Tag: காயம்
கந்தபொல விபத்தில் மூவர் காயம்
கந்தபொல விபத்தில் மூவர் காயம்
கந்தபொல விபத்தில் மூவர் காயம் ,கந்தபொலவிலிருந்து நுவரெலியா நகரத்திற்குச் சென்ற கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்தில் சுமார் 15 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், காரில் பயணித்த ஒரு
முன்பள்ளி மாணவி, அவரது தாயார் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, நுவரெலியா-கந்தபொல பிரதான வீதியில் உள்ள பொரலந்த பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நுவரெலியா காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள், கடந்த 10 ஆம் திகதி பெய்த கனமழை
காரணமாக கந்தபொல மற்றும் பொரலந்த பகுதிகளில் சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனம் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
பென்சில்வேனியாவில் சிறிய விமான விபத்தில் ஐந்து பேர் காயம்
பென்சில்வேனியாவில் சிறிய விமான விபத்தில் ஐந்து பேர் காயம்
பென்சில்வேனியாவில் சிறிய விமான விபத்தில் ஐந்து பேர் காயம் ,அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் லங்காஸ்டர் கவுண்டியில் ஒரு சிறிய விமானம் வாகன நிறுத்துமிடத்தில் மோதியதில், அதில் பயணம் செய்த ஐந்து பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டுக்கு செல்லும் வழியில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, லங்காஸ்டர் விமான நிலையத்திற்கு சற்று தெற்கே உள்ள மான்ஹெய்ம் டவுன்ஷிப்பில் உள்ள பிரதரன் கிராமத்தின் வாகன
நிறுத்துமிடத்தில் கிழக்கு நேரப்படி (2018 GMT) பிற்பகல் 3:18 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்த ஐந்து பேரும் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மான்ஹெய்ம் டவுன்ஷிப் தீயணைப்புத் துறையின் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை
செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தரையில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று சின்ஹுவா தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த சுமார் ஒரு டஜன் வாகனங்களும் சேதமடைந்ததாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், இடிபாடுகளில் இருந்து கரும்புகை வெளியேறுவதும், பல கார்கள் தீப்பிடித்து எரிவதும் தெரிந்தது.
இதுவரை, விபத்துக்கான காரணம் தெரியவில்லை, மேலும் விசாரணை நடந்து வருவதாக மத்திய விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்
அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்
அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற
உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எம்.பி.க்கும் இரண்டு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம் கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்
மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்
மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்,பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம் பெற்றுள்ளது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதை ஊடாக பயணித்த இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிப்பு அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இருதரப்புக்கும் கடும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.
இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தினால் அப்பாவி பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற தொடர் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
இந்த யுத்தம் என்று தணியும் என இருநாட்டு மக்கள் மத்தியில் கருத்துக்களாக காணப்படுகின்றன ஆனால் யுத்தத்த முடிக்க நினைக்கும் தருவாயில் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு இல்லை என்பதாக இருப்பதாக தெரியவில்லை.
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தினால் உலக நாட்டினுடைய பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி நோக்கி செல்கிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களும் சொல்ல நான் துயரை சாதித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்
பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்
பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம், மதுரையில் நாய் கடித்து இந்த ஆண்டு 6700 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இவ்வாறு காயம் அடைந்தவர்கள் பதுளை போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக, வைத்தியசாலை பதிவு போட்டேன் குறிப்பேடுகள் காண்பித்திருக்கின்றன.
ஒரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளதான இந்த புதிய பதிவேடுகள், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கட்டாகாலிகளாக திரிகின்ற நாய்கள் வீதியால் சென்ற மக்களையும் வீட்டில் இருந்த மக்களையும் கடித்துள்ள சம்பவம் இந்த பதிவுகள் ஊடாக காண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபைகள் நாய்களை பிடித்து பாதுகாக்க மறுத்து மக்களுடைய போக்குவரத்துக்கான சுதந்திர அனுமதியை வழங்க மறுத்து வருவதான கூட்டச்சாட்டு முன்வைக்கப்படுகிறது .
2024 ஆம் ஆண்டு நாய்கடிக்கு இலக்காகி 6700 பேர் காயமடைந்துள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்
ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்
ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம் , அமெரிக்கா ப்ளூரிடா பகுதியில் ரயில்வே கடவை ஒன்றை கடக்க முற்பட்ட தீயணைப்பு இயந்திரம் ரயிலோடு மோதி சிதறியது சிறையில் நடத்திய இந்த முதல் சம்பவத்தின் பொழுது தீயணைப்பு வண்டிகள் பலமாக சிதம்படித்த காணப்படுகிறது .
இந்த ரயில் தீயணைப்பு வண்டி மோதலின் பொழுது 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாய சேவை ஒன்றை கவனிக்கும் முகமாக மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த தீயணைப்பு வண்டி
ரயில்வே தடத்தை கடக்க முற்பட்ட பொழுது இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
தொடர்ந்தும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .
ரயிலின் முன்பக்கமும் அதே போன்று தீயணைப்பு வண்டியும் பலமான சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்படுகிறது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பர பரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
துப்பாக்கிச் சூடு பெண் காயம்
துப்பாக்கிச் சூடு பெண் காயம்
துப்பாக்கிச் சூடு பெண் காயம் மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொழும்பு- 13 யைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையின் பிரகாரம், கரையோர பொலிஸாரினால் இரண்டு பெண்கள், சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவ்விருவரும் மாளிகாந்த நீதவான் முன்னிலையில், சனிக்கிழமை (14) ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு வந்த பெண்ணொருவரின் கணவன்,
அப்பெண்ணை பிணையில் எடுத்தார். அதன் பின்னர், அங்கிருந்து கணவனுடன் வெளியேறிய போதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் துப்பாகிப்பிரயோத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த மருதானை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி ஐவருக்கு காயம்
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி ஐவருக்கு காயம்
இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு அனுராதபுரம் ஏ28 பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பண்டாரகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கி மாம்பழம் ஏற்றிச்செல்ல வந்த சிறிய லொறியும், அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி வீதிகளின் ஓரங்களில் பதிக்கும் (இன்டர்லாக் கற்களை) ஏற்றிச் சென்ற பெரிய லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிய ரக லொறியின் சாரதியின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம் இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை – கொங்கொடியா பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து இராகலை பொலிஸா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம்
பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம்
பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம் ,நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை (16), நெடுஞ்சாலையில் செல்லும்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பௌசர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால் பௌசரில் இருந்த பெற்றோல் கசிந்து வெளியேறியது. அங்கிருந்த மக்கள் கசிந்த பெற்றோலை சேகரிக்க விரைந்தனர்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், பௌசர் தீப்பிடித்து எரிந்தது. இதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் சரக்கு ரயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், வீதி மார்க்கமாக பௌசர்களில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
80பேர் காயம் இஸ்ரேல் தாக்குதலில்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
80பேர் காயம் இஸ்ரேல் தாக்குதலில் ,காஸாவின் தங்குமிடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பள்ளி மீது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
லெபனானின் தேசிய செய்தி நிறுவனம், லெபனானில் சிடோனுக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்
பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கிறது, இது நாட்டின் தெற்கில் உள்ள பல நகரங்கள் மீது குண்டுவீச்சைத் தொடர்ந்தது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்
கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்
கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம் ,ஷாங்காய் பல்பொருள் அங்காடியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி, 15 பேர் காயமடைந்தனர்
நகரின் தென்மேற்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் உள்ள புறநகர் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் நகரின் தென்மேற்கில் திங்கள்கிழமை நடைபெற்றது, இந்த ஆண்டு சீனாவின் முக்கிய நகரங்களில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் சமீபத்தியது.
லின் என்ற குடும்பப்பெயர் கொண்ட 37 வயதான சந்தேக நபர், தாக்குதலுக்கு பதிலளித்த பொலிஸாரால் சிறிது நேரத்திற்குப் பிறகு காவலில் வைக்கப்பட்டார் என்று உள்ளூர் சாங்ஜியாங் பொலிஸ் கிளை செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில் லின் தனிப்பட்ட நிதி தகராறைத் தொடர்ந்து “தனது கோபத்தை வெளிப்படுத்த” ஷாங்காய்க்குச் சென்றதாகக் கூறப்பட்டது, காவல்துறை மேலும் கூறியது.
அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தினத்தையொட்டி வரும் பாரம்பரிய “கோல்டன் வீக்” விடுமுறைக்கு சீனா தயாராகும் போது கத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.
பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்
பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்
பேரூந்து விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இரத்தினபுரி பகுதியிலிருந்து ரம்புகளை நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து ஒன்று அவிசாவளை கேகாலை பிரதான வீதியில் கொட்டப்பல தண்டவாளத்திற்கு அருகில் விபத்தில் சிக்கியத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காயமடைந்த எட்டு பேரும் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .
இலங்கையில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வீதி விபத்துக்களினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை (30) காலை திடீர் சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.
அதன்போது, சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்றுள்ளனர். அதனையடுதே, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். தப்பிச்சென்ற நால்வரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில், தற்காலிகமாக பணி இடைநிறுத்தம்
செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் (41) வயதுடையவர் எனவும் இவர் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக கண்டி- போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு பதிவாகியுள்ளது .
வவுனியா மாரம்பைக்குளம் அரசடி நகர் பகுதியில் நாய்கள் காப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த, வாள்வெட்டு தெரு ரவுடி கும்பல் ,திடீர் கோடாரி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
நாய்கள் காப்பகத்தின் நுழைவயில் கதவு கோடரியால் கொத்தி சேதமாக்க பட்டுள்ளதுடன் ,அவ்வேளை அங்கிருந்த நாய்கள் பராமரிப்பு கால்நடை மருத்துவர் மீதும் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் மருத்துவருக்கு இரண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .
நோர்வேயில் இருந்து சென்று நாய்கள் காப்பக்கத்தை நடத்தி வரும் நோர்வே ராசி என்பவரின் நாய்கள் காப்பகம் மீதே இந்த வாள்வெட்டு குழுவின் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குறித்த நுழை வாயில் கதவு ஒன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்க பட்டிருந்தது .
அவ்வாறான விலை உயர்ந்த பாதுகாப்பு கதவே தற்போது இந்த கூலி குழு ஊடாக வெட்டி சேத படுத்த பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நோர்வே ராசி அவர்கள் கண்ணீரோடு கதறி விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட உறவுகளில் முக்கியமானவர்கள் உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் .
குறித்த நாய் காப்பகத்தை முடக்கும் நடவடிக்கையில் ,வெள்ளை வேட்டி அரசியல் கட்சி பெருச்சாளி ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் ,
அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் புதிய நேர்மையான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் ,இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இடம்பெற்ற பொழுது ,ஆளுகின்ற அனுரகுமார திசநாயக்கவின் கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு நேரடியாக சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர் .
மக்கள் அரசாக விளங்கும் அனுரகுமார திசாநாயக்க கட்சியினர் மக்கள் நலன் அக்கறையுடன் செயல்பட்ட விடயம், எம்மை வியப்பில் உறைய வைத்ததுடன் ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Akd கட்சி உறுபினர்கள் சம்பவம் இடம்பெற்ற நாய்கள் காப்பகம் சென்று பார்வையிட்டு ,உரிய நடவடிக்கையை மேலதிகமாக மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
கடந்தஆட்சி காலத்தில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படும் இவ்வாறான சமூக விரோதிகள் உள்ளவரை ,நாடும் மக்களும் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற கேள்வியை ,இந்த சம்பவம் எடுத்து காட்டியுள்ளது .
எனவே இன்றைய ஆளும் அரசு, மக்களை மிரட்டும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி,
சம்பந்த பட்ட நபர்களையும் ,அவர்களின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கட்சிக்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்பு கோரிக்கை விடுகின்றோம் .
Akd கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள விட்டால் அதுவே அனுரகுமார திஸாநாயக்கவின் நல் ஆட்சிக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் .
ஆகவே Akd கட்சியினர் விழிப்புடன் செயல் படவேண்டிய காலமாக இது காணப்படுகிறது.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்
தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்
தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம், தென் கொரியாவின் இலையுதிர்கால அறுவடைக் கொண்டாட்டமான ஐந்து நாள் சூசோக் விடுமுறையின் முதல் நாளில், தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயமடைந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் தென்கிழக்கு துறைமுக நகரமான மேற்கு பூசானில், உள்ளூர் நேரப்படி காலை 6:56 மணியளவில் (2156 GMT வெள்ளிக்கிழமை) ஒரு விரைவுப் பேருந்து ஒரு பாதுகாப்புப் பாதையில் மோதியது மற்றும் ஒரு இடைநிலைப் பகுதியின் மீது மோதியது, Xinhua அறிக்கைகள்.
இதில், பேருந்தில் இருந்த 22 பேரும், ஓட்டுனர் உட்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த இருவர் விபத்தின் தாக்கத்தால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிவேக நெடுஞ்சாலையின் எதிர் பாதையில் காணப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர், டிரைவர் குடிபோதையில் வாகனம் ஓட்டவில்லை.
இலையுதிர் விடுமுறையின் போது, தென் கொரியர்கள் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பங்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி வரும்போது நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்
பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்
பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியாக விளங்கி வரும் Karmei Tzur பகுதியில் பலஸ்தீன போராளி குழு தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த தக்குதலில் and Gush Etzion,பகுதியை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .
காரில் பயணித்த போராளிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நாடத்தியதில் அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ,தாக்குதலை நடத்தியவர்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியதில் அதில் அவர்கள் கார் எரிந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகள் சுற்றிவளைக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இஸ்ரேலை பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளே ஊடுருவி, பலஸ்தீன போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம்
இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம்
இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம் .பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு உள்ளே தாக்குதலை ஆரம்பித்துள்ளன .மேலதிக செய்திகள் காணொளி உள்ளே .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்










































