Tag: கமல்
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்
விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கமல், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல் இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்
கமல் மன்னிப்பு கேட்டு கொண்ட செயல் மக்கள் மத்திதியில் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் பேசும் போது, 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் ரசிகர்கள் 20
ரூபாய் செலவு செய்வார்கள். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இப்போது நன்றி சொல்ல மாட்டேன். வேற மாதிரி
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்
நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்ல டீம் எனக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் விக்ரம் வெற்றி படமாக அமையும் என்றார்
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
கமல்
நடிகர் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய், சின்ன
பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா,
தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.
தாமரை
தாமரை
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். சென்ற வாரம் 12
லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு சிபி வெளியே சென்று விட்டார். தற்போது 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் தாமரை வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கமல்
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
கமல்
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா
விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
கமல் ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளபோதிலும், 3ம்தேதிவரை
தனிமைப்படுத்தப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
கமல் ஹாசன்
பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள
ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனை முடிவில்
கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 3ம்தேதிவரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்து வருவதுடன்
நீண்டநாள் கிடப்பில் உள்ள இந்தியன்2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கமல்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும்
, பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார்.
கமல்
இந்நிலையில் மருத்துமனை கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவு
ம், குணமடைந்து வருகிறார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்
ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்
ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்
ரஜினிகாந்த், கமல் ஹாசன்
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக
ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வேகமாக குணமடைந்து
வருவதாகவும், ஒருசில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த்
விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அடிக்கிற அடியில் கமல்,ரஜனி,விஜய் யாரையுமே அரசியலுக்கு வரக்கூடாது
அடிக்கிற அடியில் கமல்,ரஜனி,விஜய் யாரையுமே அரசியலுக்கு வரக்கூடாது
நடந்து முடிந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முன் கூடியே கணித்த சீமான் ,
இவரது முற்போக்கு சித்தனை சாத்தியமானது என்பது இது தாங்க
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
சினிமாவில் கீரோ – அரசியலில் சீரோ – கமலை கிண்டலடிக்கும் ஊடகங்கள்
சினிமாவில் கீரோ – அரசியலில் சீரோ – கமலை கிண்டலடிக்கும் ஊடகங்கள்
நடந்து முடிந்த தமிழக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல் படு தோல்வியை சந்தித்தார்
,மக்களின் பெருமித ஆதரவு தனக்கு உள்ளதாகவும் தான் தமிழகத்தின் முதல்வர் என சூளுரைத்தவாறு போட்டியிட்டார்
அவரது அந்த எதிர் பார்ப்பு பலத்த தோல்வியில் முடிவுற்றது ,இதனை அடுத்து தற்போது சர்வதேச ஊடகங்களினால் அவர்கள் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் ,
சினிமாவில் திறன் மிக்க கீரோவாக வலம் வரும் அவர் அரசியலில் சீரோ என தெரிவித்து வருவது கமலுக்கு பெரும் அவமானத்தையும் ,துயரையும் ஏற்படுத்தியுள்ளது
இது போலவே ரஜினிகாந்தும் போட்டியிட முற்பட்டு திடீரென கட்சியை கலைத்து விலகினார்
,அதனால் அவர் தனது நடிப்பு தொழிலை முடக்காது தப்பித்து கொண்டார் என்ற வாதம் இபொழுது முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
உடைந்தது கமல் கட்சி – 10 பேர் கூண்டோடு விலகல்- video
உடைந்தது கமல் கட்சி – 10 பேர் கூண்டோடு விலகல்- video
தமழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் படு தோல்வியை கமல் சந்தித்தார் ,இதனை அடுத்து அதன்
கட்சி பிரதி தலைவர் உள்ளிட்ட பத்து பேர் பதவி விலகியுள்ளனர்
தானே தமிழகத்தின் முதல்வர் என சத்தம் போட்டு கிளம்பிய கமல் எதிர்பாராத படு தோல்வியை சந்தித்த நிலையில்,இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
தமிழகத்தின் புதிய முதல்வர் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்றே என்ன தோன்றுகிறது
வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு
வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுயேட்சை வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு
கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார் என்பவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்நகர், காட்டூர் பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
அந்த பிரசாரத்தில் ராமர் மற்றும் அம்மன் வேடமிட்ட 2 பேர் கலந்து கொண்டு கையில் கமல்ஹாசனின் கட்சி பேனர்களை வைத்திருந்தனர்.
கமல்ஹாசன்
அப்போது பேசிய கமல்ஹாசன் ராமர் வேடமிட்டவரை நோக்கி இந்த கடவுள், அந்த கடவுள் எல்லாம் நமது கடவுள் தான். இந்த கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என சொல்லியிருக்கிறார்.
எனவே இந்து கடவுள்களை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன் பேரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட 3 பேர் மீது மதத்திற்கு இடையே பிரிவினை ஏற்படுத்துதல், தேர்தலை பயன்படுத்தி மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்
.ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்
நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்
ரஜினிகாந்த் – கமல்ஹாசன்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில
தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் இன்று இரவு மருத்துவமனையில்
இருப்பார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலமடைந்து விரைவில் குணமடைய ரசிகர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வாழ்த்து
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்த்ல் வெளியிட்டுள்ள பதிவில்,
’நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth (ரஜினிகாந்த்)’
என பதிவிட்டுள்ளார்.
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தின் கதை உரிமையை பிரபல இயக்குனர் தேடி வருகிறார்.
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினிகாந்த் – கமல்ஹாசன்
1978-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்து, ருத்ரையா இயக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படம், ‘அவள்
அப்படித்தான்.’ 42 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த படத்தை மீண்டும் இயக்க முன்வந்து இருக்கிறார், டைரக்டர் பத்ரி
வெங்கடேஷ். இவர், ‘பாணா காத்தாடி,’ ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘அவள் அப்படித்தான்’ படத்தை மீண்டும் இயக்க முன்வந்தது ஏன்? என்பது பற்றி இவர் கூறுகிறார்:
“அவள் அப்படித்தான் கதை இன்றைய சூழலுக்கு பொருந்துகிற கதை. ‘மீ 2,’ ‘காஸ்ட்யூம் கவுச்’ போன்ற பிரச்சினைகள் பற்றி 42
வருடங்களுக்கு முன்பே பேசிய படம், இது. எனக்கு மிகவும் பிடித்த படம். பெண்ணியம்தான் படத்தின் கரு. பெண்ணியவாதியாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.
பத்ரி வெங்கடேஷ்
ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்பு, கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா,
ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
“இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதை பெருமையாக கருதுகிறேன். ‘அவள்
அப்படித்தான்’ கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? என்று தேடி வருகிறேன். அவரிடம் இருந்து உரிமையை வாங்கி
விட்டால், அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம்” என்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
கமல்ஹாசன் குறித்து ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர்
தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
மெக்கன்ஸி வெஸ்ட்மோர், கமல்ஹாசன்
ஹாலிவுட்
படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றிய வெஸ்ட்மோர், தசாவதாரம்,
அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார்.
வெஸ்ட்மோரின் மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகையாகவும், பாடகியாகவும்
வலம் வருகிறார். இவர் தனது டுவிட்டர் பதிவில், எனக்கு கமல்ஹாசனைத் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர்.
நான் சிறிய பெண்ணாக இருந்த போது கமல்ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு
என் தந்தை மேக்கப் செய்துள்ளார். கடைசியாக அவரை சந்தித்து சில வருடங்களாகிவிட்டன.
2வது புகைப்படத்தில் நானும் எனது அப்பாவும் கமல்ஹாசன் பரிசளித்த
இந்திய உடைகளை அணிந்துள்ளோம் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன்
பற்றிய மெக்கன்ஸியின் பதிவுக்கு கமல் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்
என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு
என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு
சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். கமல் இந்த விழாவில் பேசத் தொடங்கியதும் ரஜினியை ஆர்.கே அவர்களே என்று அழைத்து தொடங்கினார்.
அவர் பேசியதாவது:- இந்திய திரைப்பட துறையில் ரஜினியை தாமதமாக கவுரவித்து இருந்தாலும் சரியான நபரை தான் கவுரவித்து இருக்கிறார்கள். அவர் சினிமா வாழ்க்கைக்காக எடுத்துக்கொண்ட சிரத்தை எனக்கு சற்றும் குறையாதது. எங்களது பாணி தான் வெவ்வேறு. நாங்கள் அப்போதே ஏ.வி.எம். மரத்தடியில் பேசி தெளிவாக முடிவு எடுத்தோம்.
ஒருவருக்கு ஒருவர் நட்பாகவும் மரியாதையாகவும் இருந்துகொள்ள வேண்டும் என்பது நாங்கள் பேசி முடிவெடுத்தது தான். எங்களுக்கு ரசிகர்கள் உருவாவதற்கு முன்பு எங்களது முதல் ரசிகர்கள் நாங்கள் தான். எனக்கு அவரும், அவருக்கு நானும் ரசிகர்களாக இருப்போம். என்றும் நாங்கள் தெளிவாக இருப்போம். ஹேராம் போன்ற படங்கள் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த்
நானும் ரஜினியும் பேசியதை எல்லாம் காசு வந்த பிறகு எடுக்காமல் விட்டால் தான் தவறு. நான் மட்டும் அல்ல மணிரத்தினமும் அவற்றை எடுத்து வருகிறார். முதல் படத்திலேயே மணிரத்தினத்தை பார்த்து வியந்தது உண்டு. அதே வியப்பு ரஜினிக்கும் இருந்தது தெரியும். தளபதி டைட்டிலை ரஜினி சொன்னபோது என் காதுகளுக்கு முதலில் கணபதி என்று விழுந்துவிட்டது. எனவே பிடிக்கவில்லை என்றேன்.
விநாயகருக்கான டைட்டிலாக இருக்கிறதே என்று கேட்டேன். பின்னர் தெளிவாக சொன்னதும் தான் அற்புதமான டைட்டில் என்றேன். எங்கள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் நாங்கள் தனிமையில் பேசிக்கொள்வதை கேட்டால் அவர்கள் அதிர்ச்சியடைவார்கள். ஆச்சர்யப்படுவார்கள்.
பாலச்சந்தர் சிலையாக இங்கே இருக்கிறார். நிலையாக என்றுமே இருப்பார். பாலச்சந்தர், அனந்து இரண்டு பேர் தொலைபேசி எண்களும் என் போனில் இருந்து அழிக்க முடியாதவை. கடந்த மாதம் கூட தனிமையாக நினைத்தபோது அனந்து சார் எண்ணுக்கு அழைத்தேன். அது அவரது வீடு என்றதும் கண்கலங்கிவிட்டேன்.
அப்போது அவர்கள் 8-ந்தேதி பிறந்தநாள் என்றார்கள். தெரியும் என்றேன். அந்த தேதியில் பாலச்சந்தருக்கு சிலை திறப்பது சிறப்பான ஒன்று. பாலச்சந்தர் சார் சிலை இங்கே வைத்ததால் அவர் என்னை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் இருக்கும்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன்
ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது படம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறரை வைத்து படங்கள் தயாரிக்கும் அளவுக்கு நீங்கள் இந்த நிறுவனத்தை வளர்த்து விட்டிருக்கிறீர்கள். அவ்வை சண்முகி ராஜ்கமலுக்காக ஓகே சொல்லி வைத்து இருந்த கதை. வேறு ஒரு தயாரிப்பாளர் கேட்டதும் கொடுத்தோம். தசாவதாரம் படமும் அப்படி தான். மணிரத்தினத்துக்கும் எனக்கும் எண்ண ஓட்டம் ஒன்றுதான்.
வைரமுத்துவின் முதல் பாடலை கேட்டு அவர்தான் வேண்டும் என்று அடம் பிடித்து அழைத்தவன் நான். பின்னர் அவரது புத்தகம் ஒன்றை அவருக்கே மனப்பாடமாக வாசித்து காண்பித்து அசத்தினேன். இவர்கள் எல்லாம் சேர்ந்து தூக்கி நிறுத்திய ராஜ்கமல் தான் இன்று நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. எங்களின் பயணம் அற்புதமான பயணம். சினிமா துறையில் கோபம், அவமானம், அவமரியாதை எல்லாமும் வரும். இருந்தும் எங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை.
முக்கியமாக நானும் ரஜினியும். இத்தனை ஆண்டுகளாக இணைபிரியாத நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் கைகளை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் சந்தித்தால் எல்லாவற்றையும் பேசிக் கொள்வோம். இருவருக்கும் இடையே போட்டு கொடுப்பது இதனாலேயே குறைந்துவிட்டது. இந்த நிறுவனத்தை தாங்கி பிடித்தது நிறைய பேர். ராஜ்கமலை நடத்தியவர்கள் நடத்துபவர்கள் தான் இந்த விழாவுக்கு காரணம்.
நான் பிறந்த விழாவை விட அதிகம் கொண்டாடும் விழா ராஜ்கமல் பிறந்தநாள் விழா. ரஜினி ஐகான் விருது பெறுவதற்கு போனில் வாழ்த்து சொல்லி விட்டேன். நேரிலும் சொல்லிக் கொள்கிறேன். அவர் திரைப்படத்துறைக்கு வந்த முதல் ஆண்டே ஐகான் ஆகிவிட்டார். சிவாஜி போல அறிமுகமான முதல் ஆண்டே ஐகான் ஆனவர் அவர். 44 ஆண்டுகள் தாமதமாக செய்து இருந்தாலும் செய்தவர்களுக்கு நன்றி. ராஜ்கமலை கவனிப்பவர்கள் தொடர்ந்து கவனியுங்கள். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

இங்கே அன்பு இருக்கிறது அது வெல்லும். நான் அலுவலகம் அமைக்க போகிறேன் என்றதும் இங்கே படம் எடுக்க போகிறேன் என்றார் பாலச்சந்தர். அவர் படப்பிடிப்புக்காக காத்திருந்து பின்னர் தான் அலுவலகம் திறந்தோம். அவர் தடம் பதித்த இடத்தில் அலுவலகம் அமைவது எனக்கு சிறப்பு.
இவ்வாறு கமல் பேசினார்.
பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்
பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்
பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர், கொடிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். எவ்வித காரணங்களும் எற்றுக்கொள்ளப்பட மாட்டாது, சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது.
நிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். என தொண்டர்களுக்கு கமல்ஹாசன் கட்டளையிட்டுள்ளார்.














