Posted in Uncategorized

கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை பெருமளவில் நடுத்தர வயதுள்ளவர்களே அதிகளவில் பாதித்து வருகிறது. முதல் அலையின்போது இணைநோய்

உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இணை நோய் இல்லாதவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில்

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 18 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். மே 9ஆம் தேதி நிலவரப்படி,

கொரோனாவுக்கு பலியானவர்களில் 39 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். அதுபோன்று, நேற்று உயிரிழந்த 298 பேரில், 78 பேர் இணை நோய் இல்லாதவர்கள்.

இந்நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களில் கொரோனாவுக்கு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வசந்தமணி

தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை 31-40 வயதுள்ள 37 சதவிகித்தினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசின் தகவலின்படி, முதல் அலையின்போது 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் பாதிப்பு விகிதம் 31 சதவிகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 32 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

இந்நிலையில், இரண்டாம் அலைக்கு இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பால்ராம் பார்கவா கூறுகையில், “கொரோனா முதல் அலையுடன், இரண்டாம் அலையை ஒப்பீடும்போது, 40 வயதுக்கு

மேற்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுவது சற்று உயர்ந்துள்ளது. இளைஞர்கள் தேவையின்றி வெளியே செல்வது

அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும்போது அலட்சியமாக முகக்கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை

பின்பற்றாமல் செல்வது, மற்றும் நாட்டில் சில புதிய உருமாறிய கொரோனா வகைகளும்தான், இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவ காரணம்” என்கிறார்.

பெரும் முதலைகள் அரசியல் செல்வாக்குத்தான் இந்த நோய்களை உருவாக்காகி வருகின்றனர் என்ற சர்ச்சையை தற்போது எழுந்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    கொரோனா: இன்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210

    கொரோனா: இன்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210

    இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நேற்றைய (23) தினம் ஜவர் உயிரிழந்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ,மே 22 ஆம் திகதி

    வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கமைவாக இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ள தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

    நேற்று மேலும் 2950 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 2945 பேர் புத்தாண்டு கொவிட் கொத்தணியுடன்

    சம்பந்தப்பட்டவர்கள் என்றும் 14 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    கொரோனாவால் டாக்டர் சத்திய மூர்த்தி மரணம்

    கொரோனாவால் டாக்டர் சத்திய மூர்த்தி மரணம்

    இந்திய மருத்துவ சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர்.

    இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 50 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34

    பேரும், டெல்லியில் 27 பேரும் தங்கள் உயிர் இழந்துள்ளனர்.இந்த டாக்டர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டது.

    இவர்களில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் டாக்டரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த டாக்டரும் அடங்குவர் என இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தில் ஐந்து மாதங்கள் கழித்து, இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் 66 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி

    போட்டுக்கொள்ள டாக்டர்களை ஊக்குவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே கே அகர்வால் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

    இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் இறந்துவிட்டதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். இந்திய மருத்துவ

    சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமேபதிவு செய்து உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.

      Posted in Uncategorized

      மட்டக்களப்பில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள்

      மட்டக்களப்பில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள்

      மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்தில் 143 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும்

      மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

      மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (05) காலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது

      அலையில் 14 நாட்களில் 190 பேர் தொற்றுக்குள்ளானதாகவும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 143 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

      மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் முற்றுமுழுதாக நிரம்பியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரோனா

      தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

      இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

      இவர்களின் 12 பேர் களுவாஞ்சிகுடியிலும் 09 பேர் மட்டக்களப்பிலும் 05 பேர் செங்கலடி பகுதியிலும் 04 பேர் காத்தான்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


      இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1173 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இவர்களின் 1020 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.143 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரையில் 10 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

      மூன்றாவது அலையினைப்பொறுத்தவரையில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதிலும் இறுதி ஏழு நாட்களும் 143 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மூன்றாவது அலை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது.

      மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கொரோனா சிசிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி, கரடியனாறு, பெரியகல்லாறு ஆகிய இந்த மூன்று வைத்தியசாலைகளும் 400 நோயாளர்களை பராமரிக்ககூடிய வகையில் உள்ளன.

      இந்த மூன்று வைத்தியசாலைகளும் முற்றுமுழுதாக நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. இதன்காரணமாக புதிதாக அடையாளம் காணப்படுபவர்கள் அனுப்பவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

      ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1000 கட்டில்களை அதிகரிக்குமாறு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நூறு கட்டில்களை அதிகரிக்கவுள்ளோம்.

      கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக ஒட்சிசன் தேவைப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் சிலின்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

      மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் திட்டம் இல்லாத காரணத்தினால் ஒட்சிசன் தேவைக்காக மகாஓயா, தெகியத்தன்கண்டிய பகுதிகளில் இருந்து ஒட்சிசனை எடுத்துவரவேண்டியுள்ளது. ஒரு

      ஒட்சிசன் தொகுதியை நிறுவுவதற்கு 42மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

      கொவிட் தொற்றாளர்கள் தீவிரமான நிலையினையடைந்து நியுமோனியாவுக்கு தள்ளப்படும்போது அவர்களை பராமரிப்பதற்காக காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை

      போன்ற வைத்தியசாலைகளில் எச்யு மற்றும் ஐசியு ஆகியவற்றினையும் நிறுவவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஏழு நாட்களில் அவை செயற்பாட்டுக்கு வருமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

        Posted in இலங்கை செய்திகள்

        கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு

        கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு

        கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

        இன்றைதினம் மட்டும் 137 ​பேர், தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

        அத்துடன், இன்றைய அறிக்கையின் பிரகாரம் கொரோனா மரணங்கள் ஐந்து, சம்பவித்துள்ளன.

        அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.

        Posted in Uncategorized

        சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா

        சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா

        .சீனாவில் வௌவால் வைரசுகள் பற்றி ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.

        அந்த ஆய்வின் முடிவில் தென்மேற்கு சீனாவில் 4 கிலோ மீற்றர் கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள்

        இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

        அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுடன்

        தொடர்புடையவை என்றும் அவற்றில் ஒரு வைரஸானது கொரோனா வைரஸின் மரபணுவை சுமந்திருந்தது என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

        Posted in சினிமா

        கொரோனாவை வென்ற சூர்யா

        கொரோனாவை வென்ற சூர்யா

        நவராசா படத்தில் நடித்து முடித்த சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார்.

        ஆனால் அதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து கொரோனாவிலிருந்து மீண்டார்.

        இருப்பினும் சில நாட்கள் வீட்டில் சுய தனிமையில் இருந்து வந்தார். எனவே சூர்யா இல்லாமலே சூர்யா 40 படத்தின் பூஜை நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

        சூர்யா

        தற்போது சுய தனிமையில் இருந்து வந்த சூர்யா, மார்ச் 15-ம் தேதி முதல் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

        Posted in Uncategorized

        10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி – உலக சுகாதார நிறுவனம்

        10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி – உலக சுகாதார நிறுவனம்

        உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

        அவர் கூறியதாவது:-

        உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

        அதிக மக்கள் நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில், சில இடங்களில் 50 முதல் 60 சதவீதம்பேருக்கு கொரோனா வந்துள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகி உள்ளது.

        ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு தடுப்பூசி போடுவதுதான் ஒரே வழி. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள

        தடுப்பூசிகள், கொரோனாவால் ஏற்படும் மரணம், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலை ஆகியவற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன.

        அதே சமயத்தில், அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு, லேசான பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி உறுதியுடன் செயல்படுவது பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

        இவ்வாறு அவர் கூறினார்.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரோனா: தொற்றாளர்கள் , 276 மரணம்

        இலங்கையில் கொரோனா: தொற்றாளர்கள் , 276 மரணம்

        இன்றைய தினம் (21) மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.

        இன்றைய தினம் 873 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 536 பேர் பேலியகொட கொவிட்

        கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். சிகிச்சை பெற்று வந்த 769 கொவிட் தொற்றாளர்கள் இன்று வைத்தியசாலைகளில் இருந்து

        வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைவாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.

        உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 55526. சிகிச்சை பெறும் நோயாளிகள் 7266.

        கொரோனா தொற்றின் காரணமாக இன்றைய தினம் (21) இருவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

        Posted in உலக செய்திகள்

        உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடி

        உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடி

        உலகம் முழுவதும் தற்போது 2 ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

        இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை

        மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

        இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 95,976,177 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

        செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 68,593,307 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,048,328 பேர் உயிரிழந்துள்ளனர்.

        கொரோனா தொற்றுக்கு தற்போது 25,334,542 பேர் சிகிச்சை பெற்று

        வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,848 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        பாராளுமன்ற பணியாளர் நான்கு பேருக்கு கொரோனா

        பாராளுமன்ற பணியாளர் நான்கு பேருக்கு கொரோனா

        பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு

        தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம்,

        நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

        சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை உறுதிசெய்துள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையிலும் புதிய வகை கொரோனா

        இலங்கையிலும் புதிய வகை கொரோனா

        ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்

        தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

        வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில்

        குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

        பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர

        பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா

        மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா

        மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

        செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.

        வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

        இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த வைத்தியசாலை பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்

        ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமலும்

        நோயாளிகளிருந்து ஊழியர்களுக்குப் பரவாமலும் தடுப்பதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

        இதேவேளை, வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், போதனா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து,

        அருகில் உள்ள வைத்தியசாலைகளில் தங்களுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கிளிக் வரும்

        நோயாளிகள் தங்களது மருந்துகளை, கிராம சேவகர் ஊடாகவும் அல்லது 0653133330, 0653133331 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவித்தல் விடுத்தார்.

        Posted in உலக செய்திகள்

        புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு

        புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு

        இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

        பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா

        உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

        இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த

        மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகின்றது.

        தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமாஇ? என்பது இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

        Posted in இலங்கை செய்திகள்

        ஹக்கீமுக்கு கொரோனா

        ஹக்கீமுக்கு கொரோனா

        ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற

        உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

        தற்போது, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது

        டுவிட்டரில் பதிவொன்றை இட்டு இன்று(10) தெரிவித்துள்ளார்.

        அத்துடன், கடந்த 10 நாள்களில் தன்னுடன் தொடர்புகொண்டவர்கள் தேவையான

        சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

        Posted in இலங்கை செய்திகள்

        யாழின் ஒருபகுதி முடங்கும் அபாயம்

        யாழின் ஒருபகுதி முடங்கும் அபாயம்

        வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

        யாழ்ப்பாணம் – வடமராட்சி, புலோலியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி

        செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, வடமராட்சி கொத்தணிக்கான

        அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் 188 பேருக்கு கொரோனா

        இலங்கையில் 188 பேருக்கு கொரோனா

        இலங்கையில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று

        உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு

        உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ

        தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்

        மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்

        மத்திய மாகாணத்தில் இதுவரை 1,076 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அறுவர்

        மரணித்துள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

        இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில், இன்று (30) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 35 தொற்றாளர்கள்

        இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார் என்றும் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

        ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவு, தேதுனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே, கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

        திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் என்றும் பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது

        உறுதியானதாகவும் மேற்படித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
        இந்நிலையில் மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ்

        தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.

        இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் 535 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது

        இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது

        தென்கொரியாவில் முதலாவது புதிய வகையிலான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம்

        காணப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் பரவிவரும் ஒரு வகையான புது வடிவிலான கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இவர் உள்ளாகியிருக்கிறார்.

        ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து சென்று திரும்பியதை

        அடுத்து, குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

        இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக

        வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
        இதனால், தாம் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக

        நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள். இங்கிலாந்தின் அம்யூலன்ஸ் சேவை வரலாற்றில் நேற்று முன்தினம் நெரிசல் மிக்க நாளாக

        வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில்

        கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றமை இதற்கான காரணமாகும்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 120 முஸ்லிம்கள் பலி

        இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 120 முஸ்லிம்கள் பலி

        இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 120 பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, அவர்களில் பெரும்பாலானவர்களின்

        சடலங்கள் (ஜனாஸாக்கள்) தகனம் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, மொத்த தொற்றாளர்களில் 120 முஸ்லிம்கள் எவ்வாறு சாத்தியமாகும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

        உயிரிழந்தவர்கள் அனைவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள்

        வீட்டுக்குள்ளேயே இருந்தவர்கள். இவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியிருக்கும்’ எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

        கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்துரைத்துள்ள அவர், ‘சளி பழசானால் கொரோனா தொற்று

        ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிப்பவர்களே, அவற்றைப் புரிந்துக்கொள்ள முடியாத மக்களே, ஜனாஸாக்களைத் தகனம் செய்யுமாறு கூக்குரலிடுகின்றனர்’ என்றார்.

        கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமென சகல நிபுணர்களும் தெரிவிக்கும் போது

        , அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர்,

        மக்களைப் பீதிக்குள்ளாக்கி, மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. எமது மக்கள் இறப்பதற்குப் பயமில்லை. ஆனால் எரிப்பதற்ப் பயப்படுகின்றனர் என்றார்.

        உலகம் பூராவுமுள்ள 194 நாடுகள், சடலங்களை அடக்கம் செய்யும் போது, இலங்கை மாத்திரம் எந்த அறிவியலை அடிப்படையாக வைத்து, தகனம் செய்கிறதென கேள்வி எழுப்பிய அவர், முழு

        உலகமே ஏற்றுக்கொண்ட வைத்தியர்கள் கூறுவதைக் கேளுங்கள்; அங்கே இங்கே பணத்தைக் கொடுத்து சித்தியடைந்தவர்களையும் இந்த விடயத்துடன் சம்பந்தமே இல்லாத, தகுதியற்றவர்ளையும்

        குழுக்களில் இணைத்து, அவர்களின் முடிவுகளைப் பெற வேண்டாமென ஜனாதிபதியிடம் அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார்