Tag: வெள்ள
வெள்ள இறப்பு 479ஆக உயர்வு
வெள்ள இறப்பு 479ஆக உயர்வு
வெள்ள இறப்பு 479ஆக உயர்வு ,வெள்ள இறப்பு 479ஆக உயர்வு அடைந்துள்ளதாக ாலும் அரசு அறிவித்துள்ளது .
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாகவும்,
இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி 350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
மேலும் காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்ற நிலை காணப்படுவதால் இறப்பு இன்னைக்கி ஆயிரத்தை எட்டி பிடிக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது .
மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது
பல பகுதிகளில் மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது .
இவ்வாறன நிலையில் இந்த கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்த்துள்ளது .
வரலாறு காணாத மழைவீழ்ச்சி அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இலங்கை மிக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .
இதில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆறு மாதத்தை காலத்திற்கு மேல் அவகாசம் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது .
ஆனால் வரும் மாதம் பருவ மழை ஆரம்பிக்க உள்ள நிலையில் மேலேயும் குளங்கள் நிரம்பி வழிய கூடிய அபாயம் காண படுகிறது .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

வெள்ள நிவாரணத்திற்கான உலகளாவிய உதவி கோரல்
வெள்ள நிவாரணத்திற்கான உலகளாவிய உதவி கோரல்
வெள்ள நிவாரணத்திற்கான உலகளாவிய உதவி கோரல் வெள்ள நிவாரணத்திற்கான உலகளாவிய இராஜதந்திர முயற்சியை இலங்கை தொடங்குகிறது, பிரதமர் வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்குகிறார்.
கொழும்பை தளமாகக் கொண்ட தூதரகத் தலைவர்களுக்கு
கொழும்பை தளமாகக் கொண்ட தூதரகத் தலைவர்களுக்கு அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீட்பு
முயற்சிகள் குறித்து புதுப்பிப்பதற்காக பிரதமர் தலைமையில் இன்று, நவம்பர் 28, 2025 அன்று பிரதமர் அலுவலகத்தில் ஒரு இராஜதந்திர விளக்கவுரை நடைபெறும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் அனைத்து தூதரகத் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் மெய்நிகர் முறையில் கலந்துகொள்வார்கள் என்று
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பு
பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உடனடி மற்றும் வெள்ளத்திற்குப் பிந்தைய மீட்பு
நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுவதிலும் இந்த மாநாடு கவனம் செலுத்தும். இந்த சவாலான காலகட்டத்தில் கொழும்பில் உள்ள பெரும்பாலான
தூதரகத் தூதரகங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதாபிமான
உதவிகளை எளிதாக்குவதிலும், தற்போதைய நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு பங்களிப்பதிலும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தூதரகங்கள் தெரிவிக்கும்.
இந்த முயற்சிகளுக்கு இணங்க, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம், வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் இராஜதந்திரப் பணிகளுக்கும் கொழும்பை தளமாகக் கொண்ட
தூதரகங்களுக்கும் இடையே ஒட்டுமொத்த தொடர்பு மற்றும் உதவியை ஒருங்கிணைக்க அவசரகால பதிலளிப்பு பிரிவை நிறுவியுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
மழையுடன் கூடிய காலநிலையினால் களுகங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.
களுகங்கையின் இறங்கு துறை மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் 175 மில்லி மீட்டர் மழை விழ்ச்சி பதிவாகியிருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கங்கையை அண்மித்த ஹொரனை, அகலவத்த, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்தெனிய, களுத்துறை பிரதேச செயலக பிரிவுகளில் சிறியளவில்
வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மழை தொடருமாயின் வெள்ளம் அதிகரிக்கும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அத்தனகலுஓயவை அண்மித்த அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல,பிரதேசங்களிலும் சிறயளவில் வெள்ளம் ஏற்பட்டிருககிறது.; மழை தொடர்ந்தும்
பெய்யுமிடத்து, வெள்ளம் அதிகரிக்கலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாழ்நில
பிரதேசங்கள் சில நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடர்வதனால்; தாழ்நில பிரதேசங்களில் வாழ்பவர்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு 8.30இல் இருந்து இன்று அதிகாலை 1.30 வரையான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடவில் 247 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி கிடைத்திருக்கிறது.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரியவில் 218 தசம் ஐந்து மில்லிமீற்றர் மழையும் கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்கவில் 208 தசம் ஏழு மில்லிமீற்றர் மழையும் பதிவாகி இருக்கின்றன.
களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் 193 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைத்துள்ளன.
புலத்சிங்கள மோல்காவ பரகொட மற்றும் கெட்டகம்பிட்டிய பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளன. பாலிந்நுவர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களும் நீரில் மூழ்கியிருக்கின்றன.
மீரிகம, ரந்தல்கொட, திருவானவத்த பிரதேசங்களிலுள்ள சில வீடுகள் நீரிவில் மூழ்கியிருக்கின்றன.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடயில் 173 தசம் ஐந்து மில்லிமீற்றர் மழையும் களுத்துறை
மாவட்டத்தின் பாண்டாரகமவில் 156 தசம் ஆறு மில்லிமீற்றர் மழையும் கம்பஹா மாவட்டத்தின் யக்கல பிரதேசத்தில் 155 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ள












