உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு ,ஐக்கிய மக்கள் சக்தியின் வடமகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமா சந்திர பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

வடமகாணத்தில் மிகப்பெரும் முக்கியமான பணிகளை இந்த கட்சியில் புரிந்ததை அடுத்து ,மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டிய பெருமையை சந்திரா பிரகாஷ் அவர்கள் பெற்றுள்ளதை அடுத்து தற்பொழுது இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியப்படுகின்றது.

ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவியாகவும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்க விடயமாக இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினை பலப்படுத்தி அதனுடைய வெற்றிக்கு மிகப்பெரும் பாடுபட்டு கொண்டிருக்கும் இவர் தற்பொழுது இந்த பதவியை பெற்றுள்ளார்.

வெற்றி என்ற ஒன்றை இலக்கு வைத்து நகரும் இந்த வழியில் தற்பொழுது வட மாகாணத்தின் புதிய அமைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டு அதற்கான ஆவணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியினுடைய வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து கட்சியை சரியான முறையில் வழிகாட்டி தமிழ் மக்களுக்கான வெற்றியை பெற்றுக் கொள்ளும் நோக்கில்,

இவர் திறம்பட செயலாற்றி வந்ததை அடுத்து இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சாவகச்சேரிக்கு மாபியா குழு நியமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரிக்கு மாபியா குழு நியமிப்பு

மாபியா குழு சாவகச்சேரிக்கு நியமிப்பு

மாபியா குழு சாவகச்சேரிக்கு நியமிப்பு ,சாவகச்சேரி மருத்துவமனைக்கு புதிய பதில் பொறுப்பதிகாரியாக மருத்துவர் அர்ஜீவா என்பவர் தெரிவு செய்யப்பட்டுளளார் .

பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்கள் புரிந்து வந்த ஊழல்கள் அம்பல படுத்த பட்ட நிலையில் ,அதனை வெளிக்கொண்டு வந்த அருச்சுன என்கின்ற மருத்துவர் ,ஆளுநர் உதவி யோடு அங்கிருந்து அகற்ற பட்டுளளார் எனப்படுகிறது .

மருத்துவ மாபியா குழு

அதனை அடுத்து தற்போது மருத்துவ மாபியா குழு தலைவராக விளங்கி வருபவர் என மக்களினால் குற்ற சுமத்த பட்டுளள ,கேதீஸ்வரன் தலைமையில் இந்த புதிய மருத்துவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

மக்களுக்கு உதவி புரிய மறுத்து பல்வேறு பட்ட மோசடிகளை புரிந்து ,ஊழல் கொடி கட்டி பறந்த மாபியா குழு மீளவும் அதே மருத்துவமனையில் பணிக்கு அமர்த்த பட்டுள்ளனர் .

இந்த விடயம் மீளவும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

சாவகச்சேரிக்கு மாபியா குழு நியமிப்பு

இவ்வாறான இழிவான சம்பவங்கள் மிக பெரும் நெருக்கடியை ரணிலுக்கு ஏற்படுத்தும் என்பதாக மக்கள் தெரிவிக்கின்ற்னர் .

மக்கள் கோரிக்கையை புறம் தள்ளி தமது லஞ்ச ஊழல்களை மறைத்து ,அதே மாபியா குழு சாவகச்சேரியில் மீள குடியேறியுள்ள சம்பவம் வெட்க படவேண்டிய சம்பவமாக பார்க்க படுகிறது .