Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது

காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது

இலங்கை ; இலங்கையில் எரிபொருள் பெற்றிட எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நின்ற 13 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் மோதல் நிலை ஏற்படுத்தி அமைதியின்மை விளைவித்தனர் என்கின்ற குற்ற சாட்டில் இந்த அப்பாவி மக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது

    கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது

    இலங்கை ,யாழ்ப்பாணம், – கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உளவு இயந்திரம் மூலம் மணலை ஏற்றியவர்கள் இராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

    கொடி காமம் பகுதியியில் கள்ள மணல் ஏற்றுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து வந்த இராணுவத்தினர் மணல்

    ஏற்றியவர் இருவரை கைது செய்ததுடன் உளவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

      கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

      இலங்கை ,கொழும்பு ; உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் தமிழினப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவினை சிங்கப்பூர் அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்முனைப்பு தற்போது பல முனைகளில் இருந்து வலுப்பெற்றுள்ளது.


      இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்ப

      அழைக்க ஏற்பாடுகளை சிறிலங்கா அரசு செய்ய வேண்டும் என சிறிலங்கா ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி.சில்வா கோரியுள்ளார்.


      கோத்தபாயாவை இலக்கு வைத்து வெளிநாடுகளில் சட்டரீதியான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ள

      அவர், கோத்தபாயா மீது ஆதரமாற்ற போர்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அவருக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி மனோகர டி.சில்வா தெரிவித்துள்ளார்.


      கோட்டபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ்

      பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் தெரிவிக்கின்றது.

      கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

      தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.


      இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான

      குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.


      சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த

      நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு

      சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது.

      வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.


      இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலுவாக முன்வைத்திருந்தது.


      சிங்கப்பூர் தூதரகங்கள் முன்னால் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்த நா.தமிழீழ அரசாங்கம், சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி கையெழுத்து போராட்டத்தினையும் தொடங்கியிருந்தது.


      நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முனைப்பு விரிவாக்கம் பெற்று, தற்போது தென்னாபிரிக்காவினை தளமாக கொண்டு இயங்கும் ஜஸ்மின்

      சுக்கா அவர்களது தலைமையில் இயங்கும் உண்மை மற்றும் நீதித்திட்டம் அமைப்பு, உரிமைகள் குழு மற்றும் பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின்

      நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் உட்பட பல

      தரப்பினரும் சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.


      இதுவே சிறிலங்கா ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி.சில்வா அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது

        இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது

        இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி தொடர்பாக இலங்கையர்கள் உட்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

        இலங்கை பிரஜைகளை உள்ளடக்கிய கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் இந்திய பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகள் உட்பட

        41 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

        மேலும் இலங்கை பிரஜைகள் சிலர் வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டுகளை பெற முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தமிழ்நாடு

        காவல்துறையின் கியூ பிராஞ்ச் மதுரை பிரிவு விசாரணை நடத்தி வந்ததாகவும் இது தொடர்பாக 2019 செப்டம்பரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

        போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவு சீட்டினை வாங்கியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 போலிஸ் அதிகாரிகள், 14 கடவுசீ‌ட்டு

        அதிகாரிகள், 2 தபால் துறை ஊழியர்கள் உள்பட 41 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

        குறித்த வழக்கு தொடர்பாக மொத்தம் 15 பேர் (நான்கு இலங்கை தமிழர்கள் மற்றும் 11 பயண முகவர்கள்) இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
        இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய காவல் உதவி ஆணையாளர்

        (உளவுத்துறை) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியர் இந்த ஆண்டு மே மாதம் ஒப்புதல் அளித்த நிலையில், அந்தந்த திணைக்கள

        ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் அஞ்சல் துறைகள் தமது அனுமதியினை வழங்கி உள்ளது.


        அதனை தொடர்ந்து 2021 டிசம்பரில் 14 கடவுச்சீட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில்,

        இதுவரையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனவும், கியூ பிராஞ்ச் விசாரணை முடிந்து 41 பேருக்கு எதிரான இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


        விசாரணையில், 124 கடவுச்சீட்டுகளை கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் 51 பேர் இந்திய கடவுச்சீட்டினைபெற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

        மொத்த 175 கடவுச்சீட்டுக்களில் 28 இலங்கைத் தமிழர்களால் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டினை பெற்றுள்ளதாக இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

        மேலும் 30 கடவுச்சீட்டுகள் நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு


        வருகிறது எனவும் மீதமுள்ள 117 பேரில் 116 பேர் இந்திய நாட்டினரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

          இலங்கை ,நீர்கொழும்பு ;கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

          இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து ரெலோர் மீன்பிடி படகு மூலம் வெளிநாடு சென்று கொண்டிருந்த படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர் .

          இதன் பொழுது அந்த படகில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர் .

          இவ்வாறு கைதானவர்களில் ஐந்து பெண்கள் ஒன்பது சிறுவர்கள் 19 ஆண்கள் உள்ளடங்களாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

          கைதான அனைவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.

          இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

          கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் கைது

          கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  33 பேர்  கடல்படையால் கைது
          கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

          இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா நோக்கி தமிழர்கள் பயணித்த வண்ணம் உள்ளனர்.

          அவுஸ்ரேலியாவுக்குள் கடல்வழியாக நுழையும் மக்களை அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வருகின்றது.

          அவ்வாறு இருந்தும் தொடராக இலங்கைக்கு அகதிகள் இவ்விதமான ஆபத்தான கடல்வழியூடாக பயணித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

          கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  33 பேர்  கடல்படையால் கைது
            Posted in பிரித்தானிய செய்தி

            லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

            லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

            லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .

            பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

            லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
            லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

            இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .

            இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.

            கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


            லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது

              அவுஸ்ரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 54 பேரை கைது செய்த கடற்படை

              இலங்கை ; அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

              கைதானவர்கள் பொலீஸ் விசாரணைக்கு உபடுத்த பட்டு நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை படுத்தப்படவுள்ளனர் .

              அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக பயணிப்பவர்கள் கிரிஷ்மஸ் தீவில் சிறை வைக்க பட்டு இலங்கைக்கு மீள அவுஸ்ரேலியாவால் நாடுகடத்த பட்டு வருகின்றனர் .

              அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது

              இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

              அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது

              அவ்விதமான நாடு கடத்தல் செயல்பாடுகள் தொடராக இடப்பெற்ற வண்ணம் இருக்க ,இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.

              இலங்கை கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் படகுகள் எரிக்க படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ள போதும் இந்த அகதிகள் பயணம் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

              தமது நாட்டுக்குள் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவதை தடுக்க அவுஸ்ரேலியா அரசு இலங்கைக்கு கண்காணிப்பு படகுகளை இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

                இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

                இலங்கை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.

                இந்த போர் களத்தில் வழமைக்கு மாறாக புத்த பிக்குகள் பெருமளவு கலந்து கொண்டுள்ளது ஆளும் கோட்டபாய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த போராட்டம் வீச்சம் பெற்றுள்ளது .

                கோட்டாவை வீட்டுக்கு போ ,ராஜபக்சே குடும்பம் ஒழிக என்ற கொட்டு முரசு வாசகங்கள் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

                இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

                இந்த அமைதியான போராட்டத்தை நடத்திய இருபத்தி ஒரு போராட்டக்காரர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .இதில் ஒரு புத்த பிக்கும் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயன்ற 91 பேர் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

                இவர் யாவரும் புத்தளம் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மீன் பிடி படகு ஒன்றை சோதனை செய்தபொழுதே மேற்படி நபர்கள் சிக்கினார்

                ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையும் முகமாக கடல் வழியாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி ஆபத்தான கடல் வழியூடாக பயணிக்க முனைந்தவர்களே இவ்வாறு சிக்கினார்

                இவர்கள் அனைவரும் இலங்கை சிலாபம் ,மாரவில,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,திருகோணமலை ஆகிய பகுத்தியை சேர்ந்தவர்களாகும் ,இந்த படகில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 91 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என ஆசை வார்த்தையை கேட்டு பல லட்சம் பணத்தை செலவு செய்து பயணிக்கும் இவர்கள், வெளி நாடுகளில் எவ்விதம் சூழல் உள்ளது அங்கு சென்றால் போரின் பின்னரான காலப்பகுதிகியில் எமக்கு விசா கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதில்லை

                ஆனாலும் இலங்கையை விட்டு தப்பி சென்றால் நாங்கள் செல்வந்தராகிவிடலாம் என எண்ணுகின்ற சிந்தனை பிழைகளின் செயல்பாடுகள் ஒன்றாக இது உள்ளது

                ஆபத்தான கடல் வாழி பயணங்கள் மனித உயிரை கூட மாய்க்கும் நிலையில் உள்ளது ,உணவு குடிநீர் இன்றி கடலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் ,

                இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                இவ்வாறு இலங்கையை விட்டு தப்பி கடலில் பயணித்த பல நூறு இலங்கையர்கள் கடலில் காணாமல் போன நிலையில் உள்ளமை கவனிக்க தக்கது

                இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற அனைவரும் கடற்படையால் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்

                இலங்கையை விட்டு தப்பியோட பல நூறு மக்கள் தற்கால சூழலில் தயாராகி
                வருகினற்னர் ,

                அவ்விதம் இலங்கையை விட்டு தப்பிக்க முனையும் பல மக்கள் இந்தியாவுக்கு
                உயிர் பாதுகாப்பு தஞ்சம் தேடி செல்கின்றனர்

                ஆனால் இவர்கள் அது தாண்டி உயிரோடு விளையாடி பெரும் கடல்களில் சிறு படகில் பயணிக்க முயல்வது மிக பெரும் ஆபத்தான ஒன்றாகும் என்பது இங்கே சுட்டி கட்ட தக்கது.

                Posted in உலக செய்திகள்

                பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

                பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

                ஆபிரிக்கா நாட்டில் சுரங்க பணி மற்றும் கணனி தொழில் நுட்பம் தொடர்பான நிறுவனத்தை ஆரம்பித்து

                தென் ஆப்பிரிக்காவில் 1,3 மில்லியன் பணத்தை ஆட்டையை போட்ட இரண்டு இந்திய செல்வந்தர்கள் சர்வதேச போலீசாரின்சிவப்பு பிடி விராந்தின் ஊடாக துபாயில் கைது செய்ய பட்டுள்ளனர்

                ஆப்பிரிக்காவில் பெரும் நிறுவனத்தை நடத்தி வந்த இவர்கள் அங்கு அந்த நாட்டின் அதிபருடன் இணைந்து லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது

                இந்த இரு இந்தியா செல்வந்தர்களும் சகோதரர்கள் ஆவர்கள், குப்தா சகோதரர்கள் என இவர்கள் அழைக்க படுகின்றனர்

                மக்களின் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் கைது செய்ய பட்ட இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளனர்

                இவர்கள் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்த பட்டு அங்கு வைத்து விசாரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது ,


                இந்தியா தொழில் அதிபர்கள் என்றாலே மோசடிக்காரர்கள் என்ற நிலையில் அகில பரப்பில் அண்மைய காலங்களாக வெளிவரும் செய்திகள் ஊடாக காண முடிகிறது

                1993 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நிறுவனம் வைத்து நடத்தி மக்கள் பணம் மோசடி மற்றும் அரச பணத்தை மோசடி செய்துள்ள குற்ற சாட்டு இவர்கள் மீது விதிக்க பட்டுள்ளது

                பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

                பண மோசடி புரிந்த குப்தா சகோதர்கள் நீண்ட நாட்களாக சர்வதேச போலீசார் சிவப்பு தேடுதல் பட்டியலில் இணைக்க பட்டு தேட பட்டு வந்த இவர்கள் டுபாயில் டுபாய் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளனர்

                இலங்கையில் மகிந்த ராஜக்சே குடும்பமும் அவரது தோழமைகளும் பல மில்லியன் டொலர்களை பணம் கொள்ளையடித்துள்ளனர்

                அவர்களும் இவ்விதம் கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது
                குப்தா சகோதர்கள் பண மோசடி கைது போராட்ட காரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

                இவர்களது நீதிமன்ற பண மோசடி விசாரணைகள் திறந்த வெளி மக்கள் அரங்கின் முன்பாக நிகழ்த்த பட வேண்டும் என்பதும் மக்களின் கருத்தாக பதிய பெறுகிறது

                சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி பண மோசடி புரிந்த இரு இந்தியா செல்வந்தர்கள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

                  போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

                  இலங்கை சீனன்குடா பொலிஸ் பிரிவில் போதை மாத்திரை வைத்திருந்த பொலிஸ்
                  அதிகாரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                  போதை பொருளுடன் கைது செய்ய பட்ட உயர்நிலை பொலிஸ் அதிகாரி தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

                  இலங்கை பாதுகாப்பு படைகள் போதைவஸ்த்திற்கு அடிமையாகி ,குறித்த போதை பொருட்களை கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்

                  தமது அரச வாகனத்தில் மறைத்து எடுத்து செல்லும் பொழுது சிலர் சிக்கியும் இருந்தனர் ,
                  இலங்கையில் போதை பொருளுடன் நாளாந்தம் பலர் கைதாகி வருகினறனர்

                  போதைக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சிறார்கள் கடத்தி ,கற்பழித்து கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது

                  மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி போதை பொருளுடன் கைது
                  செய்ய பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது

                    வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது

                    இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளி நாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அறுபத்தி ஏழுபேர்
                    கடற் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                    இவர்கள் திருகோணமலை சல்லிசம்பல் தீவு பகுதியில் குழுமியிருந்த வேளையே கைது செய்ய பட்டுள்ளனர்


                    கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுவர் என எதிர் பார்க்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது

                      இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது

                      இலங்கையில் ஆளுமா அரசுக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து

                      கொண்ட மக்களில் ஆயிரத்து ஐநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                      இவ்விதம் கைது செய்ய பட்டவர்களில் 677 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்

                      மக்களை அச்சுறுத்தும் முகமாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது

                        அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது

                        இலங்கையில் இருந்து கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட இருபத்தி ஒரு


                        பேர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                        மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ,தர்மபுரம் கடல் பகுதியில் வைத்து இவ்விதம் கைது

                        செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி 230பேர் பொலிஸாரால் கைது

                          வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி 230பேர் பொலிஸாரால் கைது

                          இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை

                          இடம்பெற்றது ,இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர் என கூறி 230 பேரை காவல்துரையினர் கைது செய்துள்ளனர்

                          இந்த கைது நடவடிக்கை போராட்ட காரர்களை மிரட்டும் நகர்வாக உள்ளது

                            Posted in Uncategorized

                            சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

                            சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

                            சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்

                            இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                            இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


                            தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                              Posted in Uncategorized

                              பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்

                              பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்

                              இலங்கை பாணந்துறை பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கொள்ளை அம்பலமாகியுள்ளது

                              பகலில் இவர்கள் வீடுகளுக்குள் பிச்சைக்கார வேடத்தில் செல்லும் நபர்கள் அவர்களை அங்கு நோட்டமிட்டு


                              இரவில் கூரிய ஆயுதங்களை தாங்கிய வண்ணம் வீட்டு கதவுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது

                              கைதானவர்களிடம் இருந்து நகைகள்,மற்றும் பணம் என்பன மீட்க பட்டுள்ளன ,

                              தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .மக்களே உசார் ,கொள்ளையர்கள் உங்கள் அருகில்,

                                Posted in இலங்கை செய்திகள்

                                இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

                                இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

                                இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல

                                முற்பட்ட 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                மூன்று குடும்பங்களை சேர்ந்த 12 பேருடன் படகோட்டிகளும் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.

                                  Posted in Uncategorized

                                  குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

                                  குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

                                  உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.

                                  வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

                                  இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

                                  இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .

                                  அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .


                                  கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.

                                    இஸ்ரேல் இராணுவம்
                                    Posted in உலக செய்திகள்

                                    900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்

                                    900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்

                                    இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மேற்கு கரையில் ஒரு மாதத்தில் 900 பலஸ்தீன

                                    மக்களை கைது செய்து சிறையில் அடைத்து வதை புரிந்து வருகிறது

                                    இஸ்ரேல் மீது காமாஸ் ரொக்கட் தாக்குதலை நடத்தி ஓய்ந்த நிலையில் ,தற்போது

                                    மீளவும் அப்பாவி மக்களை போராளிகள் என கூறி இஸ்ரேல் கைது


                                    செய்த வண்ணம் உள்ளது மீளவும் ஓரும் பெரும் ரொக்கட் தககுத்தலுக்குள் இஸ்ரேல் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது