Posted in சினிமா

நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை

நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை

ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகை மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை
மஞ்சு வாரியர்


கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில்

விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான திலீப், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.

மேலும் வழக்கின் சாட்சியங்களை அழித்ததாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை நடிகை மஞ்சுவாரியர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார்

முடிவு செய்தனர். கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3½ மணிநேரம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை நடிகை மஞ்சுவாரியர் தெரிவித்தார்.

அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மஞ்சுவாரியர்

அளித்துள்ள தகவல்கள் மூலம் இந்த வழக்கில் மேலும்
பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.

    Posted in சினிமா

    அனன்யாவின் கவர்ச்சி.. வைரலாகும் புகைப்படங்கள்

    அனன்யாவின் கவர்ச்சி.. வைரலாகும் புகைப்படங்கள்

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனன்யா பாண்டே, பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    பிகினியில் அனன்யாவின் கவர்ச்சி.. வைரலாகும் புகைப்படங்கள்
    அனன்யா பாண்டே


    பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்ளும் அனன்யா, இஷான்

    கட்டருடன் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. தற்போது இவர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து

    முடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி நடிகர் என்று அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

    இதற்கிடையில் அனன்யா பாண்டே போதை பொருள் வழக்கில் சிக்கி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்

    பொருள் வழக்கில் அவருடன் போதைப்பொருள் பற்றிய உரையாடலில் ஈடுப்பட்டதாக கூறி அனன்யா மீது வழக்கு பதியப்பட்டது. சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி உடையில்

    வலம் வந்து ரசிகர்களை கவரும் அனன்யா பாண்டே, தற்போது பிகினியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


    பிகினி உடையில் கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

      Posted in சினிமா

      கவர்ச்சி உடையில் யாஷிகா.. வைரலாக்கும் ரசிகர்கள்

      கவர்ச்சி உடையில் யாஷிகா.. வைரலாக்கும் ரசிகர்கள்

      நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

      கவர்ச்சி உடையில் யாஷிகா.. வைரலாக்கும் ரசிகர்கள்
      யாஷிகா ஆனந்த்


      2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில்

      வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

      அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

      பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

      சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார்.

      இந்நிலையில் யாஷிகா பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


      கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பலர் விமர்சித்தும் பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

        Posted in சினிமா

        விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்

        விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்

        விஜய் நடிக்கும் 66-வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

        விஜய் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்
        மோகன்


        மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி, 1980-களில் முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் நடித்த கிளிஞ்சல்கள் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி,

        கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மவுன ராகம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

        மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இவரை மைக் மோகன் என்று அழைத்தனர். 15 வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு

        விலகினார். மோகனை புதிய படங்களில் நடிக்க வைக்க அழைப்புகள் வந்தும் மறுத்து வந்தார். தற்போது, இயக்குனர் விஜய் ஸ்ரீ சொன்ன ஹரா படத்தின் கதை பிடித்ததால்

        அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் நடிக்கும் 66-வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

        இதுகுறித்து மோகனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்தார். ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகே, அடுத்த

        படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்தார்.
        தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க மோகன் முடிவு செய்து இருக்கிறார்.

          Posted in சினிமா

          ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்

          ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்

          ரூ.5 கோடி மோசடியில் தனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, சிங்காரவேலன் தன்னை பல வகையில் மிரட்டி வந்ததாக நடிகர் விமல் குறிப்பிட்டுள்ளார்.

          ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்
          நடிகர் விமல்

          நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்காக ரூ.5 கோடி கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாகவும், சினிமா

          தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

          இதற்கு பதிலடியாக நடிகர் விமல் கூடுதல் கமிஷனர் கண்ணனிடம் அளித்துள்ள புகார் மனுவில், கோபி தற்போது தன்மீது கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடியில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

          எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், எனது புகழை கெடுக்கும் நோக்கத்திலும் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

          இந்நிலையில் நடிகர் விமல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

          மன்னர் வகையறா படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் பூபதி பாண்டியன் என்பவரை அறிமுகம் செய்தார். சிங்காரவேலன்தான், கோபிக்கு பணம் கொடுக்க வேண்டும். எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை.

          கோபி பணம் கேட்கும்போதெல்லாம், சிங்காரவேலன் என்னை கை காண்பித்து விடுவார். எனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னை பல வகையில்

          சிங்காரவேலன் மிரட்டி வந்தார். நான் எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விடும், என்று பயந்து சமாளித்து வந்தேன். எனது பயத்தை அவர் எனது பலவீனமாக எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி வந்தார்.

          இதனால்தான் சிங்காரவேலன், கோபி உள்ளிட்டோர் மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அந்த புகாரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

          ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் முன்ஜாமீன் பெற்று விட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

          சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த 3 ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன். நான் புதிதாக படம் நடிக்கும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட

          தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறான தகவல்களை சொல்லி சிங்காரவேலன் மிரட்டி வந்தார்.

          அதன் பிறகு துணிச்சலாக நான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கு ஓரளவு தொல்லை குறைந்தது. இப்போது மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

          என்மீது கொடுத்துள்ள புகார் பற்றி பத்திரிக்கைகளில் படித்துதான் நான் தெரிந்து கொண்டேன். என்மீது கொடுத்துள்ள புகார் பொய்யானது. எனக்கு மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு கேட்டும் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளேன்.

          இவ்வாறு விமல் கூறினார்.

            Posted in சினிமா

            திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா

            திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா

            நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

            திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
            நாகசைத்தன்யா


            சமந்தா – நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருடங்கள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீடீரென கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

            விவாகரத்தான பின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், நடிகர்

            நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

            நாகசைதன்யாவின் பெற்றோரான நாகார்ஜுன் மற்றும் அமலா இருவரும் நாகசைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும்

            இதற்கு நாகசைதன்யா ஒகே சொல்லிவிட்டதாகவும், ஆனால், நடிகை வேண்டாம் என்று பெற்றோருக்கு கண்டிஷன் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

            விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும், அவர் நடிகை இல்லை என்றும்

            தெரியவந்துள்ளது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து
            அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

              Posted in சினிமா

              காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது

              காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது

              தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

              காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது… குவியும் வாழ்த்துகள்
              கணவருடன் காஜல் அகர்வால்


              இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற

              டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

              படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும்

              தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார். அதன்பின்னர் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

              காஜல் அகர்வால்

              தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை

              பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் –
              கவுதம் கிச்சிலு தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

                Posted in சினிமா

                பீஸ்ட் படத்தை பார்த்த அஜித் குடும்பம்

                பீஸ்ட் படத்தை பார்த்த அஜித் குடும்பம்

                நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தை அஜித் குடும்பத்தினர் திரையரங்கில் கண்டு ரசித்தனர்.

                பீஸ்ட் படத்தை பார்த்த அஜித் குடும்பம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
                அஜித் குடும்பம்


                இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ்,

                யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே

                இப்படத்தில் நடித்திருந்தது. ஏப்ரல் 13ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

                இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக அஜித் குடும்பத்தினர் வருகைதந்தனர். அஜித்தின் மனைவி ஷாலினி, தன் மகள் மற்றும் மகனுடன் சென்னை

                சத்யம் திரையரங்கில் கண்டுரசித்தார். அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


                பீஸ்ட் திரைப்படத்தை காண அஜித் குடும்பத்தினர் வந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

                  Posted in சினிமா

                  சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா

                  சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா

                  தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நயன்தாரா

                  இருவரும் கட்டியணைந்து சந்தோசத்தை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

                  சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ
                  சமந்தா – நயன்தாரா


                  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம்

                  “காத்துவாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

                  அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

                  இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள்

                  இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு

                  நிறைவடைந்ததை கேக் வெட்டி படக்குழு கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகின.

                  இந்நிலையில் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோவை சமந்தா

                  வெளியிட்டுள்ளார்.
                  இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                    Posted in சினிமா

                    நடிகரை பாரட்டிய ரஜினிகாந்த்

                    நடிகரை பாரட்டிய ரஜினிகாந்த்

                    தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினி பிரபல நடிகர் ஒருவரை பாராட்டியுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

                    பிரபல நடிகரை பாரட்டிய ரஜினிகாந்த்
                    ரஜினிகாந்த்


                    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணாக்காரன்’ திரைப்படம் கடந்த 8-ந்தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி

                    இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

                    டாணாக்காரன் திரைப்படத்தை எஸ்.ஆர்.
                    பிரபு தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


                    இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும்,
                    டாணாக்காரன் படத்தில் தன்னுடைய நடிப்பிற்காக பாராட்டியதாகவும் நடிகர்
                    விக்ரம் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


                    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘
                    என்னுடைய நடிப்பை பாராட்டி சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வந்தது மிகப்பெரிய உணர்வு.


                    நான் கனவு காணத்துணியாத ஒன்றைச் சாதித்தேன். உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றுவது வாழ்க்கையில்


                    இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை உருவாக்கும். டாணாக்காரன் குழுவிற்கு வாழ்த்துக்கள்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!’
                    என்று பதிவிட்டுள்ளார்.

                    Posted in சினிமா

                    மதம் மாறினாரா விஷால்

                    மதம் மாறினாரா விஷால்

                    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், மதம் மாறினாரா என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

                    மதம் மாறினாரா விஷால்…. வைரலாகும் பதிவு
                    விஷால்


                    வீரமே வாகைச்சூடும் படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி, இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்

                    இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷால் போலீசாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

                    சமீபத்தில் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்தது. இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

                    அந்த டுவிட்டர் கமெண்டில்: மீண்டும் மாமா ஆனதில் மிக்க மகிழ்ச்சி. இதுக்கு மேல என்ன வேணும்?. எனது தங்கை ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும்,

                    பெற்றோரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ்” என பதிவிட்டிருந்தார்.

                    விஷால்

                    விஷாலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், அவர் மதம் மாறிவிட்டாரா…
                    என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்

                      Posted in சினிமா

                      அந்த விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால்

                      அந்த விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால்

                      ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தற்போது விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

                      விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
                      நிதி அகர்வால்


                      ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில்

                      ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

                      முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை நிதி

                      அகர்வால், ஆணுறை விளம்பரமொன்றில் தோன்றி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

                      நிதி அகர்வால்

                      விளம்பரம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வரும் சூழலில் இதைப்பார்த்த ரசிகர்கள்


                      பணத்துக்காக இப்படியா செய்யுறது என்று அவருக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

                        Posted in சினிமா

                        ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி

                        ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி

                        பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நெட்டிசன் ஒருவர் கேட்ட ஆபாச கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

                        ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்
                        பிரியா பவானி சங்கர்


                        தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர்

                        . இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார்.

                        வழக்கமா இதுமாதிரியான சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் கேட்பதுண்டு.

                        அந்த வகையில் நெட்டிசன் ஒருவன், உங்களது உள்ளாடை சைஸ் என்ன என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

                        பிரியா பவானி சங்கர்

                        இதற்கு பதிலளித்த பிரியா, “மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு அது உள்ளது” எனக்கூறி

                        தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
                        பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருது.

                          Posted in சினிமா

                          பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்

                          பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்

                          விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் மோதல் ஏற்பட்டு ரசிகர்கள் காயம் அடைந்துள்ளனர்.

                          பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்
                          பீஸ்ட்


                          நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில்

                          விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

                          அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் இன்று காலை

                          திரையரங்குகளில் வெளியானது. காலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து மேளம் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

                          இந்நிலையில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வடுகநாதன் திரையரங்கில் 3 மணி காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் திரைப்படம் பார்க்க வந்திருந்தனர். அப்போது மயிலாடுதுறை, நெய்வெலியில் இருந்து வந்த

                          நண்பர்களான 8 பேர் விஜய் ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு சிதம்பரம் வந்துள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் திரையரங்கிற்கு வந்ததாக கூறப்படுகிறது

                          . அவர்களை தடுத்த திரையரங்கு ஊழியர்கள் மதுபோதையில் வந்த நபர்களிடம் வாக்கு வாத்தத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் கண்முன்னே ரசிகர்கள் மற்றும்

                          திரையரங்க ஊழியகர்களுக்கிடையே கடுமையான மோதல் உருவானது. இதில் ரசிகர்களுக்கு மூக்கு மற்றும் வாய் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவல்

                          துறையினர்
                          கண் முன்னே நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

                            Posted in சினிமா

                            உடையில் கவர்ச்சி.. இணையத்தை கலக்கும் ராய் லட்சுமி

                            உடையில் கவர்ச்சி.. இணையத்தை கலக்கும் ராய் லட்சுமி

                            நடிகை ராய் லட்சுமி கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                            கருப்பு உடையில் கவர்ச்சி.. இணையத்தை கலக்கும் ராய் லட்சுமி
                            ராய் லட்சுமி


                            தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

                            அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

                            படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர்

                            நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய்

                            லட்சுமி. தற்போது கருப்பு உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார்.
                            இந்த புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.

                              Posted in சினிமா

                              இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

                              இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

                              தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

                              இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. அதிர்ச்சியில் திரையுலகம்
                              நயன்தாரா


                              நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும்

                              இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால்,

                              நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிகபட்சம் ரூ.3 கோடி என்று இருந்தது. பின்னர் அது ரூ.5 கோடியாக உயர்ந்தது.

                              இந்நிலையில், தற்போது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அகமது

                              இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்குத்தான் அவர் ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது.

                              படத்தில் நடிக்க நயன்தாரா 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கே இவ்வளவு சம்பளம் என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

                              ஆனாலும், படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே, தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியும்,
                              நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                Posted in சினிமா

                                மதுப்பழக்கத்தில் பிரபல நடிகை

                                மதுப்பழக்கத்தில் பிரபல நடிகை

                                ஆரோக்கியம் உள்ளிட்ட சில விஷயங்களை மனதில் வைத்து, மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டதாக பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் கூறியுள்ளார்.

                                மதுப்பழக்கத்தில் இருந்த பிரபல நடிகை.. வருத்தத்தில் ரசிகர்கள்
                                காயத்ரி சுரேஷ்


                                பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். இவர் தமிழில் ஜி.வி.பிரகாசுடன் 4-ஜி படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் சகாவு, நாம் சில்ரன்ஸ், ஒரே முகம், ஒரு

                                மெக்சிகன் அபரதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

                                இந்நிலையில், தனக்கு மதுப்பழக்கம் இருந்தது என்று வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து காயத்ரி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு ஒரு காலத்தில் மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. மதுபோதையில் செய்த தவறுகளை மட்டும்

                                கேட்காதீர்கள். அதை இப்போது சொல்வதும் சரியல்ல. சுய நினைவுடன் அவற்றை

                                செய்யவில்லை. பின்னர் வாழ்க்கை, தொழில், உடல் தோற்றம், ஆரோக்கியம் உள்ளிட்ட சில விஷயங்களை மனதில் வைத்து, மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.

                                காயத்ரி சுரேஷ்
                                காயத்ரி சுரேஷ்

                                என்னுடன் மஹே படத்தில் இணைந்து நடித்த அனீஷ் மேனன் மீது இளம் பெண் பாலியல்

                                புகார் தெரிவித்திருப்பது பற்றி கேள்விப்பட்டேன். கேள்விப்படும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று சொல்லிவிட முடியாது’’
                                என்றார்.

                                  Posted in சினிமா

                                  இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

                                  இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

                                  இளையராஜாவை நேரில் சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

                                  இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா வைரலாகும் புகைப்படங்கள்


                                  ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து

                                  இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

                                  ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி

                                  வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றார். ஐஸ்வர்யா ரஜினி விரைவில் ’ ஓ சாதிசால்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

                                  இந்நிலையில் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். அந்த

                                  புகைப்படத்துடன் சில விஷயங்களை குறிப்பிட்டு இளையராஜாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.


                                  இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                    Posted in சினிமா

                                    விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்த அந்த பிரபலங்கள்

                                    நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சிலரை அழைத்து சென்று சுற்றிக் காட்டியுள்ளார். அதில் பயணித்தவர்கள் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

                                    விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்தது யார் தெரியுமா?


                                    நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர்

                                    வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

                                    இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில்,

                                    சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ பாடல் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

                                    விஜய்யுடன் காரில் பயணித்தவர்கள்
                                    விஜய்யுடன் காரில் பயணித்தவர்கள்

                                    இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ‘பீஸ்ட்’ படக்குழுவினரை அழைத்துச் சென்றுள்ளார். இயக்குனர் நெல்சன், மனோஜ்,

                                    அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, சதீஷ் ஆகியோர் விஜய்யின் காரில் ஜாலியாக பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது

                                      Posted in சினிமா

                                      இயக்குனரால் கர்ப்பம்.. கருவை கலைத்த பிரபல நடிகை.

                                      முன்னணி இயக்குனருடன் கொண்ட உறவால், கர்ப்பம் ஏற்பட்டு பின் கருக்கலைப்பு செய்தேன் என பிரபல நடிகை தெரிவித்து உள்ளார்.

                                      முன்னணி இயக்குனரால் கர்ப்பம்.. கருவை கலைத்த பிரபல நடிகை
                                      மந்தனா கரீமி


                                      இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகை மந்தனா கரீமி. பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான

                                      மந்தனா, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில், 2வது இடமும் பிடித்து உள்ளார்.

                                      மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கவுரவ் குப்தா என்பவரை 2016ம் ஆண்டு ஜூலையில் சந்தித்து உள்ளார். பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். எனினும், இந்த திருமணம் ஒரு சில

                                      மாதங்களே நீடித்தன. அதன்பின் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் நடத்தும் லாக்-அப் என்ற நிகழ்ச்சியில் கரீமி பங்கேற்று உள்ளார்.

                                      அதில், சமீபத்திய எபிசோட் ஒன்றில் கரீமியிடம் உங்களிடமுள்ள ஒரு ரகசியம் பற்றி கூறுங்கள் என கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், வெளியேற்றுதல் சுற்றில் இருந்து தப்பிப்பதற்காக தனது வாழ்க்கையின் மிக பெரிய ரகசியம் ஒன்றை மந்தனா

                                      வெளியிட்டு உள்ளார். அதற்கு அவர், முன்னணி இயக்குனர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட ரகசிய உறவு பற்றி வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, எங்கள் இருவருக்கும்

                                      இடையேயான உறவு ஒரு சில மாதங்களிலேயே வலுப்பெற்றது. இதனால், என்னுடனேயே வாழ அவர் (இயக்குனர்) திட்டமிட்டார். ஆனால், இதனை வெளியில் யாருக்கும் கூறாமல் ரகசியம் காப்பது என இருவரும் முடிவு செய்தோம்.

                                      இயக்குனரால் கர்ப்பம்.. கருவை கலைத்த பிரபல நடிகை.

                                      ஏனெனில், எனது முன்னாள் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக பொறுத்திருந்தேன் என கூறியுள்ளார். இதன்பின் கரீமி கர்ப்பமடைந்து உள்ளார்.

                                      இதனை தனது காதலரான அந்த இயக்குனரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த பொறுப்புகளை ஏற்று கொள்ளும் அளவுக்கு

                                      மனதளவிலும், உணர்வுரீதியிலும் இன்னும் தயாராகவில்லை என மந்தனாவிடம் அவர் கூறியுள்ளார்.

                                      அவர் தொடர்ந்து உறுதியாக இருந்துள்ளார். இதனால், வேறு வழியின்றி மந்தனா கருக்கலைப்பு செய்யும் முடிவுக்கு சென்றுள்ளார். இதனை கூறும்போது, மந்தனா, சக

                                      போட்டியாளர்கள் மட்டுமின்றி நடிகை கங்கனா ரணாவத்தும் கண்கலங்கினார். அந்த இயக்குனர் பெண் உரிமைகள் பற்றி பேசுபவர். பலருக்கு கடவுளாக இருப்பவர் என்றும் மந்தனா பேசும்போது கூறியுள்ளார்