உழைப்பின் வலி உணர்ந்தவர்” ரஜினிகாந்தை நெகிழ்ந்து பாராட்டிய சேரன்!

Spread the love

உழைப்பின் வலி உணர்ந்தவர்” ரஜினிகாந்தை நெகிழ்ந்து பாராட்டிய சேரன்!

இயக்குநர்-நடிகர் சேரன் 1997-ஆம் ஆண்டில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டபோது நெகிச்சியுடன், சூப்பர் ஸ்டாரை பாராட்டியுள்ளார்.

ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான அருணாசலத்தின் வெற்றி விழா சந்திப்பின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

அப்போது, இயக்குநர் சேரன் மேடைக்கு அழைக்கப்பட்டு, ‘பொற்காலம்’ போன்ற ஒரு படத்தை இயக்கியதற்காக பாராட்டப்பட்டார்.

ரசிகர் ஒருவரின் இந்த ட்விட்டர் இடுகையைப் பார்த்த இயக்குனர் சேரன், “மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர்

சூப்பர்ஸ்டார்.. நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே..C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாற

பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்..” என நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார்.

மேலும் “அவரோடு இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர.. நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும்

அப்படியேதான் இருக்கிறது.. சிங்கப்பூரில் அவர் சிகிச்சைக்காக இருந்தபோது மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என

என்னையறியாமல் என்னுள்ளம் வேண்டியது.. காரணம் அந்த மனிதத்தன்மை..” என்று சேரன் பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து போன்ற

வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். தமிழ் சினிமாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பல குடும்பச் சித்திரங்களை

கொடுத்ததில் அவருக்கு பெரிய பங்கு உண்டு. மேலும், சொல்ல மறந்த கதை, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் என

கதாநாயகனாக கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக ‘ராஜாவுக்கு செக்’ என்ற திரைப்படம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இதற்கிடையில், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்-3′ நிகழ்ச்சியிலும் பங்குபெற்றது குறிப்பிடத்தக்க

      உழைப்பின் வலி உணர்ந்தவர்
      உழைப்பின் வலி உணர்ந்தவர்

      Leave a Reply