பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்

Spread the love

பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்

பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர், கொடிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். எவ்வித காரணங்களும் எற்றுக்கொள்ளப்பட மாட்டாது, சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது.

நிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். என தொண்டர்களுக்கு கமல்ஹாசன் கட்டளையிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *