Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர்கள் போராட்டம் – பாடசாலைகள் பூட்டு

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு

போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி,

அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்,


இன்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு

    இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு

    இலங்கையில் பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி முச்சு முடிவு செய்துள்ளது


    இதன் அடிப்படையில் ஒரு மணித்தியாலம் நீடிக்கவும் ,சனிக்கிழமைகளில்

    பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்க பட்டுள்ளது

    மேற்படி செயல் ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்

      Posted in Uncategorized

      நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

      நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

      இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக


      நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு வடக்கு,தெற்கு ,வடமேல்,கிழக்கு

      ,மாகாணங்களின் பாடசாலைகள் மறு அறிவிதல் வரை விடுமுறை விடுவிக்க பட்டுள்ளது

      ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து நிலையை கருத்தில் கொண்டு இந்த

      உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        நாளைமுதல் பாடசாலைகள் ஆரம்பம்

        சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

        இதுதொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

        இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும்.

        கொவிட் தொற்றுடன் தொடர்புடைய ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின்
        தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு

        இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு

        இலங்கை பாடசாலைகள் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும்

        நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

          Posted in Uncategorized

          பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்

          பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்

          அமெரிக்கா Colorado பாடசாலை ஒன்றின் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி
          சூட்டு தாக்குதலை நடத்தினார்

          இதில் ஆறு மாணவர் படுகாயமடைந்துள்ளனர்


          சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் பாதுகாப்பை


          பல படுத்தியதுடன் சந்தேக நபரை வேட்டையாடினர்

          அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு தற்போது துப்பாக்கி


          சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
          குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            கிளிநொச்சி பாடசாலைகளுக்கு விடுமுறை

            இலங்கை

            கிளிநொச்சி பாடசாலைகளுக்கு விடுமுறை

            கிளிநொச்சி பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவெள்ள பெருக்கு


            ஏற்பட்டுள்ளதால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அணைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

            அளிக்க பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            மூடப்பட்டுள்ள சகல பாடசாலைகளிலும் , இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை

            மூடப்பட்டுள்ள சகல பாடசாலைகளிலும் , இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை

            கொரோனா வைரசு தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள நாடு பூரகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் ,இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.

            இதற்கு அமைவாக தரம் 10,11,12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.

            சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுபுவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும்அவர் கூறினார்.

            மாணவர்களும் ,இதுதொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.

            தரம் 9 க்கு உட்பட்ட அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

            இதேவேளை, ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சுகாதார சிபார்சு கிடைத்தவுடன் தரம் ஒன்றில் இருந்து

            9 வரையான வகுப்புக்ககளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

            Posted in Uncategorized

            சகல ஆரம்பப் பாடசாலைகளும் இன்று ஆரம்பம்

            சகல ஆரம்பப் பாடசாலைகளும் இன்று ஆரம்பம்

            நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

            பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

            கொவிட் நிலை முழுமையாக ஒழியவில்லை. இதனால், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் செலுத்துதல் அவசியமாகும்.

            சிறுவர்களுக்கான உணவுகளை வீட்டிலேயே செய்து கொடுக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்படுகின்றனர்.

            பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறுவர்களின் போக்குவரத்தை கருத்திற் கொண்டு, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

            பாடசாலைகளை விட்டு வீட்டிற்கு வந்தவுடனேயே, குளித்தல் அவசியமாகும். அவ்வாறே ஆடைகளையும் உடனடியாக சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

            அரசாங்க மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தற்சமயம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

            இன்று ஒன்பதாயிரத்து 100க்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

              Posted in Uncategorized

              பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

              பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

              நாட்டிலுள்ள, 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

              மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு

              மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

              ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். காய்ச்சல் தடிமன் – சளி

              போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

                Posted in Uncategorized

                பாடசாலைகள் திறக்க படுமா – நாளை அறிவிப்பு

                பாடசாலைகள் திறக்க படுமா – நாளை அறிவிப்பு

                கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள்

                முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் நாளை (24) முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது.

                இதுதொடர்பில், இன்று பல கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெறும் இந்தக் கூட்டங்களில் சுகாதார அதிகாரிகளும் பங்குபற்றுவர்.

                பாடசாலை​களை திறப்பது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள், கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நாளை (24) அறிவிக்கப்படும்.

                  Posted in Uncategorized

                  பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதில் அரசாங்கம் கவனம்

                  பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதில் அரசாங்கம் கவனம்

                  சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது

                  தொடர்பில் இன்று (15) சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

                  இதற்கமைவாக நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

                  இந்த பாடசாலைகளை அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

                  இதன்படி, பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது

                  பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை வகுக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

                  அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

                  தடுப்பூசி ஏற்றப்படாத பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவோருக்கும் விரைவில் தடுப்பு ஊசி ஏற்றப்படும் என அவர் குறிப்பிட்டார்.

                    Posted in Uncategorized

                    பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம்

                    பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம்

                    கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

                    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் காணொளி தொழில்நுடபம் ஊடாக நேற்று நடைபெற்ற

                    கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

                    அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை

                    கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

                    இது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பை சுகாதார மற்றும் கல்விதுறைசார் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்ப குழு ஒன்றிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

                    2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும், பல மாணவர்களுக்கு முன்பிள்ளை பருவ கல்வியும்

                    கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

                    Posted in Uncategorized

                    கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

                    கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

                    சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை

                    அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் தெரிவித்தார்.

                    இதன் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

                    இன்று (12) ஆரம்பமான ‘இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி’ என்ற திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தல்

                      1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தல்

                      ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின்

                      தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

                      இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் பாடசாலைகளின்

                      அபிவிருத்தி திட்டங்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தலைமையில் நேற்று ஆராயப்பட்டது.

                      கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் உயர்மட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இந்த சந்திப்பில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவிதல்வரை அடித்து பூட்டு

                      பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவிதல்வரை அடித்து பூட்டு

                      இலங்கையில் நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள்

                      ,தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

                      எனஅரசு அறிவித்துள்ளது

                      நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து அதில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக

                      இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் வைகாசி 7 வரை பாடசாலைகள் அடித்து பூட்டு

                        இலங்கையில் வைகாசி 7 வரை பாடசாலைகள் அடித்து பூட்டு

                        இலங்கையில் அணைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏழாம் திகதி வரை அடித்து பூட்ட பட்டுள்ளது


                        நாட்டில் நிலவி வரும் நோயின் தாக்குதல் எதிரொலியால் இந்த அடித்து பூட்டு நிகழ்வு அறிவிக்க பட்டுள்ளது

                        மேலும் இவை தொடந்து திறப்பதா இல்லையா என்பது தொடர்பாக விரைவில் அறியத் தரப்படும்

                        என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          பாடசாலைகள் அடித்து பூட்டு – குஷியில் மாணவர்கள்

                          பாடசாலைகள் அடித்து பூட்டு – குஷியில் மாணவர்கள்

                          திருமலையில் உள்ள அணைத்து பாடசாலைகளும் அடித்து மூட படுகிறது ,கொரனோவின்

                          பரவலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிட பட்டுளள்து

                          இதனால் மாணவர் குஷியில் உறைந்துள்ளனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்

                            ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்

                            இம்முறை ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

                            இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்திற்கான பாடசாலைகளின் இரண்டாவது வாரம் சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 மாணவர்கள் உள்ள வகுப்பொன்று வாரத்தின் எல்லா நாட்களும் நடைபெறவேண்டும்.

                            அத்துடன், 16 க்கும் 30 க்கும் இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்பொன்று 2 குழுக்களாகப் பிரித்து ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றவாறு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

                            முப்பது மாணவர்களைவிட கூடிய வகுப்புக்கள் மூன்று குழுக்களாகப் பிரித்து சமனான எண்ணிக்கையிலான நாட்களில் வகுப்புக்களை நடத்த வேண்டும்.

                            மேலும் நேற்றைய தினம் அதிகளவிலான பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

                            இதேவேளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் நாளை பாடசாலைகள் மீழ ஆரம்பம்

                              இலங்கையில் நாளை பாடசாலைகள் மீழ ஆரம்பம்

                              இலங்கையில் இரண்டாம் தவணை காரணமாக விடுப்பு விட பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பமாகிறது

                              ,நாளை முதல் நாள் என்பதால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்

                              மேலும் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஏற்றவாறு மாணவர்கள் உள்வாங்க பட்டு

                              கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க படுகிறது