Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்
தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்
அமெரிக்கா Pennsylvania பிரதான சாலையில் 20 க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின
இதன் பொழுது சம்பவ இடத்தில மூவர் மரணமாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்தனர்
அதிக சினோ காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்து பல மணி நேரம் தடை பட்டது
சீனாவில் வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமான கறுப்பு பெட்டி கண்டு பிடிப்பு
சீனாவில் வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமான கறுப்பு பெட்டி கண்டு பிடிப்பு
சீனாவில் 135 பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த விமானத்தில் பயணித்த அணைவரும் பலியாகியுள்ளனர்
இந்த விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
மீட்க பட்டுள்ள இரண்டாவது கறுப்பு பெட்டியில் இருந்து விடயங்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க படுகிறது
. இரண்டாக உடையும் உக்கிரேன் – களத்தை மாற்றும் ரஷியா
. இரண்டாக உடையும் உக்கிரேன் – களத்தை மாற்றும் ரஷியா
உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷியா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எதிர்ப்பு கொரில்லா போராக மாறும் -ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தகவல்
உக்ரைன் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ்
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 32வது நாளாக நீடிக்கிறது. முதலில் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷிய படைகள் தற்போது ராணுவத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யும் எரிபொருள் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.
ரஷியாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரஷிய படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் உக்ரைன் குடிமக்கள் உணவு மற்றும் குடிநீருக்கு அல்லப்படுவதாகவும், மக்கள் மத்தியில் ரஷியா கடும் வெறுப்பை விதைத்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடங்கள்
மேலும், ரஷியப் படைகளைத் தடுக்க டாங்கிகள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை கூடுதலாக வழங்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷியா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
‘ரஷிய அதிபர் புதின், முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியாது என்று உணர்ந்துள்ளார். அத்துடன், கொரிய முறையில் நாட்டைப் பிரிக்க முயற்சிப்பார். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை ஒன்றுசேர்த்து சுதந்திர உக்ரைனுக்கு எதிராக நிறுத்த முயற்சிப்பார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில், அரசுக்கு இணையான கட்டமைப்புகளை அமைப்பதற்கும், உக்ரேனிய நாணயமான ஹிரிவ்னியாவைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் ரஷியா முயற்சி செய்கிறது. ஆனால், உக்ரைனின் எதிர்ப்பு ஒட்டுமொத்த கொரில்லா
போராக வளர்ந்து, ரஷியாவின் முயற்சிகளை தடம்புரளச் செய்யும்’என்றார் கைரிலோ புடானோவ்.
ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்
ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்
வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோவாக வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதிநவீன ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்
ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்
வடகொரியா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையை கடந்த 24-ந்தேதி சோதித்தது. அமெரிக்கா
வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘ஹவாசோங் 17’ என்கிற இந்த ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோவாக வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.
வீடியோவில் கிம் ஜாங் அன் கருப்பு நிற உடை மற்றும் கருப்பு நிற கண்ணாடியை அணிந்து நடந்துவர, அவருக்கு பின்னால் பிரமாண்ட ஏவுகணை ராணுவ வாகனத்தில்
எடுத்து வரப்படுகிறது. பின்னர் கிம் ஜாங் அன் தனது கைக்கடிகாரத்தை பார்த்து, கவுண்டன் சொல்கிறார். அதை தொடர்ந்து ஏவுகணை நெருப்பை கக்கியப்படி விண்ணை நோக்கி சீறிப்பாய்கிறது.
ஏவுகணை சோதனை வெற்றியடைந்த பிறகு கிம் ஜாங் அன் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் சிரித்தபடியே நடந்து வருவதுபோல் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்
132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்
இலங்கையில் இருந்து தப்பி சென்ற 132 பேருக்கு இண்டர்போல் சிவப்பு பட்டியலில் சேர்க்க பட்டுள்ளனர்
இவர்களை கண்ட இடத்தில கைது செய்யும் பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது
இவர்கள் போதைவஸ்து உள்ளிட்ட மிக முக்கிய குற்ற செயல்களில் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது
கோட்டா அரசாங்கத்துக்குள் மீண்டும் பிளவு
கோட்டா அரசாங்கத்துக்குள் மீண்டும் பிளவு
ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னரும் ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
இடையில் கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலையிட்டு அதனைத் தீர்த்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்து
வருகின்றமை தொடர்பில் தற்போது மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இக்கருத்து மோதல் அரசாங்கத்தின் பின்வரிசை எம்.பிக்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்
உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்
உகாரனை தாம் நினைத்தது போன்று ஆக்கிரமித்து விட ரசியவினால் முடியாது போய்விட்டதாக அமெரிக்கா அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்
போலந்து நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த விடயத்தி தெரிவித்து ரசியாவை கேலி செய்துள்ளார்
நெட்டி இராணுவ படைகளுடன் கனடா ,அமெரிக்கா இணைந்து ரஷியா இராணுவத்தை தவறான கோணத்தில் கணிப்பீட்டு போலி பரப்புரைகளை புரிந்த வண்ணம் உள்ளனர்
இதுவரை ரஷியா தனது ஆயுத பலத்தை உக்கிரேனில் முழுமையாக பயன் படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை
ஆனால் வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பட்டது போன்றே இந்த உளவுத்துறைகளும் ,
அதன் அதிபர்களும் ரசியாவை கேலி புரிந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது
புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்
புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்
உக்கிரேன் நாட்டு அதிபர் Yermak ருடன் ரசிய நாட்டின் அதிபர் புட்டீன் நேரடியாக பேச்சில் ஈடுபடவுள்ள்ளார்
இந்த பேச்சில் ரசியா தனது பேரம் பேச்சை நடத்தும் எனவும் ,அவ்வேளை வேறு வழியின்றி அவர்களின் காலடியில் விழும் நிலைக்கு
உக்கிரேன் செல்ல நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது
அதற்கான முற்றுகை தாக்குதலை ரசிய படைகள் வேகமாக தொடுத்த வண்ணம்
உள்ளன ,தனது கோரிக்கையை ஏற்க மறுத்தால் நாயடு தனது வசம் விழும் என்ற ர நிலையை ரஷியா திபர் அறிவிப்பார் என அடித்து கூறலாம்
இது ஒருவவகை மூடிய அறைக்குள் நடக்கும் மிரட்டல் என எடுத்து கொள்ளலாம்
உக்கிரேன் கிழக்கு பகுதியை விடுவித்த ரசிய இராணுவம் – தொடரும் மோதல்
உக்கிரேன் கிழக்கு பகுதியை விடுவித்த ரசிய இராணுவம் – தொடரும் மோதல்
உக்கிரேன் Donbas கிழக்கு பகுதிகளை ரசிய இராணுவம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது ,இந்த பகுதி ரசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டு அந்த நகரம் பலத்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது
அடுத்து உக்கிரேன் கீவ் நகரை தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ரசியா தயாராகி வருகிறது
விரைவில் மூன்று முனை தாக்குதல்கள் ஊடக அந்த நகரை மீட்கும் நடவடிக்கையில் ரசிய படைகள்
நெருங்க உள்ளன
இங்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுதங்கள் குவிக்க பட்டுள்ளது ,யுத்தம்
ஒன்று இங்கு வெடித்தால் அது இரு பகுதிக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது
பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு
பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு
முஸ்லீம் மதவெறி பிடித்த தீவிரவாத இயக்கமாக வளர்ந்து தற்போது ஆப்கான் நாட்டை ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்
பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் அவர்களுடன் பேசிட அமெரிக்கா மறுத்துள்ளது
தற்போது ஏற்பாடு செய்ய பட்டிருந்த பேச்சு மேசை இரத்து செய்ய பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
ஏவுகணை தாக்குதல் -பற்றி எரியும் சவூதி எண்ணெய் வயல்கள்
ஏவுகணை தாக்குதல் -பற்றி எரியும் சவூதி எண்ணெய் வயல்கள்
சவூதி நடத்தின் எண்ணெய் வயல்கள் மீது எமன் கவுதிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில்
சிக்கி அந்த எண்ணெய் வயல்கள் எரிந்த வண்ணம் உள்ளன
ஈரானின் புல ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய இராணுவ படைகள் தொடராக சவூதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது
பதிலுக்கு சவுதியும் இவ்ரகள் பகுதிகள் மீது வான்வழி தாக்குதல்களை தொடுத்துள்ளமை குறிப்பிட தக்கது
போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி
போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் போலாந்துக்கு
பயணித்த அமெரிக்கா ஜனாதிபதி அங்குள்ள அமெரிக்கா இராணுவத்தினரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார்
அப்பொழுது அங்கு தயாரிக்க பட்ட பிட்சாவை சுவைத்து மகிழ்ந்தார்
இவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைய பெற்றுள்ளது
கோட்டா சம்பந்தன் கலியாணம் முடிந்தது
கோட்டா சம்பந்தன் கலியாணம் முடிந்தது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு, மூன்று முறைகள் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது. மறுபுறத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது.
நேற்றுக்காலை 10.30க்கு ஆரம்பமான சந்திப்பு, சுமார் 3 மணிநேரம் நீடித்தது. ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பு என்பதால், இருதரப்பினரும் மனம் விட்டு, கலந்துரையாடியுள்ளனர். எனினும், சம்பந்தன் அவ்வப்போது ஆவேசப்பட்டுள்ளார் என
தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அரசாங்கத் தரப்பில் இருந்து பல விடயங்களுக்கு உறுதியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
இந்த சந்திப்பின் போது, “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்”, “அரசியல் தீர்வு”, “காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்”, மற்றும் “வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு”
உள்ளிட்ட நான்கு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த இரா.சம்பந்தன். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அதி முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். 13 இல்லையெனில் பேசிப் பயனில்லையென இடித்துரைத்துள்ளார்.
ஆனாலும், 13ஆவது திருத்தத்தில். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேசப்பட்டபோது, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், அலி சப்ரி, “கடந்தகால அரசாங்கங்களே அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகையால், தமக்கும்
சிக்கல்கள் உள்ளனவென தெரிவிக்கையில், சம்பந்தன் சற்று ஆவேசமடைந்து மேசையில் தட்டி, 13யை முழுமையாக அமுல்படுத்தாவிடின் நாங்கள் ஏன்? பேசவேண்டுமென கேட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி “13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த முடியாதென நாம் கூறவில்லை, முழுமையான அதிகாரப்பகிர்வுக்கு நாம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்” என பதிலளித்துள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதியம் உருவாக்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் நிதியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் நகர்வுகளை முன்னெடுக்கலாம் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
நல்லது, ஆனால், அதற்கு முன்னர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு அரசியல் தீர்வு அவசியம் என சம்பந்தன் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்து எடுத்துரைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, காணாமல் ஆகப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு இலட்சம். தமது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என
எடுத்துரைத்துள்ளது. அதன்போது பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, “ஒரு இலட்சம் ரூபா நிதி, முழுமையான நட்டயீடு அல்ல, ஒரு நிவாரண தொகையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மகாவலி எல் வலயத்தின் ஊடாக கடந்த 35
ஆண்டுகளாக காணிகள் அபகரிக்கப்படுகின்றது, அத்துடன், இனப்பரம்பலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பு வலியுத்தியு்ளளது.
காணி அபகரிப்புகள் இடம்பெறுமானால் தடுத்து நிறுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு
லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு
லண்டன் Dartford பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடத்தி வந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டார்
இங்கு ஆண்கள் ,பெண்கள் உள்ளிட்டவர்களை வைத்து இவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நிலையில் கைது செய்ய பட்டார்
நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் அதன் மூலம் பெற்றுக்கொண்ட மூன்று லட்சம் பவுண்டுகளை மீள செலுத்திட உத்தரவிட பட்டுள்ளது
யாழ்ப்பாண தமிழ் விஞ்ஞானி அமெரிக்காவில் மரணம்
யாழ்ப்பாண தமிழ் விஞ்ஞானி அமெரிக்காவில் மரணம்
யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி
கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி 17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் மரணமாகியுள்ளார்
இவர் நாசாவில் கடமையாற்றிய இலங்கை தமிழர் என்பது குறிப்பிட தக்கது
புதினின் ரகசிய காதலி நாடு கடத்தப்படுவார
புதினின் ரகசிய காதலி நாடு கடத்தப்படுவார
புதினின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசுக்கு போட்டுள்ளார்கள்.
புதினின் ரகசிய காதலி நாடு கடத்தப்படுவாரா?- சுவிட்சர்லாந்தில் புதிய கோரிக்கையால் சலசலப்பு
புதினுடன் காதலி அலினா கபேவா (image courtesy AFP)
69 வயதான ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ரகசிய காதலி இருக்கிறார். அவரது பெயர், அலினா கபேவா (வயது 38). இவர் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.
இவர் புதினுடனான ரகசிய காதலில் பிறந்த குழந்தைகளுடன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களையொட்டி இவர் இந்த மாத தொடக்கத்திலேயே ஒரு தனியார் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில் புதினின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசுக்கு போட்டுள்ளார்கள்.
அந்த மனுவில், தற்போது போர் நடந்து வந்தபோதும், சுவிட்சர்லாந்து புதினின் ரகசிய கூட்டாளியை தொடர்ந்து கவனித்து வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஹிட்லரையும், அவரது காதலி ஈவாவையும் புதினுடனும் அவரது காதலியுடனும் ஒப்பிட்டு, இருவரும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவில் ‘சேஞ்ச்.ஆர்க்.’ என்ற வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட இந்த மனுவில் இதுவரை 57 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்று தகவல். சுவிட்சர்லாந்து அரசு புதினின் காதலியை நாடு கடத்தி அவருடன் சேர்த்து வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் புதினின் காதலிக்கு மட்டும் பொருளாதார தடை எதையும் விதிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஜி-7 மாநாட்டிற்கு பிறகு பேசிய அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
அதிபர் ஜோ பைடன்
பிரசல்ஸ்:
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ரஷியாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தினேன்.
ரஷியாவுடன் இருப்பதைவிட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது
என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளதாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம்
.கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரே இவ்வாறு இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் -தீயில் எரிந்த 23 வீடுகள்
கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 23 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில்
செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக மக்களுக்கு எட்டாக்கனி எனவும் தெரிவித்தார்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட
ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சிங்களவர்கள், வட,கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் உள்ளிட்ட மக்களுக்கு இந்நாட்டில் காணிகள் உள்ளன.
ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்றார்.
புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்
தொழிலாளர்கள், தொழில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் வாழ்வதற்கென ஒரு வீடு அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீதிகளில் நிற்கும் நிலையே
காணப்படுகிறது. வாக்குரிமை இல்லாத காலத்திலும் வாக்குரிமை பெற்றப் பின்னரும் மலையக மக்களுக்கு காணி உரிமைகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மாகாணசபைகளை முதலில் அமைத்து அதன் ஊடாக காணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், முப்பது வருடங்கள் யுத்தம் செய்தும் நாட்டை பிரபாகரனால் அழிக்க முடியவில்லை.
ஆனால் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற இரண்டே வருடங்களில் நாட்டை அவர் அழித்துவிட்டார் என்பதுபோல ஒரு கேலிசித்திரத்தை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.








