சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி
Posted in உலக செய்திகள்

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி ,சற்றுமுன் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் சமூகத்தில் பலியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூட்டு சம்பவானது சுவிடன் தலைநகர் பகுதியில் இடம்பெற்று இருக்கிறது .

துப்பாக்கி சூட்டை நடத்திய துப்பாக்கி தாரி தற்பொழுதுமோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிக்கொண்டே இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு ஒரு மிகப்பெரும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது அந்த நிகழ்வு கூட்டத்துக்கு நுழைந்த ஆயுததாரி திடீரென மக்களை நோக்கி துப்பாக்கியால் சூட்டை நடத்தியுள்ளார் .

துப்பாக்கியால் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார் .

அவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் உளவுத்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

சற்று முன்னர் சுவிடனில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என சுவிடனில் நாட்டு காவல் துறையினர் உளவுத்துறை அறிவித்து வருகின்றனர்.

இறந்தவர்கள் சுவர் என் நாட்டவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் என்பது தொடர்பாகவும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமான செய்திகள் வெளியாகும் வரை தெரிய வரவில்லை.

இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் என்பது உலக செய்திகளின் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றுள்ளது ..

இச்செயல் ஈரானுக்கு இடையில் அதி உசார் போர் மேகம் நிலையில் தற்போது சுவீடன் இலக்கு வைத்து தாக்க பாடுவதாக மக்கள் இப்படி ஒரு கருத்தை முன் வைத்து வருகின்றனர் ..

இந்த சூட்டு தாக்குதலை நடத்திய ஆயுத தாரி கைது செய்ய பட்டால் மட்டும் தான் இதன் சூத்திர மூலம் தெரிய வரும் என நம்ப படுகிறது .

உலக யுத்தம் மிக விரைவில் வெடிக்கும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

ஓடி கொண்டிருக்கும் ஆயுத தாரி கைது செய்யப்பட்டால் இந்த தாக்குதலின் பின்புலத்தில் உள்ள நாடு எது என தெரியவரும் என பேச படுகிறது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ,கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று (10) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே

நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு இன்று மாலை 7 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் செல்வது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 43 வயது நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை சேர்ந்த கெனிஸ்டன் நேட்டோ என்ற நபர் ஆவார்.

பழனி ஷிரான் குளோரியன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கும்பல் இதனைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்தவர் புகுடு கண்ணா என அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின்

சீடராவார் எனவும், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நபர் மீது துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

நபர் மீது துப்பாக்கிச் சூடு

நபர் மீது துப்பாக்கிச் சூடு

நபர் மீது துப்பாக்கிச் சூடு ,கல்கிஸை, சிறிபால மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மற்ற சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மன்னார் துப்பாக்கிச் சூடு

மன்னார் துப்பாக்கிச் சூடு

மன்னார் துப்பாக்கிச் சூடு ,மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும்

அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

‘மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு காணப்பட்டது.

முதல் சம்பவத்தில் 2022 ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

video

இறுதியாக வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் முதலாவதாக இடம் பெற்ற இருவரின் மரணம் தொடர்பில் சந்தேக நபர்களாவர்.

எவ்வாறாக இருந்தாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். குறித்த சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார்.

அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளோம்’ என தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு வீட்டின் மீது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு வீட்டின் மீது

துப்பாக்கி சூடு வீட்டின் மீது

துப்பாக்கி சூடு வீட்டின் மீது,களுத்துறை – தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு ஹோமாகம பனாகொட பெலடகொட பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றின் மீது புதன்கிழமை (18) காலை பல

துப்பாக்கிச் சூட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வியாபாரியின் வழிகாட்டலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என

சந்தேகிக்கப்படுவதாக மெகொட பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த ஆண் ஒருவர் மீதும் அவரது மகளும் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு .கல்கிஸ்ஸ-படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கல்கிஸ்ஸ – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என்பதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை,இலங்கை காவல்துறையினர் வீதி போக்குவரத்தில் திடீரென ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது துப்பாக்கி இயங்கியதால் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக்குடு நோக்கி பயணித்த காரை கொட்டுகட போலீஸ் உதவி சாவடி பகுதியில் சோதனைக்கு உட்படுத்திய பொழுது காரில் இருந்த நபர்கள் போலீஸ் உத்தியோதரை துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது துப்பாக்கி இயங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டுள்ள பொழுது ,அவ்வேளை அந்த சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரின் துப்பாக்கினை காரில் வந்தவர்கள்பறிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுப்புப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு அடிப்படையில் ஏதாவது சொல்லி அவரிடம் லஞ்சம் பெற முற்பட்டிருக்கலாமோ, இதை பொய்யான சோதனையை செய்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போலீசார் வீதிகள் கஞ்சா போதைகளை வைத்துவிட்டு அதில் வந்தவர்களை கடத்திச் செல்வதான சம்பவங்கள் அண்மையில் வீடியோ ஆழமாக வெளியிடப்பட்டிருந்தது.

அதை போன்று இந்த கார் தப்பியதாகவும் தவறாக மிரட்டி சுட்டுவிட்டு தவறாக இயங்கியதாக போலீசார் இப்படி தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை காக்க வேண்டிய இலங்கை சிவில் நிர்வாகங்களில் பல தவறுகள் இடம் பெறுவதையும் அதனுடைய சட்ட நுணுக்க ஓட்டைகள் ஊடாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் இவ்வாறு தெரிவிக்கின்ற பொழுதும் பாதிக்கப்பட்ட தலைப்பில் இதற்கு தீர்வான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, மக்கள் தற்பொழுது கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கி சூடு இடம்பெறும் நேரடி காட்சி .

மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதல் ,.காதில் வெடியுடன் தப்பித்த டிரம்ப் .

வீடியோ

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்

காஷ்மீரில் துப்பாக்கி சூட்டு தாக்குதல்

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ,காஷ்மீரில் ஆயுதக் குழுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பலியாகியுள்ளனர் .

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பக்த கோடிகளை இலக்கு வைத்து ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர் .

துப்பாக்கி சூட்டு தாக்குதல்

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 10 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 24 மணி இடைவெளியில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

இது இந்தியாவின் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட முதல் காடு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது .

அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறப்புப் படைகள் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

விசேட கண்காணிப்பு

தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் ,விசேட கண்காணிப்பு படலங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்கும் காஷ்மீருக்கு இடையில் ,கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .

இஸ்லாமிய அமைப்புகள் ,தமது தாயக விடுதலை கோரி ,காஷ்மீரில் போராடி வருகின்றனர் .

அந்த அமைப்புகளையும் மக்களையும் ,இந்திய இராணுவம் நசுக்கி அடக்கி ஒடுக்கி வருகின்றமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு ,அஹுங்கல்ல மரதான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவ மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்தனர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயிற்றை துளைத்து பாய்ந்த குண்டு

வயற்றுப்பகுதியில் தோட்டாக்கள் தாக்கியதாகவும்,அதானல் ஏற்பட்ட இரத்த போக்கு காரணமாகவே ,குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டு காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

குறித்த நபரை சுட்டு கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்திடும் நடவடிக்கையில் ,காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்விதமான துப்பாக்கி சூட்டு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .

ஆனால் இந்த கொலைகளின் சூத்தரதரிகள் இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முட்டியாது திணறி வருகின்றனர் .

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் நேற்று (06) இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மாவனெல்லை பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதன்படி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, ​​மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், பின்னர் குறித்த நபர் அந்த பொலிஸ் அதிகாரியையும் தாக்க முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை இலக்காகி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in உலக செய்திகள்

லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

லண்டனில் கிளாபம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் பெற்ற வண்ணம் உள்ளனர் .

துப்பாக்கி சூடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டது .

எனினும் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .

துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்

துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்

நேற்றிரவு (13) மோதரையில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.

உணவகத்திற்கு முன்பாக காத்திருந்த நபர் ஒருவரை காரில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் வலது தோள்பட்டை, கழுத்து மற்றும் கால் ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய கொழும்பு 14 ஐ சேர்ந்த 51 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி

துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி


மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

நேற்று (20) இரவு 08 மணி அளவில் மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி

குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான் அனுருத்த புத்ததாச, அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, கட்டுகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

vdeo

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு நபர் மரணம்

துப்பாக்கி சூடு நபர் மரணம்

தெல்வத்த, மீட்டியகொட பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

துப்பாக்கி சூடு நபர் மரணம்

அப்போது, ​​வீட்டில் பதுங்கியிருந்த சந்தேக நபர் துப்பாக்கியால் சிறப்பு அதிரடிப்படையினரை நோக்கி சுட்டுள்ளார்.

தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் போது சந்தேக நபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர், அண்மையில் காலி, கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று இன்று (20) அதிகாலை அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்ற போது, குறித்த சந்தேகநபர் ​​டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

இதன்போது, விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ள நிலையில், காயமடைந்த சந்தேக நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடையவர் எனவும், அவர் குற்றவியல் கும்பலைச் சேர்ந்த முக்கிய துப்பாக்கிதாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு |

இலங்கை செய்திகள் |கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்