இலஞ்சம் பெற்ற அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற அதிகாரி

இலஞ்சம் பெற்ற அதிகாரி

இலஞ்சம் பெற்ற அதிகாரி ,தமக்கு சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர்

மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்

தம்மிடம் இருந்து மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கெஹெல்பத்ர

பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைதான ‘பெக்கோ சமன்’ தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட உள்ளார்.

தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ‘பெக்கோ சமன்’, தனக்கு சொந்தமான ரூபா 8

இரண்டு சொகுசு பேருந்து

கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு பேருந்துகளை கண்டுபிடிக்க கடந்த நாட்களில் குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவினார்.

இந்த இரண்டு பேருந்துகளில் ஒன்றைக் கொழும்பு – மொனராகலை வீதியில் இயக்க அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, ஊவா மாகாண வீதிப் பயணிகள்

போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் தன்னிடம் இருந்து மாதாந்தம் ரூபா மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் இலஞ்சம் பெற்றதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அனுமதிப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் காலாவதியான போதிலும், “ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நான் பார்த்துக்கொள்வேன், பேருந்தை

இயக்குங்கள்” என முன்னாள் தலைவர், ‘பெக்கோ சமன்’ தரப்பினருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பெக்கோ சமன்’ கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மைத்துனர் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, கடந்த மாதம் கூட முன்னாள் தலைவரின் கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு அவர் பதவி இழந்த பின்னரும், தமக்குச் செய்த உதவிக்காக அந்தப் பணம் அவருக்கு வழங்கப்பட்டதாக ‘பெக்கோ சமன்’ கூறியுள்ளார்.

இது குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் தலைவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது மனைவி இலஞ்சம் ஊழல்குற்றச்சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

இரண்டாவது மனைவி இலஞ்சம் ஊழல்குற்றச்சாட்டு

இரண்டாவது மனைவி இலஞ்சம் ஊழல்குற்றச்சாட்டு

இரண்டாவது மனைவி இலஞ்சம் ஊழல்குற்றச்சாட்டு ,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க

திசாநாயக்கவின் மனைவி

திசாநாயக்கவின் மனைவி ஒரு காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன மகேந்திரனிடம் பணிபுரிந்ததாக

எதிர்க்கட்சி நேற்று மற்றொரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் பேசியபோது, ​​தற்போது டி.ஜி.யாக மூத்த பதவி வகிக்கும்

பணிப்பாளர் நாயகம் திசாநாயக்க, அடிக்கடி ஊடகங்கள் முன் தோன்றுவதன் மூலம் தனது பங்கை மீறி வருவதாகக் கூறினார்.

“இப்போது, ​​திரு. ரங்க திசாநாயக்க ஊடகங்களிலும் தோன்றுகிறார். ஒரு பணிப்பாளர் நாயகமாக, அவர் ஊடகங்களில் தோன்றக்கூடாது.”

முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சம்பந்தப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி மோசடியைக் குறிப்பிட்டு, பாராளுமன்ற உறுப்பினர் தசநாயக்க, “2017 ஆம் ஆண்டு கொழும்பு நீதவானாக யார் பணியாற்றினார், அர்ஜுன

மகேந்திரனின் பாஸ்போர்ட்டை விடுவிப்பதற்கு யார் ஒப்புதல் அளித்தார்கள் என்பதை திரு. திசாநாயக்க தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார்.

திசாநாயக்கவின் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகள் இருவரும் மத்திய வங்கியில் பணிபுரிந்ததாகவும், அப்போதைய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின்

கீழ் அவரது இரண்டாவது மனைவி வகித்த பதவியை வெளியிட வேண்டும் என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

“இந்த நாட்டு மக்களுக்கு இந்த உண்மைகளை அறிய உரிமை உண்டு. உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன்பு

வெளிப்படைத்தன்மையுடனும், குறைகூறலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்,” என்று எம்.பி. மேலும் கூறினார்.

சாமர தசநாயக்க தற்போது மூன்று நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதாகவும், தனது சமீபத்திய கருத்துகளைத் தொடர்ந்து மேலும் குற்றச்சாட்டுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

“அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பொதுமக்கள் உண்மையை அறியத் தகுதியானவர்கள்,” என்று அவர் கூறினார்.

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது.49 people arrested for accepting bribes .

கடந்த ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 49 கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

72 சுற்றி வளைப்பு நடவடிக்கை 72 Roundup operation

72 சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ,அவற்றில் 39 சுற்றி வளைப்புக்கள் வெற்றி அழித்துள்ளதாகவும்

அவ்வாறு வெற்றியடைந்து சுற்றிவழிப்புக்குள்ளேயே 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றி வளைப்பு நடவடிக்கையின் பொழுது 17 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய நிலையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 27 பேர் நீதிமன்ற குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு Bribery Commission to eradicate corruption

இலங்கையில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு மேற்கொள்கிற இந்த விடயங்கள் வரவேற்பு பெற்றுள்ளது.

நாடு திவால ஆவதற்கு காரணமாக இருக்கின்ற காரணிகள் இந்த லஞ்சம் வருவதே காரணமாகிறது.

ஆகவே இந்த லஞ்சோலை ஒழித்தால் மட்டுமே நாடு முழுவதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாதங்களில் 3937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

ஆனால் அவற்றில் 49 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆணைக்குழு.

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர்

கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவாய கிராம சேவையாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய்

அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய் பெறுமதியான பற்றுச்சீட்டை பெற்றுக் கொண்டிருந்தபோது, ​​குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு மணல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான்

அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 



இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரரின் மகள் இந்த

ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும், அதை ஒரு சிறப்பு விடயமாகக் கருதி சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 

சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகள்

எனினும், சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதால், பிணை மனுவை எதிர்ப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, அவரை 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ,அம்பாறை பகுதியில் நபரொருவரிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இன்று (21) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் என தெரியவந்துள்ளது.

மணல் போக்குவரத்து தொழில் நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்வதற்காகவும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள்

மேற்கொள்ளாமல் இருப்பதற்காகவும், குறித்த இரு அதிகாரிகள் 25,000 ரூபாய் இலஞ்சமாக கோரியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரும் இலஞ்சம் கோரியமை, அதனைப்

பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது ,லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமேலே கிண்ணியா போலீஸ் நிலையத்திற்கு பணியாற்று போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது லஞ்சம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுபவிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணை குழுவுக்கு தகவல் வழங்கியது அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது குறித்த போலீஸ் அதிகாரி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆயராக்க பட்டு பின்னர் எதிர்வரும் மாதம் ஒன்பதாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓடிய நபர், இவரை பழிவாங்கும் நோக்குடன் இந்த லஞ்ச ஊழல் ஆணைகுழுவில் சிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முறையான முறையில் இவரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால், இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்பு குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா.

எனவே சிலர் விரிக்கும் வலையில் இவர்களாகவே விழுந்து சிக்கி விடுவது இதன் ஊடாக தெரிய வருகிறது.

நீண்ட நெடுங்காலம் காலமாக லஞ்ச ஊழல் பெற்று பருத்து கொழுத்து வந்த அதிகாரியே இன்று இந்த விடயத்தில் சிக்கி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் ,யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது

வழக்கு ஒன்றை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர்

20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) முன்னிலையாகினர்.

இதன்போது குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது 500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளர், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்கு

தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு மையத்தில் பணிபுரியும் குடிவரவு அதிகாரி ஆவார்.

சந்தேகநபர் 20 ஆம் திகதி மதியம் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்தில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற

குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை

மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முறைப்பாட்டாளரால் குளிரூட்டியை கொள்வனவு செய்த விற்பனை நிலையத்தின் முகாமையாளரின் கணக்கில் குறித்த தொகை வரவு

வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது ,20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின்

பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் ஊழல் தொடர்பான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளையில் வசிக்கும் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், காருக்கான எரிபொருளை செலுத்துவதற்கும், 25.10.2024 அன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்று முறைப்பாடு செய்தவருக்கு எதிராக இருந்த

வழக்குத் தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்கும் முறைப்பாட்டாளரிடம் குறித்த பரிசோதகர் 20,000 ரூபா இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளையில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து ஆணைக்குழுவினால் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

அவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு

இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு

இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ,பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரிக்கு நேற்றைய தினம் (16) ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார்.

சந்தேகநபர் மாதாந்தம் 100,000 ரூபாயை இலஞ்சமாக வழங்க விரும்புவதாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு குறித்த பொலிஸ் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, சந்தேகநபர் 50,000 ரூபாயை வழங்க முற்படும் போது, ​​இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
,60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருவான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக முதலில் 350,000 ரூபா பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் அது 1 இலட்சமாக குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 60,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி, கரைச்சி பிரதேச சபையின் இரண்டு வருவான வரி பரிசோதகர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது ,ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்புப் பிரிவு

களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா, ஹெரோயின் போதைப் பொருளுடன் அவரது கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸுக்கு அழைத்து வந்துள்ளார்.

சந்தேக நபர் சட்டையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

இலங்கை பாணந்துறை டிப்போ பகுதியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

போக்குவரத்து சபையின் களுத்துறை அலுவலகத்தில் வழங்க பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .

இலங்கையில் ஊதி பெருத்துள்ள லஞ்சத்தினால் நாடு சூடு காடாக மாறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸ் சாஜனுக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குற்றச்செயலுன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சாஜன் தர பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்

Error: View 9293b2au4w may not exist
Posted in இலங்கை செய்திகள்

பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்..

சந்தேகத்திற்குரிய அதிபர், மாணவர் ஒருவரை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக 200,000 ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அது 150,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதனை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் இலஞ்சம் கோரியதாக குழந்தையின் தந்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டாரகம பகுதியில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் , ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர், அதிபர் இலஞ்சம் வாங்கும் வேளையில் மாணவரின் தாயாகக் தன்னை அடையாளப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளார்