Tag: துப்பாக்கிச்சூட்டு
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வரவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது, மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ,அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என ,தற்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தியவரை, தேடி கைது செய்யும் நடவடிக்கையில் ,இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த வேட்பாளர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை இலக்கு வைத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் ,அதனால் தற்பொழுது பல வேட்பாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற, மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வருகின்ற பொழுது ,இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் ,அசம்பாவிதங்கள் ,நாடளாவிய ரீதியில் இடம் பெறுவது இயல்பான ஒன்றாக இலங்கையில் இன்று மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை

- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை










