Tag: செயலாளர்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார் நீதிமன்றத்திற்கு வருமாறு தற்பொழுது அவருக்கு சமன் விடுக்கப்பட்டுள்ளது.Gotabaya’s secretary gets caught.
ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .
அதன் தொடர்ச்சியாக அவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இப்பொழுது நீதிமன்ற சமன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவும்பேரில் சிறை வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமன் எக்க நாயக்க கோத்தபாயவின் ஆட்சியில் செயலராக விளங்கி இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம்
அவரே இப்பொழுது ரணில் மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பின்புலத்தில் செயல்பட்டார் என்ற காரணத்தினால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.
இவரை அடுத்து முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் ,பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் தனித்தனியாகச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவையும் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலர் பதவியேற்ற பிறகு சிரஷ்ட அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.











