Tag: tamilkavithai
ஏன் இவள் இப்படியானாள் …?
ஏன் இவள் இப்படியானாள் …?
கொட்டுகிற அருவியில
கொடி கூந்தல் விரிப்பவளே ….
கொடுக்கை அவிழ்க்க பாக்ககுதடி
கோர அலை தாக்குதடி ….
முடிச்சவிழ்ந்து போகுமென்று
மூசி அலை வீசுதடி …
அடி ஆற்று பக்கம் யாரும் வந்தா
அம்மணமே என் செய்வாய் …?
ஒத்தையில உன்னை வைச்சு
ஓடி விளையாடுதடி …
கட்டெறும்பா குத்தி தானே – தேகம்
காயம் வைத்து போகுதடி ….
வைச்ச கண்ணு வாங்காம
உச்சி வானம் பாக்குதடி ..
மஞ்சள் வெயில் வீசுறவன்
மடி தடவி போறாண்டி ….
ஒத்திருந்தது பேசிடவே
ஒர கண்ணனால் பார்ப்பவளே ..
கன்னி ராசி கொண்டவனோ
கள்ள சூரியன் திண்ணுறானே ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/10/2018
உன்னை மறக்க என் செய்ய …?
உன்னை மறக்க என் செய்ய …?
உன் பாடல் நான் கேட்டு ஆடவா ..? – தினம்
உன்னோடு நான் வந்து கூடவா ..?
ஏனோ இன்று நான் பாடும்
என் கீதம் நீ ஆனாய் …?
பாடி பாடி அழைத்தவளே
பாடி தேடி பார்க்கிறேன் …
என் தேகம் உள்ளுக்குள்ளே
என் செய்தாய் துடிக்கிறேன் …..
ஓடி வந்து காதுக்குள்ளே
ஓதி என்ன போகின்றாய் …?
ஏறி வந்து பார்க்கும் முன்னே
எங்கோ ஓடி மறைகின்றாய் …?
கனவாகி தினம் விழவே
கன்னி பூவே துடிக்கிறேன் ….
கனவுக்குள் வதைகள் செய்தேன்
கண்ணே நோக வைக்கிறாய் ….?
தலையாட்டி பாடும் குயிலே – உன்
தாலாட்டில் தூங்கிறேன் ….
ஏது செய்வேன் என் கிளியே
உனை மறக்க கூறாயோ …?
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/07/2018
சிறை பட்ட புலி ….!
சிறை பட்ட புலி ….!
சிறைக்குள்ளே புலி ஒன்று சிறை பட்டதோ ..?
சிறை பட்டும் அடங்காது குரல் இட்டதோ ….?
இவன் செய்த பாவம் இன்றென்னவோ..?
இது தான் தமிழ் என்றான் இது குற்றமோ ..?
ஏனடா தமிழா நீ மூடனா ..?
எரியடா தீயாய் நீ நாடடா …
சிறைக்குள்ளே நுழைந்து சிறை நிரப்படா
சீமான் பிள்ளைகள் நாம் சொல்லடா ….
கொடியவன் ,கொள்ளையன் அதிரட்டுமே
கொடியார் விலங்கும் உடையட்டுமே …
இனி ஒரு கைதை நிறுத்தட்டுமே
இது தான் போர்க்குணம் தமிழ் உரைக்கட்டுமே…
சிறை பட்ட புலி இனி தூங்கிடுமோ ..?
சிறுத்தையின் பிள்ளைகள் தூங்கிடுமோ ..?
ஏதடா தமிழா உன் போர்க்குணமோ ..?
எங்கே கட்டாட இது களமே….
அஞ்சுதல் தமிழுக்கு கேவலமே
அடிமை தமிழுக்கு சீதனமோ ..?
கெஞ்சுதல் இங்கே முதல் பாவமே
கொட்டடா முரசு விலங்கு உடையட்டுமே ….!
19/07/2018 சீமானை சிறை அடைத்த செய்தி அறிந்த போது…!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/07/2018
ஒரு பதில் சொல்லாயா
ஒரு பதில் சொல்லாயா
நடையை காட்டி இடையை காட்டும்
நர்மதா இவள் யாரோ ..?
தொங்கும் கூந்தல் சூடி நடக்கும்
தோகை இவள் யாரோ ..?
அங்கம் காட்டி அசையும் பூவே
அடைக்கலம் தருவாயா ..?
பஞ்சு மேனியில் பகலிரவாட
பாவை விடுவாயா ..?
தொட்டு தொட்டு தேகம் தடவ
தென்றல் அழைப்பவளே….
தொட்டு விழிகள் பார்க்க விட்டு
தேகம் மறைப்பதென்ன ..?
அச்சம் உன்னில் குந்திட தானோ
அழகே மறைகின்றாய் ..?
அடடா உன்னை செதுக்கிய – உந்தன்
அப்பன் எங்கயடி …?
எத்தனை கேள்வி கேட்டும்
ஏனோ காண மறுக்கின்றாய் ..?
ஏக்கம் நெஞ்சில் ஏற்றி வைத்து
எங்கோ மறைகின்றாய் …?
ஆசை ஊற நினைவு தூற
அழுகிறேன் எனை பாராய் …
தரணியை வாங்கி தருகிறேன் -என்
தங்கமே வாராய் …..!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -18/07/2018
முடிந்தால் வா மோதலாம்
முடிந்தால் வா மோதலாம்
எழுந்தவர் வீழ்ந்தவர் நூறடா – இங்கு
எரியுது கேள்வி தீ பாராடா ….
தீர்வுக்கு நீர் நீ ஊற்றடா
தீராத பகை நீள் எதுக்கடா ..?
பொதுவென வந்தால் திறனடா
போர் என வந்தால் கள மடா …
எது இன்று உனக்கு சொந்தமோ …?
ஏற்று நீ வருவாய் மன்றமோ …?
அறியாதார் சிந்தைக்குள் ஆயிரம்
ஆமைகள் உள்ளதை காணலாம் …
புரிந்தவர் சிந்தைக்குள் ஆயிரம்
புரட்சிகள் வெடிக்குது மகிழலாம் ……
என்னடாய் சொன்னாய் ஏதிலி – சிந்தை
எண்ணா உள்ள போக்கிரி ….
யாரடா இங்கே சீர் கேடி …?
யாம் முன்னே என்னடா போர்க்கொடி …?
என் தமிழ் உனக்கென்ன கீழ் நிலையா ..?
என்னடா சொன்னாய் கேவலமா …
வன்னியின் மைந்தர்கள் மூலமே
வான் ஆண்டா சாட்சிகள் கூறுமே ….!
–வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -15/05/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
தேடி வருவேன் காத்திரு
தேடி வருவேன் காத்திரு
இருந்தால் வருவேன் இதயம் தருவேன்
இன்றே கொஞ்சம் பொறுத்திடு …..
நாளை மலரும் வேளை ஒன்று
நமக்காய் மலரும் காத்திரு …..
வலிகள் வந்து இடையில் வீழ்ந்தால்
வாழ்வை விட்டு ஒழிவதா…?
கால பிழையால் கசங்கிய வாழ்வை
கண்ணீர் தூவி சுமப்பதா …?
ஒரு நாள் மலரும் திரு நாள் ஒன்றில்
ஓலம் ஓங்கி மறையும் …
ஓடியே வீழ்ந்த வலிகள் எல்லாம்
ஒரு நொடி அங்கே சிதறும் …
நடக்கும் கால நிகழ்வுகள் எல்லாம்
நல்லதே என்றே நம்பு …
நாளை சிறக்கும் வாழ்விற்கிது
நம்பிக்கை தரும் கொம்பு ….!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -29/03/2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
அஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய்
அஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய்
வருகின்ற தடை கண்டு வாடாதே
வரும் வலி என்ன இடர் என்று கேளாதே ..
எதிர் என்ன வரிகினும் எழுந்தாடு
எதிர் புயல் என நின்றே பந்தாடு ..
உடையது இல்லா பழங்காலம்
உடையது தரித்தது இக் காலம் …
சிந்தனை தட்டி எழுந்தானே – இன்று
சீறும் வானம் தந்தானே ….
ஆறாம் அறிவை நீ தட்டு
ஆடலாம் ஆகாயம் நீ தொட்டு ..
நம்பிக்கை மனதில நீ நட்டு
நாள் எல்லாம் போடடாநடை நட்டு …
தோல்வி ஒவ்வொன்றும் படி நிலை தான்
தேறும் வெற்றியின் முதல் அடி தான் …
தளர நின்று நடை போடு
தரணியே உந்தன் காலடி தான் ….
அஞ்சி ஒடுங்குதல் அவமானம்
அவை கெஞ்சி வீழ்தல் இழி கேடு …
உன்னிலை இழக்கா நீ நடந்தால்
உலகில் நீயே முதல் புனிதன் …!
- வன்னி மைந்தன் -(ஜெகன் _
ஆக்கம் -09-03-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
முள்ளி வாய்க்கால் தமிழா சிரி
முள்ளி வாய்க்கால் தமிழா சிரி
அண்டி பிழைத்தவராம் – சிங்கள
அடி கழுவி நின்றவராம் ….
தொண்டுகள் இதுவாகி
தொழுதே திரிந்தவராம் …..
பண்டிகை அதுவாகி – தமிழன்
பலியில் சிரித்தவராம் ….
வெடி கொளுத்தி மகிழ்வில்
வெற்றி செய்தவராம் …..
காலம் முழுவதும்
கால் கழுவி நின்றவரை …
விட்டது பிழையென்று
விடயம் புரிந்தான் …
தட்டினான் தீ பற்றினான் ஊர்
தாரணி எல்லாம் கதறுதடா ….
கொட்டினான் தேளாகி
குளறுதடா கீழாகி ……
வராலாற்று தவறொன்று
வலிகள் புரிகிறது ….
வாடட்டும் தமிழா
வாய் கொட்டி சிரி….
நாடின்றி அவன் மடி
நக்கி பிழைத்தவர்கள் ….
கூடின்றி போகட்டும்
கூட்டடா வெடியதிர்வை….
ஆண்டுகள் முப்பது
ஆட்டம் போட்டவரை ..
கோட்டையில் இருத்தி
கொடி கட்டி மகிழ்ந்தவரை ….
வீட்டோடு எரிக்கிறான் – சிங்களன்
வீழ்ந்து சிரி தமிழா …
பாட்டு எழுதி படி – இது
பைந்தமிழன் வேலை ….
முறுக்கடா உன் மீசை – தமிழா
நறுக்கடா உன் பகையை …
புரிந்ததா புலி வீரம்
புண் பட்டு அழுவாய் ….
என்னடா சொன்னாய்
ஏதிலி என்றாய் ….
வாலாட்டி திரிந்தவரே – உன்
வாய் அறுத்தான் என் செய்வாய் ..?
நீறாகி எரியுதாடா
நீளமான உன் குடில்கள் ….
நக்கி பிழைத்தவனே
நாயாகி குலை ….
முக்கி முக்கி – தமிழன்
முன் எழுந்த வளர்ச்சியை- பகை
நக்கி நக்கியே நாராய் அறுத்தவா
நக்கி குலை …..
முதாலாளி உதைக்கிறான்
முனகாதே முன்னே வணங்கு …
சிலையாகி நிற்பாய் – அவன்
சித்திரம் வடிப்பான் ….

அல்லாவின் பிள்ளைகளே
அழுவதுவோ …?
சிரியுங்கள் இப்போது
இது உங்கள் சிம்மாசனம் …
முள்ளி வாய்காலில் – தமிழன்
முண்டமாய் வீழ்ந்த போது
பால்சோறு உண்டு பார்த்து சிரித்தவா
பறை கொட்டி வெடி ….
இது தான் உன் வேலை
இது தான் உன்வேலை …
இன்றேன் நீ அழுதாய் ..?
இடி தரும் வெடி எறிவாய்…!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07-03-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா
மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா
ஊரின் பெயரில் சங்கம் வைத்து
ஊரார் கொள்ளையடா- தினம்
ஊரின் மாந்தர்க் என் செய்தீர்
ஊரின் கேள்விக்கு பதில் இல்லையடா …
அறத்தை நாட்ட முன் வந்தார்
அருவாள் காவுதடா …..
அட டா இது தான் அவர்கள்
அறத்தின் நிலையோடா …?
எதுகை மோனை ஒன்றில் தானே
ஏற்றம் உள்ளதடா – சந்தம்
ஏற்ற இறக்கம் அறியா சிந்தையில்
ஏது கொள்ளுமடா …?
உண்டு கழித்து உழல்வது தான்
ஊர் சங்க நிலையோடா ..?
மறை கழன்றார் நிலை இதுவென்றால்
மன்றம் சிறக்குமோடா….?
சாதி ,மத ,அரசியல் ,கலப்பின்
சங்கம் உருப்படுமோ ..? – தம்பி
கூடு கட்டிய மலட்டு சிந்தை
கூண்டை உடைத்திடுவீர் …..
நக்கி பிழைக்கும் நாய்களுக்கு இங்கு
நக்கல் தொழில் தானோ ..?- முரசு
நகரம் செழிக்க ரவுடிகள் கூடி
நகர் மன்றம் வந்தாரோ …?
மண்டையில் ஏதுமில்லா மாந்தர்
மன்றில் முதல் நிலையாம் – நகர்
மன்றம் செழிக்க இவரது சிந்தை
மன்றுக்கு முதல் படியாம் …..
தானே மேலென ஆடும் ஆணவம்
தர நிலை இழக்கிறதே – பதவி
தவறிய விந்தில் முளைத்தார் ஏற்பின்
தர நிலை உயர்ந்திடுமோ ….?
- வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -03/03/2018
மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா …?
வன்னி மைந்தன் கவிதைகள்
நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா
நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா
எண்ணம் கசக்கி எண்ணிய தெண்ணு
ஏற்றம் வாழ்வில் பிறக்கும் …
கண்ணில் கரைந்த கண்ணீர் துளியும்
கடுகதி நன்றே மறையும் …
கூடி நின்றார் குரல்வளை அறுத்து
குருதி குடிக்க துடிப்பார் – நீ
வீழ்ந்தாய் என்ற விலாசம் இட்டு
விசிலடித்து அலைவார் ….
பழகும் போதே பாம்பென அறியா
பழகி நீயும் உழல்வாய் ……
பார்த்த கணக்கு கை நொடி கூட
படு குழியில் வீழ்த்தி போவார் …

ஏறி நடந்தால் ஏறி வந்து
ஏசியாகி உரைப்பார் – தாம்
பேசி நின்ற வார்த்தை மறந்து
பெரியாராய் உன்னை மொழிவார் …..
சாவை தழுவ நோதல் வீசும்
சக பாடிகள் எனக்கு வேண்டாம் ….
ஆறாம் அறிவை தட்டி பேசும்
அறிவகம் ஒன்றே போதும் …..!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -08-02-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
தண்டனை கொடு
தண்டனை கொடு
பாதணி இன்றே பணி செய் என்றான்
பாவி அவனொரு மூடன் – கொடும்
பாதகர் நிலையை புரிந்திடா எண்ணி
பாடியே நின்றான் வேடன்……
தன் அருள் ஒன்றே முன் பொருள் என்றே
தவறி வைத்தான் நன்றோ ..?- நீதி
தழுவல் மறந்து தண்டனை எய்தார்
தகுமோ இந்த ஊழி …?
எம்மொழி உரைத்தான் என்றே எண்ணா
எடுத்தே எறிந்தான் பகைமை ….
தன் நெறி கெட்டு தன் மதி விட்டு
தழுவுமோ விரல் அவர் பாதம் …?
செய் நெறி கெட்ட செயல் நிலையாளர்
செந்தணல் ஆகி எரித்திடு – கொடும்
வெண் சமர் ஆடியே வேண்டும் நீதி
வென்றே உலகை ஆண்டிடு …..
தருகிற தண்டம் தர்மம் கூவும்
தட்டடா தட்டு கதவை …
கொடும் தேளாகியே கொட்டடா கொட்டு
கொடும் விலங்குகள் இங்கு சிதற ….!
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
ஆக்கம் -08-02-2018
பணி புரிந்த இடத்தில பாதணி எறிந்த
குற்றவாளியை காப்பாற்றிய முதலாளிக்கு சமர்ப்பணம் …
வன்னி மைந்தன் கவிதைகள்
கோபம் தவிர் வாழ்வில் நிமிர்
கோபம் தவிர் வாழ்வில் நிமிர்
எரியுது இங்கொரு நெஞ்சு – தினம்
எறியுது ஏனது நஞ்சு ..?
புலனது சிந்தை பிஞ்சு – இது
புவி மேல் பறக்குமா குஞ்சு ..?
திசையது அறியும் பறவை – நீ
திசையது அறியா கறவை ….
விழியது கூர்மை பறவை
விடயங்கள் அறியும் நேர்மை …
தேடினாய் என்ன சொல்லு – நீ
தேறிய நிலையை வில்லு ….
புரிதலில் கிழிதல் கொண்டாய்
புண்களை விதைத்தேன் நின்றாய் …?
அறிதலில் வேகம் கொள்வாய்
அகிலம் வியக்க எழுவாய் …
தெளிதலில் வீரியம் பெற்றால் – நீ
தெரு நிலை வாழ்வியல் கழிவாய்…..
முடிதலில் என்ன கொள்வாய் ..?
முன்னே விளக்கி செல்வாய் …?
எதுவரை வாழ்வு கூறாய் ..?- இப்போ
எரிகிறாய் ஏனோ தீயாய்…?
-வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -01/02/2018
முரசு மண்ணே பதில் கூறாய்
முரசு மண்ணே பதில் கூறாய்
குறிஞ்சி ,மருதம் குடி கொண்ட மண்ணில்
கூடு கட்டிய ஊரே – நாளை
கூடுறாய் ஆண்டில் இரண்டு – நீ
கூவுவாய் என்ன கூறு …?
தேறுவாய் என்றே தேடியே வந்தார்
தேற்றம் காணவில்லை ….
அகவை இரண்டு கழிய இங்கு
அழைக்கிறாய் என்ன விந்தை …?
சோரம் போனவர் பேரமானவர்
சோடனையாய் தினம் கூட …
வளரும் சங்கம் வளமது இழக்கும்
வழிகளை தடுக்க முடியல …
சிந்தையில்லா ஐந்தறிவாகி -சங்கம்
சிறையில் அடைக்கிற கோரம் ….
கண்டு கொதித்து கணையாய் எழுதல்
காலத்தில் இங்கு பிழையாம் …
முரசு மண்ணே பதில் கூறாய்
திண்டு கழித்து திண்ணைகள் கூடி
திமிராய் பேசும் நிலையாம் …..
தொண்டு செய்தல் சங்க நிலையின்
தொழும் பணி நிகழ்வின் முனையாம் …
பயின்று எழுந்து பணியது புரியும்
பள்ளி இங்கு இல்லையா …?
பாதை நீளும் வானை முட்டும் – திறன்
பக்குவ வாத்தி இல்லையா…?
கொள்கை விற்று கொள்ளையடிக்கும்
கொள்ளையர் கூட்டம் யாரோ ..?- மனம்
கொதிக்கும் நிலையில் எமை எழவைத்த
கொடிய செயலின் வேர் நீரே ….
தடுக்க மறந்து வினை தலையது ஆட்டும்
தறுதலை இல்லை நாமே ….
செழிக்க சங்கம் மறுத்தால் இங்கே
செழு நிலை இழப்பீர் நீரே …
- வன்னிமைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -31/01/2018
லண்டனில் முரசு மோட்டை ஒன்றிய கூடல்
எதிர் வரும் மாசி 10/02/2018 கூடுவதை அறிந்த போது
மனதில் எழுந்த கொதிப்பின் பதிவு …! - வன்னி மைந்தன் கவிதைகள்
மன்னித்து விடு
மன்னித்து விடு
உன்னை அழைத்தேன் எந்தன் நாளில்
உன்னை காணவில்லை ..
உள்ளம் தேடி அழைத்த உந்தன்
உருகும் மன்றில் நானில்லை …..
எதையோ எண்ணி வரவை தொலைத்தாய் ..?
எனக்கு தெரியவில்லை – என்
எண்ணத்தில வலிகள் படர
எறிந்தேன் உன்னை தொடர …
அழைத்த குரலில் ஆமே என்றாய்
அட டா இது தான் பண்போ ..? – மன்றில்
ஆளை காண தேடி நின்றேன்
ஆழி பேரலை இதுவோ ..?
முன்னே புரிந்த உந்தன் ஊழி
முன்னே வைத்தேன் ஓடி ….
முன்னே தேடி கூட வந்தாய்
மூச்சிழந்தேன் வாடி ….
போலி ஊடல் வேண்டாம் வேண்டாம்
போயிடு போயிடு நன்றே ….
தேடி வந்தும் உறவு தேறா
தேட வேண்டாம் மண்ணே ….!
- வன்னி மைந்தன் -(ஜெகன்)
ஆக்கம் -27/01/2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
எம் அவலம் யார் புரிவார்
எம் அவலம் யார் புரிவார்
ஆளை வாட்டும் குளிருக்குள்ளே
ஆயுள் மெல்ல கரைகிறதே ….
ஆடை மாற்றி ஓடும் வாழ்வை
அல்லும் ,பகலும் இடுகிறதே ….
மஞ்சள் வெயில் உடல் தழுவும்
மாசம் மனது தேடுறதே ..- நாள்
மங்கும் ஒளியின் காலத்தையே
மனது இன்று வெறுக்கிறதே …..
ஆடை கட்டிய வெங்காயம்
அது போல் உடலும் ஆகிறதே …
உயிரை கொல்லும் குளிரை அடக்க
உடலில் சுமையை குவிக்கிறதே ….
மறைக்க உடலை மறந்தாலே
மரணம் உயிரை தின்றிடுமே ….
கொடும் பனியில் நனையும் வாழ்வதனை
கொஞ்சும் உறவுகள் அறிந்திடுமோ ..?
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22-01-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
பதில் சொல் ….!
பதில் சொல் ….!
கடல் மேலே மஞ்சத்தை
கண்ணே நான் கட்டிடவா ..?-நீ
கண்ணுறங்க , தாலாட்ட
கடல் அலையை தந்திடவா ..?
மழை மேக முகில் உரித்து
மங்கை உன்னை போத்திடவா …?
தங்கமே நான் மட்டும் – உனை
தாளமால் தழுவிடவா…?
வெள்ளி நிலா பேரழகில்
வெளியுலகை காட்டிடவா ..?- நீ
வேண்டும் வரங்களை தான்
விதம் விதமா தந்திடவா ..?
அழகு குலையாமல்
ஆயூள் எல்லாம் வைத்திடவா ..?
அடி வாங்கும் மத்தாளாம்
அதுவாகா காத்திடவா ..?
எதுவாக உனை தாங்க
எனக்கு நீ கூறாயோ ..?
ஏனோ நீ வெட்கி
ஏங்கி திரை போட்டாயோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் – 15-01-2018
இது தான் காதலா ..? …!
இது தான் காதலா ..? …!
உள்ளாடை அவிழ்க்கையில
உன்னை நீ மறந்தவளே …
வெள்ளாடை போன பின்னே
வெருண்டு நீ அழுததென்ன…?
கண்ணாடி உடை மாட்டி
கலர் காட்டி சென்றவளே
பின்னாடி ஒன்றோடி
பிரியம் வைத்ததென்ன …?
தள்ளாடி மனம் மயங்கி
தங்கமே வீழ்ந்தாய் …
தங்க தேர் அழகே
தவறொன்றை ஏன் புரிந்தாய் …?
முந்திக்க முன்னே அவன்
முழு நிலை புரியவில்லை …
சிந்திக்க மறந்தவளே
சிசு தாங்கி அழுததென்ன …?
உயிர் தந்து உடல் வளர
ஊதி பெருத்த வண்டி ….
ஊர் காண மறுத்து நீ
ஊர் ஒழிந்த நிலை என்ன …?
சின்ன இடி இடித்து
சிறு நிலா,விளையாட
மெல்லிய இடி அதிர்வில்
மெலிந்ததா உன் மகிழ்வு …?
தாயாகி உடல் சுமந்து
தரணியிலே நின்றவளே ….
பேயாகி நீ ஏனோ
பெற்று பிள்ளாய் எறிந்தாய் …?
நாயாகி உனை இன்று
நக்கி ஊர் திரிய…..
பேச்சின்றி உறைந்தவளே – உன்
பேரின்பம் இன்றெங்கே …?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -08/01/2018
இலங்கையில் 19 வயது இளம் பெண் பிள்ளை ஒன்றை பெற்று காட்டில் வீசி சென்ற செய்தி கேட்டு
வாடியபோது …!
காற்றுள்ள போதே தூற்று
காற்றுள்ள போதே தூற்று
நாளை என்ற நாள் மறந்து
நாடி வா இன்றெழுந்து …
ஊர் எழுந்து ஆட முன்னே
ஊர் புகுவோம் ஓடிவா ….
மஞ்சள் வெயில் உடல் தழுவ
மார்கழி போல் உறங்குவோம் ….
மணித்துளிகள் ஒவ்வொன்றிலும்
மயக்கும் இன்பம் ஏற்றுவோம் …
காலங்களை வீணடித்து
கழிக்கின்ற காலம் எல்லாம் …..
நாளையதில் மீண்டுமது
நாடி வர எண்ணி விடு ….
உள்ளமதில் வலியில்லா
உடல் பலம் உள்ளவரை …..
வேண்டியதை புரியவேண்டும்
வேளை இதில் கூட வேண்டும் ….
நோயுடலில் ஆசை வந்து
நொந்து மனம் சாவதுவோ …?
முந்தி வரும் நோயின் முன்னே
முடித்து விடு வேண்டுதலை …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -08/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு
புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு
பிறந்த ஆண்டே பிறந்த ஆண்டே – நீ
பிறந்த மனை எதுவோ ..?
பிறந்த ஊரை சொல்ல முடியா
பிழைப்பு ஏன் உனக்கோ …?
வெல்ல முடியா சொல்லுக்குள்ளே
வெந்து போனவரே – நாளை
நல்ல வாழ்வு தருவாய் என்று
நம்பி நாம் வரவோ ..?
வீணாய் கரைந்து விரையம் ஆகி
வீழ்ந்த நாளில் எல்லாம் ….
சுகத்தை பறித்து சுமையை ஏற்றி
சுட்டாய் நீ எனலாம் ……

நாளை கடத்தி ஆண்டை விழுங்கி
நாயாய் அலைய வைத்தாய் – இன்று
நல்ல வாழ்வு தருவாய் என்றே – ஏன்
நாடி ஓடி வந்தாய் …?
பொல்லால் தாக்கி நெஞ்சை கிழிக்கும்
போர்களை நீ தந்தாய்….
வெல்ல முடியா வறுமை தந்து
வேகி சாக வைத்தாய் ……
இனியும் உன்னை நம்பிடவோ
இந்த ஆண்டே நீ பிறந்தாய் …?
கொஞ்சு தமிழா கொஞ்சம் எழடா – இந்த
கொடிய ஆண்டை விரட்டி விடடா….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
தளம்பி பேசும் தற்கொலை ஒன்று
தளம்பி பேசும் தற்கொலை ஒன்று
வருடம் பிறந்த முதல் நாளில்
வாழ்த்தி பாடிடலாம் – உள்ள
வலிகள் குறைக்கும் நிலை இருந்தால்
வாழ்வு கூடிடலாம் ….
தினம் போடும் நச்சரிப்பால்
திருத்தம் ஏதும் இல்லை
தினமும் கேட்டு மனமும் சலிக்க
வாழ்வே பிடிக்கவில்லை ….
தப்பே இல்லா நீதிக்கு
தண்டனை ஏன் சொல்லு …?
தவறி புரிந்த தவறென்ன
தகுமா பதில் சொல்லு …?
புரியா நிலையில் புண்கள் விதைத்தால்
புன்னகை மலர்ந்திடுமா …?
பூட்டிய சிறைக்குள் வாழும் வாழ்வை
பூலோகோம் ஏற்றிடுமா …?

அழுது புலம்பி களைத்தேன் நானும்
ஆயூள் முடித்திடவா …?- நாளை
ஆழ போகும் நாளில் உனக்கு – எந்தன்
அருமை உணரத்திடவா …?
வீணாய் மூட்டும் சந்தேகம் – உன்னை
விதவை ஆக்கிடுமே
விரைவில் உணர மறந்தால் – நிலை
விரைவில் கூடிடுமே ……!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018






