புதையல் தோண்டிய ஏழுபேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஏழுபேர் கைது

புதையல் தோண்டிய ஏழுபேர் கைது

புதையல் தோண்டிய ஏழுபேர் கைது ,திருக்கோவில் போலீஸ் பிரிவில் விநாயகபுரம் ஓரம் தேசத்தில் சட்ட விரோதமாக புதையல் தோண்டிய பெண்ணிருவர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அதிகாலை இதைச் சுற்றி விழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பொழுதே ,

அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த உபகரணங்களுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்,

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 50 வயது பெண் 41 முதல் 64 வயது இடைப்பட்ட சந்தேகம் அவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

திருக்கோவில் பகுதியில் புதையல் தோண்டியவர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள் ,திருக்கோவில் ,கப்புத்தலை ,இதழ் காகித, வத்தளை , விநாயகபுரம் பகுதிகளை சேர்ந்த உள்ளன விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த இடத்தில் புதையல் கிடைப்பதாக போலியான பரப்பப்பட்ட தகவலை எடுத்து அந்த புதிய தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால்புதையல் தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பொழுது அந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது.

விடுதலைப் புலிகளுடைய தங்கங்கள் பணங்கள் நகைகள் ஆயுதங்கள் என்ன புதைத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன .

அவ்வாறு அந்த புதையல் தோண்டும் சம்பவங்கள் கடந்த காலங்கள் நடைபெற்றுது .

சிலர் அதனை மீட்டு சென்றதாகவும் சிலரின் தோற்றுப்போனதாகவும் வரலாறு காணப்படுகின்றது .

காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு

அவ்வாறான வேளையிலேயே திருக்கோவில் பகுதியில் இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை இடம் பெற்ற பொழுது ,காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு நடத்தி அவர்களை கைது செய்து இழுத்துச் சென்றுள்ளார்.

வெயாங்கொடையில் புதையல்
Posted in இலங்கை செய்திகள்

வெயாங்கொடையில் புதையல்

வெயாங்கொடையில் புதையல்

வெயாங்கொடையில் புதையல் வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினமும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தனகல்ல நீதவான் வழங்கிய உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த

இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு வெயாங்கொடை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அகழ்வாராய்ச்சிக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்றும், முந்தினநாளும் அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் அதனை நிறைவு செய்ய முடியாத நிலையில், பாரிய கல் ஒன்று கிடைத்ததையடுத்து நேற்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது ,இலங்கை இரத்தினபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல்களை தேடி ஐவர் கைது .

தங்க புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் அன்பு முகாம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளது .

ஐந்து பேர் கைது

அந்த தகவலை அடுத்து அதனை தோண்டி எடுப்பதற்காக ,அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் அதிகாரி ,ஆசிரியர் உள்ளிட்ட ஐவர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலத்திரனியல் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக தமிழிழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ,அவர்களது தங்கம் பணம் மற்றும் இதர பொருட்களை மீட்பதற்காக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிங்கள போலீஸ் அதிகாரிகள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாய் மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டு, 14 வருடங்கள் கழிவுற்ற நிலையிலும் தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கம் பணம் என்பதுவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிங்கள பெரும்பான்மை வாதிகள் ஈடுபட்டு வருகின்றநர் .

இவ்வாறான தங்க புதையல் தேடும் செயல் தொடர்கிறது .

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பல தங்கங்கள் ,ஆயுதங்கள் என்பனவவற்றை மீட்ட மாற்று குழுக்களும் ,அவற்றை வைத்து கோடீஸ்வரராக இலங்கையில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்தனர்.

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியான பணி நாளை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது