Tag: வழக்கு
பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி
பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி
ராஜீவ் கொலை வழக்கில் சிறைப் படுத்த பட்டு தூக்கு தண்டனை கைதியாக காலம் கழித்த பேரறிவாளன் நிரபராதின்னா கோட்சேயும் நிரபராதி என்ற முழக்கம் எழுந்துள்ளது
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதி மன்றத்தின் நீதியுள்ள நீதிபதிகள் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை தற்போது விடுதலை செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பேறிவாளன் விடுதலை தமிழர் தேசம் எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பேரறிவாளன் நிரபராதி என்று தமிழர் தேசம் மகிழ்ச்சியில் குளித்து வருகிறது
ஆனால் அவரது விடுதலையை கொச்சை படுத்தும் நிலையில் தொடர்ந்து அழுக்கேறிய காங்கிரஸ் ,உறுப்பினர்கள் விளங்கி வருகின்றனர்
தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள இந்தியா இலங்கை உளவுத்துறையால் சோடிக்க பட்டு ஈழ தமிழர் பலமிக்க சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகள்
மீதான வன்மத்தை தீர்க்கும் முறைமையில் ஒன்றாக இந்த ராஜீவ் கனதி படு கொலை கையாள பட்டு வந்தது
ராஜீவ் கொலை சந்தேக நபர் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று விளக்கம் அளிக்க படுகிறது .பேரறிவாளன் நிரபராதி என்று முப்பத்தி ஒரு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்ய பட்டார்
ஆனால் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று பதின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் முடித்து விடுதலை பெற்றார்
பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி
ராஜீவ் கொலையில் அப்பாவி தமிழர்களை பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஆட்சியை பறி கொடுத்த தவித்து வரும் காங்கிரஸ் உள்ளது ,
மத்தியில் காங்கிரஸ் ஆளும் பொழுதும் தமிழகத்தை காங்கிரஸ் கட்சியால் முற்று முழுதாக ஆச்சி செய்திட முடியவில்லை
பாரதிய ஜனதா தமிழக கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த பட்டு அந்த கட்சி அரியணையில் இடம்பிடித்துள்ள பொழுதும் ,
அவவிதமான் நகர்வை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை அதற்கு காரணம், தமிழர்கள் மனதில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தாக்குத்தல் பழி வாங்குதல் உச்சம் பெற்றுள்ளதாகும்
,அந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது மத்தியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசி வருவதும் ஆகும்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்ற பேச்சுக்கள் பலம் பெறும் அரசியல பேச்சாக மாறுவதை தடுக்க முடியாது தான்
கீழ் உள்ள ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை என்ற நேர்காணல் செப்புகிறது
- வன்னி மைந்தன் –
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
சூர்யா – ஜோதிகா
நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின்
வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. இருந்தும் படத்திற்கு பல எதிர்ப்புகள்
எழுந்திருந்து. இப்படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன்பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இருவரும், குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை என்று விளக்கமளித்தனர்.
சூர்யா – ஜோதிகா
சூர்யா – ஜோதிகா
இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்
நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த புகாரில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம்,
படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல்,
கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்
14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்த போது நாமல் ராஜபக்ஷ
உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை
கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
பொத்துவில் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு -கோட்டா அரசு கெடுபிடி
பொத்துவில் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு -கோட்டா அரசு கெடுபிடி
இலங்கை வடக்கு பகுதியில் பூர்வீக குடிகளாக வசித்து வரும் தமிழ் மக்கள்
அறவழி போராட்டம் ஒன்றை நடத்தினர் ,மேற்படி போராட்டத்தில்
கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பட்டுள்ளது
இந்த பேரணியில் கலந்து கொண்ட மக்களை சிங்கள இராணுவ
உளவுத்துறையினர் காணொளி பிடித்து சென்ற நிலையில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
இந்த நீதிமன்ற வழக்கை மைய படுத்தி பல தமிழர்கள் கைது
செய்யப் படலாம் என ஏதிர் பார்க்க படுகிறது
முல்லைத் தீவு நீதிமன்றில் இந்த வழக்கு அரச தரப்பால் தொடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்கு
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்கு
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு
விபத்து நிகழ்ந்த பகுதி
சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து
வருகிறது. நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி
இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9
பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா
நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதி
இந்நிலையில், இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ்
நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர்
மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணை இயக்குனர் குமார் என்பவர் கொடுத்த புகாரின்
அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கயவர்களை கொல்லு
இந்த கயவர்களை கொல்லு
பட்டு சேலை விட்டு விடு
பாவம் அவரை வாழ விடு
உடல் ஒட்டு துணியை நீ கலைந்து
உறவு கொள்தல் பிழைதானே …
கட்டி தாலி நீ கட்டி
கண்ணா காமம் விளையாடு …..
கட்டா தாலி நீ பற்றின்
கயவன் உன்னை பந்தாடு ….
விழி முட்டி நீரை அவள் கொட்ட
விழுந்து விழுந்து நீ புசிப்பாய் ….
ஆடையில்லா உடல் ஒன்று
அவமான படுதல் மறந்தாயே ….
கடவுள் உன்னை ஏன் படைத்தான் ..?
கண்ணா கொஞ்சம் புரிந்து விடு …..
கருவறை தாங்கி உன்னை சுமந்தாள்
கண்ணா தாய் தெரிந்து விடு …
மனிதம் தொலைத்து வாழ்பவனே
மனிதம் இன்றேல் செத்து விடு …..
மனிதன் நீ என்றே சொல்லிவிடின்
மனிதரே கூடி இவன் தலை வெட்டு ….!
- வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -21/08/2017 - வன்னி மைந்தன் கவிதைகள்











