Tag: ரயில்
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
ரயில் ஆட்டோ என்பன நேரடியா மோதியதில் ரயிலில் பயணித்த நால்வர் படு காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
அனுராதபுரத்தில் இருந்து பொலியத்த நோக்கி பயணித்த கொண்டிருந்த ,ஆட்டோ ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
இந்த ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த ரயில் ஆட்டோ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் இடம்பெற்று வரும் வாகன விபத்துக்களில் சிக்கி,
நாள்தோறும் ,நான்கிற்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளதாக,
செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிடதக்கது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி
3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி
இரண்டு ரயில்களில் இரண்டு வாகனங்கள் மோதுண்டதில் இருவரும், மற்றொரு ரயிலுடன் யானைகள் கூட்டமாக மோதியதில் 3 யானைகளும் மரணித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவமொன்றில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
புத்தளம் – ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் வியாழக்கிழமை (28) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறிப்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி
இதேவேளை, பெலியத்தவில் இருந்து மருதானையை நோக்கி பயணித்த சாகரிக்கா கடுகதி ரயிலில், குப்பைகளை ஏற்றிச்சென்ற சிறியரக லொறியொன்று மோதி விபத்துக்கு உள்ளானது.
கொடகம கஹவ எனுமிடத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் பயணித்த இரவு தபால் ரயிலில், கல்கமுவ பிரதேசத்தில் வைத்து, புதன்கிழமை இரவு 11 மணியளவில் யானைக்கூட்டமொன்று மோதியதில், மூன்று யானைகள் மரணமடைந்துள்ளனர்.
கல்கமுவ ரயில் நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதன் பின்னர் ஒரு மணிநேரத்துக்கு ரயில் பயணம் தாமதமாகியிருந்தது என்றும் ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
by நிருபர் காவலன் - உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
by நிருபர் காவலன் - நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
by நிருபர் காவலன் - 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
by நிருபர் காவலன் - மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
by நிருபர் காவலன்
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில் இருந்து நீக்கிய சில ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
அந்த ரயில் இயந்திரங்கள் இந்த நாட்டிற்கு பொருத்தமானதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்ப குழுவை எதிர்காலத்தில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னரே அந்த இயந்திரங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி
10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி
நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என்றார்.
இதனிடையே, கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி
களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் இருந்து 200 கோடி ரூபாய் பெறுமதியான 10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலோர ரயில் பாதை உட்பட விரைவில் சீரமைக்க வேண்டிய மர்கங்களை சீரமைக்க அவை பயன்படுத்தப்படும் என்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தண்டவாளங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவி மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், தற்போது ரயில்வே திணைக்களத்துக்கு தண்டவாளங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
இஹல கோட்டை – பலான ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக மார்க்கத்தினூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறைந்தது 7 ரயில்களின் பயண அட்டவணை தாமதமாகியதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
தற்காலிகமாக கொழும்பு, கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரம்புக்கனை ரயில் நிலையம் வரை இயங்கும்.பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் கடுகன்னாவை ரயில் நிலையம் வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
ரயில் மோதி நபர் மரணம் வெள்ளவத்தையில் துயரம்
ரயில் மோதி நபர் மரணம் வெள்ளவத்தையில் துயரம்
இலங்கை வெள்ளவத்தை பகுதியில் ஆன் ஒருவர் சடலமாக மேடேக பட்டுள்ளார் .
கோட்டையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த பேரூந்தில் பயணித்த ,ரயிலில் ,மோதுண்ட ஏ இவர் இருந்துள்ளதாக டெஹ்ரிவிக்க படுகிறது .சாலமீட்க மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்
வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்
ரயில் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாக நேற்று (16) சுமார் 30 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று (17) அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட தூர பயண சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடமைகளுக்கு சமூகமளித்துள்ள சாரதிகளை சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கு பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தாண்டில் சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு வருகை தரவுள்ள பொதுமக்களுக்காக இன்று (17) முதல் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது
Featured
60 வயதுடன் ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு
60 வயதுடன் ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு
இலங்கை ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் .அறுபது வயதுடன் தமது ஓய்வை பெற்று கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது .
இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் .இந்த புதிய சட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்கின்றனர் ரயில்வே பணியாளர்கள் .
வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
இலங்கை வடக்கு பகுதிக்கான ரயில்வே சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
பொருளாதர நெருக்கடி காரணமாக தடை பட்டிருந்த சேவைகள் மீள் செயல் நிலைக்கு திரும்பியுள்ளது ,
வடக்கு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்
ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்
இலங்கையில் காதல் ஜோடிகள் ,ரயில்வே தண்டவாளத்தில் நடந்து, சென்று கொண்டிருந்த பொழுது ,ரயிலில் மோதி படுகாயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரும் .17 வயது இளம் பெண் ஒருவருக்கும் இடையில். முறையற்ற காதல் நிலவி வந்துள்ளது .
இவ்வாறு இருவரும் ரயில்வே தாண்டவளத்தில் கதைத்த படி காதல் புரிந்த ,நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, பின்னல் வந்த ரயில் மோதி , படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்த காதல் ஜோடி , டிக்கோயா மருத்துவமனையில் ,சிகிச்சை பெற்று வருகின்றனர்,
இதில் காதலி ,பலத்த காயமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இடம் மாற்ற பட்டுள்ளார் .
கள்ள காதல் செய்த கோலம் .
கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்
கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்
கொழும்பிலிருந்து பதுளைக்கு, இன்று முதல் சொகுசு ரயில், சேவையில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து பதுளைக்கு, வார இறுதியில் சொகுசு ரயிலை சேவையில் ஈடுபடுத்தும் ,போக்குவரத்து அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கு ‘எல்ல ஒடெஸி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 3.55 மணிக்கு பதுளையைச் சென்றடையும்.
கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளையிலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்படும் ரயில், இரவு 07.20 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை,
எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சொகுசு ரயில் நிறுத்தப்படும்.
கொழும்பு ரயில் சேவைகள் இரத்து
கொழும்பு ரயில் சேவைகள் இரத்து
மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகள் இன்று(05) இரத்து செய்யப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி மற்றும் ஹட்டனுக்குமிடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவே இதற்கு காரணம்.
இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு காலை 5.55மணி, 8.30மணி மற்றும் 9.45 மணிக்குக்கு சேவையில் ஈடுபடவிருந்த ரயில்களும்,
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காலை 5.45மணி,
8.30மணி மற்றும் 10.15மணிக்கு புறப்படவிருந்த ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
லண்டன் ; கிழக்கு லண்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆமை ஒன்று காணப்பட்டதால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது .
கிழக்கு லண்டன் Norwich and Cambridge. இடையில் பயணிக்கும் ரயில்வே தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் ஆமை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது.
குறித்த ஆமையை அவ்வழியால் பயணித்த பயணிகளில் ஒருவர் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் குறித்த பகுதியில் தண்டவாளத்தில் ஆமை ஒன்று உள்ளது எனவும் காயமுற்ற நிலையில் உயிருடன் உள்ளது என அவர் பதிவிட்ட நிலையில் இந்த காட்சி பதிவு விலங்குகள் அமைப்பின் கவனத்திற்கு ரயில்வே நிலையத்தின் கவனத்திற்கும் பறந்து சென்றது .
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
விரைந்து செயல் பட்ட ரயில்வே அதிகாரிகள் அந்த வழி ரயில் போக்குவரத்தை தடை செய்து ஆமையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆமை ரயில்வே தண்டவாளத்தில் காணப்பட்டத்தை அடுத்து மதியம் ஒன்று முப்பது மணியளவில் ரயில்வே பயணம் சில மணிநேரம் தடை பட்டது .
விலகுங்கள் மீது மக்கள் எவ்விதம் அக்கறையுடன் உள்ளனர் என்பதனை இந்த ஆமை மீட்பு விடயங்கள் எடுத்து காட்டுகிறது .
ஆனால் நம்ம இலங்கை இந்தியாவில் கண்ணுற்றால் அதனை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்.
இது அவர்கள் சிந்தனை ,வெள்ளையர் நாடுகளை போல விழிப்புணர்வு அற்ற தேசமாக இலங்கை இந்திய மக்கள் வசித்து வருவது கவனிக்க தக்கது.
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
இலங்கை,கொழும்பு ,. வீரவில விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமான படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார் .
இவர்கள் பயணித்த வான் ரயிலுடன் மோதியதில் சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் .மேலும் ஒருவர் படுக்கையாமடைந்துள்ளார் .
காயமடைந்தவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
.பாதுகாப்பற்ற ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே ரயிலுடன் வான் மோதி இந்த விபத்து சம்பவம் இடமேற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது .
ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்
ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்
வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்
20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கிரேசியன் பிரிவு, உடபுஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் நேற்று பிற்பகல் வேளையில் யுவதிகள் இருவரும் மோதுண்டுள்ளனர்.
உயிரிழந்த யுவதியும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவதியும்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்
நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்
இலங்கை ,கொழும்பு ; ரயில்வே திணைக்களம் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,ரயில் வே திணைக்களம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதோடு 2021 இல் மொத்த வருமானம் 2.7 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 47 பில்லியன்களாக
பதிவாகியுள்ளதாக சம்பளம் வழங்க 7.8 பில்லியனும் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க 2.3 பில்லியன்களும் செலவிடப்பட்டது.
2012 இல் வருமானம் 4.8 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 34 பில்லியன்களாக இருந்தது. 2021 இல் வருமானம் 2.7 பில்லியன்களாவும் நஷ்டம் 47
பில்லியன்களாகவும் பதிவாகியுள்ளது. 2022 இல் வருமானம் குறைந்தது. வருமானம் 2.6 பில்லியன்களாகும். நஷ்டம் பில்லியன் 37 களாகும். 4000 கோடி
ரூபா வருடாந்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் சிக்கல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்
எரிபொருள் கடனாக பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டது.10 கோடி ரூபாவுக்கு மேல் நாளாந்த நஷ்டம் உள்ளது. சம்பளத்துக்கு மாத்திரம் 7.8 பில்லியன் ரூபா
வழங்கப்பட்டுள்ளது.மேலதிக நேரக் கொடுப்பனவாக 2021இல் 2.3 பில்லியன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வே திணைக்களத்தை எவ்வாறு நடத்த முடியும்?
நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்
121 ரூபாவாக இருந்த எரிபொருள் விலை 400 ரூபாவாக உயர்ந்துள்ளதால் ரயில் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. பஸ் கட்டணத்தை விட 50 வீதம் குறைவாக ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிகரித்த கட்டணத்தை அறவிட ரயில் நிலைய அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமென ரயில்வே திணைக்கள உத்தியோகஸ்தர்களிடம் கோரியுள்ளோம்.ரயில்வே திணைக்கள செலவுகளை குறைப்பது தொடர்பாக அவர்களுடன்
பேசமுடியும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிப்பு
இலங்கையில் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிப்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் இன்று முதல் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிக்க பட்டுள்ளது .இந்த திடீ ரயில் விலை அதிகரிப்பால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் அதிகரிக்க பட்டுள்ள ரயில்வே விலை கட்டணங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாள் தோறும் இலங்கையில் விலைவாசி அதிகரித்து செல்கிறது .ஆனால் மக்களோ தமது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மக்கள் வாழ்வியலை மீட்டு இயல்பு நிலைக்கு எடுத்து செல்லும் நடைமுறை திட்டம் ஏதும் இலங்கை ஆளும் அரசுகளிடம் காணப்படவில்லை என்கிறது மக்கள் மன்றம் .
தமது அரசியல் அதிகார போதையில் மிதக்கும் ரணில் விக்கிரமசிங்க மக்கள் வாழ்வியலை மேம்படுத்த ஏதும் செய்திடாது விலை உயர்வை அதிகரித்து செல்கிறது என்கிறது மக்கள் கருத்தாக உள்ளது .
ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்
ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்
ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்
மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்
எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன
அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்
இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,
அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்
ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது
ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
கார் ரயில் மோதல் -போக்குவரத்துக்கு பாதிப்பு
காலி-பூஸ்ஸ-வெல்லபட புகையிரத கடவையில் இன்று (01) காலை காலியில் இருந்து
கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
காரில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தாதி ஒருவரும் மற்றுமொரு பெண்ணும்
பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத கடவையில் உள்ள மணி மற்றும் சமிக்ஞை
விளக்குகள் பல மாதங்களாக இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன
ர்
உல்லாச பயணிகளுக்காக விசேட ரயில்சேவைகள் ஆரம்பம்
உல்லாச பயணிகளுக்காக விசேட ரயில்சேவைகள் ஆரம்பம்
இலங்கை வருகை தந்துள்ள உல்லாச பயணிகள் போக்குவரத்தை கவனத்தில் கொண்டு, தற்பொழுது Kandy to Ella பகுதிக்கான ,ரயில்வே போக்குவரத்து ஒன்று விசேடமாக ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
நாட்டின் முக்கிய வளர்ச்சியில் ,உல்லாச பயணிகளின் வருகையே வருமானத்தை பெற்று கொடுக்கின்றது .
அதனால் இந்த அதிரடி நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது.






























