Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாணசபை தேர்தலை
நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மகிந்தா தலைமையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த பேச்சு
மகிந்தா தலைமையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த பேச்சு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நண்பகல் (12 மணிக்கு) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும சற்று முன்னர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கடந்த 90 நாட்களாக தொடர்ந்துவரும் தொழிற்சங்க போராட்டம் குறித்து இன்று (12)நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியராளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
இன்று எட்டப்படும் சுமுகமான தீர்வை அடுத்து மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் எந்தவித தடையும் இருக்காது என்றும் அமைச்சர் கூறினார்.
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி தகராறு காரணமாக தனது மாமனின் கையை மணிக் கட்டுக்கும் முழங் கைக்கும் இடையில் வெட்டித் துண்டாக்கிய பூசகர் துண்டாக்கிய கையை வாய்க்காலுக்குள் எறிந்துள்ளார்.
கை துண்டாடப்பட்ட நிலையில் 57 வயதான முதியவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான வண்டி
50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான வண்டி
ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் பகுதில் கெப் ரக வாகனம் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து ஓடையில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (10) இரவு ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பகுதியில் இருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்து கெப் வண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சாரதி மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது
ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது
பொய் சொல்லிட்டார் எனக்கூறி தன்னுடைய ஐந்து வயதான மகளின் வாயில் சூடுவைத்து, கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்டப்பட்ட குடியிருப்பு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாயை சுற்றியும் தொடைப்பகுதியிலும் கடுமையான சூட்டுக்காயங்களுக்கு உள்ளான அச்சிறுமி, அக்கராயன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையின் தந்தை தொழிலுக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கோபமடைந்த அத்தாய், கையிலிருந்த பீங்கானை சூடாக்கி, ஐந்து வயதான மகளின் வாயைச் சுற்றியும், தொடைகளிலும் இவ்வாறு சூடு வைத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனையடுத்தே சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு பொலிஸாரினால் அச்சிறுமி மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு
சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 10 ரூபாயால் விலையை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெடித்து சிதறும் எரிமலை
வெடித்து சிதறும் எரிமலை
எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் தொடர்ந்து வெடித்து சிதறும் எரிமலை- ஆறுபோல் வழிந்தோடும் லாவா குழம்பு
எரிமலை வெடிப்பு
ஸ்பெயினின் லா பல்மா தீவில் சீற்றத்துடன் காணப்பட்ட கும்ரே வீஜா எரிமலை, கடந்த மாதம் 19ம் தேதி வெடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து சீற்றத்துடன் லாவா குழம்பை கக்கி வருகிறது.
எரிமலையிலிருந்து வெளிப்படும் லாவா குழம்பு, மலை முகட்டில் ஆறுபோல் வழிந்தோடி வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள 4 கிராமங்களில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்களும், சுற்றியுள்ள நிலங்களும் அழிந்துவிட்டன.
லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறுவதை அப்பகுதி மக்கள் அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். எரிமலை வெடிப்பால் அப்பகுதியில் வசித்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கேனரி தீவுகளின் மற்ற விமான நிலையங்களும் திறக்கப்பட்டன.
தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்
தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்- 16 பேர் பலி
விமான விபத்து
ரஷியாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விமானம் தரையில் மோதியதில் இரண்டாக உடைந்தது. இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் ரஷியாவின் ராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம்
பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம்
பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை எனப் போற்றப்படும் அப்துல் காதிர் கான் இன்று மரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம்
அப்துல் காதிர்கான் மரணம்
இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதற்கு போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்கியது. இதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான்.
அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கினார். இதன் காரணமாக அவர் பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைக்கப்பட்டார்.
85 வயதான அவருக்கு சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு! photo
கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன்
இராணுவத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயம் அமைந்திருக்கும் வீதியின் நுழைவாயிலில் இராணுவத்தடை அமைத்து அவ்வீதியால் செல்பவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தினர்..




மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவை 21ம் திகதி மீண்டும் ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவை 21ம் திகதி மீண்டும் ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படும் என்று தற்போது சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,இதன்படி மாகாணங்களுக்கு இடையில் பஸ் மற்றும் ரெயில் சேவை ஆரம்பிக்ககூடியதாக இருக்கும் என்றார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக விசேட பஸ் சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்த்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.
நாளை முதல் அரிசி கிலோ 100 ரூபாவுக்கும் குறைவாக விற்பனை
நாளை முதல் அரிசி கிலோ 100 ரூபாவுக்கும் குறைவாக விற்பனை
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி நாளை (10) கொழும்பு துறை முகத்தை வந்தடையவிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,இந்த
அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ ரூபா 100 க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை ,எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்hர்.
இலங்கை தமிழர்களை கட்டாய படுத்தி அனுப்ப மாட்டோம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
இலங்கை தமிழர்களை கட்டாய படுத்தி அனுப்ப மாட்டோம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் அலீப் மருத்துவ அறக்கட்டளையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலுஇ தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போதே அமைச்சர் செஞ்சி மஸ்தான் இவ்வாறு குறிப்பிட்டார் என்று தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் 110ன் விதியின் கீழ் இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்தில் 108 முகாம்களில் வசித்து வருகின்றனர். 2 முகாம்கள் காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது. மற்ற 106
முகாம்களில் 12 முகாம்களுக்கு சென்று நான் ஆய்வு செய்த போது, அந்த ஆய்வின் அறிக்கையின் படி முதல்வர் கலைஞரின் திட்டம் தொடரவேண்டும் என்று அகதிகள் தெரிவித்தனர்.
317 கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு உணவு. உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் புதிதாக வீடுகள் கட்டி தரக்கூடிய திட்டம், கல்வி திட்டம், படித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில்
வேலை வாங்கி தரும் நிலையை உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கபட்டு அவை செயல்படுத்தபட்டு தொடர்ந்து அரசின் உத்தரவுகளை நிறைவேற்றபட்டு வருகிறது.
18 அரசாணைகளை முதல்வர் போட்டுள்ளார். தற்போது கூட 3 அரசாணைகளுக்கு நான் கையொப்பமிட்டு வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அமைச்சர் என்ற முறையில் நாங்கள் எப்போதும் இலங்கை தமிழர்களை
காப்பவர்களாக இருப்போம். யாரையும் கட்டாயபடுத்தி இலங்கை அனுப்பமாட்டோம், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேலும் தெரிவித்துள்ளார்.
நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்
நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்
குழந்தை பெற்றெடுத்ததும் தாய்க்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்
குழந்தை பெற்றெடுத்த பெண்ணுடன் மருத்துவக் குழுவினர் மற்றும் விமான ஊழியர்கள்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
கொச்சி:
லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கொச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. விமானம் கருங்கடலை கடந்து வந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த, கேரளாவைச்
சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. நல்லவேளையாக அந்த விமானத்தில் மருத்துவக் குழுவினர் பயணித்தனர். அவர்கள் உடனடியாக கர்ப்பிணிக்கு உரிய
சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தனர். விமான ஊழியர்களும் உதவி செய்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தாய்க்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர்
தாயையும், குழந்தையையும் பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். விரைவில் அவர்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஏர் இந்தியா அதிகாரி கூறி உள்ளார்.
அகதிகள் படகு கவிழ்ந்து 50 பேர் மரணம் – 70 பேரை காணவில்லை
அகதிகள் படகு கவிழ்ந்து 50 பேர் மரணம் – 70 பேரை காணவில்லை
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக அகதிகளை காவியபடி படி பயணித்த கப்பல் ஒன்று
திடீரென மூழ்கியது இதன் பொழுது ஐம்பது பேர் வரை பலியாகியுள்ளனர்
மேலும் எழுபது பேரை காணாவில்லை
39 பேர் மீட்க்க பட்டுள்ளனர்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான கடல் வழி ஊடக பயணித்த அகதிகளில் 24 ஆயிரம் பேர் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் – வெடித்தது போர்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் – வெடித்தது போர்
ரஷியா சிரியா எல்லையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்கா உளவு விமானம் ஒன்று
சிரியா இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட விமானம் பல மில்லியன் பெறுமதியானது என தெரிவிக்க பட்டுள்ளது .
அரேபிய நாடுகளை ஏப்பம் இட்டு மீட்டு அதன் வளங்களை கொள்ளையடித்த அமெரிக்கா இப்போது
சிரியாவை முற்று முழுதாக அபகரிக்க முனைந்து தோற்று போன
நிலையில் மீளவும் அந்த நாட்டின் மீது சுற்றிவளைப்பு தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
வெட்ட பட்ட நிலையில் மீட்க பட்ட பல டசின் கங்காரு
வெட்ட பட்ட நிலையில் மீட்க பட்ட பல டசின் கங்காரு
அவுஸ்ரேலியா தெற்கு கடல் கரை பகுதியில் பல டசின் காணக்காண கங்காருகள் வெட்டி எடுக்க பட்ட நிலையில் சடலங்களாக மீட்க பட்டுள்ளன
இவை மர்ம கும்பலினால் இறைச்சிக்கு வேட்டையாட பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
லண்டனில் பற்றி எரிந்த பண்டி பண்ணை
லண்டனில் பற்றி எரிந்த பண்டி பண்ணை
பிரிட்டன் Wallingford in Oxfordshire பகுதியில் பெரும் பண்டி பண்ணை ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்தில் சிக்கி பல பண்டிகள் இறந்துள்ளன
இவ்வாறு இறந்த பண்டிகள் பேகனுக்கு பயன் படுத்தலாம் என ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளாராம்
பண்டிகள் இறைச்சிக்கு வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த 64 இலங்கையர்கள் கைது
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த 64 இலங்கையர்கள் கைது
இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை
விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி
இலங்கையில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது
பரவி வரும் நோயினை தடுக்க இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது






