கிழக்கு மாகாண ஆளுனருடன் மகிந்தா சந்திப்பு

Spread the love

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும், பிரதமர் மஹிந்த

ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று (2020.09.02) அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநரினால் பிரதமருக்கு

தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை

விரைவுபடுத்துவதற்கு தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இயற்கை அழகு கொண்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் துறையை

மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தொல்பொருள்

பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *