தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணம் சில தினங்களில்- மகிந்தா முழக்கம்
தேர்தல் மூலம் தமக்கு கிடைத்த வெற்றியினை மக்கள் மயப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை
முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டை பாதுகாத்து சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தை மக்களின் அங்கீகாரத்துடன் ஆரம்பிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சமயத்தலைவர்களை இன்று சந்தித்த போதே பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்தார்