Tag: பிக்பாஸ்
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, தற்போது தனது நண்பர்களுடன்
கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரைசா வித்யாசமான உடையில் கோவில் வலம் வரும் புகைப்படங்களை
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்
மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்
கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இவரா?
கமல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன.
தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், சில வாரங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து
வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்து இருந்தது.
விஜய் சேதுபதி
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இதற்கு முன் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்
நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்
நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?
கமல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன
. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ்
நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு
காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.
கமல்
இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் 5
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர்
வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்
படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இசைவாணி
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த
தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை
பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை
பிக்பாஸ் நிகழ்ச்சி வர வர சூடு பிடித்து வருகிறது. கண்ணாடி டாஸ்க் என்று கொடுத்து இருவர்
இருவராக சேர்த்துவிட்டு பிக்பாஸ் செம பிளான் போட்டார்.
இதில் சிலரது கூட்டணி ஜாலியாக இருந்தது, ஒருசிலரது விளையாட்டு சண்டையில் போய் முடிந்தது.
இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இசைவாணி மற்றும் தாமரை கண்ணாடி
முன் நின்று பேசும் டாஸ்க் செய்துள்ளார்கள். அதில் தாமரை, இசைவாணி குறித்து பேச அது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டாஸ்க் முடிந்ததும் இசைவாணி கோபமாக பேச தாமரைக்கு இவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
அவர்கள் பேசியதை பார்த்தால் பெரிய சண்டையில் முடிந்திருக்குமோ என தோன்றுகிறது.
கடைசியில் என்ன தான் நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர் இவர்தான்
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர் இவர்தான்
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர் இவர்தான்
பிக்பாஸ் 5 லோகோ
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன்
நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்
படலம் நடக்கும். அதன்படி இதுவரை, நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக, சுருதி
வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் சக்தி
கொண்ட காயின் சுருதி வசம் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் 5 சீசனில் நான் இல்லை… என் பெயரை நீக்குங்கள்… பிரபல நடிகை
பிக்பாஸ் 5 சீசனில் நான் இல்லை… என் பெயரை நீக்குங்கள்… பிரபல நடிகை
கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ளவில்லை என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் 5 சீசனில் நான் இல்லை… என் பெயரை நீக்குங்கள்… பிரபல நடிகை
கமல்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.
இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன்.
நான் பிக்பாஸ் தமிழ் 5-ம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் 5-ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா
மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா
தனியார் தொலைக்காட்சி சார்பில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.
இதையடுத்து தெலுங்கு, மலையாளத்திலும் பிக்பாஸ் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
மலையாளத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து
வழங்கினார். கொரோனா காலம் என்பதால் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வாரத்தில் புதன்கிழமை தோறும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த வாரம் புதன்கிழமை அன்று ஊழியர்களுக்கு
கொரோனோ பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில்
அவர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இதனால் இரண்டு வாரங்களுக்கு மலையாளத்தில் நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெண்ணிற்கு தொல்லை கொடுத்த பிக் பாஸ் பிரபலம்
பெண்ணிற்கு தொல்லை கொடுத்த பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் என்றும் சர்ச்சைக்கு பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் ஜூலி, மீரா மிதுன், சுஜித்ரா போன்றவர்கள் பிக் பாஸ்ஸுக்கு பின்னரும் சுஜித்ரா சர்ச்சைகளில்
சிக்கினர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான டேனியல்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனி. ஆனால், இவர் பிக்பாஸ்
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற வெளியான ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் இவர் பேசிய ‘பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற
வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் தனது காதலியான டெனிஷா குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.
பல ஆண்டுகளாக டெனிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரை திருமணம் செய்துகொள்வேன் என்றும், தனது திருமணத்தை கமல் முன் நின்று நடத்த வேண்டும் கமல் தெரிவித்திருந்தார்.டேனி கூறியது போலவே வெளியே சென்றதும் தனது நீண்ட வ்ருட காதலியான
டெனிஷாவை திருமணம்செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி தனது காதலி டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்ட டேனிக்கு கடந்த ஆண்டு தான் குழந்தை பிறந்தது.
பிக் பாஸுக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் பேசிய ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி ஆதாரங்கள் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Thonuchu Solliton” என்ற கணக்கில் இருந்து டேனியல் 17
வயது பள்ளி வயது பெண்ணுடன் மோசமாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ‘ நான் அந்த பெண்ணின் விவரங்களைச் சேர்க்கவில்லை. டேனியல் போப் இரவு நேர பல பெண்கள் டி.எம்-கிற்கு மெசேஜ் செய்து அவர்களின் படங்களைக் கேட்கிறார்.
அவள் 17 வயது பள்ளி பெண் (அவள் புத்திசாலி. அவன் கேட்டபோது அவளுடைய விவரங்கள் எதுவும் அவனுக்குக் கொடுக்கவில்லை) இந்த டேனியல் போப் ஒரு குழந்தையுடன் இந்த நபர் .
அவர் தனது படங்களை இரண்டு முறை மற்றும் அதுவும் அதிகாலை 2 மணிக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். அவர் எவ்வளவு காலமாக இதைச் செய்கிறார் என்று தெரியவில்லை’ என்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.
சிம்பு
ஆனால் இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்படுகிறது. அவர் அரசியலில் பிசியாக உள்ளதால், அவருக்கு பதில் நடிகர் சிம்பு ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அர்ச்சனா வீட்டில் விசேஷம்-குவிந்த பிக்பாஸ் பிரபலங்கள்
அர்ச்சனா வீட்டில் விசேஷம்… ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான்
ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா, தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.
ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர். அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும்
அழைத்து வந்தனர். இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.
நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அர்ச்சனா தான் தானாகவே இருந்ததாக விளக்கமளித்தார்.
அர்ச்சனா
இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதில் ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, கேபி, நிஷா, சோம்,
அனிதா சம்பத் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல்
பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நெருங்கிப்
பழகுவதை பார்த்த ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி
இந்தி பிக்பாஸ் லோகோ
பிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி
நடனம் ஆடி உள்ளார். நடிகை ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது
. தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ராக்கி சாவந்த் தன் காதலை அவ்வப்போது
வெளிப்படுத்தி வருகிறார். திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி
சாவந்த் ‘ஐ லவ் யூ அபிநவ்’ என உடல் முழுக்க எழுதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராக்கி சாவந்த், அபிநவ் சுக்லா
பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 வது சீசனில் இருந்து வெளியேறியவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி 16 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பமானது. பின்னர் அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட்
போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இரண்டாவது வாரத்தில் முதல் நபராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா.
அவரைத் தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட கடந்த வார இறுதியில் ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய இரண்டு
பேர் வெளியேற்றப்பட்டனர். இதுவரை 8 பேர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் வீட்டுக்குள் 10 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும்
சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேகா, வேல்முருகன் ஆகியோர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
பிக்பாஸ்
மேலும் வீடியோ பதிவிட்டிருக்கும் நடிகை ரேகா, ரமேஷூம், நிஷாவும் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்கள். சுசித்ரா, சனம் ஆகியோர் பிஸியாக இருக்கிறார்கள். அதனால் தான்
அவர்களால் வர முடியவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் தான் அது போட்டி. வெளியே வந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்.” என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் எலிமினேட்… யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் எலிமினேட்… யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் 2 எலிமினேட்டில் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் எலிமினேட்… யார் யார் தெரியுமா?
கமல்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய
இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்
. அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரமேஷ் – நிஷா
இந்நிலையில், இந்த வாரம் 2 பேர் எலிமினேட் செய்ய இருப்பதாக புரமோ வீடியோவில் கமல் கூறினார். தற்போது யார் எலிமினேட் ஆனார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இன்றைய
(சனிக்கிழமை) நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷும், நாளை நிஷாவும் வெளியேற்றப்பட்டுள்ளதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா சுசித்ராவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகர் செல்ல இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?
கமல்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத், ரம்யா
பாண்டியன், நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, வேல் முருகன், கேபிரில்லா உள்ளிட்ட 16 பேருடன் தொடங்கப்பட்டது.
வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்துள்ளனர். இதில் நடிகை ரேகா, வேல்முருகன் ஆகியோர்
வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகர் வீட்டுக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிம்
சின்னத்திரை நடிகரான ஆசிம் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஆசிம்
பகல் நிலவு உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக ஆசிம் நடித்திருந்தார்.
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன்
தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்
. அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர்
பட்டியலில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் 6 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.
வேல்முருகன்
மீதமுள்ள ஆஜித், வேல்முருகன், நிஷா, சோம் சேகர், சுரேஷ் ஆகிய ஐந்து பேரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில்,
இன்று வெளியான புரோமோவில் வேல்முருகனை தவிர்த்து அனைவரும் வீட்டில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் வேல்முருகன் எலிமினேட் ஆனது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், ரைசா
அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், ரைசா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க என்று பதிலளித்துள்ளார்.
அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க – ரைசா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இதன்பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா
காதல் என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மேலும் சில படங்களில் நடித்து
வருகிறார்.
ஹரிஷ் கல்யாண்- ரைசா
எப்போதும் ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளிக்கக் கூடியவர் ரைசா. அந்தவகையில் ரசிகர் ஒருவர், ‘ஹரீஷ்
அண்ணாவும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரைசா, “ஆமாம். நாங்கள் திருமணம்
செய்து கொள்ளப் போகிறோம். ஆனால் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள்.
அவருக்கு இது சர்ப்பிரைஸ்” என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், என்னை ஒழிக்கமுயன்றார் என்று நடிகை சனம் ஷெட்டி மீது புகார் கூறியிருக்கிறார்.
என்னைஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
சனம் ஷெட்டி – தர்ஷன்
தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள்
காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.
இதனை சனம் ஷெட்டி மறுத்தார். தர்ஷனும், நானும் இரண்டரை வருடம் கணவன்-மனைவி போலவே
வாழ்ந்தோம். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் அவர் மாறி விட்டார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி இருப்பதில் உண்மை இல்லை என்றார்.
இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சனம் ஷெட்டி – தர்ஷன்
“சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால்
பிரச்சினை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல.
அந்த நபர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது
குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலம் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி.”
இவ்வாறு தர்ஷன் கூறியுள்ளார்.













