Tag: சாவகச்சேரி
சாவகச்சேரியில் கோரவிபத்து இளைஞர் பலி
சாவகச்சேரியில் கோரவிபத்து இளைஞர் பலி
சாவகச்சேரியில் கோரவிபத்து இளைஞர் பலி யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி – நுணாவில் ஏ – 9 வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரை
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது
எதிர்த் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதனால் மேற்படி இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த திலகீஸ்வரன் யதுஸ் (வயது 20) என்ற இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை ,சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.
இன்று (13) பிற்பகல், உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு நிகழ்வில் இந்த முடிவு எட்டப்பட்டது.
தவிசாளர் பதவிக்கு, தமிழரசு கட்சி சார்பில் அ. கயிலாயபிள்ளை மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் வ. சிறிபிரகாஸ் முன்மொழியப்பட்டனர்.
பகிரங்க வாக்கெடுப்பில், தமிழரசு கட்சியின் வேட்பாளர் அ. கயிலாயபிள்ளை, தமிழரசு மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ஆதரவுடன் 7 வாக்குகளைப் பெற்றார்.
அதேபோல், தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் வ. சிறிபிரகாஸும் 7 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச்
சீட்டு முறைமையின் மூலம் தவிசாளராக வ. சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர் தேர்வில், தமிழரசு சார்பில் அ. பாலமயூரன் மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் ஞா. கிஷோர் போட்டியிட்டனர்.
இவர்களும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை பேணியது.
இந்நிலையில், தமிழ் தேசிய பேரவை சார்பில் சாவகச்சேரி நகர சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினருக்கு இன்று (13) நீதிமன்றத்தால்
இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது, அதற்கிடையில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வு நிகழ்வின்போது, தமிழரசு கட்சி சார்பில் பிரதிச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள்
வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சாயந்தனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்
சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்
சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்,மருத்துவரை துரத்திய ஈபிடி , நடந்த திக் திக் சம்பவம் .
காணொளியில் முழுமையான விபரங்கள் .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியர் அர்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதற்கான தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்சுனாவை மீண்டும்
சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சமூக மட்ட அமைப்பினர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் என
வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகளை எழுத்துமூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கினர்.
ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாக
அந்தவகையில் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விபரமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர்,
தான் குறித்த துறைசார்ந்த அமைச்சர் இல்லை என்பதால் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாக கூறினார்.
அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி
சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி
சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி ,சத்திரசிகிச்சை பிரிவிற்கு மின்பிறப்பாக்கி இல்லாமைமூட பட்டிருந்த அந்த பகுதியை மின்பிறப்பாக்கி வழங்கப்பட்டு தற்காலிகமா இயங்க வைக்க பட்டுள்ளது .
வாடகைக்கு அமர்த்திய மின்பிறப்பாக்கி இந்த அமருத்துவ மனைக்கு வழங்க பட்டுளள்து .
அவ்வாறு வழங்க பட்டுள்ள மின்பிறப்பாக்கிக்கு நாள் வாடகை பணம் வழங்க வேண்டும் ,அதில் கூட மோசடி புரியும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டு பெறப்பட்டுள்ளது
ஊழல் வாதியாக விளங்கி வரும் அங்கஜன்
ஊழல் வாதியாக விளங்கி வரும் அங்கஜன் இந்த மின்பிறப்பாக்கியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
இந்த அங்கயன் தான் அருச்சுன என்ற மருத்துவரை ,மோசடி நாயகி ஆளுனருடன் இணைந்து மருத்துவரை ,அவன் ,என்ற ஒற்றை சொல்லில் பேசிய படி இருந்தார் .
மக்களுக்கு சேவை செய்திட வந்த அரசியல் வியாபாரிகளை மக்கள் இவ்விடத்தில் இந்த சொல்லாடல்கள் ஊடக இவ்வாறன மிரடடல் விடுகின்றனர் என்பதை உணர வேண்டும் .,
மிரட்டல் லாடும் தொனியில் அங்கயன் பேச்சு இடம்பெற்றுள்ளது .என்பதை உலக மக்கள் கண்காணித்து கொண்டுள்ளனர் என்பது இந்த அரசியல் விபாபரிகள் புரிந்து கொண்டால் சரி .
இந்த வெற்றிக்கு காரணம் ஐயா மா மனிதன் , மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களே .,அவருக்கே இந்த புகழ் சென்றடையட்டும் ,அத்துடன் போராடிய ,மக்களுக்கும் இவ்வேளை எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம் .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

சாவகச்சேரிக்கு மாபியா குழு நியமிப்பு
மாபியா குழு சாவகச்சேரிக்கு நியமிப்பு
மாபியா குழு சாவகச்சேரிக்கு நியமிப்பு ,சாவகச்சேரி மருத்துவமனைக்கு புதிய பதில் பொறுப்பதிகாரியாக மருத்துவர் அர்ஜீவா என்பவர் தெரிவு செய்யப்பட்டுளளார் .
பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்கள் புரிந்து வந்த ஊழல்கள் அம்பல படுத்த பட்ட நிலையில் ,அதனை வெளிக்கொண்டு வந்த அருச்சுன என்கின்ற மருத்துவர் ,ஆளுநர் உதவி யோடு அங்கிருந்து அகற்ற பட்டுளளார் எனப்படுகிறது .
மருத்துவ மாபியா குழு
அதனை அடுத்து தற்போது மருத்துவ மாபியா குழு தலைவராக விளங்கி வருபவர் என மக்களினால் குற்ற சுமத்த பட்டுளள ,கேதீஸ்வரன் தலைமையில் இந்த புதிய மருத்துவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மக்களுக்கு உதவி புரிய மறுத்து பல்வேறு பட்ட மோசடிகளை புரிந்து ,ஊழல் கொடி கட்டி பறந்த மாபியா குழு மீளவும் அதே மருத்துவமனையில் பணிக்கு அமர்த்த பட்டுள்ளனர் .
இந்த விடயம் மீளவும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறான இழிவான சம்பவங்கள் மிக பெரும் நெருக்கடியை ரணிலுக்கு ஏற்படுத்தும் என்பதாக மக்கள் தெரிவிக்கின்ற்னர் .
மக்கள் கோரிக்கையை புறம் தள்ளி தமது லஞ்ச ஊழல்களை மறைத்து ,அதே மாபியா குழு சாவகச்சேரியில் மீள குடியேறியுள்ள சம்பவம் வெட்க படவேண்டிய சம்பவமாக பார்க்க படுகிறது .

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

சாவகச்சேரி வைத்திசாலை ஊழல்களை வெளிப்படுத்திய மக்கள்
சாவகச்சேரி வைத்திசாலை ஊழல்களை வெளிப்படுத்திய மக்கள்
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மருத்துவமனை முன்பாக சாவகச்சேரியில் போராட்டம்
மருத்துவமனை முன்பாக சாவகச்சேரியில் போராட்டம்
மருத்துவமனை முன்பாக சாவகச்சேரியில் போராட்டம் , போராட்டம் யாழ்ப்பாணம் சாவ கச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலை முன்னேற்றத்தை வலியுறுத்தியும் ,வைத்திய பணிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரியும், மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட புதிய மருத்துவரினால் பல்வேறுபட்ட விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
அந்த வைத்தியசாலையில் இயங்காமல் உள்ள கட்டிடங்களையும், இயக்கும் நடவடிக்கையிலும் உடனடியாக அவர் ஈடுபட்டார்.
அதனை எடுத்து அவருக்கு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் நடவடிக்கைகள் காணப்பட்டன.
அவர்களை ஆதரவாக பொங்கி எழுந்த மக்கள் தற்பொழுது ஏ 9 ,வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
மக்கள் அங்கு குவிந்து தமது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்,
அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கிக்கிவிடப்பட்டுள்ளது .
மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஒரு முறுகல்
போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை காணப்படுவதாகவும், பிந்தி வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்க போராட்டத்தில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் உள்ள மக்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
நான்கு வருடங்களுக்கு முன்னதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கட்டிடப்பட்ட கட்டிடங்கள் திறந்து சேவைக்கு உள்ளாக்கப்படாமல் உள்ளதாகவும் குறித்த மருத்துவமனையில் 25 மருத்துவர்கள் பணியாற்றுவதாகவும் .
அவர்கள் தாங்கள் தனியார் மருத்துவமனைகளை திறந்தும் வைத்திய சேவையை செய்து பெறுவதாக அவ்வாறான தனியார் வைத்திய சேவையை பயன்படுத்தி அவர்கள் அங்கு சென்று பணிபுரிந்து வருவதாகவும்,
அரசாங்க வைத்தியசாலையில் அவர்கள் பணி செய்ய மறுத்து தங்கள் நேரக் குறிப்பை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகளும் புதிராக வந்த பொறுப்பதிகாரி மற்றும் மக்களின் அற்புதம் சுமத்தப்படுகின்றனர்.
வைத்தியசாலை முற்று முழுதாக இயங்க வைக்க நடவடிக்கை
இந்த வைத்தியசாலை முற்று முழுதாக இயங்க வைத்து தொடர்ச்சியாக இயங்கு நிலையில் காணப்பட வேண்டும் ,
என தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தியிருந்தால், அருசுணன் என்கின்ற அந்த மருத்துவருக்கு ஆதரவாகவே மக்களுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தனது சமூகத்தில் பதிவின் ஊடாக அங்கு இடம் பல்வேறுப்பட்ட விடயங்களை சுட்டி காட்டி இருந்தார் .
அதனை அடுத்து மருத்துவர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம்
மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம்
மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம் அமைச்சர் டக்லஸ் பயணம் செய்தார் ,அரசியலாக மாறும் ஊழல் .
மருத்துவருக்கும் மக்கள் பெரும் ஆதரவு ,அங்கே நடந்ததகுக்கே நன் காணொளியில் விபரம்
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்
சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்
சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம் ,சாவகச்சேரி வைத்தியசாலையின் ஓட்டுமாத்து அம்பலம் சிகிச்சை வைத்தியசாலையில் இடப்பட்ட வருகின்ற பல்வேறுப்பட்ட ஓட்டுமாத்து .
அல்லது அடக்குமுறை அராஜக நடவடிக்கை தொடர்பாக புதிதாக நிர்வாகிக்கப்பட்ட மருத்துவர் நிர்வாகி அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைத்துள்ளதார் .
மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய வைத்தியசாலை
தமிழ் மக்கள் மத்தியில் மேற்படி விடயம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தல் வருகின்ற நிலையில் இந்த விடயம் தற்பொழுது பரபரப்பான நிலையை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மருத்துவமனையின் புதிதாக நிர்வாக பகுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கு வருகை தந்திருந்த இளம் மருத்துவர் ஒருவர் மீது காரசாரமான குற்றச்சாட்டுகளை.
யாழ் மாவட்டத்தின் அல்லது வட மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ளவர் மிகப் பெரும் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருவதால் விடயங்கள் வெளியாகி இருக்கின்றது .
யாழ் மாவட்டத்துடைய மிக சுகாதார பொறுப்பதிகாரியாக விளங்கிவரும் கேதீஸ்வரன் என்பவர் அங்குள்ள மருத்துவர்களின் மீது அடக்குமுறை மற்றும் தனது அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொண்டு வருவதற்கான குற்றச்சாட்டு பல நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
புதிதாக வந்த மருத்துவர்
அதன் அடிப்படையில் தற்போது இந்த புதிதாக வந்த மருத்துவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.
மருத்துவமனையில் நோயாளர்கள் இரவு 7 மணிக்கு பிறகு பார்வையிடுவதற்கான பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கடந்த காலங்களில் நாங்கள் செய்தியை வெளியிட்டு இருந்தோம் .
அதனை அடுத்து தற்போது துணிகரமாக இந்த மருத்துவர் தனது விடயங்களை அடித்து உடைத்து நொறுக்கி வெளியிட்டதை அடுத்து இவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது .
இலங்கையில் யாழ்ப்பாணம் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் இடையில் இடம்பெறுகின்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடயங்கள் தொடர்பான முழுமையான காணொளிகள் தற்போது கீழே இணைக்கப்பட்டுள்ளது பார்வையிடுக .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு
சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு
சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) காலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.
இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமுக்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.































