Tag: இன்றைய முக்கிய இலங்கை செய்திகள்
ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செலியூட்” அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே “செலியூட்” அடிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அர்ப்பணிப்புகளை முன்னெடுப்பேன் என தெரிவித்த பொன்சேகா,
தான் நாட்டை நேசிக்கும் நபர் எனவும் குறிப்பிட்டார்.
பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்
பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்
இலங்கை திருகோணமலை சர்தாபுர வீதியில் பிறந்த இரண்டு நாளேயான சிசு ஒன்று மக்களினால் மீட்க பட்டுள்ளது .
சிசுவை பெற்ற தயார் வீதியில் வீசிவிட்டு ஓடியுள்ளார் .
இவ்வாறு வீதியில் மீட்க பட்ட சிசு ,
சிறார் நலக் காப்பகத்திடம் ஒப்படைக்க பட்டுள்ளது .
குறித்த சிசுவின் தயை தேடி போலீசார் தேடுதலை நடத்தி வருகின்றனர் .
இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கையின் OPEX ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநரும்,
செல்வந்த தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவின்,
ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தனது குடும்பத்தினர் சகிதம் ஜகார்த்தாவில் சுற்றுலா
சென்றவேளை இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
45 வயதான தொழிலதிபரே இவ்வாறு பலியாகியுள்ளார் .
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இது ஒருதிட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்
ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை புத்தளம் பகுதியில் ஆறு
ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவரை இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் ,
அவ்வாறான நபரே இவ்வாறு நீரில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார் .
இவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் ,
என சந்தேகிக்க படுகிறது .
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
இந்தியாவினால் இலங்கைக்கு பேரூந்துகள் வழங்கி வைப்பு
இந்தியாவினால் இலங்கைக்கு பேரூந்துகள் வழங்கி வைப்பு
இந்தியாவினால் இலங்கைக்கு 500 பேரூந்துகள் .
அவ்விதமே மேற்கொள்ளல் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டாவது பேரூந்து தொகுதி இலங்கைக்கு வழங்க பட்டுள்ளது .
இந்த பேருந்துகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பெற்று கொண்டு ,பேருந்துகளை பார்வை இட்டார் .
பொது போக்குவரத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இந்த பேரூந்துகள் இலங்கைக்கு பயன் படுத்த பட உள்ளமை குறிப்பிட தக்கது .
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் அழைப்பையேற்று சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர்
நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்ட், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
நீங்கள் தனியாக அல்ல. நீங்கள் இந்த சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின்
சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாக பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு,
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .
770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய தொகையை முழுமையாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு
நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தில் 7790 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தில் 7790 அதிகாரிகளுக்கு பதவி உயர்வுபதவி உயர்வு
இலங்கை நாட்டின் 75 தாவது சுதந்திர தினத்தில் 7,790 இராணுவ கீழ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது ,மேலும் 208 அதிகாரிகளுக்கும் பதவி உயர்த்த பட்டுள்ளனர் .
போர் முடிவடைந்த பின்னர் இலங்கை முப்படைகளை சேர்ந்தவர்களுக்கும் ,பதவி உயர்வு வழங்க பட்ட வண்ணம் உள்ளன .
இலங்கையை விட்டு பசில் ஓடுவர் விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையை விட்டு பசில் ஓடுவர் விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையில் இடம் பெறும் தேர்தல் முடிவுற்றதும் ,அதில் பலத்த தோல்வியை தழுவி ,பசில் ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓடுவார் என விமல் வீசிவன்சா அறிவித்துள்ளார் .
மக்களினால் ஊழல் அரசு என தெரிவித்து ராஜபக்ச ஆட்சியை விரட்டியடித்தனர் .
அவ்வாறான நிலையில் இப்பொழுது இடம்பெறும் தேர்தல் ,
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றுக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாக உருமாற்றம் பெற்றுள்ளது .
அதனை கருத்தில் வைத்தே விமல் வீரவன்சா இவ்வாறு தெரிவித்துள்ளார் .
யாழில் கரிநாள் போராட்டம்
யாழில் கரிநாள் போராட்டம்
யாழ்பாண்டத்தில் இலங்கை சுதந்திர நாளினை ,
கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்
போராட்டம் நடத்தியுள்ளனர் .
இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்திட காவல்துறை முயன்ற பொழுதும் ,மக்கள் அலையாக கிளர்ந்து எழுந்த நிலையில் விலகினர் .
வடக்கு கிழக்கு மற்றும் ஐரோப்பா ரீதியில் இலங்கை ,
சுதந்திர தினத்தை கரிநாளாக மக்கள்
அறிவித்து தமது எதிர்ப்பை காட்டினார்கள்.
பலாலி காணி விடுவிப்பு உள்ளே வீடியோ
பேஸ்புக் விருந்தில் இளம் பெண்கள் கைது
பேஸ்புக் விருந்தில் இளம் பெண்கள் கைது
பாணந்துறை, ஹோரதுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 34 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்களும் உள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சோதனையின் போது சந்தேகநபர்கள் வசம் இருந்த கஞ்சா போதைப்பொருள் மற்றும் மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் குழுவை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களை பெற்றோரை
அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
வாலிபன் கடத்தி வதை செய்து கொலை
வாலிபன் கடத்தி வதை செய்து கொலை
மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 24 வயதுடைய நபர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்ற குழு, அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்த இளைஞனை ஒரு குழுவினர் விசாரணை செய்யவிருப்பதாக கூறி கடத்தியதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி
மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி
பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்றும், இன்னொரு தரப்பினர்,
மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
முடங்கியது யாழ்ப்பாணம்
முடங்கியது யாழ்ப்பாணம்
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும், யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றது.
இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது.
காவல்துறை கடமைகளில் மாற்றம்
காவல்துறை கடமைகளில் மாற்றம்
அவசரக் கடமை தேவையின் நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கடமைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு புகலிடம் தேடி வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 218 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன்; (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இலங்கையில் இருந்து நேற்று (3)
மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு வந்திறங்கி கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.
தகவலறிந்து தனுஷ்கோடி ஒத்தப்படடிக்கு சென்ற தனுஷ்கோடி காவல் நிலைய பொலிஸார் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர்.
அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லை என்ற நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை
அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் சந்தோஷமாக வாழ்வதையும் அவர்களது குழந்தைகள் நன்கு படிக்கும் வீடியோ பார்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு குடும்பத்துடன் புகலிடம் தேடி வந்ததாக தெரிவித்தார்.
மேலும் ஜெய பரமேஸ்வரனின் மனைவி மாலினி தேவிக்கு இருதய நோய் உள்ளதால் இலங்கையில் மருத்துவ செலவு செய்ய இயலாததால் வாழ்ந்தால் தமிழகத்தில்
அகதியாக வாழ்வோம் அல்லது தமிழகம் செல்லும் போது கடலில் விழுந்து இறந்து விடுவோம் என உயிரை பணயம் வைத்து குடும்பத்துடன் தமிழகம் வந்ததாக தெரிவித்தார்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
கஞ்சாத்தோட்டம் அழிப்பு
கஞ்சாத்தோட்டம் அழிப்பு
அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கஞ்சா வெள்ளிக்கிழமை மாலை கட்டுபிடிக்கப்பட்டுள்ளது..
அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன்,
மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

























