தங்கம் அரசியலில் இருந்து விலகினார்
Posted in இலங்கை செய்திகள்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார் என ஊசி கட்சி தலைவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளாராம் .


அதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அவர் எவ்வித அரசியலிலும் ஈடுபட மாட்டார் என்கிறார் ஊசி கட்சியின் ஊசி அடி தலைவர் .

பிரபல யூடுப் பெண்களை விபச்சாரிகள் என அர்ச்சுனா அதெரிவித்த நிலையில் ,அதுவே மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நல்மதிப்பை இழக்க செய்ததுடன் ,அவருக்கு எதிராக அதிகளவான பெண்கள் திரும்ப காரணமாக மாறியது .

அதனால் தேர்தலில் மிக பெரும் சரிவு ஏற்பட்டதுடன் அதில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டது .

எனவே தோல்வியை தழுவுவோம் என தெரிந்தும் ,இந்த தேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என தெரிந்த நிலையில் இந்த நிலை ஏற்பட்டு ஓட்டம் பிடித்துள்ளார் தங்கம் .

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள் ,சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை மருத்துவர் அர்ச்சுனா ஆரம்பித்துள்ளார் .

சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து ஆரம்பித்த ,அரச லஞ்ச ஊழல் மருத்துவ மாபியா போராட்டம் ,இன்று மக்களுக்கான அரசியலில் பரிணாமம் பெற்றுள்ளது .

சற்றும் எதிர்பாரத இந்த பயணம் கண்டு அரசியல் தலைமைகள் திணறிய வண்ணம் உள்ளனர் .

நான்கு பெண்கள் ஐந்து ஆண்கள் என மக்கள் அறியப்பட்ட ,ஆளுமை மிக்கவர்களை இந்த அரசியல் களத்தில் அர்ச்சுனா இராமநாதன் களம் இயக்கியுள்ளார் .

இந்த வேட்பாளர் தெரிவில் அதிகம் பெண்களுக்கு இடம் வழங்கி , பெண்கள் சமவுரிமையை அர்ச்சுனா நிலை .நாட்டியுள்ளார் .அத்துடன் யாவரும் புதிய இளம் தலைமுறைகள் ஆகும் .

பெண் சம உரிமை ,பெண் சமத்துவம் ,என்பதாகவும் பெண்கள் ஆட்சியாளராகவும் ,தலைமை அரசியல் வாதிகளாகவும் மாறிட வேண்டும் என்ற எண்ணம் இதன் ஊடக வெளிப்பட்டுள்ளது .

இதுவே மக்கள் மத்தியில் மிக பெரும் ஆதரவை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுக்கு தருவித்துள்ளதுடன் ,எளிய மக்களுக்கான அரசியலை அர்ச்சுனா செய்து வருகிறார் என்கின்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வெல்லட்டும் தமிழ் ,ஆளட்டும் எளிய அரசியல் இயக்கம் .எதிரி இணையமும் உங்களை மனதார வாழ்த்துகிறது

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

வீடியோ இரண்டு

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.


எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.


நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.

என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் என டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு விடுத்துள்ளார் ,யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் டக்ளஸ் தேவானந்தா இப்படி முழங்கியுள்ளார் .

தமிழ் மக்கள் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய போராட்ட குழுக்களில் டக்ளஸ் தேவானந்தா ஒருவராவார் .

ஆனால் அந்த இலட்சிய பாதையில் தெளிவுற நேர்மையுடன் பயணிக்க முடியாத அவர் எதிரியுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு எதிரான சாதிகளில்; ஈடுபட்டார் .

ஈழ தமிழர் வரலாற்றில் யார் இந்த டக்ளஸ் தேவானந்தா என்றால் அவருக்கு என ஒரு திறந்தவெளி கறுப்பு பக்கம் உள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக பெரும் சாதனையை இவர் தமிழர்களுக்கு நாட்டுவார் என எதிர் பார்க்க பட்டது.

ஆனால் அது வெற்றிடமாகவே காண படுகிறது .

ஒன்று பட்டு ஒருமித்து பயணித்த தமிழ் போராளிகள் குழுக்களுக்கு இடையில் சதிகளை தூவி பிரித்தாண்டு ,இன்று ஒட்டு மொத்த தமிழர் நெஞ்சங்களில் இடம்பிடிக்க முடியாத நிலையில் ஒருவராக டக்ளஸ் தேவானந்தா மாற்றம் பெற்றார் .

இது தவிர்க்க பட முடியாத ஒரு பக்கத்தின் பாதை என்பது அவரது உளதெளிவு .

ஆனால் அதனை ஈழ தேசிய இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ,புலிகள் இல்லா காட்டுக்குள் எலிகளுக்கு வேட்டை என்பதை போலவே இப்பொழுது இலங்கையில் பல பெருச்சாளிகள் உலவி திரிகின்றனர் .

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

வரலாற்றில் கிடைத்த மிக பெரும் வாய்ப்புக்களை டக்ளஸ் தேவானந்தாவும் தவறவிட்டு விட்டார் ,என்பதே அவரை எதிரியாக கருகியவர்கள் நெஞ்சங்களில் ஓரத்தில் இப்படி செய்து கொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் ,அற்று போயுள்ளதை காண முடிகிறது .

வயது மூப்பாகி விட்ட நிலையில் ,ஐந்து ஆண்டுகளுடன் எனது ஆயூள் முடிந்து விடும் என டக்ளஸ் தேவானந்தா நினைத்திருப்பார் போல் உள்ளது .

இது அவரது அரசியல் கட்சியின் சிந்தாந்தம் எனவே அதனை யார் தான் மாற்ற முடியும் ..?,ஐந்து என்ன பத்து வருடங்கள் கூட அரசியலில் பயணியுங்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களே .

கல்லான மனிதர் என்றாலும் ஒரு மூலையில் ஈரம் உள்ளது என்பதை தொலை காட்சி விவாதத்தில் பஞ்சாயத்து பண்ணிய உங்கள் நிலை கண்டு வியந்தேன் .

ஆதலால் உங்கள் செய்திகளை தவிர்த்து வந்த நான் ஒரு சிறு இடம் ஒதுக்கி பதிவிடுகிறேன் .

உங்களுக்கு நாங்கள் எதிரிகள் ஆனால் தமிழர்கள் இன்று யாரையும் எதிரியாக பார்க்கவில்லை .

ஏன் என்றால் அவர்களுக்கு எதிர்க்கும் பலம் இன்று இல்லை டக்ளஸ் தேவானந்தா அவர்களே புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .