Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
34 ஆண்டுகள் கடற்படை சேவையில் இருந்து விடை பெற்றார் உயர் அதிகாரி
34 ஆண்டுகள் கடற்படை சேவையில் இருந்து விடை பெற்றார் உயர் அதிகாரி
ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல நேற்று (04) 34 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
நேற்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த
அதிகாரிக்கு பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அதன்பின் அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை
வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி வீதியின் இருபுறமும்
உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்களினால் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.
1986 ஆம் ஆண்டில் கடற்படைக்கு சேர்ந்த ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல,
தனது பதவி காலத்தில் வடக்கு, வட மத்திய மற்றும் தெற்கு கடற்படை
கட்டளைகளில் துணைத் தளபதியாகவும், கடற்படை நல இயக்குநர், கடற்படை
தகவல் தொடர்பு மற்றும் இயக்குநர் பொது சேவைகள் போன்ற மூத்த பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை
புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள்
நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம். இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார,
பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.
இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம்
மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. எனினும்,
இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை
எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.
எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி
வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின்
பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்
தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள MV New Diamond கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல்
பகுதிக்கு இழுத்துச் செல்ல முடிந்துளளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தனது Twitter பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பல் நேற்று முன்தினம் தீ பற்றிக்கொண்ட
இந்த கப்பலில் எரிபொருள் கலஞ்சிய பிரிவில் எரிபொருள் ஒழுக்கு ஏற்படவில்லை என்றும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலின் தற்போதைய நிலையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பல் நேற்று தீ
பற்றிக்கொண்டமை. தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கடற்படையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தீ பற்றிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் பட்சத்தில், அதிலிருந்து சுற்றாடலை
பாதுகாக்க சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எரிபொருளை உறிஞ்சக் கூடிய கருவிகளை பயன்படுத்துவதற்கும், தெற்காசிய பிராந்திய நாடுகளின் உதவிகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கப்பலில் ஏற்பட்ட தீ எண்ணெய் களஞ்சியசாலையை நோக்கி பரவுவதை தடுக்க முயற்சி செய்து வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.
தீயை அணைப்பதற்கு எட்டுக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இழுவைக் கப்பல்கள் மூன்றும்
அடங்குவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டீ சில்வா குறிப்பிட்டார்.
இந்தக் கப்பலிலுள்ள இரண்டரை இலட்சம் பீப்பாக்களுக்கு மேலான எரிபொருட்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
தீ பரவியுள்ள ஆவு நேற னுயைஅழனெ கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ்
வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ்
வடக்கு விவசாயிகள் சுமார் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்ற
நிலையில், அவர்களுக்கு தேவையான உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கடந்த புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த விடயம்
தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் சுமார் 200
ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்செய்கைக்கு விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும்
வகையில் உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
குறித்த திட்டம் வடக்கில் வெற்றியளிக்குமாயின், உருளைக் கிழங்கு இறக்குமதியை கணிசமான அளவு குறைத்து அந்நியச் செலாணியை மீதப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் உருளைக் கிழங்கின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தீன்பண்டங்களை உற்பத்தி செய்யும் சர்வதேச தரத்திலான
தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை வரவேற்ற ஜனாதிபதி, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான
ஒத்துழைப்புக்களை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் வடக்கு விவசாயிகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் தேவையான உருளைக்
கிழங்கு விதைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி 5 இராணுவ சிப்பாய்கள் காயம்
மின்சாரம் தாக்கி 5 இராணுவ சிப்பாய்கள் காயம்
திருகோணமலை – சீனக்குடா விமான படை முகாமில் மின்சாரம் தாக்கிய நிலையில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சீனக்குடா விமான படை முகாமில் நிகழ்வொன்று இடம்பெற உள்ளதாகவும் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளுக்காக இவர்கள்
ஏணியை எடுத்துச் சென்றபோது மின்சாரம் தாக்கியதாகவும் இதனையடுத்து ஐந்து விமான படை வீரர்களையும்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வரும் தர்மேந்திரா (24 வயது), விக்ரமசிங்க
(26 வயது), ரத்னசிறி (31 வயது), பிரதீப் குமார (31 வயது), திலகசிறி (39 வயது) எனவும் தெரியவருகின்றது.
இரு காவல்துறை அதிகாரிகள் கைது – நடந்தது இதுதான்
இரு காவல்துறை அதிகாரிகள் கைது – நடந்தது இதுதான்
இலங்கையில் இரு உயர் பதவிகளை கொண்ட காவல்துறை அதிகாரிகள்
கடமை நேரத்தில் மது போதையில் காணப்பட்டதால் அவர்கள் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்
காவல்துறையினர் இரண்டாயிரத்து ஐநூறு இரகசிய உளவுத்துறையினரால்
கண்காணிக்க படுவதுடன் ,லஞ்சம் மற்றும் முறைகேடாக செயல் பட்டால்
அவர்கள் கைது செய்ய படுவதுடன் இரு நாளுக்குள் பதவி விலக்க
படுவார்கள் என கோட்டா அறிவித்திருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
ரணில் மீது கடும் விசாரணை ..? சிறை செல்வாரா ..?
ரணில் மீது கடும் விசாரணை ..? சிறை செல்வாரா ..?
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில்
விக்கிரமசிங்க தற்பொழுது ஜனாதிபதி ஆணைக்குழு முன்னணியில் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டும் வரும் இபவர் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என அஞ்ச படுகிறது
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திலுள்ள விசேட அம்சங்கள்
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திலுள்ள விசேட அம்சங்கள்
நேற்றைய தினம் வர்த்தமானி அறிவிப்பின மூலம் வெளியான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூல வரைபில், 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம்,
பாராளுமன்றத்தின் பதவிக் காலம் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கபபட்டள்ளது.
அதேவேளை ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக
வரையறுக்கப்பட்டது. அத்துடன் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்று விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தத்தில்
இருந்த 10 பேரைக்கொண்ட அரசியல்யாப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை அமைக்கப்படவுள்ளது
19ஆவது திருத்தத்தில் அரசியல் யாப்புப் பேரவையில் பத்து அங்கத்தவர்கள் இருந்தபோதும் புதிய பாராளுமன்ற பேரவை ஐந்து
அங்கத்தவர்களைக்கொண்டதாக மாத்திரமே இருக்கும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,சபாநாயகர், பிரதமரின் பிரதிநிதி மற்றும்
எதிர்க்கட்சித்தலைவரின் பிரதிநிதி ஆகியோரே புதியபாராளுமன்ற பேரவையின் ஐந்து அங்கத்தவர்களாக இடம்பெறுவர்.
அரசியல்யாப்பு பேரவையில மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பேரவையில் இவர்கள் இடம்பெறமாட்டார்கள்
20ஆவது திருத்தத்தில் சுயாதீன குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நேரடியாக நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 20 ஆவது திருத்தத்தில் அது தொடர்பில் சில
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விடயம் 20 ஆவது
திருத்தத்தில் மாற்றப்பட்டு, ஜனாதிபதியும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் மாற்றப்பட்டு, ஜனாதிபதியாலும்
அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் 20
ஆவது திருத்தத்தில் திருத்தப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35-இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது. ஆனால், 20 ஆவது
அரசியலமைப்பு திருதத்திற்கு அமைய, பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று , பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக 20 ஆவது அரசியலமைப்பு திருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேர் என்ற வரையறை 20 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தத்தில்
அதிகபட்சமாக 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்க முடியும் என்ற சரத்து 20ஆவது திருத்தத்தில்
இருந்து நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எந்த அமைச்சையும் தன்வசம் கொண்டிருக்க முடியாது எனும் 19ஆவததிருத்தச் சரத்தும் நீக்கப்பட்டு ஜனாதிபதி
எத்தனை அமைச்சு பொறுப்புக்களையும் கொண்டிருக்க முடிவதுடன் நிறுவனங்களையும் தமது நிருவாகத்தின் கீழ் கொண்டிருக்கலாம்
சட்ட மாஅதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக் கும் ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரமும் 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக 10 பல்கலைக்கழகங்கள் – பீரீஸ் அதிரடி அறிவிப்பு
தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக இன்றும் 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய
அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து
தெரிவித்தார். சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது
குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2025 நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி-கோட்டா முழக்கம்
2025 நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி-கோட்டா முழக்கம்
பொது மக்களுக்கான நீர் வழங்கும் திட்டங்கள் உயர் தரத்துடன்…
• வீதிகளை நிர்மாணித்தல் நீர்வழங்கல் அமைச்சுடன் ஒன்றிணைந்து…
2025 நிறைவடைவதற்கு முன்னர் 24 மணி நேரமும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின்
எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
ஆறுகள்இ நீர்நிலைகள் மற்றும் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதேசங்களை சுத்தம் செய்து புனர்நிர்மாணம் செய்வதற்கு விசேட
கவனத்தை செலுத்திஇ இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள்
தொடர்பாக நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
‘அனைவருக்கும் நீர்’ சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதியாகும்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் 47 இலட்சம் குடும்பங்களுக்கு நீரை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளின் மூலம் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதோடுஇ அதற்காக 40இ000 கிலோமீற்றர்கள் நீர் குழாய்கள் புதிதாக பதிக்கப்படவுள்ளது. இதுவரை நீர்வழங்கலுக்கு செலவிடப்பட்ட செலவினங்களில் அரைவாசி நிதியை பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. நீரோடைகள்இ நீரூற்றுக்களை இனங்காணல் அவற்றை அபிவிருத்தி செய்தல் இவ்வேலைத்திட்டத்தின் படிமுறைகளாகும். நீரூற்றுக்களை பாதுகாப்பதற்காக மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் முழு நீர் வழங்கலில் 45மூ வீதம் நீர்க் கசிவின் மூலம் வீணாக்கப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களில் புதிதாக நீர்க்குழாய்களை பொருத்துவதன் மூலம் அதனை 15மூ வீதம் வரை குறைக்க முடிந்துள்ளது. நீரை பாதுகாப்பதற்காக நீர்க் கசிவுள்ள இடங்களை இனங்கண்டு புதிதாக நீர்க்குழாய்களை பொருத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் உயர் தரத்தில் சுத்திகரிக்கப்பட்டு வீடுகளுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி தனது அவதானத்தை செலுத்தினார்.
நீர்க்குழாய்களை பொருத்தும்போது பாதைகளுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அதன் மூலம் தேசிய சொத்து அழிவடைவதை
தடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்வழங்கல் சபை ஒன்றிணைந்து அபிவிருத்தித்திட்டங்களை
செயற்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கு அவசியமான
செலவினத்தை 30மூ வீதம் வரை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
மழை நீரை சேகரித்தல் மற்றும் நாட்டில் உள்ள குளங்கள்இ நீர்த் தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல்இ புதிதாக குளங்கள் மற்றும் நீரை தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகளை
நிர்மாணிப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. நீர்ப்பற்றாக்குறை உள்ள பிரதேசங்களுக்கு நீரை கொண்டு செல்வதற்கு புதிய கால்வாய்கள் மற்றும் குழாய்களை
கொண்டமைந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் புதிய நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரஇ இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின்
செயலாளர் பீ.பி.ஜயசுந்தரஇ அமைச்சுஇ இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்இ துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோருடன் பொது மக்கள் நீர் வழங்கல்
செயற்திட்டத்தின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திடீர் சுற்றிவளைப்பு 386 பேர் கைது
திடீர் சுற்றிவளைப்பு 386 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 386 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (03) காலை 06 மணிமுதல் இன்று (04) அதிகாலை 05 மணிவரையான
காலப்பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 177 சந்தேக நபர்கள் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த
குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் விட்ட சந்திரிக்கா
மரமொன்றை அடியோடு வெட்டினாலும் அதன் வேர்கள் பரவியிருந்தால், அம்மரம் மீண்டும் முளைக்குமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,
அதற்குச் சில காலமெடுக்கும்; அதுவரையிலும் நான், உயிருடன் இருப்பேனா, இல்லையா என்பது தொடர்பில் தெரியாது. ஆனால், இளைஞர்களை ஒன்றிணைத்து, மரத்துக்கு உயிர்கொடுப்பேன்” என்றார்.
அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்து ஒரே கட்சி; நாட்டுக்காகப் பல நல்ல விடயங்களைச் செய்த கட்சியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
எனத் தெரிவித்த அவர், அவ்வாறானதொரு கட்சியின் தலைவிதியை எண்ணி, மனவருத்தம் அடைகின்றேன் என்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு நேற்றாகும் (02). அதனையொட்டி, தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் இன்றைய நிலையை எண்ணும்போது, படுக்கையில் இருந்து காலையில் எழும்புவதற்கே தோன்றவில்லை. இதற்குச் சில வேளைகளில் நானும் பொறுப்புக்கூற
வேண்டியவளாகின்றேன். காரணம், நான் செய்ததுக்காக அல்ல; செய்யாமல் விட்ட விடயங்களுக்காகவே பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
எனது தந்தை, கட்சியை உருவாக்கினார். தாய், அதற்கான சட்டங்களை உருவாக்கி கட்சியைப் பலப்படுத்தினார். அதனை நான், முன்னோக்கிக் கொண்டு சென்று பலப்படுத்தினேன். 2007ஆம் ஆண்டிலிருந்து கட்சியுடன் இணைந்து, அரசியலை
முன்னெடுக்குமாறு அழைப்புகள் பல வந்தன. அப்போது, பல கனவுகளுடன் நாட்டின் நிலையைக் கருத்தில்கொண்டு 2015ஆம் ஆண்டு மீண்டும் அரசியலுக்கு வந்தேன். இதற்கமைய பெரிய
கூட்டணியை உருவாக்குவோமெனத் தீர்மானித்து, கூட்டணியையும் உருவாக்கி, பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். நல்லாட்சியின் 100 நாள் வேலைத்திட்டமும் இதில்
உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், நாட்டுக்காகக் கட்சி முன்னெடுத்த அனைத்தும், எம்மால் அதிகாரத்துக்கு கொண்டுவரப்பட்ட தனியொருவரால் அழிக்கப்பட்டன என்றார்.
தனக்குப் பின்னால் வந்த இரண்டு தலைவர்களும் கட்சியின் அழிவுக்குப் பொறுப்பு கூறவேண்டும். ஒருவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழித்து, அவருக்குத் தேவையான இலங்கையில்
பிரபலமான கெசினோக்காரர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவர், பெரிய சூதாட்டக்காரர்கள், கசிப்புக் காரர்களைக் கொண்டு வந்தார்; அவர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார்.
அவர்களுக்குப் பெரிய பதவிகளையும் வழங்கி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றால் இதுதான் என்ற பிம்பத்தைக் காண்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, கட்சியின் செயற்பாடுகளை நிறுத்தமாறு தன்னிடமே தெரிவித்ததுடன், தன்னையும்
கட்சியிலிருந்து தூரமாக்கினர் என்றார். ஆனால், இந்தக் கட்சியை முழுமையாக அழிக்க முடியாது என்றார்.
தூர நோக்கு, பலம்மிக்க சிந்தனை, சிரேஷ்ட உறுப்பினர்களின் இரத்தத்தால் வளர்க்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட இக்கட்சியை அழிக்க முடியாது.
மரமொன்றை அடியோடு வெட்டினாலும், மரத்தின் வேர் பரவியிருந்தால் அது முளைக்கும்; ஆனால், அதிக நாள்கள் எடுக்கும். அதுபோலவே, எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியெனும் இந்த மரமும்
முளைக்கும். அப்போது, நான் உயிருடன் இருப்பேனோ தெரியாது. ஆனால், இந்த மரத்துக்குப் பலம் சேர்ப்பதற்குத் தேவையான இளைஞர் சமூகத்தை உருவாக்க ஒத்துழைபேன் என்றார்
புதிய அரசியலமைப்பை உருவாக்க 09 பேர் கொண்ட குழு
புதிய அரசியலமைப்பை உருவாக்க 09 பேர் கொண்ட குழு
புதிய அரசியலமைப்பு வரைவினை உருவாக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா குழுவின் தலைவராவார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
நீதித்துறையுடன் தொடர்புடைய ஏனைய 8 பேர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளை ஒழிக்க இந்தியா விடுமா ..?
மாகாண சபைகளை ஒழிக்க இந்தியா விடுமா ..?
மாகாண சபை முறைமையே நாட்டின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய சரியான முறையெனத் தெரிவித்த முன்னாள் எம்.பி.
ஹிருணிகா பிரேமசந்திர, மாகாண சபை முறையை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவால் முடியாது என்றார்.
இலங்கைக்குள் மாகாண சபை முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறிக்கொண்டாலும் இந்தியா ஒரு முறை சீற்றமடைந்தால், இவர்கள் அடங்கிடுவர் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
அரசாங்கம், 13ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு, மாகாண சபை முறையை முற்றாகத் துடைத்தெறிய முயற்சிப்பதாகக்
கூறிக்கொண்டிருந்தாலும், இந்தியாவைப் பகைத்துக்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே 13ஆவது திருத்தத்தை அமல்படுத்த வேண்டுமென்ற இணக்கப்பாடு இந்தியாவுடன் எட்டப்பட்டதெனத் தெரிவித்த அவர், மாகாண
சபைகள் அவசியமில்லை எனக் கூறும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர போன்றவர்கள், நாட்டில் தேசிய பிரச்சினை இன்றும் முடிவுக்கு வரவில்லை என்பதை மறந்துவிட்டனர் என்றார்.
எவ்வாறாயினும், மக்கள் மத்தியில் பிரச்சினையொன்று நிரந்தரமாகவே இருக்க வேண்டுமென்ற நோக்கம், நாட்டின்
அரசியல்வாதிகளுக்கு உள்ளதெனவும், அவ்வாறான பிரச்சினைகள் நீடித்தால் மாத்திரமே அவர்களால் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் சாடினார்.
எவ்வாறாயினும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியமென்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள்
சக்தி உள்ளதெனத் தெரிவித்த அவர், அதனூடாக நாட்டின் சகல மாகாணங்களுக்கும் ஒரே அளவிலான அதிகாரப் பகிர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
1980களில் ஏற்பட்ட இனக்கலவரங்களைப் போன்று, புதிய கலவரங்களைத் தோற்றுவிக்கவே மாகாண சபை முறைமையை
நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவெனச் சாடிய அவர், மாகாண சபைகள் முறைமை ‘வெள்ளை யானை’ ஆவதற்கு
அதன் பணியாளர்களும் அதற்குத் தெரிவான உறுப்பினர்களுமே காரணமென்றும் சாடினார்.
கிழக்கு மாகாண ஆளுனருடன் மகிந்தா சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும், பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று (2020.09.02) அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநரினால் பிரதமருக்கு
தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை
விரைவுபடுத்துவதற்கு தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இயற்கை அழகு கொண்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் துறையை
மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தொல்பொருள்
பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்து கொண்டார்.
13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து அமைச்சரவையில் ஒரு சொல்லேனும் பேசப்படவில்லை
13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து அமைச்சரவையில் ஒரு சொல்லேனும் பேசப்படவில்லை
13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒரு சொல்லேனும் பேசப்படவில்லை
என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை
நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரவையில் விடயமொன்றில் தீர்மனம் மேற்கொள்வதற்கு நீண்ட நாள் செல்லக்கூடும், ஆனால் 20 ஆவது அரசியல் அமைப்பு
திருத்தம் குறித்து அமைச்சரவையில் விரைவாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து பேச்சப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் அமைச்சரவையில் ஆராயப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் 3 வாரத்தின் பின்னர்
சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனே இது நிறைவேற்றப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டுள்ளது.
இந்த திருத்தத்திற்கு எதிராக எவராவது நீதி மன்றம் சென்றால் மேலும் 3 வார காலம் செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்பு விரிவாக ஆராயப்படாமல் அரசாங்கம் ஒருபோதும் நிறைவேற்றாது.
சகல தரப்பினரும் கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். புதிய அரசியல் யாப்பு
வகுப்பது ஒருவிடயம். இதற்கு பிரசித்திபெற்ற யாப்பு சட்டத்தரணி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவே இதனை ஆராயும் என்று தெரிவித்த அமைச்சர் 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து விளக்கமளிக்கையில்
முன்னைய அரசாங்கமும் சர்வதேசமும் இது குறித்து திருப்தி கொண்டிருக்கவில்லை.
நாட்டின் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டுமா? சபாநாயகரிடம் இருக்கவேண்டுமா? என்ற இழுவறி நிலை
நிலவியது. இதனால் நாட்டை முன்னெடுக்க முடியாதிருப்பதாக முன்னால் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காகவே அரசியல் யாப்பில் 20 ஆவது திருத்தத்தை மேற்கொண்டு நாட்டை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம், 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு திருத்தம் ஆகியவற்றை
மேற்கொள்வதற்காக மக்கள் அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியுள்ளனர்.
எந்த சந்தர்ப்பத்திலும் 3 இல்2 பெரும்பான்மையை பெறமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜயவர்தன தெளிவாக
தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த பொது தேர்தலில் மக்கள் இந்த நிலைப்பாட்டை புறந்தள்ளி சமகால அரசாங்கத்திற்கு 3 இல் 2 பெரும்பான்மையை வழங்கியுள்ளார்.
முன்னைய அரசாங்கத்திலும் புதிய அரசியல் யாப்புக்காக யாப்பு ஒன்று வரையப்பட்டுள்ளது. அதிலிருந்த சில விடயங்களில் கவனம் செலுத்த முடியும் அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்
அந்த யாப்பு திட்டத்தில் நாட்டை சமஸ்டியாக பிரிப்பதற்கான விடயங்கள் உண்டு அதனால் அதனை எற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்
இலங்கை கடலில் எரியும் வெளிநாட்டு கப்பல்
இலங்கை கடலில் எரியும் வெளிநாட்டு கப்பல்
பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு
அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பலொன்றில் தீ பற்றிக்கொண்டது.
MT நியூ டைமைன் கப்பலில் உள்ள ஊழியர்களை மீட்பதற்கு தேவையான
நடவடிக்கையை கடற்படை மேற்கொண்டிருப்பதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் இந்தியாவை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பணியாளர்களை மீட்கும் பணியை திருகோணமலை கடற்படை முகாமில்
இருந்து 2 கப்பல்களும், ஹம்பாந்தோட்டை கடற்படை முகாமில் இருந்து
ஒரு கப்பலும் சம்பந்தப்பட்ட கடற்பிரதேசத்திற்கு சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த கப்பலை அவதானிப்பதற்காக குறிப்பிட்ட கடல் பிரதேசத்தில்
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளர்.
ஜனாதிபதி ஆளும் காலத்தை அதிகரிக்க கோட்டா அரசு திட்டம் – மாற்ற படவுள்ள சட்டம்
ஜனாதிபதி ஆளும் காலத்தை அதிகரிக்க கோட்டா அரசு திட்டம் – மாற்ற படவுள்ள சட்டம்
இலங்கையில் அளவும் இரத்த வெறி பிடித்த கோட்டா ஆட்சியில் ஆளும்
ஜனாதிபதிகள் காலத்தைநீடிக்கும் நிலையான சட்ட மாற்றத்தை ஏற்படுத்த கோட்டா முயற்சித்து வருகிறார்
விரைவில் கடந்த கால ஆட்சியில் ஏற்படுத்த பட்ட மாறுதல்கள் மாற்ற
பட்டு புதிய ஆட்சி கால் ஆயூலை நீடிக்கும் வகையிலான சட்ட மாற்றங்கள் ஏற்படுத்த படவுள்ளது
இது சர்வாதிகார ஆட்சிக்கு உரித்தான முறையில் அமைய பெறவுள்ளதாக எதிர்பார்க்க படுகிறது .
தனித்து ஆட்சி அமைத்துள்ள கோட்டா அரசு தாம் நினைத்த படி எதனையும் செய்திடும் நிலையில் உள்ளனர் என்பதே இங்கே கவனிக்க தக்கது
இலங்கையில் 553,000 பேர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர் – வெளியான திடுக்கிடும் தகவல்
இலங்கையில் 553,000 பேர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர் – வெளியான திடுக்கிடும் தகவல்
இலங்கையில் ஆளும் பவுத்த பேரினவாத சிங்கள அரசுகளின்
ஆட்சியில் நாடெங்கிலும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன ,
அரசியல் ,மற்றும் போலீசார் செல்வாக்குடன் இந்த வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
தமிழர் தாயக பகுதியில் வைசிக்கும் தமிழர்களும் இந்த போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர்
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கடந்த ஆண்டு புள்ளி
விபரங்களின் படி 553,000 பேர் இதற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது






