Tag: பாலியல்
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.
லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து குறித்த யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஒரு சந்தேகநபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற மூவரும் முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
மேலும், சந்தேக நபர்கள் ஏதோவொரு போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக அந்த பெண் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடுகன்னாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
10 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: நிர்வாகியின் கணவர் கைது| இலங்கை செய்திகள்
10 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: நிர்வாகியின் கணவர் கைது| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | ரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை அவ்வப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி ரக்வானை பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் யுவதிகள், மற்றும் சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள், சிறுமிகள் வயது பூர்த்தியடைந்தவுட நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்துச்சென்று பாடசாலைக்கு அனுப்பப்படுபவர்களே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே
அவரது கணவரால் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்
தமிழகத்தில் அரச விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவிகளுக்கு ,பாலியல் தொல்லை கொடுத்து வந்த பயிற்சியாளர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார் .
மாணவிகளினால் வழங்க பட்ட புகாரினை அடுத்து ,இந்த அதிரடி நடவடிக்கை கல்வி அமைச்சினால் மேற்கொள்ள பட்டுள்ளது .
பயிற்சியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மாவட்ட விளையாடடு அதிகாரி மீதும், நடவடிக்கை எடுக்க பட்டு இடம் மாற்றம் செய்ய பட்டுளளார் .
மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ,ஆசிரியர்கள் இவ்விதம் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்
ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்
ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பஞ்சாப்- ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர்.
இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். அப்போது அந்த பெண்கள் ஸ்பிரே ஒன்றை அவர் மீது அடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.
பின்னர் மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அவர்கள் குடித்துவிட்டு தன்னையும் குடிக்க வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.
அதன் பிறகு நான்கு இளம்பெண்களும் மாறி மாறி தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த நபர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதனையடுத்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து அவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தவர்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர் என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண்களைத் தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் இது போல் ஒரு ஆணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 4 பெண்களும் போதையில் இருந்தனரா, எதற்காக இது போல் செய்தனர் என்பதெல்லாம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று தான் பலாத்காரம் செய்து வரும் நிலையில் ஆண் ஒருவரை
இளம்பெண்கள் கூட்டாக பலாத்காரம் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொழிலுக்கு அனுமதி
பாலியல் தொழிலுக்கு அனுமதி
சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் மேஜரான தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என பொலிஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டைப் பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார்
சோதனை நடத்தி, அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயக்குமார் என்பவர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். சதிஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது உதயக்குமார் தரப்பி்ல், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்றும், அதன்பிறகு சேர்க்கப்பட்ட அறிக்கையில் தனது பெயரை
சேர்த்துள்ளதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் ஈடுபட்டால் அது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்றும், பாலியல் விடுதி நடத்துவது மட்டுமே சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது.
பொஸார் தரப்பில், அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்றதாகவும், அதன் அடிப்படையிலேயே அங்கிருந்தவர்களை கைது செய்து வழக்குப் பதிவு
செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லாத நிலையில், அதன்பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள
அறிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தாலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை, எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாலியல் தொழில்
நடைபெறும் விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் பொலிஸார்
அங்குள்ள பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது.
பாலியல் விடுதிகளை நடத்துவதுதான் சட்டவிரோதம். மேஜரான தனிப்பட்ட
நபர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலி்ல் ஈடுபட்டால்
அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை பொலிஸார் தவிர்க்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் மீது -நடிகை பாலியல் புகார்
நடிகர் மீது -நடிகை பாலியல் புகார்
நடிகை பாலியல் புகாரில் தலைமறைவான விஜய்பாபு விவகாரத்தில், நடிகர் சங்கத்தில் இருந்து நடிகை திடீர் என்று விலகியுள்ளார்.
மலையாள திரைப்பட உலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த விஜய்பாபு மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக விஜய்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்
தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் விஜய்பாபு மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து தானே
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக நடிகர் விஜய்பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்பாபு
அதேநேரம் தன் மீதான புகார்கள் அனைத்தும் வேண்டுமென்றே கூறப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டு வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய்பாபு மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து, சங்கத்தின் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை மாலாபார்வதி
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாலியல் புகாரில் சிக்கியுள்ள விஜய்பாபு, பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி உள்ளது சட்டத்தை
மீறிய செயலாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க அம்மா சங்க விசாரணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்
இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனை கண்டித்து மலையாள நடிகர் சங்கத்தின் புகார்கள் விசாரணைக் குழுவில் இருந்து விலகியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது
பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது
உஸ்பகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌ்ளவத்த பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குறித்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணுக்கு 36 வயது எனவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவரின் மனைவியும் உஸ்பகிஸ்தான் நாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
சென்னையில் 20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை
சென்னையில் 20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்-லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்புகளை நடத்திய ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி அளிக்கும் புதிய புகார் எழுந்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு இந்த பயிற்சியாளர் பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட்டர் பதிவு போட்டுள்ளார்.
புகார்
அதில், 20 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
மனைவிக்கு ‘அந்த’ மூடு வருவதை கணவர் அறிந்து கொள்வது எப்படி?
மனைவிக்கு ‘அந்த’ மூடு வருவதை கணவர் அறிந்து கொள்வது எப்படி?
எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் கணவன்
மனைவி இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட இந்த தனிமை உதவும். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் கணவர் மனைவியின்
ஆசையை அறிந்து செயல்படுவது தாம்பத்தியத்தை திருப்பி அடையச்செய்யும்.
எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
கிரியேட்டிவ் மூட்:
உங்கள் மனைவி எப்போதுமே சிறப்பாக சமைப்பவர்தான் என்றாலும், கூடுதலான ஸ்பெஷல் ஐட்டங்களை ரசித்து ருசித்து செய்தி வைத்திருக்கிறார் என்றால் “மூடில்” இருக்கிறார் என்று அர்த்தம்.
சமையல் என்றில்லை… அழகான பெயிண்டிங் வரைந்திருக்கிறார் என்றாலோ, தோட்டத்தை அழகுற சீரமைத்திருக்கிறார் என்றாலோ
இதே அர்த்தம்தான். காரணம், கிரியேட்டிவாக செயல்படும்போது, மனது உற்சாகமாக இருக்கும் “அந்த” ஆசை வேர்விடும். இதுபோன்ற
சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம். தவறவிட்டுவிடாதீர்கள்!
சில, பல நாட்கள் கணவரை பிரிந்திருக்கும் மனைவிமார்களுக்கு கணவர் வந்த பிறகு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிடும்.
பெரும்பாலான பெண்கள் முழு “நீல”ப்படத்தை விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இலைமறை காயான – ஓரளவு
செக்ஸ் காட்சிகள் – தான் அவர்களுக்கு மூடை ஏற்படுத்தும். ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்பதைப்போல, இதில் ஓவர் டோஸ் மனதுக்கு ஆகாது என்பது பெரும்பாலான பெண்களின் எண்ணம்.
.உற்றார் உறவினர் இல்ல விசேசங்களுக்கு கணவனுடன் சென்று வந்த பிறகு, மனைவி மார்களுக்கு ஜாலி மூட் வருமாம். பொறாமையும் செக்ஸ் மூடை ஏற்படுத்துமாம்.
ஆம்… வேறு பெண்கள் தங்கள் கணவனை நெருங்க முயலும் போதும் கணவன் வேறு பெண்கள்மீது அதீத உரிமையுடன் பேசும்போதும் மனைவிமார்களுக்கு பொறாமை உணர்ச்சி ஏற்படும்.
இது போன்ற நேரங்களில் கணவனுடன் உறவு கொள்ள மனைவிமார்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காரணம்,
தனது கணவனிடம், நான்தான் உன்னுடையவள் என்பதை உணர்த்தும்படியாக செக்ஸை நினைக்கிறார்கள்.
ஏதோ பெரும் கவலை அல்லது பதட்டமான நேரத்திலும் கணவனின் அருகாமையை செக்ஸை விரும்புகிறார்கள் மனைவிமார்கள்.
செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்.
மகிழ்ச்சியான தருணங்களிலும் உறவு கொள்ள விரும்புகிறார்கல். கணவன் சர்ப்பிரைஸாக பரிசு அளிக்கும்போது, பிறந்த நாள்,
பிரமோசன் போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் மனைவிகளுக்கு செக்ஸ் மூடை ஏற்படுத்துகிறதாம்.
ஓகே.. கணவாஸ்… மனைவி மனசை அறிந்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தானே!


















