Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் தொடரும் கடத்தல் சபையில் சிறீதரன் எம்.பி!video

வடக்கு கிழக்கில் தொடரும் கடத்தல் கைதுகள்: கேள்வி கேட்டால் புலனாய்வாளர்கள் என்று வெருட்டல்; சபையில் சிறீதரன் எம்.பி!

யாழ் தேர்தல் மாவட்டத்தின் வலி வடக்கு பகுதியில் 18 கிராம அலுவலர் பிரிவில் பகுதியளவு குடியேற்றமே செய்யப்பட்டிருக்கிறது, 3 கிராம அலுவலர் பிரிவில் முற்றாக குடியேற்றங்கள்

எதுவுமே ஏற்படுத்தப்படவில்லை. அதே போல் கிளிநொச்சியின் பச்சிளைபள்ளி பிரதேச அலுவலர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்று மக்கள்

குடியேற்றப்படவில்லை. இப்படியான நிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 1 பாராளுமன்ற ஆசனத்தை குறைத்திருப்பது பிழையான ஒரு செயல். இந்த தவறு விரைவில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என இந்த உயரிய சபை மூலமாக கோரிக்கை விடுக்கிறேன்.

என தனது கருத்துக்களை நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தனது உரையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார்

click here full video

    Posted in Uncategorized

    சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் -சிறுமி மரணம்

    சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் -சிறுமி மரணம்

    பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

    இந்தச் சம்பவம் இன்று (8) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

    அங்கு தங்கியிருந்த குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது ஆறு வயதுடைய சியாம் செய்னப் எனும் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

    இவ்வாறு நீரில் மூழ்கி மரணமான சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in Uncategorized

      அமெரிக்கா செல்ல வெளி நாட்டினருக்கு அனுமதி!

      அமெரிக்கா செல்ல வெளி நாட்டினருக்கு அனுமதி!

      நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

      கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      அமெரிக்கா வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதோடு, பயணத்திற்கு 3 நாள்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

      மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

        Posted in Uncategorized

        பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருந்த பிணைக்கைதிகள் 187 பேர் மீட்பு

        பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருந்த பிணைக்கைதிகள் 187 பேர் மீட்பு

        நைஜீரியாவில் பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருந்த பிணைக்கைதிகள் 187 பேரை அந்நாட்டு போலீசார் பத்திரமாக மீட்டனர்.

        நைஜீரியா போலீஸ் அதிரடி – பயங்கரவாதிகள் கடத்திய 187 பிணைக்கைதிகள் மீட்பு
        மீட்கப்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமியர்

        ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களைக் கடத்தி அவர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசை மிரட்டி தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

        அந்த வகையில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் பெண்கள், சிறுவர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

        இதற்கிடையே, அவர்களை பத்திரமாக மீட்க பயங்கரவாதிகளுடன் மாநில அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனாலும் பயங்கரவாதிகள் அவர்களை விடுவிக்காமல் இருந்து வந்தனர்.

        இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அப்பாவி மக்கள் சிபிரி வனப்பகுதிக்குள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 100-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் சிபிரி வனப்பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

        போலீசாரைக் கண்டதும் மக்களை சிறைப்பிடித்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, பிணைக்கைதிகளாக இருந்த 187 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

          Posted in Uncategorized

          இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு

          இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு

          கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய மூன்று செயலிகளும் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேல் முடஙகியது குறிப்பிடத்தக்கது.

          ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு
          இன்ஸ்டாகிராம்

          உலக அளவில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவை மிகப் பெரிய சமூக வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன. அவற்றில் மக்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

          இதற்கிடையே, நேற்று நள்ளிரவு இன்ஸ்டாகிராம் செயலி திடீரென முடங்கியது. இதனால் அதன் பயனாளிகள் அவதிக்குள்ளாகினர்.

          இந்நிலையில், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதற்கு அந்நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விரைவில் இந்த குறை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

            Posted in Uncategorized

            கோட்டா சகோதரி கணவர் ஊழல் – விசாரணை குழுவில் ஆயர்

            கோட்டா சகோதரி கணவர் ஊழல் – விசாரணை குழுவில் ஆயர்


            முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

            சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பென்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன.

            இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், அவர் இன்று(08) காலை முன்னிலையாகியுள்ளார்.

            இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

            Posted in Uncategorized

            தீயிலுள்ள எரிந்து தீயினால் ஐவர் மரணம்

            தீயிலுள்ள எரிந்து தீயினால் ஐவர் மரணம்

            நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

            உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.

            மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

            இதேவேளை, இத்தீப்பரவல் இடம்பெற்ற போது, குறித்த வீட்டிலிருந்த 35 வயது மகன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

            மேலும் சம்பவம் நடந்த வீட்டில் உயிரிழந்த ஒருவயது சிறுவனுக்கு நேற்று (07) முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

            Posted in Uncategorized

            வீழ்ந்து சிதறிய அமெரிக்கா போர் விமானம் – குதித்த விமானி தப்பினார்

            வீழ்ந்து சிதறிய அமெரிக்கா போர் விமானம் – குதித்த விமானி தப்பினார்

            அமெரிக்கா கலிபோனியா பகுதியில் அமெரிக்கா கடற்படைக்கு சொந்தமான F/A-18F Super Hornet
            ரக சண்டை விமானம் ஒன்று திடீரென வீழ்ந்தது ,இவ்வேளை இதனை செலுத்தி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பினார்

            பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளார், விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

              Posted in Uncategorized

              தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி

              தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி

              தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

              தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி
              சென்னை ஐகோர்ட்
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.

              இதை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

              சுப்ரீம் கோர்ட்

              அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நெடுஞ்சாலைகளை சிலைகளை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதால், சிலையை அகற்றியதில் தவறில்லை’ என்று கூறினார். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

              மேலும் நீதிபதிகள், ‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகள், புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்களில் உள்ள தலைவர்கள் சிலைகளை மூன்று மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். பொதுமக்கள் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைப்பது குறித்து விரிவான விதிகளை வகுக்க வேண்டும்.

              அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் சிலைகளை அகற்றி, பூங்கா போன்ற இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது

                Posted in Uncategorized

                பிரபாகரன் மகன் கொலை- அதிர்ந்த பாரளுமன்றம்- சீறிய ஸ்ரீதரன் எம்பி

                பிரபாகரன் மகன் கொலை- அதிர்ந்த பாரளுமன்றம்- சீறிய ஸ்ரீதரன் எம்பி

                அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தி நிற்கும் சிறுவர் படுகொலைகள்: சிறீதரன் எம்.பியின் பேச்சால் நாடளுமன்றில் கூச்சல் குழப்பம்!

                கடந்த வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர்.01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமான அன்றைய நாள், இலங்கை அரசால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் செல்வன்.பிரபாகரன் பாலச்சந்திரன் அவர்களது 25 ஆவது அகவை நாளாகும்.

                முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழர்களைக் கொன்றொழித்த இனவாத அரசின் கோர முகத்தை இந்த உலகுக்கு எண்பித்த ஆகப்பெரும் போர்க்குற்றச் சாட்சியமாய் இசைப்பிரியாவின் இறுதிக் கணங்களும், பாலச்சந்திரனின் படுகொலையும் அமைந்திருந்தது.

                சுற்றிவர மண்மூட்டைகளால் சூழப்பட்ட ஓர் மரப்பலகையில், கையில் ஒரு பிஸ்கட் பக்கற்றும், கையருகே ஓர் நீர்க்குவளையுமாக, எந்தச் சலனமுமற்று எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த பன்னிரு வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தையும், அதே

                பாலச்சந்திரன் மேலாடையற்ற மார்பில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளத்தோடு, உயிர்பிரிந்த நிலையில் தரையில்க் கிடந்த புகைப்படத்தையும் சனல்.4 தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கணங்கள், உலகப் பரப்பெங்கும் வாழும் இதயமுள்ள ஒவ்வொரு மனிதர்களையும் இனம், மொழி, மதம் கடந்து இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தது.

                தமிழீழத் தேசியத் தலைவராக, தமிழர்கள் தம் நெஞ்சில் வைத்துப் பூசித்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் என்ற ஒற்றைக் காரணமே, பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரனை கோரமாகப் படுகொலைசெய்த இந்த இனவெறி அரசின்

                உயிர்ப்பலிப் பசிக்குப் போதுமானதாக இருந்தது. காலம்காலமாக ஆட்சிக்குவந்த அத்தனை சிங்கள அதிகார பீடங்களும் தமிழர்கள் மீதான அதிகபட்ச அதிகார வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராகவும்,

                தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்த அப்போதைய ஆட்சிக் காலத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து ஈழத்தமிழர்கள் மீது இரக்கமற்று நடத்தப்பட்ட

                இன அழிப்பிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியங்களுள் ஒன்றாய் அமைந்த பாலச்சந்திரனின் சாவு, ஒட்டுமொத்த தமிழர்களின் இதய ஓரங்களிலும் இன்னமும் ரணமாய் வலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

                1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பிலான பிரகடனத்தை ஏற்று, 1991 ஆம் ஆண்டு இலங்கை அதில்

                கைச்சாத்திட்டுள்ள போதும், இந்த நாட்டில் தமிழ்ச் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ற சொற்பிரயோகத்துக்கு எந்த அவசியமுமற்று, அவர்களுக்கான உயிர்வாழும் உரிமை கூட பௌத்த சிங்கள பேரினவாதிகளால் வலிந்து பறிக்கப்பட்டு வருவதை இவ்விடத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

                இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட எண்ணுக்கணக்கற்ற சிறுவர்கள், ஆவணப்படுத்தப்படாத படுகொலைச் சம்பவங்கள், கணக்கிடப்படாத இழப்புக்களைக் கொண்ட படுகொலைகள் நீங்கலாக 1974 ஜனவரி 10 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை முதல் 2008 டிசம்பர் 20

                வட்டக்கச்சி குண்டுவெடிப்பு வரையான, ஆவணப்படுத்தப்பட்ட 95 படுகொலைச் சம்பவங்களில் மட்டும் கைக் குழந்தைகள் தொடக்கம் 18 வயது வரையான 1929 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                இவற்றுள் மிக முக்கியமாக நவாலிப் படுகொலை உள்ளிட்ட, அரச படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சம்பவங்களைக் குறிப்பிடலாம். 1995 ஜீலை 9, பலாலி மற்றும் அளவெட்டிப் பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்த்

                தாக்குதல்களால் நிலைகுலைந்து, உடுத்த உடைகளுடன் உயிரைக் கையில்பிடித்தபடி, நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள்,

                வயோதிபர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மீது புக்காரா விமானங்கள் ஈவிரக்கமின்றி வீசிச் சென்ற 13 குண்டுகளால், 147 பேர் கொல்லப்பட்டதோடு, 360 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இதன்போது கொல்லப்பட்டவர்களுள் 46 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

                1995 செம்ரெம்பர் 22 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 6 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியாகியிருந்தார்கள்.

                1996 செப்ரெம்பர் 7 ஆம் திகதி, யாஃசுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவியான செல்வி.கிருஷாந்தி குமாரசாமி அவர்கள், செம்மணி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதோடு, அவரைத் தேடிச்சென்ற

                தாயார் திருமதி.இராசம்மா குமாரசாமி, அயலவர் திரு.கிருபாமூர்த்தி, சகோதரன் செல்வன் குமாரசாமி பிரணவன் ஆகியோரையும் இராணுவத்தினர் படுகொலை செய்து செம்மணி வயல் வெளியில் புதைத்திருந்தனர்.

                அக்காலப்பகுதியில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்ட 600 இற்கும் அதிகமான யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அதே செம்மணி வயல் வெளியில் புதைக்கப்பட்டமையும் இந்த நாட்டில் நடைபெற்ற படுகொலைகளுக்கான சாட்சியங்களே!.

                2006 ஓகஸ்ட் 14, முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் சிறுவர் இல்லம், நலன்புரி நிலையம், குடியிருப்புக்கள் என்பன அமைந்திருந்த பகுதியில், அதிலும் குறிப்பாக அநாதரவான குழந்தைகளின் காப்பகமான செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை இலக்குவைத்து, மிகப்

                பயங்கரமாக 16 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவிகள், செஞசோலைச் சிறுவர் இல்லச் சிறுமிகள் உள்ளிட்ட 17 – 19 வயதிற்கு இடைப்பட்ட 61 பேர்

                கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, 120 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.

                2007 கார்த்திகை 27, தமிழ்த் தேசிய மாவீரர் தினமான அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயங்கன்குளம் பகுதியில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

                குழந்தைகள், சிறுவர்கள் என்ற எந்த பேதமுமற்று, அடிப்படை மனிதநேயச் சிந்தனைகூட இல்லாது, சர்வதேச நியமங்கள் அனைத்தையும் மீறி, தமிழர்கள் என்ற இனவெறிச் சிந்தனையின்

                வெளிப்பாட்டால், பௌத்த, சிங்கள பேரினவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட பாலச்சந்திரன் உள்ளிட்ட அத்தனை சிறுவர்களையும் நான் இந்த இடத்தில் நினைவுகூருகிறேன்.

                இதற்கு அப்பால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

                எம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில்

                1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,
                2. மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,
                3. யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,
                4. கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,
                5. மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,
                6. அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,
                7. நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,
                8. விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,
                9. வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,
                10. சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,
                11. வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,
                12. அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,
                13. மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,
                14. புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

                இச்சம்பவங்கள் அனைத்தும் இலங்கை அரசின் கோர முகத்தை எண்பிக்கும் சாட்சியங்களாக, ராஜபக்சக்களின் கறைபடிந்த கரங்களின் விம்பங்களாக கடைசி ஈழத்தமிழன் உள்ளவரை, அவர்களின் வாழ்வியல் வலிசொல்லும் வடுக்களாக நெஞ்சப் பசுமைகளில் என்றுமே நிலைத்திருக்கும்.

                இந்த நினைவுகளுக்கும், இலங்கை நாட்டின் சுதேசிய இனமான தமிழ்த்தேசிய இனம் காலம்காலமாக சிந்தி வரும் கண்ணீருக்கும், காரணமானவர்கள் கரிசனையற்றுக் கண்மூடி இருந்தாலும் காலமாவது பதில் சொல்லட்டும்.

                Posted in Uncategorized

                கொரனோ மருத்துவ மண்டபத்தில் – மாவீரர் நாள் – லண்டன் புலிகள் அறிவிப்பு

                கொரனோ மருத்துவ மண்டபத்தில் – மாவீரர் நாள் – லண்டன் புலிகள் அறிவிப்பு

                பிரிட்டன் லண்டன் பகுதியில் கொரனோ காலத்தில் அதிக மக்கள் பாதிக்க பட்டனர் ,அவ்வாறான வேளை வழமையாக மாவீரர் நாள் இடம் பெறும் எஸ்சல் மண்டபம் தற்காலிக கொரனோ

                மருத்துவமனையாக மாற்றம் பெற்றது ,அவ்வாறான அந்த மண்டபத்தில்
                பிரித்தானிய புலிகள் குழு மாவீரர் நாள் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்

                இது அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,கொரனோ மீளவும் பரவி வரும் நிலையில் மூன்றாவது ஊசி செலுத்த பட்டு வருகிறது

                இதனாலேயே மக்கள் பீதியடைந்துள்ளனர் ,இதனை கருத்தில் கொண்டு மேற்படி செயல்பாட்டு குழுவினர் செயல்படுவார்களா என்பதே மக்கள் கருத்தாக உள்ளது

                  Posted in Uncategorized

                  கதலர்கள் ஓட்டம் – நண்பர்கள் சிறையில் – பளையில் நடந்த பயங்கரம்

                  கதலர்கள் ஓட்டம் – நண்பர்கள் சிறையில் – பளையில் நடந்த பயங்கரம்

                  நண்பர்களே அதிகம் பகிருங்கள்…

                  இந்த படத்தில் உள்ள நபர் பளை பிரதேச புலோப்பளையை சேர்ந்தவர்.இவர் தனது நண்பர்களிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் எனது காதலை சேரத்து வைக்குமாறும்

                  கேட்டிருக்கிறார்.இல்லாவிட்டால் தான் உயிரை மாய்த்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதை கேட்ட அப்பாவி நண்பர்கள் அந்த பெண்ணின் வயது என்னவென்று கேட்ட போது அதற்கு அவர்

                  18வயது என்று பொய் கூறியுள்ளார். உடனே நண்பர்கள் சேர்ந்து அந்தப்பெண்ணை அவரது வீட்டில் இருந்து தூக்கி சென்று அந்த காதலனுடன் சேர்த்து வைத்துள்ளார்கள்.

                  அதன் பின் அந்த காதலன் அவரது தொலைபேசி அனைத்தையும் நிறுத்தி விட்டு தலை மறைவாககயுள்ளார்.

                  சேர்த்து வைத்த நண்பர்களை பளை பொலிசார் கைது செய்துள்ளனர்.அதன் பின்தான் தெரியும் அந்த பெண்ணுக்கு வயது 15என்று ஓடிச் சென்ற இருவரும் நிம்மதியாக இருக்க சேர்த்து வைத்த

                  இளைஞர்கள் கைதாகி சிறையில் வாடி நிற்கின்றனர்.தற்பொழுது கைதானவர்களின் உண்மையான நண்பர்கள் இரவு பகலாக உண்ணாமல் ஓடிய காதலர்களை தேடி வருகின்றனர்.

                  காரணம் அவர்கள் வந்தால்தான் சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவார்களாம்.உண்மையில் சம்பந்தமே இல்லாமல் போலியான நண்பனுக்கு உதவிய

                  நண்பர்கள் விடுதலையாக நீங்களும் உதவி புரியுங்கள்.ஓடிய இருவரும் வடமாகாணத்தினுள்தான் சுற்றி திரிகின்றனர்.நண்பனை ஏமாற்றியவர்கள் அவர்கள் தங்கி நிற்கின்ற வீடுகளுக்கு பொய் வார்த்தைகளை கூறி நிற்கின்றனர்.

                  எனவே அன்பானவர்களே எந்த பிழையும் இல்லாமல் நண்பனின் ஏமாற்றத்தால் சிறையில் உள்ள நண்பர்கள் விடுதலையாக உதவிடுங்கள்.இவர்களை எங்கு கண்டாலும் தெரியப்படுத்துங்கள்.

                  நன்றி
                  பளை ஈசா

                  காதலர்கள் கருத்து தரப்படின் பகிர படும்

                    Posted in Uncategorized

                    போத்தலில் உச்சா வடிக்கும் – முசுலிம் பயங்கரவாத எம்பி


                    போத்தலில் உச்சா வடிக்கும் – முசுலிம் பயங்கரவாத எம்பி

                    இலங்கையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பட்டுள்ள ரிசார்ட் பதியுதீன்மாலை ஐந்து மணிக்கு பின்னர் போத்தலில் சிறுநீர்கழிப்பதாக பாராளுமன்றில் கலவரம் வெடித்துள்ளது

                    இது சிறைகளில் இயல்பான ஒன்று எனவும் இதனையே சிறையில் அடைக்க பட்டவர்கள் கடை பிடிக்கின்றார் என மாற்று கருத்து தெரிவிக்க பட்டுள்ளது

                    குண்டு வெடிப்பு ,மற்றும் வீட்டு பணிப்பெண் கொலை உட்பட்ட குற்றச்சாட்டுகளில் இவர் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    பயணிகள் விமானத்தில் ஆயுத கடத்தல் – சிக்கிய விமான நிறுவனம்

                    பயணிகள் விமானத்தில் ஆயுத கடத்தல் – சிக்கிய விமான நிறுவனம்

                    உலகில் புகழ்பெற்ற Ethiopian Airlines பயணிகள் விமானம் மூலம் எரித்திரியா போராளி குழுக்களுக்கு ஆயுதம் ஏற்றி சென்று வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது

                    மேற்படி ஆயுதம் விநியோகம் அங்குள்ள சில நபர்களினால் படம் பிடிக்க பட்டு வெளியான நிலையில் மேற்படி விடயம் பெரும் சிக்கலை அந்த விமான நிறுவனத்திற்கு ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் மரணம் – 11 பேர் காயம்


                      இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் மரணம் – 11 பேர் காயம்

                      மாலியில் அரச இராணுவம் மீது போராளி குழு தாக்குதல் நடத்தியதில் ஒன்பது இராணுவத்தினர் சம்பவ இடத்திலபலியாகினர் ,மேலும் பதினோரு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                      தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் வலுத்து வருகிறது

                        Posted in Uncategorized

                        எல்லையில் பதட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு


                        எல்லையில் பதட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு

                        ஈரானின் வடதெற்க்கு பகுதிகளில் பதட்டம் இல்லை என ஈரானின் மூத்த இராணுவ அத்தளபதி ஒருவ தெரிவித்துள்ளார்

                        தலிபான்கள் ஆட்சியை அமைத்ததன் பின்னர் தமது எல்லைகளை பலப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈரானிய இராணுவம் ஈடுபடுத்த பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

                          Posted in Uncategorized

                          கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி

                          கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி

                          போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடிகை சஞ்சனா கல்ராணி, ஜாமீனில் வெளியே வந்தார்,

                          கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி? – போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை
                          சஞ்சனா கல்ராணி
                          கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர் கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் வழக்கில் சிக்கினார். அதில் நடிகை சஞ்சனா போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார்.

                          இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை சஞ்சனா சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் டிரைவர் சூசை மணியை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது.

                          இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரி நகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் சூசை மணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன் சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டுவது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் சூசைமணி வழங்கி உள்ளார். அதன்பேரில், ராஜராஜேசுவரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

                          இதுகுறித்து நடிகை சஞ்சனா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது; நான் தவறு செய்யவில்லை. இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரி நகருக்கு நான் வாடகை காரில் சென்றேன். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஏற்கனவே இருந்த காரை கணவர் பயன்படுத்துகிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன்.

                          சஞ்சனா கல்ராணி
                          சஞ்சனா கல்ராணி

                          ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்த ராஜராஜேசுவரி நகருக்கு செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் கூறினேன். ராஜராஜேசுவரி நகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது. கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன்.

                          நான் மேக்கப் போடாத காரணத்தால், என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மேக்கப் போடாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவேன். டிரைவருக்கும் நான் யார்? என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் டிரைவர் தவறான பாதையில் சென்றது பற்றி கேட்டதால் தான் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நான் ஒரு நடிகை என்பதால், இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடிகை சஞ்சனா கூறினார்.

                          இந்த சம்பவம் குறித்து நடிகை சஞ்சனாவிடமும், கார் டிரைவரிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்று உள்ளனர். மேலும் 2 பேரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். இதற்கிடையில், கார் டிரைவருடன் நடந்த மோதல் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நடிகை சஞ்சனா காரில் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

                            Posted in Uncategorized

                            பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்

                            பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்

                            முசாபர்பூரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கி எடுத்துச் சென்ற மாணவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

                            பீகாரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்
                            கைப்பற்றப்பட்ட துப்பாக்கி


                            பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் கத்ரா என்ற இடத்தில் அரசு பள்ளி இயங்கு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் கடந்த 5-ந்தேதி துப்பாக்கியுடன் பள்ளிக்கு

                            வந்துள்ளான். மாணவன் துப்பாக்கி வைத்துள்ளான் என்ற தகவலை அறிந்த போலீசார், அதை கைப்பற்றி மாணவனை கைது செய்துள்ளனர். தற்போது மாணவரை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.

                            கை விலங்குடன் மாணவன்

                            துப்பாக்கி கிடைத்தது எப்படி? உள்ளிட்ட தகவலை பெற அவனிடம் விசாணை நடத்தி வருகிறோம் என முசாபர்பூர் கிழக்குப் பகுதி எஸ்.பி., எம்.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

                              Posted in Uncategorized

                              பாகிஸ்தானில் பூகம்பம் – 20 பேர் பலி – 300 பேருக்கு காயம்

                              பாகிஸ்தானில் பூகம்பம் – 20 பேர் பலி – 300 பேருக்கு காயம்

                              பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20பேர் பலியானார்கள், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

                              இந்த பூகம்பம் 5.8 என்று ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. இந்த பூகம்பம் ஏற்பட்டபோது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பல்வேறு நகரங்களையும் அதிரச் செய்தது, இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டது.

                              பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூரை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

                              மிர்பூர் நகரின் போலீஸ் டிஐஜி சர்தார் குல்பராஸ் கான் கூறுகையில், “இன்று ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தபட்சம் 20 பேர் பலியானார்கள் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

                              பாகிஸ்தான் புவியியல் அமைப்பு கூறுகையில், “ பஞ்சாப் மாநிலத்தின் ஜீலம் நகரின் மலைப்பகுதி அருகே, பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.8 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது

                              பூகம்பம் ஏற்பட்ட உடன் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,வர்த்தக கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

                              மிர்பூர் செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, பூகம்பம் ஏற்பட்ட போது சாலையில் சென்ற பல வாகனங்கள் கவிழ்ந்தன, சில கார்கள் சாலை இரண்டாகப் பிளந்தபோது அதற்குள் சிக்கிக்கொண்டன.

                              பூகம்பம் ஏற்பட்டவுடன் வீடுகளிலும், கடைகளிலும் இருந்தமக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சாலைக்கு ஓடி வந்தனர்.

                              பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா கூறுகையில், “இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவப்படைகள், மருத்துவக்குழுக்கள் பூகம்பம் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

                              பூகம்பத்தால் பெரும்பாலும் மிர்பூர், ஜீலம் நகரமே அதிகமான சேதம் அடைந்துள்ளன, ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர், பலர் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

                              இந்த பூகம்த்தின் அதிர்வு பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், கார்டு, கோஹத், சராசடா, கசூர், பைசலாபாத், குஜ்ராத், சாய்லகோட், அபோட்டாபாத், மான்செரா, சித்ரல், மாலாகன்ட், முல்தான், சாங்லா, ஓகரா, நவ்சேரா, அடாக்,ஜாங் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.

                              பாகிஸ்தானின் மிகப்பெரிய அணைக்கட்டான மங்களா அணை, பூகம்பம் நடந்த பகுதிக்கு அருகே இருந்தது அந்த அணை எந்தவிதமான சேதாராமும் இன்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

                              Posted in Uncategorized

                              நானும் மனைவியும் அப்பாவிகள்- மோசடி மன்னர் அழுகை

                              நானும் மனைவியும் அப்பாவிகள்- மோசடி மன்னர் அழுகை

                              பென்டோரா பத்திரிகை வெளிப்படுத்தியுள்ள ஆவணங்களில் தனது பெயரும்,
                              தனது மனைவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில்
                              பதிலளித்துள்ள பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், தானும் மனைவியும்
                              முழுமையாக அப்பாவிகள் எனத் தான் உறுதிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

                              வெளிநாடுகளிலுள்ள சொத்துக்கள் தொடர்பான பென்டோரா ஆவணங்களில் நடேசனினதும்,
                              அவரது மனைவியான நிரூபமா ராஜபக்‌ஷ வினதும் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை
                              குறிப்பிடத்தக்கது.

                              அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வுக்கு எழுதியுள்ள கடிதத்திலே​யே
                              மேற்கண்டவாறு தெரிவித்துள்ள திருக்குமார் நடேசன், எப்பிழையையும் செய்யவில்லை எனக்
                              கூறியுள்ளார்.

                              இதேவேளை, சுயாதீன விசாரணையாளர் ஒருவர் மூலம் தாமதமில்லாமல் இவ்விடயத்தை
                              விசாரணை செய்யுமாறு நடேசன் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற
                              நீதிபதியொருவர் விரும்பத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.