Posted in இலங்கை செய்திகள்

தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது

தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது

இலங்கை ; கண்டி கட்டன் பகுதியில் உள்ள நகை அடைவு பிடிக்கும் கடையொன்றுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 177பவுன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றனர் .

இந்த தங்க நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த தங்க நகை திருட்டு தொடர்பாக ஆறு மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் தங்கம் திருடிய நபர்கள் அதே திருடிய தங்கத்துடன் சிக்கியுள்ளனர் .

இந்த நகை திருடிய திருடர்கள் நால்வரும் திருடிய நகைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

ஆறுமாதங்கள் கழித்து திருடர்கள் திருடிய நகைகளுடன் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Posted in Uncategorized

    யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

    யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

    யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நடமாடும் மக்களிடம் நகைகளை இலக்கு வைத்து

    கொள்ளையடித்து வந்த ஐவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையிடம் சிக்கியுள்ளது

    நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த மேற்படி குற்ற செயல் தொடர்பாக போலீசார் மேற்க்கண்ட

    கண்காணிப்பு தேடுதல் வேட்டையின் பொழுதே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் தமிழர் வீடுகளில் ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

      லண்டனில் தமிழர் வீடுகளில் -ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

      பிரிட்டனில் பல காலமாக தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் சிக்கினார்

      இவர் சுமார் ஒருலட்சம் பவுண்டுகள் பெறுமதியான தங்கம் மற்றும் மணிக்கூடுகள் என்பன திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது

      நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்க பட்டுள்ளது

      தமிழர்கள் வீடுகளில் இவ்வாறான வெள்ளையர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கது