யாழ் மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசி வழங்கல்

Spread the love

யாழ் மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசி வழங்கல்

யாழ் மாவட்டத்திற்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன.

இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு

செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட அன்று மே 30ம் திகதி 2947 பேருக்கும், மே 31ம் திகதி 6123, பேருக்கும் ஜூன் 1ம் திகதி 13 ,822 பேருக்கும், ஜூன் 2ம் திகதி 23,454 பேருக்கும், ஜூன் 3ம் திகதி 1740 பேருக்கும் மொத்தமாக 48,086 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் 1194 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

எனவே நேற்று மாலை வரை (03.06.2021) மொத்தமாக 49,280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிலவகை மருந்துகள் ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா

வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி தெல்லிப்பளை ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் 05.06.2021 சனிக்கிழமை தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த கட்டமாக வழங்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமிடத்து ஏனைய

கிராமசேவையாளர் பிரிவுகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *