Tag: துப்பாக்கிச்சூட்டு
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வரவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது, மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ,அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என ,தற்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தியவரை, தேடி கைது செய்யும் நடவடிக்கையில் ,இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த வேட்பாளர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை இலக்கு வைத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் ,அதனால் தற்பொழுது பல வேட்பாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற, மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வருகின்ற பொழுது ,இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் ,அசம்பாவிதங்கள் ,நாடளாவிய ரீதியில் இடம் பெறுவது இயல்பான ஒன்றாக இலங்கையில் இன்று மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை










