Tag: மன்னிப்பு
கத்தார் பிரதமரிடம் நெதன்யாகு மன்னிப்பு
கத்தார் பிரதமரிடம் நெதன்யாகு மன்னிப்பு
கத்தார் பிரதமரிடம் நெதன்யாகு மன்னிப்பு ,தோஹா மீதான ஆக்கிரமிப்புக்கு கத்தார் பிரதமரிடம் நெதன்யாகு மன்னிப்பு கேட்டார்.
இஸ்ரேல் ஆட்சி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
– அரபு நாட்டின் மண்ணில் சமீபத்தில் நடந்த ஆக்கிரமிப்புக்கு கத்தார் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆட்சி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் தலைநகரில் ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி
உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, கத்தார் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு இராஜதந்திர வட்டாரம் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு உலகளவில் கண்டனங்களை ஈர்த்தது.
திங்கள்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் ஆட்சியின் பிரதமரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு முன்பு, காசாவிற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் சில நாட்களில் சாத்தியமாகும் என்று டிரம்ப் கூறினார்.
காசா நகரில் நடவடிக்கை
இதற்கிடையில், காசா நகரில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 இஸ்ரேலிய வீரர்களை காசா எதிர்ப்புப் படைகள் கொன்றதாகவோ அல்லது
காயப்படுத்தியதாகவோ இஸ்ரேல் ஆட்சி ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன.
செப்டம்பர் 9 ஆம் தேதி, இஸ்ரேல் ஆட்சி தோஹாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, அதில் ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரை
குறிவைத்தது. இலக்கு ஹமாஸ் தலைமை என்றாலும், அவர்கள் உயிர் பிழைத்தனர்.
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிப்பதாக, ஶ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸகுட்டி ஆரச்சி இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு
10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு
திஸகுட்டி ஆரச்சி
வந்தபோது, திஸகுட்டி ஆரச்சி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்தனர்.
மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை ,யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு
பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை வியாழக்கிழமை (20) விதித்துள்ளது.
குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவிற்கு மார்ச் 2020 இல் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக
தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர், 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு
சென்றனர்.இவர்களில் பதின்மவயதினரும்,ஐந்து வயது சிறுவனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர்.
ஒரு இளைஞன் அவர்களின் பிடியிலிருந்து தப்பினான்.எனினும் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அருகில் உள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மீட்கப்பட்டன
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா,இலங்கை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த விடயமே இப்பொழுது சர்ச்சையாக வெடித்துள்ளது .
அது தொடர்பான முழுமையான விபரம் காணொளியில் உள்ளது பார்க்க .
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள் ,வன்னிமைந்தன் அர்ச்சுனா மோதல் முற்று பெற்றது .
காணொளியில் விபரம்
சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ,அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக்
கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கேகாலையில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ரணிலால் இயலும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதிக்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து, மக்கள் வாழக்கூடிய நாட்டை தானே உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மக்களின் எதிர்காலத்தை ஒன்று வழங்குமாறு கோரும் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பம் இதுவல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அன்று மக்கள் கஷ்டப்பட்ட போது இவர்களில் யாரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி மக்கள் படும் துன்பத்தையும், மாணவர்களை பாடசாலை அனுப்ப முடியாமல் தவித்ததையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் வந்து நீலிக் கண்ணீர் வடித்தாலும் அன்று ஒளிந்து கொண்டனர். நாடு கஷ்டத்தில் இருக்கும் போது மக்களை கைவிட்ட சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் அளித்து வாழ்வதற்கான நம்பிக்கையை நான் ஏற்படுத்தினேன். இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை படிப்படியாக குறைத்து வருகிறோம்.
அதற்காக கடந்த தடவை நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினோம். உர நிவாரணம் வழங்கப்பட்டது.
ஓய்வூதியம் மற்றும் முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. ஒரு பக்கம் பொருட்களின் விலையைக் குறைக்கும் அதேவேளை, மறுபுறம் பணத்தைக் கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் பணியை செய்து வருகிறோம்.
அடுத்த ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை குறையும். நான் மேடையில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் நபரல்ல. பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் அதனை மக்களுக்கு அறிவிக்கிறேன்.
எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் யாருக்காவது கொடுப்பதா அல்லது நிரந்தர எதிர்காலத்திற்கு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று திசைகாட்டி கோருகிறது. அவர்களின் பட்ஜெட் ஊடாக அனைத்து IMF நிபந்தனைகளும் மீறப்படுகிறது.
நிபந்தனைகளை உடைத்து, IMF ஆதரவை இழந்த பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையும். அதேபோல், பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று நான் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
அவர்களிடம் திட்டம் எதுவும் இல்லாததால் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. திட்டுவதை மட்டுமே செய்கின்றனர். ஆனால் மக்களின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும்.
எனவே மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தாமல் உண்மையைப் பேசுமாறு சஜித்திடமும்அநுரவிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காட்டியுள்ளோம். அந்த பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டை வெற்றிபெற செய்ய அனைவரும் செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்
அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்
அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும் ,வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் சங்கிலியன் பூங்காவில் இன்று நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்காவெற்றிப் பேரணியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
விவசாயத் துறையைப் பலப்படுத்தி வரும் நிலையில், வடக்கில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்கவிருப்பதுடன் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:
”ஜனாதிபதித் தேர்தலை ந டத்த முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நம்பியிருக்கவில்லை.
அனைத்திற்கும் வரிசை இருந்தது. நாட்டில் ஸ்தீரத்தன்மையை பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தியுள்ளேன்.
அந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடியதாக உள்ளது. இயலும் ஶ்ரீலங்கா எண்ணக் கருவை முன்னெடுத்து வருகிறேன்.
சஜித்தும் அநுரவும் பொறுப்புக்களை ஏற்க முன்வரவில்லை. அவர்கள் இருந்தால் தேர்தலை நடத்தியிருக்க முடியுமா? கூட்டங்களில் பேச முன்னர் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இன்னும் பிரச்சினைகளும், சிரமங்களும் உள்ளன. ஆனால் எதிர்பார்ப்பு பற்றிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பைப் பாதூக்ககவே நான் போட்டியிடுகிறேன்.
கடந்த காலத்தில் எமது கடன் சுமை அதிகரித்திருந்தது. கடன் பெறுவதை நிறுத்தினோம். கடன் பெறுவதை நிறுத்தியதால் வரிகளை அதிகரிக்க நேரிட்டது. பண வீக்கம் அதிகரித்திருந்தது. இருவேளை சாப்பிடுவது கூட கஷ்டமாக இருந்தது.
தற்பொழுது பொருளாதரம் பலமடைந்துள்ளது. அஸ்வெசும திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேருக்கு வழங்கி இருக்கிறோம்.
இன்னும் 5 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கப்பட வேண்டும். சம்பள உயர்வு வழங்கியுள்ளதோடு ஓய்வூதியங்களையும் அதிகரித்துள்ளோம்.
பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாலே அவற்றை செய்ய முடிந்தது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. மேலும், நிவாரணங்கள் வழங்க வேண்டும்.
பொருட்களின் விலைகள் குறைவடைந்து வருகிறன. வாழ்க்கைச் செலவு இன்னும் அதிகமாக இருக்கிறது.
அதனால் ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும். ரூபாவின் பெறுமதி வலுவடையும் போது இன்னும் சலுகைகளை வழங்கலாம்.
அடுத்த வருடம் மேலும் சலுகைகள் வழங்குவேன். வரியை குறைத்து, சலுகைகள் வழங்க முடியாது. 2019 இல் கோட்டாபய வரியை குறைத்தார்.
நாட்டின் வருமானம் குறைந்தது. 2022 இல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பெண்களுக்காக தனியான விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்துள்ளேன்.
அவர்களை வலுவூட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மக்களுக்கும் உறுமய காணி உறுதி பெற்றுக் கொடுக்கப்படும். அடுத்த வருடம் மேலும் வாழ்க்கைச் செலவை குறைப்போம்.
உற்பத்தி அதிகரிக்கும் போது அனைவரிடமும் வரி அறவிடப்படும். அத்தோடு தற்பொழுது வரி செலுத்துவோரின் வரிச்சுமை குறையும்.
விவசாயத் துறையைப் பலப்படுத்தி வருகிறோம். வடக்கு விவசாயத்திற்கு முக்கியமானது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.
வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்க இருக்கிறோம். இப்பிரதேசத்தில் சுற்றுலாதுறையை ஊக்குவிக்கிறோம்.
டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். இவற்றை அரசினால் தனியாக மேற்கொள்ள முடியாது.
9 மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்காக மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.
வடக்கு மக்களை அநுரகுமார அச்சுறுத்துகிறார். மாற்றத்திற்காக தெற்கு மக்கள் தயாராகியிருக்கையில் அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வாறான மனநிலை தெற்கில் ஏற்படும் என்கிறார்.
அவரது வெற்றியின் பங்காளர்களாக வர வேண்டும் என்கிறார். தனக்கு வாக்களிக்காவிட்டால் பார்த்துக் கொள்வோம் என அநுர எச்சரித்தார். அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
2010 ஜனாதிபதித் தேர்தலின் போது இங்கு வந்து பொன்சேக்காவுக்கு வாக்களிக்க கோரினோம். வடக்கு மக்கள் பொன்சேக்காவுக்கு வாக்களித்தனர். தெற்கு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ வென்றார்.உங்களை யாராவது தாக்கினார்களா. 2015 இல் மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களிக்கக் கோரினோம்.
தென் பகுதி மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தனர். நாம் வென்றோம். ஏதாவது நடந்ததா. 2019 இல் வடக்கு மக்கள் சஜித்திற்கு வாக்களித்தார்கள்.
தெற்கில் கோட்டாவுக்கு வாக்களித்தார்கள். கோட்டாபய இராணுவத்தை அழைத்து வந்தாரா. தேர்தல் முடிவுகளை மக்கள் அங்கீகரித்தனர். அநுர எப்படி மக்களை அச்சுறுத்த முடியும்.
வடக்கு மக்களை மட்டுமன்றி தெற்கு மக்களையும் அவர் அச்சுறுத்துகிறார். அது தான் அவர்களின் போக்கு.
அநுர வெற்றி பெற மாட்டார். முன்பு துண்டுப் பிரசுரம் பகிர்ந்தார். வடக்கு மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.
தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதற்காக தென்பகுதி மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.
பின்னர் அவருக்கு எதிர்க்கட்சிக்கு வரலாம். அவருக்கு யாழ்ப்பாணத்திற்கு வர முடியாது போகும்.
நாம் முன்னர் அவர்களுக்கு அஞ்சவும் இல்லை. இப்பொழுது அஞ்சவுமில்லை. சஜித் பற்றி பேசி பயனில்லை.
எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை அவர் செய்திருந்தால் அநுர முன்னேறி வந்திருக்க மாட்டார்.
அவருக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றதாகும். எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
லண்டனில் இஸ்ரேலிய யூதரிடம் மன்னிப்பு கேட்ட லண்டன் பொலிஸ் செயல்பாடு, சர்சையையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுளளது .
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன மக்கள் ,காசா மீது இஸ்ரேல் நடத்தும் இனபடுகளையை தடுத்த நிறுத்த கோரி மிக பெரும் போராட்டம் நடத்தினர் .
இதன் பொழுது அங்கு வருகை தந்த இஸ்ரேலிய யூதர் எனப்படும் நபர் ,அந்த கூட்டம் இடம் பெறும் பகுதிக்குள் நுழைந்து, இனங்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரிக்க முனைந்தார் என போலீசாரால் கூற பட்டதாம் .
லண்டன் பொலிசுக்கு சாவல் விட்ட யூதர்கள்
ஆனால் அதுவே மிரட்டல் என தெரிவித்து ,லண்டன் பொலிஸாருக்கு எதிராக அந்த நபர் கருத்தை வெளியிட்டார் .
இதனை அடுத்து தற்போது லண்டன் காவல்துறையினர் ,அந்த யூத மகனிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் .
மேலும் அவரிடம் நேரடியாக தனிப்பட்ட முறையிலும் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
லண்டன் வாழ் யூத மக்களுக்கு பாதுகாப்பும் உத்தரவாதம் வழங்க வேண்டியது தமது கடமை எனவும் ,லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் .
ஆதிக்கம் நிறைந்த இஸ்ரேலியர்கள் அரசாட்சி
உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் யூதர்கள் ,இன்று உலக நாடுகளின் ஆட்சியையும் ,அதிகாரங்களையும் அடக்கி ஆளும் ,வல்லமை பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர் .
அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மீது மேற்கொள்ளும் தொடர் படுகொலைகள் மற்றும் ,அடக்குமுறை அத்து மீறல்களை கண்டு கொள்ளாது உள்ளது .
இது பல பாதிக்கப்பட்ட இன மக்கள் என்று உலகில் ,உலகை ஆட்கொள்ளும் செல்வந்தர்களாக மாறுகின்றனரோ, அன்றுதான் அவர்களினால் ,தமது இழந்த அதிகாரத்தை நிலை நாட்ட முடியும் என்பதை ,இந்த நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன.
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
வரனே அவஷ்யமுண்டு என்ற மலையாள படத்தில் பிரபாகரன் பெயரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்ததையடுத்து தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர்
சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து
அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: வரனே அவஷ்யமுண்டு படத்தில் வரும்
பிரபாகரன் காமெடி காட்சி தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
உண்மையில் அது எந்தவித உள்நோக்கத்துடனும் வைக்கப்பட்டது அல்ல. பழைய மலையாள திரைப்படமான பட்டண பிரவேசம்
படத்தில் வரும் நகைச்சுவை காட்சி அது, மேலும் அது கேரளாவில் பயன்படுத்தப்படும் பொதுவான மீம் .
பிரபாகரன் என்பது கேரளாவில் ஒரு பொதுவான பெயர். எனவே, படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அது யார் மனதையும் துன்புறுத்துவதற்காக அல்ல. இதனை எதிர்க்கும் பலரும் படத்தைப்
பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, என்னுடைய இயக்குனர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக்
கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.
இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும்
காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல். உங்களில் சிலர் எங்களை மட்டுமல்லாமல் எங்களது குடும்பத்தையும் சேர்த்து வன்மத்துடன் திட்டி, மிரட்டி,
அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். இவ்வாறு துல்கர் சல்மான் கூறியுள்ளார்.



























