Tag: கால்
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு
கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு
உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது
- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது
- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்
- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை
- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

















