Tag: கவிழ்ந்தது
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது,ஆளும் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி பலத்த வெற்றியை பெற்றுள்ளது .
ஆளும் பழமைவாத கட்சி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயலாற்றியதும் ,மக்கள் வாழ்வாதாரம் ,விலைவாசி என்பன அதிகரித்த நிலையில் தற்பொழுது ,அவரது ஆட்சி கவிழ்க்க பட்டுளள்து .
பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய இராணுவ பயிற்சியை பெற்று கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை பிரிட்டன் சட்ட அமூல் செய்ய முற்பட உள்ள நிலையில் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டுள்ளார் .
13 வருடங்கள் பின்னர் பிரிட்டனில் மீளவும் தொழில் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது .
புதிதாக ஆட்சி ஏறியவர்கள் மக்கள் வாழ்வாதாரத்தில் மக்களுக்கு உரிய தீர்வினை கொடுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே ,தொழில் கட்சியும் நீடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகிறது .
அவ்வாறு மக்களுக்கு வழங்க பட்ட உத்தரவாதத்தினை காற்றில் பறக்க விட்டால் ,அவர்கள் மேலும் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்பதாக நிலை உள்ளது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி , இலங்கை அனுராதபுரம் பகுதியில் சுடலைக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த லொறியினது சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறி கொண்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சுடலைக்கு அருகில் இந்த லொறி கவிழ்ந்துள்ளதாக அனுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .
லாரியின் சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறிய நிலையில் ,அதனால் வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மயானத்துக்கு அருகில் லொறி தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயானத்துக்கு அருகில் லொரு பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறியின் சக்கரத்தில், காற்று வெளியேறிய சம்பவம், ஆவி களின் செயலாக இருக்கும் என்கின்ற பேச்சு அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
ஆவிகளின் நடமாட்டங்களை இதுவரை நம்பிவரும் இலங்கை வாழ் மக்கள் ,மயானத்துக்கு அருகில், ஆவிகளின் நடமாட்டம் காரணமாகவே ,இந்த லொறியிலிருந்து காற்று வெளியேறியதாகவும் .
அதனாலேயே சுடலைக்கு அருகில், கவிழ்ந்ததாகவும் மக்கள் இப்படி பேசிக் கொள்கின்றனர்.
இந்த சம்பவமானது அந்தப் பகுதி மக்கள் மத்தியில், ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

உழவு இயந்திரம் கவிழ்ந்தது
உழவு இயந்திரம் கவிழ்ந்தது
உழவு இயந்திரம் கவிழ்ந்தது ,பல பிரதேசங்களில் இடம்பெற்ற 5 வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு பரந்தன் வீதியில்வீதி விபத்து
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பரந்தன் வீதியில் மூங்கிலாறு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்து மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் தம்பிராசபுரம், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
உழவு இயந்திரத்தில் பயணித்த 14 பேர் முல்லயாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிற்காக பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி லொறியுடன் மோதல்
இதேவேளை, நீர்கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதியதில், பலந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பிலிபிட்டிய – நோனாகம மேரி ஹல்மில்லகெட்டிய பிரதேசத்தில் லொறி ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.
தெலில்பலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி – மைலோட் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்கம்பத்தில் மோதி விபத்து
மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குளியாபிட்டிய – நாரம்மல வீதியின் தும்மோதர பிரதேசத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் இவ்விதமான விபத்துக்களை தடுத்திட அரசும் ,அரசு இயக்கும் காவல்த்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுவிக்க பட்டுள்ளது .

















