ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை photo

Spread the love

ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது
கடும் நடவடிக்கை photo

கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் – தற்போது நடைமுறையில்

உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும். இதன் ஒரு கட்டமாக இன்று காலையில் புஸ்ஸலாவ நகரம் இவ்வாறு

காட்சியளிக்கின்றது

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – மார்ச் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு

மீண்டும் இன்றே பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை ஆகிய கிராமங்கள் முற்றாகத்

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளுக்குள் யாரும் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம்

செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த

நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

ஊரடங்குச் சட்டம்
ஊரடங்குச் சட்டம்

Leave a Reply