுது கட்சிகள் மீது சேறுகளை வாரி பூசுகின்ற நடவடிக்கையும் உள் கட்சி முரண்பாடுகளும் தீவிரம் பெற்ற்றுவருகின்றன .
அதனை அடுத்து தற்போது மைத்திரி இந்த கருத்தினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தான் ஏன் பதவி விலகினேன் என்கின்ற விடயத்திலே தற்பொழுது தெளிவாக விளங்கப்படுத்தியதை அடுத்து ,தற்போது கட்சிகளும் கட்சியின் சார் ஆதரவு மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை புத்துணர்ச்சி பிறந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.
கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகல்
தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.
கட்சியில் கடும் கருத்து மோதல்
தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.
இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.
எதிர் வரும் தேர்தலை அடுத்து உள்கட்சிக்குள் மோதல்கள் வெடித்துள்ளன .அதன் ஒரு அங்கமாகவே இந்த விலகல் இடம்பெறுகிறது .
Featured
மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்
மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்
இதன்படி, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணி அளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல்களை வெளியிட்டதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அது தொடர்பில் தெரிவிக்கும் சட்டப் பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23) முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அந்த கருத்து தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
“இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. கட்டாயமாக நாட்டு மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு அப்பாவி மக்களின்உயிர்களே அழிக்கப்பட்டன என்றார்.
மஹிந்த மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை
மஹிந்த மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை
2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மனு தொடர்பான அடிப்படை சமர்ப்பணங்களை பரிசீலித்த எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன் பின்னர், குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்ததுடன், சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு
மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு
இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .
29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .
ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை
முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா
ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்
வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்
பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்
திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்
மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை தேடும் நீதிமன்றம்
மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை தேடும் நீதிமன்றம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்கல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப்
பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை தேடும் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் இன்று (02) இந்த உத்தரவை பிறப்பிடத்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் குறித்த சத்தியக்கடதாசிகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மேற்படி நட்டஈடு பணம் இன்று (09) வரை வழங்கப்படவில்லை.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஜனவரி 12ஆம் திகதி ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியதுடன், உரிய இழப்பீட்டை ஆறு மாதங்களுக்குள் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது.
இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை (12) ஆறுமாத காலம் நிறைவடையவுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என மூத்த சட்ட நிபுணர் ஒருவர் கூறினார்.
இதனால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது
இதேவேளை, பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு ஐம்பது மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் சிசிர மெண்டிஸிற்கு பத்து மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் பிரதிவாதிகள் யாரும் இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை எனவும், உரிய இழப்பீட்டை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது
பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றை ஞாயிற்றுக்கிழமை (02) நடத்தினார்.
இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது
அக்கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன,
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது இறுதி யுத்த காலத்தில் சில வாரம் பதில் பாதுகாப்பு அமைச்சராகவே நானிருந்தேன் என்றார்.
அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல்மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நேற்று (01) மாலை பருத்தித்துறை முனை பகுதியில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினரை சந்தித்தார்.
மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ.அன்னராசா, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் கடற்றொழிலாளர்களின் சார்பாக உரையாற்றியிருந்தனர்.
சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லைதாண்டிய மீன்பிடி, உள்ளூர் மற்றும் வெளியூர் ட்ரோலர் படகுகளின் அத்துமீறல்கள், சுருக்குவலை சட்டவிரோத
செயற்பாடுகள், மீன் வளங்களை அடியோடு சூறையாடுதல், மீன்களின் இனப்பெருக்க காலங்களை கவனிக்காத அத்துமீறிய மீன்பிடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை கடற்றொழிலாளர்கள் முன்வைத்தனர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
சந்திப்பில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், வடக்கு மீனவர்களின் பிரச்சனைகள் பாரதூரமானவை. அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியவர்களே அதை கவனியாது இருக்கும்போது, நாம் பாராளுமன்றில் எமது காத்திரமான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், எல்லைதாண்டிய மீன்பிடி தொடர்பாக இந்திய அரச தரப்பை எமது குழுவோடு சென்று சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும் எமது அழுத்தத்தை நாம் வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச்
செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால,
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.







































