Tag: தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் உயிரிழப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளதோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும்
பறித்துள்ளது. வைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சுவிஸ்மெடிக்’ என்று
அழைக்கப்படும் அந்த நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி நோய்த்தொற்றுகள் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் மரணம்
ஏற்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் தடுப்பூசி தான் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்
இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்
இலங்கைக்கு சுமார் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது
பிரிட்டன் Oxford-AstraZeneca மருந்துகளே இவ்விதம் வந்தடைந்துள்ளது
இதனை அடுத்து வரும் நாட்களில் பல லட்சம் பேருக்கு இந்த ஊசிகள் செலுத்த படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
பிரிட்டனில் யூலைக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி -அரசு
பிரிட்டனில் யூலைக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி -அரசு
இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை தடுக்க எதிர்வரும்
யூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசிகள் செலுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது
தற்பொழுது வயதனவர்களுக்கு முன்னுரிமை வழங்க பட்டு செலுத்த
பட்டு வருவதுடன் ,நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு செலுத்த பட்டு வருகிறது
எதிர் வரும் 90 நாட்களுக்கு அணைத்து மக்களுக்கும் செலுத்த படும் என்றஅறிவிப்பு வெளியாகி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது அரசு
அரசியல்வாதிகள் குடும்பத்திற்கு களவாக கொரனோ ஊசிகள்
இலங்கையில் ஆளும் கோட்டா அடிமை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எம்பிக்கள் குடும்பங்களுக்கு கொரனோ
ஊசியானது திருட்டு தனமாக செலுத்த பட்டுள்ளதாக சஜித் கட்சி பிரமுகர் குற்றம் சுமத்தியுள்ளார்
திருட்டு
மகிந்தவின் ஆட்சியின் பொழுது பல மில்லின ரூபாய்களை அரச பணத்தில் இருந்து கொள்ளையடித்தமை வெளியாகியது போல
இந்த திருட்டுக்களும் கோட்டா ஆட்சி அகன்றதன் பின்னர் தெரிய வரும் என்பதில் சந்தேகம் இல்லை
அலிபாவாவும் நாப்பது திருடர்களும் ஆளுகின்ற பொழுது திருட்டு சாதாரணம் தானே ,நீங்க திருடுங்க அமைச்சர்களே ,திருட பிறந்த கூட்டம் திருடுகிறது
முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி
முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி
இலங்கையில் இன்று முன்கள பணியாளர்கள் 1,362 பேருக்கு கொரனோ
தடுப்பூசி போட படுகின்றன ,இந்திய வழங்கிய தடுப்பூசிகள் தற்போது செலுத்த பட்டு வருகின்றன
எதிர்வரும் சில வாரங்களில்சீனா வழ்ங்கும் தடுப்பூசியும்
பதுளையில் நில நடுக்கம் ஓடிய மக்கள்
இலங்கைக்கு கிடைத்து விடும், அவையும் இவ்வாறான
திட்டமிடல்கள் ஊடக மக்களுக்கு செலுத்த படும் என தெரிவிக்க படுகிறது
இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக தற்போது மக்கள்
பாவனைக்கு எடுத்துவரப்பட்டுள்ள தடுப்பூசி வேகமாக போடப் பட்டு வருகிறது
இதன் பிரகாரம் இதில் அரைவாசி ஆண் பெண்களுக்கு இவை
போட்டு முடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இரு மாதங்களுக்குள் ஏனைய மக்களுக்கும் போட்டு முடிக்க
பட்டு விடும் என எதிர்வு கூற பட்டுள்ளது குறிப்பிட தக்கது
32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது
32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது
இலங்கையில் இந்திய வழங்கிய கொரனோ நோயின் தடுப்பூசிகள்
முப்பத்தி இரண்டு ஆயிரம் பேருக்கு போடப் பட்டுள்ளதாக இலங்கை
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் எதிர் வரும் நாட்களில் மூவின மக்களுக்கும் இந்த
தடுப்பூசிகள் போட படும் என நம்பிக்கையுடன் தெரிவிக்க
பட்டுள்ளது
இலங்கையில் 5,286 பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டது
இலங்கையில் 5,286 பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டது
இந்தியாவால் வழங்க பட்ட கொரனோ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்த
நிலையில் இன்று முதன் முதலாக 5,286 பேருக்கு போடப்பட்டுள்ளது
,முன்னரணில்
பணிபுரியும் முக்கிய நபர்களுக்கே இந்த தடுப்பூசி பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கைக்கு ஐந்து லட்சம் கொரனோ தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா
இலங்கைக்கு ஐந்து லட்சம் கொரனோ தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா
இலங்கையில் வைரஸ் நோயால் பாதிக்க பட்ட மக்களுக்கு
வழங்கும் முகாமாக ஐந்து லட்சம் தடுப்பு ஊசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது
சீனாவுக்கு தலையும் ,இந்தியாவுக்கு வாலை காட்டும் இலங்கைக்கு
இந்தியா போராயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது
அனைத்தையும் பெற்று விட்டு தமிழக மீனவர்களை இலக்கு வைத்து
கொன்று குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் கொரோனா தடுப்பூசி அடுத்த மாத நடுப்பகுதியில் ஆரம்பம்
கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை
வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை
எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைகழத்தின் தடுப்பூசி பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பைஸர் மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக
தடுப்பூசிகளை ஏற்றுவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் பறவை வரும் கொரனோ வைரஸ் நோயினை தடுக்கும்
முகமாக தற்போது கண்டுபிடிக்க பட்ட மருந்துகள் மக்கள் பாவனைக்கு விட பட்டுள்ளது
கடந்த டிசம்பர் எட்டு முதல் இருபதாம் திகதி வரையில் மட்டும்
முதல் கட்டமாக சுமார் 616,933 பேருக்கு போட பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் தொடர்ந்து மக்களுக்கு இவை போட பட்டு வருகிறது ,பரவி
வரும் நோயினை இந்த தடுப்பு மருந்து மூலம் தடுக்கலாம் என் அரசு கருதுவது குறிப்பிட தக்கது
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
அமெரிக்காவில் தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ்
வாஷிங்டன்:
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு
வந்துள்ளது. மேலும் பல நாடுகள் மருந்துகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில், நர்ஸ்களிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் தலைமை நர்ஸ் டிஃபானி பாண்டிஸ் டோவர் (30 வயது)
இவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், ‘கொரோனா தடுப்பூசியைப்போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’
என்பதை விளக்கும் விதமாகத் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது சிலநிமிடங்களில், மயங்கிச் சரிந்துவிட்டார். இந்த நேரலை உலகமெங்கும் செய்தி ஊடகங்களில் ‘வைரல்’ ஆகிவிட்டது.
உடனே, அமெரிக்கத் ‘தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்’ கூக்குரல் எழுப்பிவிட்டனர். கொரோனா தடுப்பூசிக்கு மக்களைப் பரிசோதனை எலிகளாக ஆக்க வேண்டாம் என எதிர்ப்பை
தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்பதற்கு இந்தச் சான்றே போதும்; உடனடியாக அதைத் தடை செய்யுங்கள் என்று போர்க்கொடி உயர்த்தி விட்டனர்.
நர்ஸ் டிஃபானிக்கு, எப்போது ஊசி போட்டாலும் அந்த வலியைத் தாங்க முடியாது என்றும் உடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அவருக்கு
மயக்கம் தானாகவே சரியாகிவிடும் என்று தொலைக்காட்சி பேட்டியின் போதும் இதுதான் நடந்தது என்று அவர் பிறகு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மயக்கம் அடைந்தால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பதட்டத்துடன் அவரைப் பார்க்க, அவர் சிரித்த முகத்துடன் தனக்கு ‘வலி உணர்வைத் தாங்க முடியாதபோது
மயக்கம் வருவது உண்டு என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை’ என்றும் கூறியிருக்கிறார்.
லண்டனில் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு கொரனோ தடுப்பூசி
லண்டனில் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு கொரனோ தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல நோய் எதிர்ப்பு – நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி?
4 கோடியே 37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 11 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.
ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.
பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல மற்றும் ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு
சக்தியை உருவாக்குவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அனைத்து தரப்பினருக்கும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ள நிலையில்
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இங்கிலாந்தில் விரைவில் பயன்பாட்டிற்குவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள தவலின் படி, லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் தொகுப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில்
(நவம்பர் 2) வழங்கப்படும் எனவும் இதற்காக தயார் நிலையில் இருக்கும்படி மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா
கொரோனாவுக்கு எதிரான சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என்று சோதித்துப் பார்த்த ரஷியா அறிவித்துள்ளது.
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு வழங்கி கதி கலங்க வைத்து வருகிற சீனாவில், கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற
உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், ராணுவ அறிவியல் அகாடமியின் குழுவினருடன் இணைந்து ‘ஆட்5-என்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை ரஷிய நாட்டில் அங்குள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனம் நடத்துகிறது.
இந்த ஊசி மருந்து ரஷிய மக்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிறது.
இதுபற்றி பெட்ரோவேக்ஸ் மருந்து நிறுவனம் நேற்று கூறுகையில், “தற்போது
தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்கள் நன்றாக உள்ளனர். அவர்களில் யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள்
எங்களது நேரடி பார்வையில் ஒரு மாத காலம் வைத்திருக்கப்படுவார்கள். 4 இடைக்கால பரிசோதனைகள்
நடைபெறும். 6 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள்” என குறிப்பிட்டது.
மேலும் இந்த தடுப்பூசி தொடர்பான ஆரம்ப முடிவுகள் நவம்பர் மாதம் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறியது.
சீனாவின் இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்தவுடன், இந்த ஆண்டு மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் டோஸ்
தடுப்பூசியை தயாரிக்க முடியும். அடுத்த ஆண்டில் மாதம் 1 கோடி தடுப்பூசி தயாரிக்க இயலும் என்றும் பெட்ரோவேக்ஸ் தெரிவித்தது.
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுவதாவும், பாதிக்கும் மேலான முன்னணி மருந்து
நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் பணக்கார நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுகின்றன. பாதிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்களை
வாங்குவதற்கு அவை முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு கடிவாளம் போடுவதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா,
இஸ்ரேல் என பல நாடுகளும் தடுப்பூசியை உருவாக்கி, அவற்றை பல்வேறு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பார்த்து சோதித்து வருகின்றன.
இன்னும் சந்தைக்கு எந்தவொரு தடுப்பூசியும் பகிரங்க விற்பனைக்கு வரவில்லை.
இந்த நிலையில், உலக மக்கள் தொகையில் 13 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள பணக்கார நாடுகள், ஏற்கனவே முன்னணியில் உள்ள
5 தடுப்பூசிகளின் பாதிக்கும் மேலான (51 சதவீத) டோஸ்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜி-20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகள் கூடி கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பற்றி விவாதிக்க உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகையில், “தேவைப்படுகிற அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் இந்த தயாரிப்பாளர்களுக்கு இல்லை.
முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளும் வெற்றி பெற்றாலும் கூட இதற்கு சாத்தியம் இல்லை. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு
பங்கினர் அல்லது 61 சதவீதத்தினருக்கு 2022-ம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது” என கூறி உள்ளது.
இந்த கணக்கீடுகள், ஏக போகங்களையும், லாபங்களையும் பாதுகாக்கிற மருந்து நிறுவனங்களை அம்பலப்படுத்துகின்றன. இவை பணக்கார நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்.
அதே நேரத்தில் உலக மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசிக்கு தேவையானதை விட கூடுதல் காலம் காத்திருப்பார்கள் என்றும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், லாபம் சம்பாதிப்பதற்காக தனது தடுப்பூசி டோஸ்களை பணக்கார நாடுகளுக்கு வழங்கத்தான்
வாக்குறுதி அளித்துள்ளது என்றும், அதே நேரத்தில் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மூன்றில் இரு பங்கு டோஸ்களை வளரும்
நாடுகளுக்கு அளிக்க உறுதி தந்துள்ளது எனவும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி இந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “ஆக்ஸ்பாம் மற்றும் உலகின் பிற அமைப்புகள், மக்கள் தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளன. தேவையின் அடிப்படையில்
தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். நியாயமான முறையில் வினியோகிக்கப்பட வேண்டும். மருந்து நிறுவனங்கள், தடுப்பூசிகளை பரந்த அளவில் உற்பத்தி செய்ய
அனுமதித்தால்தான் இது நடக்கும். தங்கள் ஏகபோகத்தை பாதுகாப்பதற்கும், அதிகவிலை தருவோருக்கு விற்பதற்கும் பதிலாக
அவை தங்கள் காப்புரிமை பற்றிய அறிவை இலவசமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்” என கூறி உள்ளது.
எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு உலக பொருளாதாரத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவாகும் எனவும் ஆக்ஸ்பாம் கணித்துள்ளது
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப்
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் அதிபர்
டிரம்ப் கூறும்போது, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார்.
நவம்பர் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விடவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி
விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும்.
ஆனால் அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை வெளியிட்டால் அது தனக்கு சாதமாக அமையும் என்று டிரம்ப் கருதுகிறார்.
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம்,
ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு இது. இந்த தடுப்பூசியை
மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இந்த மருத்துவ பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 100 பேருக்கு மூக்கு வழியாக
‘ஸ்பிரே’ செய்து அதன் விளைவுகள் ஆராயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
கொரோனா தடுப்பூசி பரிசோதனை
லண்டன்:
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு
செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு
காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி
வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில
சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும். ஆனால் அவை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்’ என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்டவர் எங்கு இருக்கிறார், அவரது நோயின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
கொரோனா தடுப்பூசிக்கான 3-வது கட்ட சோதனைகள் மேற்கொண்டிருக்கும் 9 நிறுவனங்களில் அஸ்ட்ராஜெனெகா
நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு
கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு
உலகம் தழுவிய நிலையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
சுமார் ஐந்து லட்சம் பேர் அந்த நோயில் இருந்து விடு பட்டு அவர் தம் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என உலக சுகாதார் மையம் தெரிவிக்கிறது
தொடர்ந்து நாள் தோறும் பல்லாயிரம் பேர் இறந்த வண்னம் உள்ளனர் ,இதற்குரிய மருந்து பிரிட்டனால் கண்டு பிடிக்க
பட்டுள்ளது எனவும் ,அதன் தடுப்பு ஊசி செப்டாம்பர் மாதத்திற்கு முன்னர் பயன் பாட்டுக்கு வந்து விடும் என தெரிவிக்க பட்டுள்ளது
அதற்கு இடையில் பல லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .







