Tag: மாணவர்கள்
காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு
காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு
புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்த போது அதிபரால் கண்டிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை
ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே குறித்த மாணவர்கள் இருவரும் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரண்டு மாணவர்களும் காணமல் போனதைப் பற்றி, ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் தந்தையும் நேற்று (19) நள்ளிரவு மாரவில தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு
புகையிலை மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை வைத்திருந்த நிலையில், பிடிப்பட்டதையடுத்து அதுபற்றி பாடசாலை அதிபர் அந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்ததாகவும், அதனையடுத்து அவ்விருவரும்
அழுதுகொண்டிருந்ததாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
மாரவில தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட இரு மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் , அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது
- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி
- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 30 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
by நிருபர் காவலன் - சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
by நிருபர் காவலன் - ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
by நிருபர் காவலன் - 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
by நிருபர் காவலன் - ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
by நிருபர் காவலன்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

.யாழ்ப்பாணம் வலி வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (02) யாழ்.தெல்லிப்பழையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தெல்லிப்பழைச் சந்தியில் முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகிப் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் வரை பேரணி சென்றடைந்தது.
தொடர்ந்து தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் முன்பாக காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றது. இதனால் வீதி போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.
பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீயிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், காணி உரிமையாளர்கள், மத குருமார்கள்,
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக வலி வடக்கில் 3027.85 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது அதில் இராணுவத்தின் பிடியில்-2054.25 ஏக்கர், கடற்படையின்
பிடியில்-274.57ஏக்கர், விமான படையின் பிடியில்-646.50 ஏக்கர், பொலிஸ் பிடியில்-52.53 ஏக்கர் விடுவிக்கப்பட
வேண்டும் என வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்ற குழு குறிப்பிட்டுள்ளது.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
இலங்கை ; அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய, ஆர்ப்பாட்டத்தின் பொழுது ,அந்த மாணவர்களை இலங்கை காவல்துறையினர் தாக்குதலை நடத்தினர் .
எதிரிகளை போன்று மாணவர்களை காவல்துறையினர், சரமாரியாக தாக்கிய காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பெண்கள் ,ஆண்களை தரையில் இழுத்து செல்லும் காட்சிகள் ,இலங்கை காவல்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்து மக்கள் ,கருத்துக்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்கள் ,மீது நடத்திய தாக்குதலை அடுத்து ,
மக்கள் போராட்டம் மீளவு வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்
பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்
பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைவாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது.
அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீ ர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பததில்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரனோ – அச்சத்தில் பெறோர்கள்
பிரான்சில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரனோ – அச்சத்தில் பெறோர்கள்
பிரான்சில் லக்கடவுன் நிறைவு பெற்ற சில இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவ்வாறு அண்மைய நாட்களில் ஒரு லட்சத்து ஐம்பதயிரம் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வருகை தந்தனர் .
இவ்வாறு வருகை தந்தவர்களிடத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் எழுபது மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
இதனால் பெற்றவர்கள் ,மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது ,ஆனால் அரசோ மாணவர்களை தொடர்ந்து கல்வி
நிறுவனகளுக்கு அனுப்பிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது
மன விரக்தியில் உள்ள பெற்றோர்கள் சிலர் இணைந்து இது தொடர்பான
சட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு ஆலோசித்து வருவதான கருத்துக்கள் கசிகின்றன .

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்
இந்தியாவில் தவித்து கொண்டிருந்த 101 இலங்கை மாணவர்களை ,சிறப்பு
விமான மூலம் இலங்கை அரசு அழைத்து வந்தது .அவ்வாறு வந்தடைந்தவர்கள்
21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .சிறப்பு தனிமை படுத்தல்
முகாமில் இவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
என இராணுவம் அறிவித்துள்ளது

பாடசாலைக்குள் புகுந்து 24 மாணவர்களை கடத்தீய ஆயுத குழு
பாடசாலைக்குள் புகுந்து 24 மாணவர்களை கடத்தீய ஆயுத குழு
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அவர்கள் நாட்டின் வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தை தனி நாடாக்க ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆங்கில மொழி பேசக்கூடிய மெமே பிராந்தியத்தில், கும்பா நகரில் உள்ள பள்ளிக்குள் நேற்று முன்தினம் பிரிவினைவாதிகள் நுழைந்தனர். அவர்கள்
அங்கிருந்து 24 குழந்தைகளை கடத்திச்சென்று விட்டனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த வேதனைக்குள்ளாயினர். குழந்தைகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற குரல் தீவிரமாக ஒலித்தது.
அதைத் தொடர்ந்து குழந்தைகளை பிரிவினைவாதிகள் கடத்திச் சென்று வைத்திருந்த காட்டுக்குள் இராணுவம் அதிரடியாக நுழைந்தது.
அப்போது குழந்தைகளை விடுவிக்க மறுத்த பிரிவினைவாதிகள், இராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். உடனே இராணுவம் சரியான பதிலடி
கொடுத்தது. இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. முடிவில் 2 பிரிவினைவாதிகள்
கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து 24 குழந்தைகளையும் இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.பாடசாலைக்குள் புகுந்து
பாட சாலைக்கு கணனி கையளிப்பு..
இலங்கையில் – பாடசாலைக்கு கணனி கையளிப்பு..
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கெட்டபுலா இலக்கம் 02 தமிழ் வித்தியாலய பாட சாலைக்கு கணனிகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .
முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் தோட்ட பொது மக்கள் உட்பட கட்சியின் உயர் அங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.

















