Posted in இலங்கை செய்திகள்

ஓட ஓட நபர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்

ஓட ஓட நபர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்

இலங்கை ஆந்ததொல சந்தியில் முப்பத்தி ஒன்பது வயதுடைய நபர்

ஒருவர் மர்ம நபர்களின ஓட ஓட வெட்டி படுகொலை
செய்ய பட்டுள்ளனர்

இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

யாழ் மக்களை காப்போம் – ஒன்றித்து வருக அங்கயன் வேண்டுகோள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை இனங்கண்டு, அவற்றை யாழ்.

மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து, பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (08) தனது கடமைகளை

பொறுப்பெற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் இம்முறை முதற் தடவையாக ஒரு ஆசனம் கிடைத்து இருக்கின்றது. தமிழ்

மக்கள் வாக்குகளால் மட்டும். அதேபோல் அதிகூடிய விருப்பு வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தான் கிடைத்துள்ளது.

இதனை தேசிய கட்சி என்று பார்க்கவில்லை. உண்மையாக மக்கள் வேலை செய்யகின்றார்களா? என்று பார்க்கின்றனர். இவற்றில் 5 வருடங்களுக்குள் என்ன செய்ய போகின்றார்கள் என்று

பார்க்கின்றார்கள். அதற்கான தெரிவினை மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சிறுபாண்மை மக்களிடம் பிரதித்துவம் படுத்தியதே இல்லை. இது நாங்கள்

செய்கின்ற வேலைத் திட்டத்திற்கு, செய்யபோகின்ற வேலைத் திட்டத்திற்காகத் தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதில் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகள் முன்னோக்கி போகவேண்டும். அதுவே காலத்தின் தேவையாக உள்ளது. இது எனது

கட்சிக்கும் மட்டும் இல்லாமல், இவை அனைத்து யாழ். மாவட்டத்தில் பிரதித்துவம்படுத்தும் கட்சியாளர்களும் இந்த செய்தி நல்செய்தியாக அமைய வேண்டும். இவை காலத்தின் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 420 பேரும் கட்டாரில் இருந்து 27 பேருமே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

அதற்கு மேலதிகமாக தூதவராக அதிகாரிகள் 16 பேரும் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் – தங்க மாளிகை அனந்தி

வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் – தங்க மாளிகை அனந்தி

இலங்கையில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி பகுதியில் தனது

வாக்களித்த மக்களுக்கு அனந்தி சசிதரன் நன்றிகளை தெரிவித்தார்

,தேர்தல் தொகுதி வாக்கு என்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு பட்ட சம்பவங்களை தெரிவித்தார்

அரச இராணுவ சிறப்பு பாதுகாப்பு படை புடை சூழ சுமந்திரன் வந்து சென்றதும்

,வாக்குகளை மாற்றியுள்ளதாக
பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளது

ரவிராஜை இராணுவம், கொன்றது இப்பொழுது கூட்டமைப்பு

மனைவியை படுகொலை செய்துள்ளது என அனந்தி நீதியுடன் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்க நடவடிக்கை – உலக தமிழர் மகிழ்ச்சி

கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்க நடவடிக்கை – உலக தமிழர் மகிழ்ச்சி

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிற்கு

கல்வியாளரும் மக்கள் பேராதரவு பெற்ற திருவாளர் சிறிதரன் நியமிக்க படவுள்ளார் என தெரிவிக்க பட்டுகிறது

அதனாலேயே சிறிதரன் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை சிங்கள கூலி இஊடகங்கள் மேற்கொண்டன,

குறிப்பாக செத்த வீட்டு இணையம் தற்போது சிறிதரன் உறவினர் நடத்துவதில்லை அது விற்க பட்டுள்ளது ,அவர்கள் பெரும் சேறு

பூசல்களை மேற்கொண்டு குடும்ப உறவினரே உடன் பிறந்தவருக்கு

எதிராக உளளார் என்ற தோற்ற பாடு உருவாக்க பட்டது என்பதை அவதானிக்க முடிந்தது

சிறிதரன் அடித்தட்டு மக்கள் மனங்களில் குடிகொண்டு உள்ளார் என்பதை அந்த பகுதி மக்கள் பேச்சின் ஊடாக அவதானிக்க முடிகிறது


,சிறிதரன் வருவதை நாம் முற்றாக வரவேற்கிறோம் பலத்த மாற்றங்கள்

ஏற்படும் ,கூட்டமைப்பு நிமிர இதனை அவசியம் செய்தாக வேண்டும் என்பது தமிழர் ஆவலாக உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

தேசிய பட்டியல் மூலம் கருணா எம்பியாகிறார்

தேசிய பட்டியல் மூலம் கருணா எம்பியாகிறார்

நடந்து மருந்து பாரளுமன்ற தேர்தலில் பலத்த தோல்வியை தழுவி கொண்ட

எட்டப்பன் கருணா அம்மான் தற்பொழுது தேசிய பட்டியல் மூலம்

கோத்தபாயாவின் கட்சி ஊடாக மீள பாரளுமன்றுக்குள் நுழைகிறார்

சிறையில் இருந்தவாறே வெற்றியை தழுவி கொண்ட பிள்ளையான்

வெற்றி பெற்றார் அதனை போல தற்போது கருணாவும் எம்பியாகிறார்

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் .வன்னியில் மக்கள் வழங்கிய வாக்களிப்பு விகிதம் என்பன கூட்டமைப்பை சிந்திக்க வைத்துள்ளது


ஐக்கிய தேசிய கட்சியின் படு தோல்வி இவர்களை இப்பொழுது இருந்து விழித்து கொள்ள வைத்துள்ளது

திருமலையில் சம்பந்தர் 21 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று நான்காம் இடத்தில நிலை பெற்றார்


எனவே மக்கள் ஆதரவு இவர்களுக்கு அற்று செல்வது இந்த தேர்தல் உறுதி படுத்தியுள்ளது

புலிகள் எவ்விதம் அனைத்து காட்சிகளையும் ஒன்றிணைக்க

வைத்தனரோ ,அதே போன்ற செயலுக்கு இப்பொழுது இவர்களும் செல்ல தயாராகி வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பின் கீழ் ஒன்றினையும் தமிழ் கட்சிகள் – மகிழ்ச்சி

கூட்டமைப்பின் கீழ் ஒன்றினையும் தமிழ் கட்சிகள் – மகிழ்ச்சி

இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்றன் தேர்தல் பலத்த

பாடத்தை புகட்டியுள்ளது ,தமது எதிர்காலத்தின் இருப்பு எவ்விதம்

அமையும் என்பதை இந்த தேர்தல் நன்றே உணர்த்தியுள்ளது

இதனை அடுத்து அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றித்து

பயணிக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது

அதற்கான பூர்வாங்க உத்தியோக பூர்வ பேச்சுக்கள் ஆரம்பிக்க படவுள்ளன

இவ்விதம் ஒன்று பட்ட பலத்துடன் தமிழர்கள் பயணிக்கும் பொழுதே வெற்றியை

சூடி கொள்ளவும் மாற்று காட்சிகள் வெற்றியை தடுக்க படும் என்பதாக உணர பட்டுள்ளது

இந்த விடயம் அனைத்து மக்களினாலும் வரவேற்க பட்டுள்ளது ,மகிழ்ச்சியான விடயம் என்பது மக்கள் பேச்சாக உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்குள் தேசிய பட்டியல் மூலம் சட்டத்தரணி தவராசா நுழைகிறார்

கூட்டமைப்புக்குள் தேசிய பட்டியல் மூலம் சட்டத்தரணி தவறா நுழைகிறார்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் போனஸ் ஆசனம் மூம ஜனாதிபதி சட்டத்தரணி தவறால் அவர்கள் நுழைகிற

திருவாளர் செல்வம் டைக்கலநாதன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்

மூன்று கட்சிகளை பிரதிநிதி படுத்துகிறது ,நமது அனுமதியில்லாது தனித்துவமாக யாரையும் நியமிக்க முடியாதது ,

அவ்வாறு செய்யவும் கூடாதது எனவும் ,மேலும் விக்கினேஸ்வரன் ,கஜேந்திரன் போன்றபவர்களை ஒன்றித்து நாம் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்

இன்று நடந்த இந்த தேர்தல் முடிவுகள் ஊடாக இதனை உணர்ந்து கொள்ள முடியும் என அவர் பட்டறிவுடன் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தாயை கொலை செய்த மகன் கைது

தாயை கொலை செய்த மகன் கைது

இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் பெற்ற தாயை வெட்டி கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்

73 வயதுடைய தாயாரே இவ்வாறு மகனால் படுகொலை செய்ய

பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்


மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென மயங்கி வீழ்ந்து கடற்படை சிப்பாய் மரணம்

திடீரென மயங்கி வீழ்ந்து கடற்படை சிப்பாய் மரணம்

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தரமுயர்வுக்கான பரீட்சார்த்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை நேற்று (7) மாலை மயக்க நிலை

ஏற்பட்டதாகவும், அதனையடுத்து கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் பூனேவ – ஆணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த கடற்படை வீரரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை

மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

14வது பிரதமராக நாளை மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக திரு.மஹிந்த ராஜபக்ஷ நாளை சத்தியப்பிரமாணம்

இலங்கையின் 14வது பிரதமராக நாளை மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறார்.

அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாளை முற்பகல் களனி ரஜமஹா விஹாரையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான திரு.மஹிந்த ராஜபக்ஷ 1970ம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத்தில்

பிரவேசித்தார். அவர் நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்கிறார்.

தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற அங்கத்தவராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக மஹிந்த

ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார். அது தவிர இரண்டு தடவைகள் மக்களால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று

தடவைகள் பிரதமராக கடமையாற்றியிருந்தார். முதல் தடவையாக 2004ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார்.

நாளைய சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர், திரு.மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள்

பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமைக்கு உரியவராகின்றார்.

Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு

பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன.

சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது குறித்து விரிவான வகையில் தத்தமது ஊடகங்களில் முக்கிய இடமளித்து எழுதியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமோக

வெற்றியை நோக்கி வழிநடத்தியுள்ளார்கள் என அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதிய நியுயோர்க் ரைம்சின் மரியா அல் அப் என்ற கட்டுரையாளர்,

இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய ஸ்திரத்தன்மையை பொதுத் தேர்தலில் மக்கள் அங்கீகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி, சி.என்.என், அல்-ஜசீரா, நியுயோர்க் ரைம்ஸ், வோஷிங்டன் போஸ்ட், பீப்பல்ஸ் டெய்லி, ரஷ்யா ருடே முதலான செய்தி

நிறுவனங்களும் இலங்கையின் தேர்தல் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் நியுஸ் எயிட்டீன் இணையத்தளம் எழுதிய விமர்சனத்தில், தாமரை மொட்டின் மூலம் யானையொனறு; வீழ்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிபட்டுள்ளது. இந்தியாவின்

த ஹிந்து, ரைம்ஸ் ஒவ் இந்தியா, என்.டி.ரிவி, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் முதலான பல ஊடகங்கள் இலங்கையின் பொதுத் தேர்;தல் பற்றி

விரிவான விமர்சனங்களை எழுதியுள்ளன. இலங்கை மக்கள் வலுவான தலைமைத்துவத்திற்கும், நிலையான

அரசாங்கத்திற்குமாக வாக்களித்துள்ளார்கள் என அவை குறிப்பிட்டுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை சுவரில் 15 அடி உயரத்திற்கு புதிய வேலி!

வெலிக்கடை சிறைச்சாலை சுவரில் 15 அடி உயரத்திற்கு புதிய வேலி!

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில்

போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள்

வீசப்படுவதை தடுக்கும் விதமாக புதிய பாதுபாப்பு வேலியொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைசாலையின் பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக போதைப்பொருள்

உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவது கண்காணிக்கப்பட்டுள்ளதாக

சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, 15 அடி உயரத்துடன் கூடிய புதிய பாதுகாப்பு வேலியொன்றை

அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை

முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை

இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலிமற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில்

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது

மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின்

வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச்

சூழவுள்ள ஏனைய பிரதேசங்களில் காற்றின் Nவுகம் அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும்

கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு வரையிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிரதேசம்

வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது

கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Posted in இலங்கை செய்திகள்

தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணம் சில தினங்களில்- மகிந்தா முழக்கம்

தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணம் சில தினங்களில்- மகிந்தா முழக்கம்

தேர்தல் மூலம் தமக்கு கிடைத்த வெற்றியினை மக்கள் மயப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை

முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டை பாதுகாத்து சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தை மக்களின் அங்கீகாரத்துடன் ஆரம்பிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சமயத்தலைவர்களை இன்று சந்தித்த போதே பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

19ஆவது திருத்தச் சட்டம் ,அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்

19ஆவது திருத்தச் சட்டம் ,அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான

அரசாங்கத்தை உருவாக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நேற்ற முன்தினம் (05) நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெறப்பட்ட அமோக வெற்றிக்குப்பின்னர் இன்று (07) நடைபெற்ற முதலாவது

ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்ததுடன் , நாட்டுக்கு இடையூராகவுள்ள அரசியலமைப்பின்

19ஆவது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகளை புதிய பாராளுமன்றத்தில் தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதியுடன் இணைந்து சிறந்த முறையில் பணியாற்றக் கூடிய பாராளுமன்றத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பம்

கிடைத்திருப்பதினால், சௌபாக்கிய தொலை நோக்கு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி வழங்கிய தலைமைத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வெற்றிக்காக முன்னாள்

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மகத்தான பணியாற்றியதாக ஜி.எல்.பீரி;ஸ் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன்

இணைந்து கூட்டணி அமைந்து மகத்தான வெற்றியின் பங்களார்களாகிய சகருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நன்றிகளை தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் தயாரானது

பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் தயாரானது

பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு அமைவாக ஸ்ரீ லங்கா பொதுஜன

பெரமுனவுக்கு 17 தேசியப்பட்டியல் உறுப்பினர்களை

நியமிப்பதற்கான உரிமை கிடைத்துள்ளது.

இதற்கமைய 17 பேரின் பெயர்ப்பட்டியலை பொதுஜன பெரமுன இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்தது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சட்டத்தரணி சாகர காரியவசம், அஜித்

நிவாட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, ஜயந்த

வீரசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித்த ஹேரத், கெவிது குமாரதுங்க, முஹமட்

முஸ்ஸமில், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, பொறியியலாளர் யதாமினி குணவர்த்தன, கலாநிதி சுரேன் ராகவன், டிரான் அலஸ்,

விசேட வைத்திய நிபுணர் சீத்தா அரம்பேபொல, ஜயந்த கெட்டகொட,

முஹமட் பலில் மர்ஜான் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர.

Posted in இலங்கை செய்திகள்

191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்

191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்

டுபாயில் இருந்து இந்தியா நோக்கி பறந்து சென்று தரை இறங்கிய

எயர் இந்தியா விமானம் ஒன்று
விபத்தில் சிக்கியது

இந்த விபத்தில் 191 பயணிகள் விமானத்தில் இருந்தனர் ,இதில் இருவர் பலியாகினர்

மேலும் பல படுகாயமடைந்துள்ளனர் ,அதிக மழைகாரணமாக தரை இறங்கும் பொழுது இந்த சம்பவம் ஏற்பட்டுளது

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,எனினும் பல நூறு மக்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

திருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்

திருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் நடைபெற்ற

பாராளும்னற தேர்தலில் திருகோணமலையில்


இடம்பெற்ற போட்டியாளர்கள் மத்தியில் அதிக குறைவான வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளார்

மக்கள் மத்தியில் ஏற்படுத்த பட்ட சர்ச்சை கருத்துக்கள் வாயிலாக மயிரிழையில்

சம்பந்தர் இவ்விதம் தப்பித்தார் .தமிழ் மக்கள் வழங்கிய தண்டனை

என்பது நெத்தியடியாக இடம்பெற்றுள்ளது

சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்கி தமிழ் தேசியத்தை தொடர்ந்து இழித்து

செல்லும் கும்பல்களுக்கு இனி என்ன நடக்கும் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது

வரும் தேர்தல் கூட்டமைப்பிற்கு மிக சவால் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெறும் என்பதில் சந்தேகமில்லை

ஐக்கிய மக்கள் சக்தி

எஸ்.எம் தௌபீக் – 43, 759

இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கபில நுவன் அத்துகோரல – 30, 056

இலங்கை தமிழரசு கட்சி

ஆர்.சம்பந்தன் – 21, 422

Posted in இலங்கை செய்திகள்

மைத்திரிபால சிறிசேன வெற்றி

மைத்திரிபால சிறிசேன வெற்றி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடைபெற்ற பொதுத் தேர்தலில்

வெற்றி பெற்றுள்ளார். இவர் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா

பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு 111,137 வாக்குகளைப் பெற்று பட்டியலில் முதலாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இந்த கட்சியின் சார்பில் இந்த மாவட்டத்தில் மேலும் மூவர் பாராளுமன்ற

உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். றொசான் ரணசிங்க

90,615 வாக்குகளையும், சிறிபால கம்லத் 67,917 வாக்குகளையும், ஏ.அத்துகோரளை 45,795 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதேவேளை இந்த மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்

சார்பில் கிங்ஸ் லோரன்ஸ் 22,392 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.