Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்
கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்
இலங்கையில் நடப் பாண்டு நிகழ்வுகளின் செய்தி பகிர்வுகள் மற்றும் நாட்டில் நிலவி வரும் சமூக விரோத செயல் பாடுகளின் மூல உறைவிடமாக போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது
இந்த போதை பொருள் ஊட்டலுக்கு அடிமையானவர்கள் ,அதில் இருந்து விடுபடாத முடியாத நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் ,
கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,திருட்டு ,என்ற அனைத்து குற்ற செயல் பாடுகளிலும் தம்மை முன்னிலை படுத்தி கொள்கின்றனர்
இவ்வாறு ,இதற்கு அடிமையானவர்களை தமது கூலிகளாக வைத்திருக்கும் அரசியல் வாதிகள் இவர்களின் ஊடாக அணைத்து விடயத்தைனையும் கட்சிதமாக முடித்து விடுகின்றனர்
இவ்வாறான ரவுடிகளின் முக்கியமானவராக விளங்கி வருபவர் ,கஞ்சா அருள், ரெட்லைட் குரூப்,மின்னல் குரூப்,பாம்பு குறூப் ,என்பன .
இவர்கள் அனைவரும் இலங்கை அரச புலானய்வு துறையின் செல்வாக்குடன் செயல் பாட்டு வருகின்றனர்
தமிழர் பகுதியில் இடம் பெறும் கொலைகளுக்கு இந்த குழுக்களே காரணமாகின்றன
செல்வந்தர்களை மிரட்டி பணம் பறிப்பது ,அழகிய பெண்களை கடத்தி சென்று சீரழித்து மிரட்டி அனுப்பி வைப்பது தொடர்ப்பன
அனைத்து செயல்களும் சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பாதிக்க பட்டவர்கள் அச்சத்தில் தகவல்களை வெளியில் கூற மறுப்பதனால் உறங்கு நிலையில் இவை கிடக்கின்றன
மக்களின் முதல்வன் நானே என பறை சாற்றும் ஆளும் அரசு இதற்கு ஒத்து ஊதுவது இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக காண்பிக்கிறது .
இவர்களின் இந்த செயல் பாடுகள் நாளை இலங்கை அரசு மீள முடியாத மிக பெரும் பொறிக்குள் சிக்க வைக்க போகிறது
அணைத்து விடயங்களும் உரிய பகுதியினரால் ஆவண படுத்த படுகின்றன
இலங்கைக்குள் எட்ட முடியாத தீர்வு .உலக அரங்களில் அந்த காட்சிகள் வெளியாகும் பொழுது எட்டப் படும் நிலையும் அவ்வேளை ,தலை குனியும் நிலையில் இலங்கை செல்லும் என்பதே திண்ணம்
அவை வெளியாகும் பொழுது மிக பெரும் நெருக்கடியை இவர்கள் சந்திப்பார்கள் என்பதனை அடித்து கூறலாம்

வரணி மருத்துவ மனையில் அடாவடி – குமுறும் மக்கள் – கண்டுகொள்ளாத கேதீஸ்வரன்
வரணி மருத்துவ மனையில் அடாவடி – குமுறும் மக்கள் – கண்டுகொள்ளாத கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம் வரணி ஆதார வைத்தசிய சலையில் மருத்துவர் ,மற்றும் அங்கு பணி புரியும் தாதிமார்கள் தொடர்பில் மக்கள் முறைப் பாடுகளை புரிந்து வருகின்றனர்
இரண்டு மணிக்கு பின்னரே மக்கள் பொது நோயாளர் பார்வை இடம் பெறுகிறது ,இவையும் மட்டு படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது
அதிக நோயினால் பீடிக்க பட்டு அவசர சிகிச்சைக்கு அழைத்து வர படும் நோயாளர்கள் திருப்பி அனுப்ப படுகின்றனர்
இந்த மருத்துவ மனையின் பொறுப்பு வாய்ந்த மருத்துவர் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் பணியினை செய்து வீட்டுக்கு
சென்று விடுகிறார் ,அதன் பின்னர் தாதிமார்களே நோயாளர்களை பார்வை இடுகின்றனர் ,ஆனால் சம்பளத்தை முழு நாள் வேலை புரிந்த கணக்கில் பெற்று விடுகின்றனர்
இதில் ரதி மோகன் வசந்தராணி என்ற குடும்ப நல உத்தியோகஸ்தர் மக்கள் மீதி எரிந்து விழும் செயல் பாடுகளில் ஈடுபட்டுள்ளார் .
மகாப்பேறு தாய் சிசுவை கிராமங்கள் தோறும் சென்று அவர்கள் நிறையினை அளவீடு செய்திட வேண்டும் .
அப்போது தாய் ,சிசு இருவரையும் ஒன்றாக தராசில் ஏற்றி நிறுத்து பிள்ளையின் நிறையை கழித்து ,பின்னர் தாயின் நிறையினையும் பதிவு செய்யும் சம்பவகள் அதிகரித்துள்ளது
இங்கு கடும் நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற வந்த கர்ப்பிணி பெண் மற்றும் நோயாளி ஒருவருக்கு இவர்கள் சிகிச்ச
வழங்க மறுத்ததன் விளைவால் மந்திகை மற்றும் யாழ்ப்பாணம் எடுத்து செல்லும் பொழுது இடை வெளியில் இறந்து விட்ட துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன
இந்த செயல் பாடுகளை கண்டு கொள்ள மறுக்கும் பொறுப்பு நிலை பிராந்திய அதிகாரி கேதீஸ்வரன் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது
இது விடயம் தொடர்பில் அவருக்கு தெரிவித்து அவர் கருத்தை கேட்க முனைந்து அழைப்பை ஏற்படுத்திய பொழுதும் எமது அழைப்பிற்கு பதில் தர அவர் மறுத்துவிட்டார்
இவ்வாறு தான் செல்கிறது இன்றைய வடபுலத்தில் அரச கட்டுமான பணிகளில் உள்ள நிலைகள் ,இதனை வடக்கு ஆளுநர் அம்மணி
கவனத்தில் கொண்டு இந்த மக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வை காண்பாரா ..?
மக்களுக்கு உதவி செய்திட வருவதாக கூறும் வடக்கு ஆளுநர் இந்த சிக்கலான நிலைகளுக்கு தீர்வு காண்பாரா என்பதே மக்களின் ஏக்கமாக உள்ளது ,
சில தமிழர் எம்பிக்களும் இது விடயம் குறித்து தெரிவிக்க பட்ட பொழுதும் அவர்களும் இது விடயத்தில் நடவடிக்கை எடுக்காது ,இருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் இந்த நிலைக்கு தீர்வு என்ன ..பாதிக்க படும் மக்களே இரகசியமாக காணொளி பிடித்து அனுப்பி வையுங்கள்
வெள்ளையர் ஊடகம் வரை இந்த செய்திகளை எடுத்து சென்று சர்வதேசத்தில் இலங்கை மருத்துவ துறையினம் கீழ்த்தரமான செயலை அம்பல படுத்துவோம்

கோட்டபாய கருணை – 290 சிறை கைதிகள் விடுதலை
கோட்டபாய கருணை – 290 சிறை கைதிகள் விடுதலை
இலங்கையில் இடம்பெறவுள்ள வெசாக் தினத்தை முன்னிட்டு சிறையில் தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகளில் 290 பேர்
விடுதலை செய்ய பட்டுள்ளனர்
ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது

இராணுவ வண்டி மோதி சிதறல் ஒருவர் பலி – ஏழுபேர் காயம்
இராணுவ வண்டி மோதி சிதறல் ஒருவர் பலி – ஏழுபேர் காயம்
இலங்கை பொலனறுவை கபர்ண வீதியில் பயணித்து கொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்று மோதி சிதறியது ,இதில் ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார் .
மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் ,அதிவேகமாக பயணித்ததன்
நிலையில் சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இந்த் அனரத்தம் நிகழ்ந்துள்ளது


தி
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

ஊடகங்கள் மக்களை மிரட்டும் -சிங்கள கடற்படை
ஊடகங்கள் மக்களை மிரட்டும் -சிங்கள கடற்படை
கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட
நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கடற்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இலங்கை கடற்படை தலைமையகம்
கொழும்பு
2020.05.06
செய்தி பணிப்பாளர் அலைவரிசை பிரதானி
ஊடக அறிக்கை
- கடற்படை கொவிட் 19 தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்கள்
- மூலமும் செய்தி இணையதளங்கள் சில வற்றிலும் உண்மைக்குப புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய பொறிமுறைக்குள் கடற்படையினால்
- மேற்கொள்ளப்படும் எந்தவித பணிகளிலிருந்தும் கடற்படை விலகிக் கொள்ளவில்லை என்றும், அனைத்து
- நடவடிக்கைகளிலும் கடற்படை ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கி செயல்படுவதை இதன் மூலம் வலியுறுத்துகின்றோம்.
- இதேபோன்று இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள்
- தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
டப்ளியு.எம்.ஐ.ஆர்.எல்.சூரியபண்டார
லெப்டினன் கமாண்டர்

வீடுகளிலிந்து சமய வழிகாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள்
வீடுகளிலிந்து சமய வழிகாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள்
இலங்கை இராணுவத்திற்கு உட்பட்ட புனானை, கந்தக்காடு மற்றும் டொல்பின் ஹோட்டல் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில்
தனிமைப்படுத்தப்பட்ட 127 பேர் இன்றையதினம் (06) வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று (07) முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதால் கடந்த வருடங்களைப் போன்று வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட
வாய்ப்பில்லை என தெரிவித்த இராணுவத் தளபதி வீடுகளிலிந்து சமய வழிகாடுகளில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த அவர்
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கமைய டொல்பின் ஹோட்டலிலிருந்து 77 பேர், புனானையிலிருந்து 23 பேர்,
கந்தக்காட்டிலிருந்து 27 பேர் என PCR பரிசோதனைகளின் பின்னர் 127 பேர் வீடு திரும்பியுள்ளனர். முப்படையினரால்
மேற்கொள்ளப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 5,188 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு
செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்த, இராணுவத் தளபதி தற்போது 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,819 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (06) முற்பகல் வரை கடற்படையைச் சேர்ந்த 342 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
தெரிவித்த அவர், கடற்படையினர் அனைவரும் தங்களது முகாமிற்கு திரும்பியுள்ளதால், ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர்
கடற்படை முகாமிற்கு வெளியிலிருந்து எந்தவொரு கடற்படையினரும் அடையாளம் காணப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தடுப்பூசி எலிக்கு
செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மனித குலத்தையே உருக்குலைத்துள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

இதில் ஒரு சில நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சோதனை அடிப்படையில் நல்ல பலனைக் கொடுப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
ஆனால் கொரோனாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு
மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.
இந்நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி
மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை
செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன. மனித உடலிலும் வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது.
மேலும், தடுப்பூசியை பரிசோதித்தபோது, இது மனித அணுக்களில் உள்ள வைரஸை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக
அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இத்தாலியில் இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆய்வுகளில் இது மிகவும் முன்னேறிய கட்டம் என்று கூறிய அவர், கோடை காலத்தில்
மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தும் முழுமையான ஆராய்ச்சி தொடங்கும் என்றார். தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையை
விரைவுபடுத்துவதற்கு, சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரிப்பு
கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை இன்று மாலை 795 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இனறு பிறபகல் இன்றைய தினத்தில் (2020.05.06) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளான மூன்று (03
) நோயாளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

இந்த உறுதி செய்யப்பட்ட நோயாளர்கள் 3 பேரும் கடற்படை அங்கத்தவர்கள்.
இதற்கமைவாக இலங்கையில் உறுதி செய்யப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 774 ஆகும்.
இதுவரையில் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 215.
நேற்றைய தினம் (202.05.05) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1491 என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
COVID 19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-06 21:31:20
795
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
571
சிகிச்சை பெறும் நோயாளிகள்
24
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
215
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
9
இறப்பு எண்ணிக்கை

கொரனோ ஒழிந்தது – தேர்தல் திருவிழா ஆரம்பம்
கொரனோ ஒழிந்தது – தேர்தல் திருவிழா ஆரம்பம்
இலங்கையில் பாராளுமன்ற தேர்தலை நடத்திடும் நோக்குடன் தற்போது
இலங்கையில் எதிர்வரும் வாரம் ஊரடங்கு தடையினை விலக்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது
இவ்வேளை மக்களுக்கு தாம் அளப்பெரிய உதவிகளை செய்துள்ளோம் என்ற நிலையில் சிங்கள மக்கள் வாக்குகள்
பெருமளவில் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்திட அவசரம் காட்டுகிறார்
ஆளும் அரசர் கோட்டபாய ,
தேர்தலை தள்ளி போட்டால் அதனை தமக்கு சாதகமாக எதிர்க்கட்சிகள்
பயன்படுத்தி வெற்றியை தமதாக்கி விடுமென்பதால் அவசரம் காட்டுகிறது சிவப்பு சால்வை பாட்டிகள்
எவர் இறந்தால் என்ன .தமது ஆட்சி நிலைத்தால் போதும் என்ற நிலையில் குடும்ப ஆட்சி கோமகன்கள் உள்ளனர்
என்பதே இந்த வெளிப்பாட்டு தோற்றமாக மலர்கிறது

மரத்துடன் மோதி சிதறிய வான் – நடந்தது என்ன ..? – படங்கள் உள்ளே
மரத்துடன் மோதி சிதறிய வான் – நடந்தது என்ன ..? – படங்கள் உள்ளே
இலங்கை யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை ஆடம்பர சொகுசு வான் ஒன்று சாரதியின்
கட்டு பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்
எனினும் இந்த விபத்தில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன .
வானின் முன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்ற சேதமும் ,அதே வேளையில்
வானின் பின்புறத்தில் உள்ள மரக்கிளைகளில் உடைவுகளும் ,அதில் ஏற்பட்ட சேதங்களும் இதில் சந்தேகத்தை கிளப்பியுள்ளன
குறித்த புகைப்படங்களை உற்று நோக்கின் நாம் கூற வரும் விடயங்ககள் உங்களுக்கு புரிய வரும் .
திட்டமிட்டு ஏற்படுத்த பட்ட விபத்து சோடனை காட்சியா …? அல்லது உண்மையான விபத்தா ..? தீர்மானிப்பது நீங்களே .
கடந்த ஒருவாரத்தில் எட்டு படுகொலைகள் தமிழர் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளமை இங்கே கவனிக்க தக்கது


மரத்துடன் மோதி சிதறிய 

ஊரடங்கு எதிர்வரும் 11ம் திகதி வரை நீடிப்பு –
ஊரடங்கு எதிர்வரும் 11ம் திகதி வரை நீடிப்பு –
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக
இன்று தொடக்கம் ஊரடங்கு இரவு எட்டு மணிமுதல் ,காலை ஐந்து மணிவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமூல் படுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது
எதிர் வரும் அந்த நாட்களுக்கு பின்னர் நிலைமையை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்ய படும் என எதிர் பார்க்க படுகிறது
தேர்தலை மையமாக வைத்து இந்த தடையினை அரசு நீடித்துள்ளது எனினும் சில தினங்களை பின்னர் தடை நீக்க படும் என்பது குறிப்பிட தக்கது

15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு
15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது
15 கடற்படையினர் பாதிக்க பட்டுள்ளதாக முப்படைகளின் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .
இதற்கு முன்னர் 280 கடற்படையினர் இந்த நோயினால் பீடிக்க பட்டு தனிமை
படுத்த பட்டு இருந்தமையும் ஒரு அதிகாரி பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

சிறப்பு விமானத்தில் லண்டனில் இருந்து 194 பேர் இலங்கை வந்தடைந்தனர்
சிறப்பு விமானத்தில் லண்டனில் இருந்து 194 பேர் இலங்கை வந்தடைந்தனர்
லண்டனில் சிக்கி தவித்த இலங்கையர்கள் அவர் தம் நாட்டின் சிறப்பு
விமானத்தின் ஊடக லண்டன் கீத்திரோ விமான நிலையத்தில் இருந்து
இலங்கை பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்
இவ்வாறு இலங்கை வந்தவர்கள் எதிர்வரும் 21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .
கடந்த முறை இவ்வாறு வந்தடைந்தவர்களில் சிலர் கொரனோ நோயுக்கு
பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிட தக்கது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 771 பேர் பாதிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 771 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு சிக்கி இதுவரை 771 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் சுமார் 300 பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குகிறது
தொடர்ந்து இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது

அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் சற்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (05) காலை கொழும்பு, விஜேராம மாவத்தையில்
அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு குறிப்பாக பொருளாதார தாக்கங்கள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு
தொடர்பில் பிரதமருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்கள்
வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்கள்
வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான
முறைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு விடுத்துள்ள ஊடக வெளியீடு
வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான முறைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
முறையான அங்கீகார நடைமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான
முறைமைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, திறன்
அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஆலோசனைகளைத்
தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான கால
அளவு தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டவுடன், அவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால்
சம்பந்தப்பட்ட வரிசை முகவர்களுடன் இன்று (04 மே 2020) கூட்டப்பட்ட சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
நாடு திரும்புவதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பின்
மூலமாக வெளிப்படுத்தப்பட்ட ஆர்வம் மற்றும் தற்போது குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள பொது
மன்னிப்பு ஆகியன குறித்து இதன் போது மதிப்பாய்வு செய்யப்பட்டன. குறிப்பாக மாலைதீவில் புலம்பெயர்ந்த
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டது. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
நாட்டிற்கு மீள அழைத்து வரப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் தற்போதைய தனிமைப்படுத்தல் செயன்முறை
நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிசெய்யும் அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுடன் நடந்த
பேச்சுவார்த்தைகள் மற்றும் அந்த அரசாங்கங்களுக்கு பதிலளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து
வருகை தந்திருந்தவர்களுக்கு அமைச்சர் குணவர்தன விளக்கமளித்தார்.
வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சுஜீவ
திசேரா, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிறி, இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.

பிரிட்டனில் ஒரே நாளில் 693 பேர் பலி – மீண்டும் அதிகரித்த மரணம்
பிரிட்டனில் ஒரே நாளில் 693 பேர் பலி – மீண்டும் அதிகரித்த மரணம்
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 693 பேர் பலியாகியுள்ளனர் .
ஐரோப்பாவில் பிரிட்டனில் இவ்விதம் அதிகமான தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர்
கடந்த மூன்று தினங்களில் வீழ்ச்சி நிலையில் இருந்த மரணங்கள் தற்பொழுது மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது
இதுவரை 29 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும்194,990 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்க பட உள்ளதாக கல்வி அமைச்சர்
சிக்கினால் வெளியிட்டு இருந்த நிலையில் ,இந்த மக்கள் தொகை பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

லண்டனில் McDonald’s உணவகம் மீள் திறப்பு =- விபரம் உள்ளே
லண்டனில் McDonald’s உணவகம் மீள் திறப்பு =- விபரம் உள்ளே
பிரிட்டனில் அடித்து பூட்ட பட்ட 1200 McDonald’s உணவகங்கள் மீள இப்பொழுது திறக்க படுகிறது
குறித்த பகுதியில் உள்ள சில உணவகங்கள் மட்டும் டிலிவிரி , மட்டும் மேற்கொள்ளும் நிலையில் இந்த உணவகங்கள் திறக்க படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது
விபரம் கீழே


epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்
epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்
யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஒட்டி குழுக்கள் ,அடாவடி ,அதிகாரித்துள்ளது
மணல் கொள்ளை,ஆட்கள் கடத்தல் ,ஆவா ரவுடிகள் குழு என ஒன்றை உருவாக்கி
மக்களை மிரள வைத்து வரும் அரசியல் பின்புலம் கொண்ட இந்த குழுக்களின் செயல் பாடுகள் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது
தமது சுய தொழில் வாய்பிற்க்காக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்த
நபரது வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த ஈபிடிபி குழுவை சேந்த மாபியாக்கள் ,அந்த கணவன் மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளனர் ,
மேலும் ஆவா குழுவை கொண்டு அவர்களை கொலை செய்வேன் எனவும் மிரட்டி சென்றுள்ளனர்
,டக்கிளஸ் அடியாளாக வேலை பார்க்கும் இந்த குழுக்கள் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

ஊரடங்கு சட்ட விரோதம் – வெடித்தது சட்ட சண்டை – அதிரும் நீதி மன்றம்
ஊரடங்கு சட்ட விரோதம் – வெடித்தது சட்ட சண்டை – அதிரும் நீதி மன்றம்
இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள நடப்பு நிகழ் கால ஊரடங்கு சட்டமானது
சட்ட விரோதமானது என நீதிமன்றில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,
இதே கருத்தினை யாழ்ப்பாணம் குடத்தனையில் மூன்று அப்பாவி பெண்கள் மீது
வன்முறை தாக்குதலை மேற்கொண்ட போலிஸார் செயல் பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் வாதிட்ட சுபாஷ் அவர்களும் தெரிவித்துள்ளார்
காவல்துறையினர் அதிகார துஸ் பிரயோகத்தினை மேற்கொண்டு வருவதாக இந்த தமிழ் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்
ஆளும் அரசுக்கு இந்த சட்ட விடயங்கள் பெரும் தலையிடியாக மாறியுள்ளது ,
அரசு சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் இவ்விதம் வாதடியுள்ளது வியப்பை ஏற்படுதியுள்ளது







