மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது ,தான் பெற்ற மூன்று வயது சிறுவனுக்கு உணவு கொடுக்காமல் அவனை சித்திரவதை செய்து தற்கொலை செய்து கொள்வோம், என மிரட்டி வந்த தந்தை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
மனைவி வெளிநாட்டில் வேலை புரிந்து வருகின்ற நிலையில் அவர் பணம் கேட்டு மனைவியை தொல்லைப்படுத்தியிருக்கின்றார் .
ஆனால் மனைவி பணம் அனுப்புவதை நிறுத்தியதை அடுத்து தனது மூன்று வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி உணவு கொடுக்காது அவரை உதைத்து வந்துள்ளார்.
நாங்கள் உணவின்றி இறந்து விடுவோம் என தந்தையார் மிரட்டி வந்த காணொளி ஒன்று மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த காணொளியை மனைவி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தனது குழந்தையை காப்பாற்றும்படி கூறியதை அடுத்து தற்பொழுது போலீசாரால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடம்பரச் செலவுகளில்
மனைவியுடைய பணத்தை பெற்று அவர் குடித்து ஒரு ஏற்ற மாதிரி வந்ததாகவும் ஆடம்பரச் செலவுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதனால் மனைவியினுடைய பணத்தினை மாதம் எதிர்பார்த்து வந்ததாகவும் அதனாலயே மனைவி பணத்தை கொடுக்க மறுத்து வந்த காரணத்தினால்
தான் பெற்ற மூன்று வயது சிறுவனை பட்டினி போட்டு அவனை படுக்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சிறுவர்கள் வதை குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு தமது குடும்பத்தை காப்பாற்றும் பணிக்கு சேர்ந்த பெண்களுடைய குடும்பங்கள் இவ்வாறான பல சீரழிவுகளை சந்தித்து வருவதும் பெண்கள் தவறான வழியில் ஈடுபட்டார்கள் எனக்கு தெரிவித்து
அந்த குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ள சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு








