ரயில் கடத்தல் தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள்
Posted in உலக செய்திகள்

ரயில் கடத்தல் தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள்

ரயில் கடத்தல் தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள்

ரயில் கடத்தல் தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள் ,பாகிஸ்தான் நாட்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை மறித்த தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சுமார் 182 பேரை

பிணைக் கைதிகளாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள்

செவ்வாய்கிழமை (11) கடத்தினர். இதற்கு பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை கொன்றுள்ளதாக அந்த தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் வசம் சுமார் 182 பேர் பிணைக் கைதிகளாக உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. பாதுகாப்பு படை அதிகாரிகள் தங்களை

நெருங்கினால் பிணைக்கைதிகள் அனைவரையும் கொல்வதாக மிரட்டல் விடுத்துள்ளது.

தங்களை தரை வழியாக ராணுவம் நெருங்க முடியாத சூழல் நிலவுவதாக பலூச் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.

அந்த அளவுக்கு தங்கள் தரப்பில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இருப்பினும் வான்வழியாக தங்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறது.

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு இதற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் கூடுதல் ராணுவ படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

தீவிரவாதிகளின் இந்த கொடுஞ்செயலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அரசு இதுவரை தெரிவிக்க்காமல் உள்ளது.

என்ன நடந்தது? – 9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமை (11) அன்று பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது தீவிரவாதிகள் திடீரென ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் தடத்தில் இருந்து விலகி உள்ளது.

இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

அப்போது, ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தீவிரவாதிகள் பதில் தாக்குதலில் நடத்தியதாகவும் த ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது

முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயித்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே, காத்தான்குடி 4ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரை அடையாளம் கண்டுகொண்ட பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் அந்நபரை, சம்பவதினமான நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Posted in Uncategorized

30 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

30 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

நையீரியாவில் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் முப்பது பேரை சுட்டு படுகொலை செய்துள்ளனர்


தீவிரவாதிகளின் வெறியாட்டத்தில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிவருகின்றனர்

இராணுவத்தினர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்ற போதும் இவ்வாறான அதிரடி

தாக்குதல்களில் மக்கள் பலியாகி வருவதாக இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    மோஸ்க்கோவில் 8 தீவிரவாதிகள் கைது – பெரும் முறியடிப்பு

    மோஸ்க்கோவில் 8 தீவிரவாதிகள் கைது – பெரும் முறியடிப்பு

    மோஸ்க்கோவில் பெரும் தாக்குதலை நடத்தும் முகமாக ஊடுருவி இருந்த 8 தீவிரவாதிகளை தாம் கைது செய்துள்ளதாக ரசிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

    நன்கு திட்டமிட்ட பெரும் தாக்குதலை நடத்திட இவர்கள் தயாராக இருந்த நிலையில் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இணைந்து வாழ்வோம் இன்றே வா

      இணைந்து வாழ்வோம் இன்றே வா

      வென்றதாய் உலகில் ஏறியே நன்று
      வெடி குண்டாய் முழங்கிறாய்
      வென்றே தமிழர் ஆள்வார் நன்று
      வெட்கியே தலை குனிவாய்

      தீர்வு வழங்கிட தீர்வு இருந்தும்
      தீர்த்திட மறுக்கிறாய்
      தீயாய் கலவரம் நாட்டில் வெடிக்க
      தீயிடை நீ மடிவாய்

      ஆண்டைய நாட்டில் அன்றைய வாதி
      ஆள்கிறார் இன்று மறவாய்
      முன்னைய வாதி தீவிரவாதி
      முளைவிட்டான் இன்று பாராய்

      வெள்ளையன் கொள்கை அறியா உலகில்
      வெறியுடன் அலைகிறாய் -நாளை
      வெடிகுண்டு தந்தே உயிர்களை தின்பான்
      வெட்கியே தலை குனிவாய்

      ஒற்றை ஆட்சியில் மிதக்கிறாய் நன்றோ
      ஒருகணம் திரும்பி பாராய்
      கடாபி நிலை காலடி சுற்றும்
      கதறியே நன்று மடிவாய்

      இதுவரை சொன்னேன் இனவெறி என்றால்
      இன்றே உயிரை குடிப்பாய்
      பூகோள அரசியல் புதிரை அறிந்தால்
      புன்னகை வீசி தீர்வு கொடுப்பாய் …!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 25-09-2021
      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        தீவிரவாதிகள் பிரிட்டனில் எவ்வேளையும் தாக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை

        தீவிரவாதிகள் பிரிட்டனில் எவ்வேளையும் தாக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை

        பிரித்தானியாவில் தீவிரவாதிகள் எப்பொழுதும் தாக்குதலை மேற்கொள்ள கூடும் என பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

        ஆப்கானை தளமாக கொண்டே தலிபான்கள் இயங்கி வருவதாலும் அவர்களது கைகளில் விமானங்கள்

        உள்ளிட்டவை சென்றுள்ளதும்,அங்கு வைத்தே ஜிகாத் தற்கொலை தாரிகள் பயிற்றுவிக்க பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர்

        அவ்வாறான நபர்கள் எவ்வேளையும் பிரிட்டனில் தாக்குகள் நடத்த கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மக்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது

        Posted in உலக செய்திகள்

        இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 50 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை- தாக்குதல் முறியடிப்பு

        இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 50 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை- தாக்குதல் முறியடிப்பு

        கொரனோ நோயானது நாடுகள் தழுவிய ரீதியில் பரவி வரும் வேளையில் ,

        பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் இந்தியா மீது

          தாக்குதலை நடத்தும் முகமாக ,இந்தியாவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .

          இவ்வாறு இந்தியாவின் மேற்கு கடலோரமாக ,நுழையும் முயற்சியில்

          ஈடுபாடிருந்த தீவிரவாதிகளை தாம் கொன்று குவித்துள்ளோம் என இந்தியா அரச இராணுவம் அறிவித்துள்ளது

          அது தவிர மிக பெரும் தாக்குத்தல் ஒன்றை நடத்தும் முகாமாக இந்தியாவுக்குள் ,

          பாகிஸ்தான் உளவு அமைப்பு தீவிரவாதிகளை குண்டுகளுடன் அனுப்பிட

          முயன்று வருவதும் ,அவ்வாறு நுழைந்தவர்களை தாம் கைது செய்துள்ளதாகவும் இந்தியா அறிவித்துள்ளது

          மோடியின் ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சியில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர்

          என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது ,காஸ்மீர்,மற்றும் ஆபத்தான மேற்கு

          கடல் பகுதியில் இந்தியா இராணுவம் குவிக்க பட்டு கண்காணிப்பு பல படுத்த பட்டுள்ளது,

            எவ்வேளையும் பெரும் நாசகார தாக்குதல் ஒன்றை இந்தியாவில் நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

            இந்தியாவுக்குள் நுழைய முயன்ற
            இந்தியாவுக்குள் நுழைய முயன்ற