Tag: கைது
துப்பாக்கிகளுடன் இருவர் கைது
துப்பாக்கிகளுடன் இருவர் கைது
பசறை – அமுனுமுல்ல பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான 3 துப்பாக்கிகளுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த 50 மற்றும் 38 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேரூந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் இன்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிசார் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது
இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டனர்.அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் அவரை நீதிமன்றில் முற்ப்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
இலங்கை பாணந்துறை டிப்போ பகுதியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
போக்குவரத்து சபையின் களுத்துறை அலுவலகத்தில் வழங்க பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் ஊதி பெருத்துள்ள லஞ்சத்தினால் நாடு சூடு காடாக மாறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
பொது மக்களை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது
பொது மக்களை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நாளைய தினம் (15) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 05 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும்,
வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5
நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
முன்னாள் இராணுவ வீரர் கைது
முன்னாள் இராணுவ வீரர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தெய்யந்தர பிரதேசத்தில் வைத்து இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் சந்தேகத்தின் பேரில் 44 வயதான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்தனர்.
குறித்த பகுதியில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடப்படுகின்றமை அதிகரித்த வண்ணமே காணப்பட்டதுடன், கால்நடைகளை களவாடுபவர்கள் பொதுமக்களினால் கையும் களவுமாக பிடிபட்டு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும் கையளித்துள்ளனர். எனினும் அப்பகுதியில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயிருந்தது.

வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
இந்நிலையில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களை பொதுமக்கள், பிடித்து நையப்புடைத்து வாகனம் ஒன்றில் கட்டி வைத்தமையுடன் அவர்களை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் வழங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததுடன், மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களையும் வாகனத்தில் ஏற்றி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள்,
எமது கிராமத்தில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளமையுடன் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியவில்லை. பல தடவைகள் கால்நடைகளை களவாடுபவர்களை பிடித்துக்கொடுத்தும் நெளுக்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பதினால் நாங்கள் தற்போது திருடர்களை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்துள்ளோம் என தெரிவித்தனர்.
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
வவுனியா நகரில் நேற்று (10.06) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்ட போது அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்க்கப்பட்டது.
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
இதனையடுத்து காரில் இருந்த 26 மற்றும் 23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தெஹியந்தர, ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
வவுனியாவில் வைத்தியர் முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞசெழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த முகைதீன் என்ற வைத்தியர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் (08.06) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
இதன்போது, உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது. அந்தவகையில் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய அவருக்கு மரணதண்டை வழங்கப்பட்டிருந்தது.
வவுனியாவை சேர்ந்த புளொட் அமைப்பின் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தது. தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி கைது
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி கைது
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் 72 வயது நபர் ஒருவர் வவுனியாவிற்pகு வருகை தந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவரும் வவுனியாவில் அவருடன் தங்கியுள்ளார்.
இருவரும் வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றிலும், குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் தங்கியிருந்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி கைது
பயன்படுத்தி வவுனியா பசார் வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் நகை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
சிறிது நாட்களின் பின் குறித்த நபர் அவுஸ்ரேலியா செல்ல ஆயத்தமாகிய போது அந்த யுவதியை அழைத்த போது அவர் கிளிநொச்சியில் இருந்து வரவில்லை.
இந்நிலையில், அவுஸ்ரேலியா சென்ற நபர் குறித்த யுவதி தனது வங்கி அட்டையை மோசடி செய்து நகைகளை கொள்வனவு செய்துள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர்
காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது யுவதி கைது செய்டயப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது! (PHOTO)
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கொழும்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி, மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற நாளை பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!

இன்று பாராளுமன்றத்தில் மருதங்கேணி விவகாரம் தொடர்பில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட எம்.பி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் மருதங்கேணி அழைத்து வர நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

இதேவேளை, மருதங்கேணியில் கடந்த 2 ஆம் திகதி சிவில் உடையில் வந்த பொலிசார் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பிஸ்ரல் காட்டி மிரட்டியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக பொலிசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு
தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு
தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 648 காஸ் சிலிண்டருடன் மகன் வாகனத்தை கடத்திச் சென்ற சம்பவம் வவுனியாவில் இன்று பதிவாகியுள்ளது.
தாய் நெளுக்குளம் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் விரைந்து சென்று வாகனத்தை மீட்டுள்ளதுடன், அதனை கடத்திச் சென்ற மகனையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
தாயுக்கும், மகனுக்கும் நீண்ட நாளாக இருந்த முரண்பாட்டால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
தமிழ் தேசிய மக்கள் முன்னனியைத் தேடி பொலிசார் யாழில் விசே கைது வேட்டையை ஆரம்பித்துள்ளதுடன், அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கைது செய்யப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ் வடமராட்சி, மருதங்கேணி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸ் புலனாய்வு துறையினர் தாக்குதல் நடத்தியமை மற்றும்
பொலிசார் சுட முற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையளில் பொலிசார் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
கட்சியின் மகளிர் அணித் தலைவி மற்றும் ஒரு நபர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஜேந்திரகுமார் எம்.பியையும் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணை பிரிவுக்கு வருமாறு இன்று (05.06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணனணையே நாளை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை தருவதற்கு, 2023 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
ரஷ்யா சிறையில் வாடும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்,
ஜூன் 4 அன்று 47 வயதை எட்டிய அலெக்ஸி நவல்னிக்கு ஆதரவாக,
நடந்த பேரணிகளில் ரஷ்யா முழுவதும் 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நவல்னிக்கு ஆதரவானவர்கள் ,நாம் உங்களுடன் இருக்கிறோம் ,நீங்கள் தனிமையில் இல்லை
என எழுத பட்ட வாசகங்களை அணிந்த படி, கூடிய அவரது ஆதரவாளர்கள்,
கைது செய்யப்பட்டு இழுத்து செல்ல பட்டனர் .
புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக நவல்னி செயல்பட்டார் என குற்றம் சுமத்திய .
புட்டீன் அவரை சிறையில் அடைத்தார் ,விமானத்தில் பயணிக்கும் பொழுது ,
உணவில் நஞ்சு கலக்க பட்டு ஆபத்தான நிலையில் ,
இருந்து சுய நினைவு திரும்பிய பின்னர் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
அவ்வாறான எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாகவே இந்த மக்கள் ,
அவரது பிறந்த நாளை கொண்டாடிய பொழுது கைது செய்யப் பட்டனர் என,
மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்று (30) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர்.
குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில்
சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் ,
அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில்
13ம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியில் இருந்து
விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் 17.05.2023. புதன்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றதோடு
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் சித்தப்பா பொகவந்தலாவ
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த
தோட்டத்தில் இருந்து பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் உள்ள அவரது
சித்தப்பாவின் வீட்டுக்கு குறித்த நபர் நேற்றைய தினம் வந்திருந்த போது, குறித்த வீட்டில் இருந்து அவர்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளதாகவும், விழுந்து உயிரிழந்தவர் மற்றும் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மும்மூர்த்தி ரஞ்சன் என பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்
தெரிய வந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் இருந்து விழுந்த நபரை பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு
கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
சம்பவம் தொடர்பில் ஹட்டனில் இருந்து தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை அரம்பித்துள்ளதோடு ஹட்டன் நிதீமன்ற பதில் நீதவான் நாராயணன் பாத்தீபன் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
யாழ் முன்னாள்
யாழ் முன்னாள் முதல்வர் கைது
யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது
பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது
பம்பலப்பிட்டி கடற்பரப்பில் முறையான அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பம்பலப்பிட்டி கடல் மார்க்கத்தில் மோட்டார் சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது
நேற்று அதிகாலையில் டிக்டொக் மூலம் இளைஞர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக ஊடக தளமான TikTok இல் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை எவ்வாறு ஓட்டுவது என்பதைக் காட்டும் வீடியோவையும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.
வீதியில் செல்லும் வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் வீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

































