Posted in இலங்கை செய்திகள்

1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா தடுப்பூசி 1.5 மில்லியன் டோஸ்கள் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளன.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டிற்கு இதுவரை 71 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல், இந்நாட்டில் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 13.5 சதவீதமானவர்களுக்கு தற்போதைய நிலையில் தடுப்பூசி டோஸ்கள் இரண்டும் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 4 விதமான கொவிட் 19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி

மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையை கடந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதுதொடர்பாக தெரிவிக்கையில், இந்த மாவட்டத்திற்கென மேலும் வழங்கப்பட்டுள்ள 22

ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகள் புதன் கிழமை (14) முதல் 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தை நிறந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் சமூகத்தடுப்பூசி வழங்களினுடைய 2 ஆவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 3 ஆவது கட்டம் இடம்பெற்று வருகின்றது.

2 ஆவது கட்டத்தில் பாதுகாப்பு படையினரால் வநனியோகிக்கப்பட்ட 5 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கிடைக்கப்பெற்ற 20 ஆயிரம் ‘பைஸர்’ தடுப்பூசிகளில் 19 ஆயிரத்து 500 வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.

செப்டெம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்களுடன் தொடர்பு படுகின்ற மன்னார் மீனவர்களினால்

ஏற்படக்கூடிய கொரோனா அச்ச நிலையை நீக்குவதற்காக மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக குறித்த தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது.

மேலும் நேற்று திங்கட்கிழமை இரவு எமக்கு மேலும் 22 ஆயிரத்து 230 பைஸர் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றினுடைய விநியோகம் இன்று (14) முதல்

ஆரம்பமாகும். குறித்த தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் 5 அல்லது 6 நிலையங்களில் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்.

இதன் போது 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிறந்தர வதிவுரிமை பெற்ற அனைவரும் எந்த நிலையத்திலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று

தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தேவையில்லை.இவர்களுக்கு விசேட விதமாக வேறு நிலையங்களில் எதிர் வரும் வாரம் வழங்கப்படும்.

இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 899 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 882 பேர் இந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த

மாதத்தில் தற்போது வரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன் தெரிவித்தார்.

இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இதுதொடர்பா விடயம் பத்திரிக்கையொன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாம் கவனம் செலுத்தும் போது சில விடயங்களை

புரிந்துகொள்ளமுடியும். குறிப்பிட்ட இந்திய நிறுவனம் ஒன்றினால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால்

இந்தியாவில் இருந்து பெறப்படவிருந்த தடுப்பூசி பெறுகையை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இடை நிறுத்தியது.

அமைச்சரவை விசேட பெறுகை குழுவிடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. இந்த குழு விரிவாக ஆராய்ந்த பின்னரே நாம் நடடிக்கை மேற்கொண்டோம்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட விடயம் தொடர்பிலேயே இந்த தலைப்பு செய்தி எழுதப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

பொறுப்பற்ற விதத்தில் பொறுப்பான பத்திரிகை நிறுவனம் இவ்வாறு செய்தி வெளியிடுவதையிட்டு நாம் கவலையடைகின்றோம். தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பொது

மக்களுக்குள்ள ஆர்வம் மற்றும் நம்பகத்தன்மையை இவ்வாறு சீர்குலைக்கப்படுவதையிட்டு வருந்துகின்றோம் என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி இன்று (09) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித்

தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் திட்டத்தில் 2ஆம் கட்டத்தில் முதலாவது டோஸ் . கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின்கீழ் ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 465 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9 ஆயிரத்து 457 பேருக்கும், 7ஆம் திகதி

மூன்றாம் நாளில் 12 ஆயிரத்து 34 பேருக்கும், 8ஆம் திகதியான இன்றைய நான்காம் நாளில் 7 ஆயிரத்து 497 பேருக்கும் என மொத்தமாக 38 ஆயிரத்து 456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி

மற்றம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

12 ஆம் திகதி முதல் அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி

12 ஆம் திகதி முதல் அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி

அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கல்வி அமைச்சர், மேலும் தெரிவிக்கையில் வயது வேறுபாடுயின்றி கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார்.

ஜனாதிபதியுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது


அதற்கமைய, நாட்டிலுள்ள 10, 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.

மாகாண ஆளுநர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது தடுப்பூசி

ஏற்றும் மத்திய நிலையங்களுக்கு ஆசிரியர்களும் அதிபர்களும் கல்விசாரா ஊழியர்களும் வருகை தருவதற்குரிய திகதியும் நேரமும் முன்கூட்டியே அறிவிக்கப்படும் பாடசாலைகளை விரைவாக

ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

    வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

    வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வன்னி பிராந்திய

    இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டாரவின் ஒத்துழைப்புடன் ஏற்றப்பட்டுள்ளன.

    தடுப்பூசிகள் நேற்று வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றப்பட்டன.

    வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு (ஆழுர்-ஏயஎரnலைய) வைத்தியர்களுக்கும்

    இராணுவத்தினருக்கும் பொதுமக்கள் சார்பாக நாம் நன்றியை தெரிவிக்கின்றோம் என்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கைக்கு வந்தடைந்த பைசர் தடுப்பூசி

      இலங்கைக்கு வந்தடைந்த பைசர் தடுப்பூசி

      அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 26910 (pfizer) பைசர் என்ற கொரோனா தடுப்பூசி மருந்து இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

      இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட இவை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

      அமெரிக்காவிடமிருந்து இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் முதலாவது தெற்காசிய நாடு இலங்கையாகும்.

      இதன்கீழ் முதல் கட்டமாக இந்த தடுப்பூசி மருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளது.அடுத்த வாரம்

      அளவில் மேலும் 26 ஆயிரம் பைசர் தடுப்பூசி மருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

      இவற்றுக்கு மேலதிகமாக இரண்டு இலட்சம் பைசர் தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைக்க உள்ளன. கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக ஒருவர்

      இரண்டு பைசர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது அவசியமாகும். இதேவேளை இலங்கைக்கு

      இம்மாத இறுதிக்குள் 64 ஆயிரம் அஸ்ராசெனகா மற்றும் கொவிஷில்ட் தடுப்பூசிகள் கிடைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி

        யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி

        யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

        எதிர்வரும் பத்தாம் திகதி வரை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.இதற்காக 50 ஆயிரம் சைனாபார்ம் தடுப்பூசி மருந்து கிடைத்திருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

        இதுதொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

        இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் யூலை மாதம் 5ம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெறும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள், திகதிகள் பற்றிய விபரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் அறியத்தரப்படும்.

        தடுப்பூசி அல்லது வேறு மருந்துகள் தொடர்பில் ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும், எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

        அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பபடுபவர்கள், தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.

        அவ்வாறே மேற்குறிப்பிடப்பட்ட வகையில் அடங்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன

        தொழிற்சாலைப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அப்பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியினால் அறிவிக்கப்படும்.

        யாழ் மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் 49,602 பேருக்கு முதல் தடவை கொவிட் 19 தொற்று நோய்க்கெதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது. இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தேற்றும் பணிகள் கடந்த யூன் 28 ம் திகதி முதல் யூலை 3 ம் திகதி வரை இடம்பெற்றன. இதில் 46,648 பேர் இரண்டாவது தடுப்பு மருந்தினை பெற்றுக்கொண்டனர்.

        முதலாவது தடுப்பு மருந்தினை தடவை பெற்றுக் கொண்டவர்களில் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பதனால் அப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்து வழங்கப்படும்.
        .
        சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்து நிலை உடைய கர்ப்பிணிதாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணிதாய்மார்களுக்கும், முன்களப்பணியாளர்களாக உள்ள கர்ப்பிணிதாய்மார்களுக்கும் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.

        தொழிற்சாலை பணியாளர்களுக்கும்,, ஏனைய முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி

        இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி

        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பத்து

        வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பட உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

        அதே வேளை மூடியுள்ள பாடசலைகள் மீள திறக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

          இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

          மேல் மாகாணத்தில் இன்று முதல் 45 அரச வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

          கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 அரசாங்க வைத்தியசாலைகளில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

          இதன் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சயனோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

          Posted in Uncategorized

          அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் தடுப்பூசிகள்

          அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் தடுப்பூசிகள்

          இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ,அந்த மக்களை

          அதில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் அமெரிக்காவில் இருந்து தடுப்பூசிகள் எடுத்துவர படுகின்றன

          மேற்படி மருந்துகள் கப்பலில்; ஏற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ் மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசி வழங்கல்

          யாழ் மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசி வழங்கல்

          யாழ் மாவட்டத்திற்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன.

          இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு

          செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

          இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட அன்று மே 30ம் திகதி 2947 பேருக்கும், மே 31ம் திகதி 6123, பேருக்கும் ஜூன் 1ம் திகதி 13 ,822 பேருக்கும், ஜூன் 2ம் திகதி 23,454 பேருக்கும், ஜூன் 3ம் திகதி 1740 பேருக்கும் மொத்தமாக 48,086 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

          இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் 1194 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

          எனவே நேற்று மாலை வரை (03.06.2021) மொத்தமாக 49,280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

          சிலவகை மருந்துகள் ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா

          வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி தெல்லிப்பளை ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் 05.06.2021 சனிக்கிழமை தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

          மேலும் அடுத்த கட்டமாக வழங்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமிடத்து ஏனைய

          கிராமசேவையாளர் பிரிவுகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

          Posted in உலக செய்திகள்

          பிரான்சில் 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி

          பிரான்சில் 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி

          பிரான்சில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து 12 முதல் 18 சிறுவர்களுக்கு கொரனோ தடுப்பூசி
          செலுத்துவதற்கு ,பிரான்ஸ் அரசு அனுமதி வழங்க பட்டுள்ளது ,

          இம்மாதம் முதல் இந்த ஊசி செலுத்த படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது ,குறித்த வயதுடைய அனைவரும் இந்த ஊசியை செலுத்த வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

          Error: View a431d7eiu3 may not exist
          Posted in Uncategorized

          17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி

          17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி

          நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

          இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்பது இலட்சத்து 25ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது கொவிஷில்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 26 ஆயிரத்து 821 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.

          மேல் மாகாணம் உட்பட நாட்டின் 9 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது நாட்டுக்குத் தேவையான மேலும் 34 லட்சம் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்ய இருக்கிறது. அடுத்த வாரமளவில் நாட்டுக்கு பத்து இலட்சம் சீனாபோம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.

          இதேவேளை நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 882 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். 39 கொரோனா மரணங்களும் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதில் நேற்றைய தினத்தில் மாத்திரம் நான்கு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

          இதன்மூலம் இலங்கையில் இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1480 ஆகும். நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த ஒருநாள் நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 364 வரை அதிகரித்துள்ளது.

          Posted in மருத்துவம்

          கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி

          கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமானது

          கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி கர்ப்ப கால தடுப்பூசி பல தொற்றுகளில் இருந்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றும். கர்ப்ப காலத்தில்

          தாய்மார்களிடம் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கருவில் வளரும் குழந்தைக்கு போகும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள்

          எதுவும் வராமல் காக்க உதவும். குழந்தை பிறந்தவுடன் மிகவும் மென்மையாக இருப்பதால் உடனே எல்லா தடுப்பூசிகளும் போட முடியாது.

          கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி:

          கர்ப்பம் தரிப்பதற்கு முன் ஒரு சில நோய்களுக்கான தடுப்பூசிகளை பெண்கள் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.

          1. ரூபெல்லா ஒரு வைரஸ் நோய். ரூபெல்லா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படும். பொதுவாக இது சாதாரணமான காய்ச்சல்.
          2. ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
          3. கருக்கலைவு மற்றும் குழந்தை முன்னதாக பிறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தியை இரத்தப் பரிசோதனை மூலமாக
          4. மதிப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். ரூபெல்லா தடுப்பூசி போட்ட 1 மாதத்திற்கு கருத்தரிக்கக்கூடாது.
          5. கர்ப்பிணி பெண்ணுக்கு சிக்கன்பாக்ஸ் தொற்று ஏற்பட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் சிக்கன்
          6. பாக்ஸ் வராத மற்றும் அதற்கு தடுப்பூசி போடாத பெண்கள் சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி குறித்து தங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பேச வேண்டும்.
          7. ஹெபடைடிஸ் பி – இந்த வைரஸ் நோய் ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைக்கு செல்லக்கூடும்.
          8. கர்ப்பமாவது குறித்து திட்டமிடுபவர்கள் ஹெபடைடிஸ் பிக்கு தடுப்பூசி போடுவது குறித்து தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.

          கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:

          பொதுவாக, செயலிழந்த வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைக் கொண்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கலாம். நேரடி வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.

          கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:

          1. டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி.டி) – இந்த தடுப்பூசி தாய் மற்றும் குழந்தையை டெட்டனஸுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், பொதுவாக இது நான்காவது மாதத்திற்குப் பிறகு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
          2. TdaP- டெட்டனஸ் டோக்ஸாய்டு, குறைக்கப்பட்ட டிப்தீரியா டோக்ஸாய்டு மற்றும் அசெல்லுலர் பெர்டுசிஸ் தடுப்பூசி. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒவ்வொரு கர்ப்ப காலத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது, இது கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில்

          கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி

          1. வழங்கப்படுகிறது. மூன்று தீவிர நோய்களிலிருந்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் இது பாதுகாக்கிறது.
          2. ரியா மற்றும் ஹூப்பிங் இருமல் (பெர்டுசிஸ்) தடுப்பூசி போடப்படும். எனவே முதல் 6 வாரங்களில் குழந்தையைப் பாதுகாக்க இந்த தடுப்பூசி முக்கியமானது.
          3. காய்ச்சல் தடுப்பூசி / ஷாட் – செயலற்ற காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது.
          4. இது கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம், ஆனால் பொதுவாக காய்ச்சல் காலத்தில் நவம்பர் முதல் மார்ச் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

          கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள்:

          கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் (வெரிசெல்லா), எம்.எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை மற்றும் ரூபெல்லா), இன்ஃப்ளூயன்ஸா நேசல் ஸ்ப்ரே போன்ற தடுப்பூசிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

          பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகள்:

          கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிற்காக உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. தடுப்பூசிக்கும் கருச்சிதைவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

          தடுப்பூசிகளின் பக்க விளைவுகள்:

          மற்ற மருந்துகளைப் போலவே தடுப்பூசிகளும் வலி, சிவத்தல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், லேசான காய்ச்சல், தசை வலி, சோர்வு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை. அவை தானாகவே போய்விடும்.

          பயணம் மற்றும் கர்ப்பம்:

          ஒரு கர்ப்பிணிப் பெண் வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அல்லது நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிக்குச் சென்றாலோ, ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற கூடுதல்

          தடுப்பூசிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். நோய்த்தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

            Posted in Uncategorized

            ஜெர்மனியில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வாலிபர்களுக்கு செலுத்த தடை

            ஜெர்மனியில் அஸ்ட்ராஜெனெகாதடுப்பூசி வாலிபர்களுக்கு செலுத்த தடை

            ஜெர்மனியில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த தடுப்பூசிகள் தயாரிக்க பட்டு வருகிறது,


            இவ்வாறு தயாரிக்க பட்ட அஸ்ட்ராஜெனெகா,AstraZeneca நிறுவனத்தின் ஊசியினை செலுத்த ஜேர்மனி நாடு தடை விதித்துள்ளது

            அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இது செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

            அதற்கு கீழானவர்களுக்கு செலுத்த முற்றிலும் தடை செய்ய பட்டுள்ளது

            இரத்த உறைவு இதனால் ஏற்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              இலங்கைக்கு சீனா வழங்கும் ஆறு லட்சம் தடுப்பூசி – போலியானதா ..?

              இலங்கைக்கு சீனா வழ்ஙகும் ஆறு லட்சம் தடுப்பூசி – போலியானதா ..?

              இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக சீனா தயாரித்துள்ள ஆறு லட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கை வருகின்றன


              இந்த ஊசிகள் கிடைக்க பெற்றதும் துரித வேகத்தில் மக்களுக்கு செலுத்த படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

              இந்தியா வழங்க நிலையில் அதற்கு போட்டியாக சீனாவும் இப்பொழுது இந்த ஊசிகளை வழங்குகிறது

              சீனா வழங்கிய கொரனோ சோதனை கருவிகள் போலியானவை என இலங்கை தெரிவித்து

              இருந்த நிலையில் இன்று வருகின்ற ஊசிகளும் அவ்விதம் போலியானதாக அமைய கூடும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

              Posted in Uncategorized

              சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னவாகும்

              சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னவாகும்

              கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.

              கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாகவே உலகத்தை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

              தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

              இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.

              சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னவாகும்

              அதேபோல் சர்க்கரை நோயாளிகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாமா? போட்டுக்கொண்டால் ஏதாவது பக்க விளைவுகள் வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

              இது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

              சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது.

              blood thinners மருந்து எடுத்துக்கொள்வோரும் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம். அவ்வாறு போட்டுக்கொள்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

              அதே போல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் ஏதாவது பக்கவிளைவுகள் வருமா என்ற கேள்வி எழுகிறது.

              இதற்கு உறுதியாக சொல்ல முடியாது. பக்கவிளைவுகள் வரலாம். வராமலும் இருக்கலாம். எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சில பக்கவிளைவுகள் இருக்கத்தான் செய்யும்.

              எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சிறிய அளவில் சில அறிகுறிகள் ஏற்படும். அதாவது காய்ச்சல், உடல் வலி போன்ற சில அறிகுறிகள் ஒரு சிலருக்கு ஒரு நாள் இருக்கலாம்.

              அதற்காக பயப்பட தேவையில்லை, இதற்கு பாராசிட்டமோல்(Paracetamol Tablets) மாத்திரையை போட்டுக்கொண்டு ஒருநாள் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். எந்த பயமும் கிடையாது.

              உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருந்துவரை அணுகி அவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கான விடையை அறிந்து கொண்டு கொரோனா தடுப்பூசியை போட்டு

              கொள்ளுங்கள். இது மட்டும் தான் இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளியில் வர ஓரே வழியாகும்.

                Posted in Uncategorized

                மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

                மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

                மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (13) முதல் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுவத்றகான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

                மேல் மாகாண முதியோர் இல்லங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

                30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

                Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

                இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

                இந்தியாவில் கோவிஷீல்டு, கொவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

                தடுப்பூசி திட்டத்தின் 52ஆவது நாளான நேற்று முன்தினம் (08) ஒரே நாளில் 2,019,723 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

                இதுதான் ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இவர்களில் 1,715,380 பேர், 28,884 அமர்வுகள் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தப்பெற்றனர்.

                மேலும் 304,343 சுகாதார பணியாளர்களும், முன்கள பணியாளர்களும் தடுப்பூசியின் 2ஆவது டோஸ்களை

                பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரையில் 2,308,733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.