ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை

Spread the love

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, இரவு வேளையிலும் நடமாடுபவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் இரவு வேளைகளில் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி; வாகனங்களையும் நபர்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக நேற்று (28) இரவு முழுவதும் அட்டன் மல்லிகைப்பூ சந்தி சோதனை சாவடியில் விசேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன் போது உரிய ஆவணமின்றி அத்தியவசிய தேவைகளுக்காக சென்றவர்கள் கடுமையாக எச்சகரிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *