Posted in இலங்கை செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது..

நோயாளகளில் 162 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

COVID-19 பரம்பலின் தரவுகள்

புதுப்பிக்கப்பட்டது 2020-05-01 22:03:44

690
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

521
சிகிச்சை பெறும் நோயாளிகள்

25
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

162
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

7
இறப்பு எண்ணிக்கை

கொரோனா நோயாளர்களின்
கொரோனா நோயாளர்களின்
      Posted in இலங்கை செய்திகள்

      கொரோனா நோயால் 295 பேர் பாதிப்பு

      இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு

      உள்ளாகி உறுதி செய்யப்பட்ட பதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக

      சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.

      இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும்.

      இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு 12 பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தல்

      நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் மத்தியில்

      இருந்து அடையாளங்காணப்பட்டவர்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்

      கொரோனா நோயால்
      கொரோனா நோயால்
      Posted in சினிமா

      கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்

      கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்

      பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், 6-வது முறையாக பரிசோதனை

      செய்ததில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.

      கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்
      கனிகா கபூர்


      பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை

      தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர்

      அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

      இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன்

      நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

      கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தினர்.

      கனிகா கபூர்

      கொரோனா நோயாளிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும். கனிகாவுக்கு 5 முறை பரிசோதனை

      செய்தும் கொரோனா தொற்று இருப்பதையே உறுதிப்படுத்தியது. தற்போது 6-வது முறையாக பரிசோதனை செய்தனர்.

      அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை முடிவுகள் வெளிப்படுத்தின.

      இதையடுத்து அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே

      ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கனிகா கபூருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

      கொரோனாவில் இருந்து
      கொரோனாவில் இருந்து
      Posted in சினிமா

      இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா

      இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா

      தமிழில் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள தமன்னா, இதை செய்தால்

      கொரோனாவை எளிதில் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார்.

      இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
      இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

      இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு

      வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள்.

      ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால்

      கொரோனா மேலும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

      அவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் நடிகர்-நடிகைகள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

      அந்த வகையில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “நம்மால் கோவிட்-19 வைரசை எளிதாக

      ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான்.

      நாம் அனைவரும் இந்த நேரத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும்.

      தமன்னா

      இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு. கொரோனா வைரசிடம் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கையில்தான்

      இருக்கிறது. எனவே அரசாங்கம் சொல்வதை கேளுங்கள். சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். விலகி நின்று

      ஒன்றிணைவோம். கொரோனா வைரசை ஒழிப்போம்”. இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

      இந்த வீடியோவில் அவர் தமிழில் பேசி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

      இதை செய்தால் கொரோனாவை
      இதை செய்தால் கொரோனாவை
      Posted in சினிமா

      கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா,

      கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா

      உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம்

      ஒன்றை நடத்தி உள்ளார்.

      கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா


      குடும்பத்தினருடன் வீட்டில் யாகம் நடத்திய ரோஜா
      சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது

      கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு

      உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு

      கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

      இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான

      ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர்.

      கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட

      வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக ரோஜா தெரிவித்தார்

      கொரோனா பிடியில்
      கொரோனா பிடியில்