Tag: மரணம்
அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்
அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மற்றும் இராயங்க செயலராக விளங்கிய கொலின் பவூல் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தனது 84 வது வயதில் மணமாகியுள்ளார்
கறுப்பின மக்களின் முதலாவது அதி உயர் அதிகாரியாக இவர் அமெரிக்கா வரலாற்றில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்
இவர் கடும் போக்கு நிலையை கொண்டவர் என்பதும் ,புலிகள் தொடர்பில் அதே நிலையை கட்டிபிடித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இராணுவ சார்ஜன்ட் திடீர் மரணம்
இராணுவ சார்ஜன்ட் திடீர் மரணம்
பயிற்சிக்காக வருகைத் தந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், வெல்லவாய இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) மாலை அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 53ஆவது படையணியின் 6ஆவது பாபல ரெஜிமென்ட்டின் மிஹிந்தலை முகாமில் கடமையாற்றிய 49 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, 2 மாதங்களுக்கு முன்னர், தமிழ் மொழி மூலப் பயிற்சிக்காக வெல்லவாய- வருணகம இராணுவ முகாமுக்கு வருகைத் தந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (16) இரவு நித்திரைக்குச் சென்ற மேஜர், நேற்று மாலை வரை அறையிலிருந்து வெளியே வராமையால், அவர் தங்கியிருந்த அறை திறந்து பார்க்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்டிலுக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் இடம்பெறும் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்
இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் இருபத்தி மூன்று பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பலர் பாதிக்க பட்டுள்ளனர்
நோயினை கட்டு படுத்த பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் இந்த மரணங்களை தடுக்க முடியாது சிங்கள அரசு தினறி வருகிறது
சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் -சிறுமி மரணம்
சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் -சிறுமி மரணம்
பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (8) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
அங்கு தங்கியிருந்த குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது ஆறு வயதுடைய சியாம் செய்னப் எனும் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கி மரணமான சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் கொரோனா மரணம் அதிகரிப்பு
வவுனியாவில் கொரோனா மரணம் அதிகரிப்பு
நாட்டில் ஏற்படும் கொரோனா மரண வீதத்தில், வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில், இம்மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 2,222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில், கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. நாட்டில் ஏற்படும் கொரோனா மரண வீதத்தில், வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுகின்றது.
வவுனியாவில் மக்களின் அசமந்தமாகச் செயற்பாடுவதால் கொரோனா தொற்றாளரிகளின் மரணத் தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது. எனினும், மக்கள் இதன் பாரதூரமான
தன்மையை உணரவில்லை. இது பாரிய ஆபத்தான நிலைப்பாடாக உள்ளது என, சுகாதார தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே வவுனியா மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் சிந்தித்து சுகாதார நடைமுறைகளை இறுகப் பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 3,328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இதயம் வெடித்து வாலிபன் மரணம்
யாழில் இதயம் வெடித்து வாலிபன் மரணம்
யாழ். கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் இடம்பெற்ற விபத்தில், இதயம் வெடித்தே இளைஞன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் நேற்று (17) முடிவாகியுள்ளது.
சாவகச்சேரி நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட பணிப்பிற்கு அமைய யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை நிபுணர் ஜே. மதராஜ் மேற்கொண்ட பரிசோதனையில் அடிப்படையில் குறித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தினாலேயே இதயம் வெடித்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவருடைய இறுதி நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக தமது பிள்ளையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கொரனோவால் 38 பேர் மரணம்
கிளிநொச்சியில் கொரனோவால் 38 பேர் மரணம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் 38 இறந்துள்ளதுடன். 4885 தொற்றாளர்களில் 2374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதெடார்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,கிளிநொச்சி
மாவட்டத்தில் 4885 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2374 பேர் வீடுகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றுக்கு உள்ளாகிய 3691 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் இதுவரை கோவிட் தொற்றால் 38 பேர் இறந்துள்ளனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய சதொச கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சீனி நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.39500 கிலோ கிராம் சீனி எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
கொரோனாவுக்கு நேற்றைய தினம் 192 பேர் மரணம்
கொரோனாவுக்கு நேற்றைய தினம் 192 பேர் மரணம்
இலங்கையில் நேற்றைய (28) தினம் மேலும் 192 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் வெள்ளம் – 36 பேர் மரணம்
பெல்ஜியம் நாட்டில் வெள்ளம் – 36 பேர் மரணம்
பெல்ஜியம் நாட்டில் இடம் பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி முப்பத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
,மேலும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர் ,,பத்து லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
வீடுகள் பலநூறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இலங்கையில் கொரனோவுக்கு 46 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவுக்கு 46 பேர் மரணம்
இலங்கையில் நேற்றைய (17) தினம் மேலும் 46 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்
திணைக்களம் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மரணம் – நடந்தது என்ன ..?
சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மரணம் – நடந்தது என்ன ..?
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில்
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.
அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகுமார் கஜேன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக
தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நாற்பது பேர் மரணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் நாட்டில் அதிகரித்து செல்லும் நோயினை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள
பட்ட பொழுதும் ,மேற்படி மரணங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் கொரானாவுக்கு 32 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 32 பேர் மரணம்
இலங்கையில் நேற்றைய (04) தினம் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32.
சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்
திணைக்களம் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்
நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்
இலங்கை அம்பலந்தொட திலகபுர ஜலடெங்கிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணித்துள்ளார்
இவருக்கு கொரானா நோயானது ஏற்பட்டுள்ளதும் எனவும் அதானல் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் 60 வயதானவர்கள் அதிக மரணம்
இலங்கையில் 60 வயதானவர்கள் அதிக மரணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரில் நூற்றுக்கு 70 சதவீதமானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள்
எனவும், உயிரிழப்போரில் எஞ்சிய 25 சதவீதமானோர், ஏனைய நோய்களைக்கொண்டவர்களெனவும் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் 60 வயதைக் கடந்தவர்கள், பல்வேறு நோய்களைக் கொண்டவர்களும்
அதிகளவில் உயிரிழந்தள்ளமை தொடர்பில் விசேட கவனஞ் செலுத்த வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிறந்த குழந்தை கொரனோவால் மரணம்
பிறந்த குழந்தை கொரனோவால் மரணம்
இலங்கை கம்பளை பகுதியில் பிறந்து 8 நாட்களான குழந்தை ஒன்று கொரனோ நோயினால் சிக்கி பலியாகியுள்ளார்
இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில் நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்
இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் ஒரே நாளில் ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,844 பேர் பலியாகியுள்ளனர் ,நோயினை கட்டு படுத்த
முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்
காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்
இலங்கையில் சிங்கள காவல்துறையால் தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற
சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டு அழைத்து செல்ல பட்டார்
அவ்வேளை அவர் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்துள்ளார் ,அதில் அவர்
மரணமாகியுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்
கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி முல்லைத்தீவில் ஒருவர்
பலியாகியுள்ளார் .பலியானவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1656 பேர் பலியாகியுள்ளனர்
கொரனோ தாக்குதலில் சிக்கி 28 பேர் மரணம்
கொரனோ தாக்குதலில் சிக்கி 28 பேர் மரணம்
இலக்கையில் வேகமாக பரவி வருமாம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 28 பேர்
மரணமாகியுள்ளனர் .இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,269 ஆக அதிகரித்துள்ளது
அரசு கூறும் இந்த உயிரிழப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் கருத்துக்களை பகிர்ந்து
வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது







