மகனைக் கொலை செய்த தந்தை கைது
Posted in இலங்கை செய்திகள்

மகனைக் கொலை செய்த தந்தை கைது

மகனைக் கொலை செய்த தந்தை கைது

மகனைக் கொலை செய்த தந்தை கைது மகனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் தந்தை கைது.

மகனைக் கொலை செய்த

நூரியா காவல் பிரிவில் உள்ள நூரியா வட்டேயில் தனது 14 வயது மகனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு குழந்தை தாக்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, ​​வீட்டின் அருகே ஒரு சிறுவன் கிடப்பதைக் கண்டனர்.

நூரியா மருத்துவமனை

நூரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்காக அவிசாவெல்லா மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டது.

கொலையில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.

ஒருவர் படுகொலை
Posted in உலக செய்திகள்

4 மாத மகனைக் கொலை செய்த தாய்

4 மாத மகனைக் கொலை செய்த தாய்

4 மாத மகனைக் கொலை செய்த தாய் ,4 மாத மகனைக் கொலை செய்ததாக 26 வயது தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“4 மாத குழந்தைக்கு வலிப்பு இருப்பது பற்றிய அழைப்புக்கு போலீசார் முதலில் பதிலளித்தனர்.

அலபாமாவில் ஒரு தாய் கைது செய்யப்பட்டு, அவரது 4 மாத மகனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குப் பிறகு, பிரேதப் பரிசோதனையில் அவன் பலத்த காயம் அடைந்திருப்பதைக் கண்டறிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜன. 25 அன்று, அலபாமாவில் உள்ள லானெட்டில் உள்ள ஓல்ட் ஜாக்சன் ஹைட்ஸ் ஹவுசிங் ப்ராஜெக்டில் உள்ள ஒரு வீட்டில் 4 மாத குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதைக் குறிப்பிடும் வகையில், சேம்பர்ஸ் கவுண்டி அவசரகால அனுப்புதல் மையத்திற்கு சுமார் மதியம் 1:55 மணிக்கு 911 அழைப்பு வந்தது.

பரஸ்பர உதவிக்காக கிழக்கு அலபாமா தீயணைப்புத் துறையை தொடர்பு கொண்டு, கருப்பின ஆண் குழந்தையை கிழக்கு அலபாமா மருத்துவ மையத்திற்கு (EAMC) கொண்டு சென்றனர்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“குழந்தையின் நிலை EAMC இல் உள்ள மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்டது, பின்னர் பர்மிங்காமில் உள்ள அலபாமா குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அலபாமா.”

இருப்பினும், 4 மாத சிறுவன் நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்துவிட்டான், மேலும் அலபாமாவின் மான்ட்கோமெரியில் உள்ள அலபாமா தடய அறிவியல் மருத்துவ ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்,

அவனது மரணத்திற்கு என்ன காரணம் என்று பிரேத பரிசோதனை செய்ய போலீசார் சந்தேகித்தனர் மற்றும் “குழந்தையின் மரணத்திற்கான சூழ்நிலைகள் லானெட் காவல் துறையால் விசாரிக்கப்படுகின்றன” என்று கூறினார்.

மகனைக் கொன்ற தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகனைக் கொன்ற தந்தை

மகனைக் கொன்ற தந்தை

மகனைக் கொன்ற தந்தை , பூண்டு லூயா தோட்டத்தில் தந்தை தாக்கியதில் 25 வயது உடைய மகன் ஒருவர் கடந்ததிடம் பலியாகி உள்ளதாக அகிர்ந்து ஒரு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .

இந்த சம்பவமானது இரவு வலையில் இடம் பெற்றுள்ளது மகன் தாக்கிய மகனை தாக்கிக் கொண்ட தந்தையின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது பலத்த காயப்படுத்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியது தந்தையின் தாக்குதலுக்கு மகன் பலியாகி தெரிவிக்கப்பட்டுள்ளது .

கோபம் செய்கின்ற சில முடிவுகள் காரணமாக இவ்வாறான படுகொலைகள் இடம் பெற்று விடுகின்றன.

வீடியோ

வறுமையின் காரணமாக சில விடயங்கள் ஏற்படுவதாகவும் அதை அடுத்து சில குடும்ப சிக்கல்களுக்கு காரணமாக ஏற்படுத்த இந்த விடயங்கள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர் .

தந்தை தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன்னே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மகனை கொலை செய்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகனை கொலை செய்த தந்தை

மகனை கொலை செய்த தந்தை

மகனை கொலை செய்த தந்தை ,தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று (30 மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக ஒலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

தந்தை மகனிடம் ஒலியைக் குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார், பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, கடைசியில் தம்பியும்,

வீடியோ

தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி

மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மகனை குத்திக் கொலை செய்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகனை குத்திக் கொலை செய்த தந்தை

மகனை குத்திக் கொலை செய்த தந்தை

மகனை குத்திக் கொலை செய்த தந்தை ,கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பத்தில் ரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரின் மகனே​ உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
Posted in இலங்கை செய்திகள்

மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது

மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது

மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது ,தான் பெற்ற மூன்று வயது சிறுவனுக்கு உணவு கொடுக்காமல் அவனை சித்திரவதை செய்து தற்கொலை செய்து கொள்வோம், என மிரட்டி வந்த தந்தை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

மனைவி வெளிநாட்டில் வேலை புரிந்து வருகின்ற நிலையில் அவர் பணம் கேட்டு மனைவியை தொல்லைப்படுத்தியிருக்கின்றார் .

ஆனால் மனைவி பணம் அனுப்புவதை நிறுத்தியதை அடுத்து தனது மூன்று வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி உணவு கொடுக்காது அவரை உதைத்து வந்துள்ளார்.

நாங்கள் உணவின்றி இறந்து விடுவோம் என தந்தையார் மிரட்டி வந்த காணொளி ஒன்று மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

அந்த காணொளியை மனைவி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தனது குழந்தையை காப்பாற்றும்படி கூறியதை அடுத்து தற்பொழுது போலீசாரால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடம்பரச் செலவுகளில்

மனைவியுடைய பணத்தை பெற்று அவர் குடித்து ஒரு ஏற்ற மாதிரி வந்ததாகவும் ஆடம்பரச் செலவுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதனால் மனைவியினுடைய பணத்தினை மாதம் எதிர்பார்த்து வந்ததாகவும் அதனாலயே மனைவி பணத்தை கொடுக்க மறுத்து வந்த காரணத்தினால்

தான் பெற்ற மூன்று வயது சிறுவனை பட்டினி போட்டு அவனை படுக்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சிறுவர்கள் வதை குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு தமது குடும்பத்தை காப்பாற்றும் பணிக்கு சேர்ந்த பெண்களுடைய குடும்பங்கள் இவ்வாறான பல சீரழிவுகளை சந்தித்து வருவதும் பெண்கள் தவறான வழியில் ஈடுபட்டார்கள் எனக்கு தெரிவித்து

அந்த குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ள சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.