இந்தியா இலங்கைக்கு மருந்துகள் உலர் உணவுப் பொருள் நன்கொடை
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா இலங்கைக்கு மருந்துகள் உலர் உணவுப் பொருள் நன்கொடை

இந்தியா இலங்கைக்கு மருந்துகள் உலர் உணவுப் பொருள் நன்கொடை

இந்தியா இலங்கைக்கு மருந்துகள் உலர் உணவுப் பொருள் நன்கொடை இந்தியா இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள், உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்குகிறது.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

17 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 14,200 கிலோவிற்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்களை இந்திய துணை உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யஞ்சல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்

பாண்டே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் ஒப்படைத்தார்.

சுகாதார அமைச்சரின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

தரமற்ற மருந்துகள் குறித்த அரசாங்கம் விளக்கமளிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தரமற்ற மருந்துகள் குறித்த அரசாங்கம் விளக்கமளிப்பு

தரமற்ற மருந்துகள் குறித்த அரசாங்கம் விளக்கமளிப்பு

தரமற்ற மருந்துகள் குறித்த அரசாங்கம் விளக்கமளிப்பு தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்று (06) தெரிவித்தார்.

தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த

கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;

” தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தினார்.

இலங்கைக்கு கிடைக்கும் மருந்துகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கிடைக்கும் மருந்துகள்

இலங்கைக்கு கிடைக்கும் மருந்துகள்

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.

அத்துடன், 58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும் கிடைக்கவுள்ளன என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவிகள், பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்

எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்

இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்

சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன

மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது


தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in இலங்கை செய்திகள்

    115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்

    115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரான்ஸ் நாடு

    இலங்கைக்கு பதின் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது

    தமது நாட்டின் தற்கால நிலை கருதி பல நாடுகளிடம்


    இலங்கை பிச்சை கேட்டு வருகின்ற நிலையில் இந்த உதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது